search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Messi"

    • இறுதிப் போட்டிக்கு முன்னதாகவே கேரளவைச் சேர்ந்த ரசிகர்கள் குழு மெஸ்சி மீதான அன்பை வெளிப்படுத்தும் விதமாக, அரபிக்கடலில் மூழ்கி மெஸ்சியின் பெரிய கட்அவுட்டை நீருக்கடியில் வைத்தனர்.
    • அர்ஜென்டினா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியதால் லியோனல் மெஸ்சியின் ரசிகர்கள் பல வழிகளில் உற்சாகமடைந்தனர்.

    உலகக் கோப்பை கால்பந்து 2022-ல் அர்ஜென்டினா வெற்றி பெற்றதைக் கொண்டாடும் பதிவுகளால் சமூக ஊடகத் தளங்கள் நிரம்பி வழிகின்றன. மகிழ்ச்சியில் திளைத்த லியோனல் மெஸ்சியின் ரசிகர்கள் தெருக்களில் இறங்கி கொண்டாடிவருகின்றனர். ஆனால், இறுதிப் போட்டிக்கு முன்னதாகவே கேரளவைச் சேர்ந்த ரசிகர்கள் குழு மெஸ்சி மீதான அன்பை வெளிப்படுத்தும் விதமாக, அரபிக்கடலில் மூழ்கி மெஸ்சியின் பெரிய கட்அவுட்டை நீருக்கடியில் வைத்தனர்.

    அர்ஜென்டினா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியதால் லியோனல் மெஸ்சியின் ரசிகர்கள் பல வழிகளில் உற்சாகமடைந்தனர்.

    அந்த வகையில், கேரளாவை சேர்ந்த ரசிகர்கள் குழு கடலில் 100 அடி ஆழத்தில் லியோனல் மெஸ்சியின் கட்- அவுட்டை உருவாக்கி புதுமையான முறையில் தனது ஆதரவை வெளிப்படுத்தியது.

    முகமது ஸ்வாதிக் என்ற இந்த ரசிகர், 'உலகக் கோப்பையில் அர்ஜென்டினா அணி இறுதிப் போட்டிக்கு வந்தால் மெஸ்சியின் கட்அவுட்டை கடலில் 100 அடி ஆழத்தில் வைப்பேன் என்று முன்பே கூறியிருந்தார். அதேபோல், செவ்வாய்கிழமை குரோஷியாவுக்கு எதிரான முதல் அரையிறுதியில் அர்ஜென்டினா 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பிறகு, முகமது ஸ்வாதிக் தனது வாக்குறுதியை நிறைவேற்றினார்.

    • மெஸ்சி இந்த தொடரில் லீக் சுற்று, 2-வது சுற்று, கால் இறுதி, அரை இறுதி, இறுதி போட்டி என அனைத்திலும் கோல் அடித்துள்ளார்.
    • உலக கோப்பையில் கோல்டன் பால் விருதை 2 தடவை பெற்ற முதல் வீரர் என்ற வரலாற்றை மெஸ்சி படைத்தார்.messi, world cup football, மெஸ்சி, உலக கோப்பை கால்பந்து

    தோகா:

    உலக கோப்பை கால்பந்து போட்டியில் லியோனல் மெஸ்சி பல்வேறு சாதனைகளை புரிந்து புதிய வரலாறு படைத்தார்.

    அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்சி உலகின் மிக சிறந்த வீரர்களில் ஒருவர் ஆவார்.

    அர்ஜென்டினா அணிக்காக உலக கோப்பையை பெற்று கொடுக்க முடியவில்லை என்ற ஏக்கம் அவருக்கு நீண்ட காலமாக இருந்தது. மெஸ்சியின் உலக கோப்பை கனவு நேற்று நனவானது. இறுதி போட்டியில் பிரான்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றதன் மூலம் அவரது கால்பந்து கனவு முழுமையாக நிறைவேறியது.

    35 வயாதான மெஸ்சி கடந்த ஆண்டு கோபா அமெரிக்க கோப்பையை வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தார். தற்போது உலக கோப்பையை பெற்று கொடுத்துள்ளார். மரடோனாவை போலவே மெஸ்சியும் அர்ஜென்டினாவை மிகவும் உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்று விட்டார்.

    இந்த உலக கோப்பை போட்டி தொடரில் மெஸ்சியின் ஆட்டம் மிகவும் அபாரமாக இருந்தது. அவர் மொத்தம் 7 கோல்கள் அடித்துள்ளார். மேலும் 4 கோல் அடிக்க உதவி புரிந்துள்ளார்.

    மெஸ்சி இந்த தொடரில் லீக் சுற்று, 2-வது சுற்று, கால் இறுதி, அரை இறுதி, இறுதி போட்டி என அனைத்திலும் கோல் அடித்துள்ளார்.

    இதன் மூலம் அவர் புதிய சாதனை புரிந்துள்ளார். எந்த ஒரு வீரரும் உலக கோப்பையில் அனைத்து நிலைகளிலும் கோல் அடித்தது இல்லை.

    இதன் மூலம் உலக கோப்பை தொடரில் சிறந்த வீரருக்கான தங்க பந்து (கோல்டன் பால்) விருது மெஸ்சிக்கு கிடைத்தது. அவர் ஏற்கனவே 2014 உலக கோப்பையிலும் தங்க பந்து விருதை பெற்று இருந்தார். அந்த உலக கோப்பையில் அர்ஜென்டினா இறுதி போட்டியில் ஜெர்மனியிடம் தோற்று இருந்தது.

    உலக கோப்பையில் கோல்டன் பால் விருதை 2 தடவை பெற்ற முதல் வீரர் என்ற வரலாற்றை மெஸ்சி படைத்தார்.

    மெஸ்சி ஒட்டு மொத்த உலக கோப்பைகளிலும் சேர்த்து 13 கோல்கள் அடித்துள்ளார். 26 ஆட்டத்தில் அவர் இந்த கோல்களை அடித்துள்ளார். இதன் மூலம் பிரேசில் ஜாம்பவான் பீலேவை முந்தி 4-வது இடத்தை பிடித்தார். பீலே 12 கோல்கள் அடித்துள்ளார்.

    குளூஸ் (ஜெர்மனி) 16 கோல்களுடன் முதல் இடத்திலும், ரொனால்டோ (பிரேசில்) 15 கோல்களுடன் 2-வது இடத்திலும், ஜெரார்டு முல்லா (மேற்கு ஜெர்மன்) 14 கோல்களுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். பிரான்சை சேர்ந்த பாண்டைனுடன் இணைந்து மெஸ்சி 4-வது இடத்தில் உள்ளார். இருவரும் தலா 13 கோல்கள் அடித்துள்ளனர்.

    உலக கோப்பையில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையையும் மெஸ்சி படைத்தார். அவர் 26 ஆட்டத்தில் ஆடி லோத்தர் மேத்யூசை (ஜெர்மனி) முந்தினார். மேத்யூஸ் 25 ஆட்டங்களில் விளையாடியதே சாதனையாக இருந்தது.

    உலக கோப்பையில் அதிக நிமிடங்கள் விளையாடிய வீரர் என்ற சாதனையும் மெஸ்சி படைத்தார். அவர் மொத்தம் 2, 217 நிமிடங்கள் விளையாடி உள்ளார். இத்தாலியை சேர்ந்த பாலோ மால்டினி உலக கோப்பையில் 2,194 நிமிடங்கள் ஆடியதே சாதனையாக இருந்தது. மெஸ்சி தற்போது அவரை முந்தியுள்ளார்.

    உலக கோப்பையை வென்றதன் மூலம் மெஸ்சி கால்பந்தில் அனைத்து காலக்கட்டத்திலும் தான் சிறந்த வீரர்களில் ஒருவர் என்பதை நிரூபித்து காட்டியுள்ளார். தன்னை விமர்சித்தவர்களுக்கு அவர் கோப்பையை கைப்பற்றி சரியான பதிலடி கொடுத்து விட்டார்.

    • கடந்த 2015ம் ஆண்டு பதிவு செய்த டுவிட் தற்போது வைரலானது.
    • என் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருப்பேன் என தகவல்.

    கால்பந்து உலக கோப்பையை அர்ஜென்டினா அணி வென்றுள்ள நிலையில், உலக முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் மற்றும் ஆர்வலர்கள் அந்த அணியின் கேப்டனும், நட்சத்திர வீரருமான மெஸ்சிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் உலக அளவில் புகழ் பெற்ற பயண ஆர்வலரான ஜோஸ் மிகுவல் போலன்கோ என்பவர் கடந்த 2015 ஆம் ஆண்டு மார்ச் 21ந் தேதி தமது டுவிட்டர் பதிவில், 2022 ஆம் ஆண்டு, டிசம்பர் 18-ந் தேதி, 34 வயதான லியோ மெஸ்ஸி உலகக் கோப்பையை வென்று எல்லா காலத்திலும் சிறந்த வீரராக மாறுவார். 7 ஆண்டுகளுக்குப் பிறகு என்னுடைய டுவிட்டை மீண்டும் பார்க்கவும் என்று பதிவிட்டிருந்தார். அவர் கணித்தபடி தற்போது அர்ஜென்டினா அணிக்கு உலக கோப்பையை மெஸ்சி பெற்று தந்துள்ளதால், போலன்கோவின் டுவிட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


    இந்நிலையில் தமது கணிப்பு நிறைவேறிய பிறகு, போலன்கோ,  ஸ்பானிஷ் மொழியில் இன்று மீண்டும் ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், உங்கள்(மெஸ்சி) முதல் உலகக் கோப்பையில் நான் இருந்தேன், இப்போது உங்கள் கைகளால் வானத்தைத் தொட்ட உங்களின் கடைசி போட்டியிலும் என்னால் இருக்க முடிந்தது, லியோ. டியாகோ செய்தது போல். என் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருப்பேன், நன்றி அர்ஜென்டினா, நாங்கள் உலக சாம்பியன்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பெனால்டி ஷூட் அவுட் முறையில் பிரான்சை 4-2 என்ற கணக்கில் அர்ஜென்டினா வீழ்த்தியது.
    • கோப்பை வென்ற அர்ஜென்டினா அணிக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்தனர்.

    சென்னை:

    உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பிரான்சும், முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினாவும் லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் நேற்று மோதின. ஆட்டநேர முடிவில் பிரான்ஸ், அர்ஜென்டினா அணிகள் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் இருந்ததால் கூடுதலாக 30 நிமிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. கூடுதல் நேரம் முடிவிலும் ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் சமனில் நீடித்ததால் பெனால்டி ஷூட் அவுட் வழங்கப்பட்டது.

    அதன்பின், பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி அர்ஜென்டினா உலக கோப்பை கால்பந்து போட்டியின் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.

    இந்நிலையில், உலக கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டினா அணிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், உறுதியாக மிகவும் சிறப்புடைய ஒரு போட்டி. பிரான்சு அணியின் ஒருபோதும் விடாத மனப்பான்மை மற்றும் எம்பாப்பேவின் ஹாட்ரிக் கோல் இந்த போட்டியை உலகக் கோப்பையின் சிறந்த இறுதிப் போட்டிகளில் ஒன்றாக மாற்றியுள்ளது.

    உலக கோப்பை கால்பந்து சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டினா மற்றும் G.O.A.T மெஸ்சிக்கு வாழ்த்துக்கள். மார்டினசுக்குச் சிறப்புப் பாராட்டுச் சொல்ல வேண்டும் என பதிவிட்டுளார்.

    • உலக கோப்பை இறுதி போட்டி தனது கடைசி சர்வதேச ஆட்டம் என்று குரோஷியாவை வீழ்த்திய பிறகு மெஸ்சி தெரிவித்தார்.
    • மரடோனா வழியில் மெஸ்சி நாட்டுக்காக உலக கோப்பையை பெற்று கொடுப்பாரா? என்ற ஆர்வத்தில் அவரது ரசிகர்கள் உள்ளனர்.

    உலகின் தலை சிறந்த கால்பந்து வீரரான லியோனல் மெஸ்சி கிளப் போட்டிகளில் பல கோப்பைகளை வென்று இருக்கிறார். அர்ஜென்டினா அணிக்காக உலக கோப்பையை வென்று கொடுக்க முடியவில்லை என்ற ஏக்கம் 32 வயதான அவருக்கு நீண்ட காலமாக இருக்கிறது.

    2014-ல் இறுதிப்போட்டி வரை வந்து ஜெர்மனியிடம் தோற்று உலக கோப்பையை இழந்தார்.

    கடந்த ஆண்டு பிரேசிலை வீழ்த்தி கோபா அமெரிக்கா கோப்பையை வென்று அர்ஜென்டினாவுக்கு பெருமை சேர்த்தார். 28 ஆண்டு கனவை நனவாக்கினார். அதே போன்று மரடோனா வழியில் மெஸ்சி நாட்டுக்காக உலக கோப்பையை பெற்று கொடுப்பாரா? என்ற ஆர்வத்தில் அவரது ரசிகர்கள் உள்ளனர். 36 ஆண்டுகால அர்ஜென்டினாவின் கனவை அவர் நிறைவேற்றுவாரா என்ற எதிர் பார்ப்பும் இருக்கிறது.

    உலக கோப்பை இறுதி போட்டி தனது கடைசி சர்வதேச ஆட்டம் என்று குரோஷியாவை வீழ்த்திய பிறகு மெஸ்சி தெரிவித்தார். இதனால் உலக கோப்பையுடன் அவர் வெளியேறுவாரா ? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த உலக கோப்பையில் மெஸ்சியின் ஆட்டம் மிகவும் அபாரமாக இருக்கிறது. தனது முழு திறமையை வெளிப்படுத்தி வருகிறார். 5 கோல்கள் அடித்துள்ளார். 3 கோல்கள் அடிக்க உதவி புரிந்துள்ளார். ஒவ்வொரு ஆட்டத்திலும் அவர் பந்தை கடத்தி செல்லும் விதம் பார்ப்பதற்கு பிரமிப்பாக இருக்கிறது.

    வீரர்களை ஏமாற்றி பந்தை கொண்டு செல்வதில் அவருக்கு நிகரான வீரர் யாரும் இல்லை என்பதை இந்த தொடரில் அவர் பல ஆட்டத்தில் நிரூபித்து காட்டியுள்ளார். குரோஷியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 3-வது கோல் அடிக்க மெஸ்சி பந்தை கொண்டு சென்ற விதம் மிகவும் அபாரமாக இருந்தது.

    தேவைக்கு ஏற்ப வேகமாக ஓடுவது, பந்தை எதிர் அணி வீரர்களின் காலுக்கு இடையில் அடித்து கொண்டு செல்வது என்பது உள்பட பல்வேறு மேஜிக்கை வெளிப்படுத்தி வருகிறார்.

    உலக கோப்பையில் அதிக கோல்கள் அடித்த அர்ஜென்டினா வீரர் என்ற சாதனையை மெஸ்சி படைத்தார். அவர் 11 கோல்கள் அடித்துள்ளார். குரோஷியாவுக்கு எதிரான அரை இறுதியில் கோல் அடித்ததன் மூலம் அவர் பாடிஸ்டுடாவை (10 கோல்) முந்தினார்.

    உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்ற மெஸ்சியின் கனவு நனவாகுமா? என்று அர்ஜென்டினா ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர் பார்க்கிறார்கள்.

    • ஆறு போட்டிகளில் நான்கில் ஆட்டநாயகன் விருதை பெற்றுள்ளார்
    • அரையிறுதியில் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடித்து அசத்தினார்

    கத்தாரில் உலகக் கோப்பை கால்பந்து திருவிழா நடைபெற்று வருகிறது. இந்தத் திருவிழா இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

    நாளை நடைபெறும் 3-வது இடத்திற்கான ஆட்டத்தில் குரோசியா- மொராக்கோ அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் சாம்பியனுக்காக பிரான்ஸ்- அர்ஜென்டினா அணிகள் மல்லுக்கட்டுகின்றன.

    அர்ஜென்டினா முதல் ஆட்டத்தில் சவுதி அரேபியாவுக்கு எதிராக தோல்வியை சந்தித்தது. இதனால் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. அந்த அணியின் கேப்டன் மெஸ்சிக்கு இதுதான் கடைசி உலகக் கோப்பை. இதற்கு முன் 2014-ல் நடைபெற்ற உலகக் கோப்பையில் அர்ஜென்டினா இறுதிப் போட்டியில் தோல்வியை சந்தித்தது.

    இதனால் மெஸ்சிக்கு உலகக் கோப்பையை வெல்ல வாய்ப்பில்லை என கருதப்பட்டது. ஆனால், அதன்பின் மெஸ்சி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவரது சிறப்பான விளையாட்டால் தற்போது அர்ஜென்டினா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

    குரோசியாவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி மெஸ்சி கோல் அடித்தார். அதன்பின் அல்வாரெஸ் கோல் அடிக்க துணை புரிந்தார்.

    இந்த போட்டியின்போது மெஸ்சி தசைப்பிடிப்பால் அவதிப்பட்டாராம். 100 சதவீதம் உடற்தகுதியுடன் இல்லையாம். இருந்தாலும் விளையாடுகிறேன் என மெஸ்சி தன்னம்பிக்கையுடன் விளையாடினாராம்.

    தற்போது இடது காலில் தசைப்பிடிப்பு (hamstring) ஏற்பட்டதன் காரணமாக நேற்று நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளார். இதனால் அர்ஜென்டினா அணி மெஸ்சி காயத்தால் கவலையடைந்துள்ளது.

    ஒரு வேளை நாளைமறுதினம் பிரான்ஸ்க்கு எதிரான இறுதிப் போட்டியில் மெஸ்சி 100 சதவீத உடற்குதியுடன் விளையாடவில்லை என்றால், அது அர்ஜென்டினாவுக்கு மிகப்பெரிய இழப்பாகும் என்பதில் சந்தேகமில்லை.

    டி மரியா அரையிறுதியில் காயம் காரணமாக விளையாடவில்லை. தற்போது அவர் உடற்தகுதி பெற்று விட்டதால் இறுதிப் போட்டியில விளையாட வாய்ப்புள்ளது.

    இந்த உலகக் கோப்பையில் மெஸ்சி 5 கோல் அடித்துள்ளார். 3 கோல் அடிக்க துணை புரிந்துள்ளார். அவருடன் எம்பாப்வேவும் 5 கோல் அடித்துள்ளார். இருவரும் இறுதிப் போட்டியில் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.

    • உலகக் கோப்பையில் அர்ஜென்டினா அணிக்காக அதிக கோல் அடித்த கேப்ரியல் பாடிஸ்டுடாவை முந்தினார் லியோனல் மெஸ்ஸி.
    • மெஸ்ஸி 11 கோல்கள் அடித்துள்ளார்.

    உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று அதிகாலை நடைபெற்ற அர்ஜென்டினா மற்றும் குரோஷியா அணிகளுக்கிடையிலான போட்டியில் அர்ஜென்டினா அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிச்சுற்றிற்கு தகுதி பெற்றது.

    இதனை அடுத்து 7-வது முறையாக அர்ஜென்டினா அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அர்ஜெண்டினா அணியின் கேப்டனும் நட்சத்திர வீரரூமான மெஸ்ஸி இந்த போட்டியில் கடைசியில் அடித்த கோல் மூலம் அணியை இறுதிச்சுற்றுக்கு கொண்டு சென்றதோடு அர்ஜெண்டினா அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். மெஸ்ஸி 11 கோல்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உலகக் கோப்பையில் அர்ஜென்டினா அணிக்காக அதிக கோல் அடித்த கேப்ரியல் பாடிஸ்டுடாவை முந்தினார் லியோனல் மெஸ்ஸி.

    இந்நிலையில் இன்று பிரான்ஸ் மற்றும் மொரோக்கோ அணிகளுக்கிடையிலான அரையிறுதி போட்டி நடைபெற உள்ளது என்பதும் டிசம்பர் 18 ஆம் தேதி இறுதி போட்டி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

    முதல் முறையாக அரையிறுதிப் போட்டியில் தகுதி பெற்ற குரோஷியா அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த அணியின் கனவு தகர்ந்தது.

    • அர்ஜென்டினா இந்த ஆட்டத்தில் தோற்றால் போட்டியில் இருந்து வெளியேற்றப்படும்.
    • உலகின் தலைசிறந்த வீரரான அவருக்கு இது கடைசி உலக கோப்பை என்பதால் நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும்.

    லுசாயில்:

    உலக கோப்பை கால்பந்து போட்டியில் 2 முறை சாம்பியனான அர்ஜென்டினா தொடக்க ஆட்டத்தில் சவுதி அரேபியாவிடம் 1-2 ('சி' பிரிவு ) என்ற கோல் கணக்கில் அதிர்ச்சிகரமாக தோற்றது.

    லியோனல் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணி 2-வது போட்டியில் மெக்சிகோவை இன்று எதிர் கொள்கிறது . இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு லுசாயில் ஸ்டேடியத்தில் இந்தப் போட்டி நடக்கிறது.

    இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி அர்ஜென்டினாவுக்கு உள்ளது. தோற்றால் போட்டியில் இருந்து வெளியேற்றப்படும். இதனால் அந்த அணி வீரர்கள் முழு திறமையை பயன்படுத்தி கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும்.

    மெஸ்சிக்கு மிகவும் கடினமான சோதனயாகும். உலகின் தலைசிறந்த வீரரான அவருக்கு இது கடைசி உலக கோப்பை என்பதால் நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும். மெக்சிகோ முதல் ஆட்டத்தில் போலந்துடன் கோல் எதுவுமின்றி டிரா செய்தது.

    இரு அணிகளும் 35 ஆட்டத்தில் மோதி உள்ளன. இதில் அர்ஜென்டினா 16-ல், மெக்சிகோ 5-ல் வெற்றி பெற்றன. 14 போட்டி டிரா ஆனது.

    இதே பிரிவில் நடைபெறும் மற்றொரு போட்டியில் போலந்து-சவுதி அரேபியா அணிகள் (மாலை 6.30) மோதுகின்றன.

    சவுதி அரேபியா முதல் ஆட்டத்தில் அர்ஜென்டினாவை வீழ்த்தி இருந்ததால் நம்பிக்கையுடன் விளையாடும். அந்த அணி இன்றும் வெற்றி பெற்றால் 2-வது சுற்றில் நுழைவதற்கான வாய்ப்பை பெறும். போலந்து முதல் ஆட்டத்தில் டிரா செய்ததால் சவுதி அணியை வீழ்த்த முயற்சிக்கும்.

    குரூப்-டி பிரிவில் இன்று நடைபெறும் ஆட்டங்களில் துனிசியா-ஆஸ்திரேலியா (மாலை 3.30), பிரான்ஸ்-டென்மார்க் (இரவு 9.30) அணிகள் மோதுகின்றன.

    துனிசியா முதல் போட்டியில் கோல் எதுவுமின்றி டென்மார்க்குடன் டிரா செய்தது. ஆஸ்திரேலியா 1-4 என்ற கோல் கணக்கில் பிரான்சிடம் தோற்றது. இதனால் இரு அணிகளும் முதல் வெற்றிக்காக காத்திருக்கின்றன.

    நடப்பு சாம்பியன் பிரான்ஸ் அணி டென்மார்க்கை வீழ்த்தி 2-வது வெற்றியுடன் நாக் அவுட் சுற்றுக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது. டென்மார்க் முதல் வெற்றி வேட்கையில் உள்ளது.

    • 32 ஆண்டுகளுக்கு பிறகு அர்ஜென்டினா தொடக்க ஆட்டத்தில் தோல்வியை சந்தித்தது.
    • சவுதி அரேபியா நல்ல வீரர்களை கொண்ட அணி என்பதை நாங்கள் அறிவோம்.

    தோகா:

    உலக கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் யாருமே எதிர் பார்க்காத வகையில் அர்ஜென்டினா அணி 1-2 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியாவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

    ஆட்டத்தின் 10-வது நிமிடத்தில் அர்ஜென்டினா கேப்டனும், நட்சத்திர வீரருமான லியோனல் மெஸ்சி பெனால்டி மூலம் கோல் அடித்தார். சவுதி அரேபியா தரப்பில் 48-வது நிமிடத்தில் சலோ அல்ஷெகரியும், 53-வது நிமிடத்தில் சலீம் அல்வாஸ்ரியும் கோல் அடித்தனர்.

    அர்ஜென்டினா அதிர்ச்சிகரமாக தோற்றாலும் அந்த அணிக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த அணி அடித்த 3 கோல்கள் ஆப்சைடாக அறிவிக்கப்பட்டது. மேலும் அர்ஜென்டினா வீரர்கள் அடித்த பல ஷாட்களை சவுதி அரேபியா கோல் கீப்பர் தடுத்து அதிர்ச்சி கொடுத்தார்.

    32 ஆண்டுகளுக்கு பிறகு அர்ஜென்டினா தொடக்க ஆட்டத்தில் தோல்வியை சந்தித்தது. இதற்கு முன்பு இத்தாலியில் 1990-ம் ஆண்டு நடந்த உலக கோப்பையில் அந்த அணி ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள கேமரூனிடம் 0-1 என்ற கோல் கணக்கில் தோற்று இருந்தது. தற்போது ஆசிய கண்டத்தில் உள்ள சவுதி அரேபியாவிடம் தொடக்க ஆட்டத்தில் வீழ்ந்துள்ளது.

    இந்த தோல்வியால் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்சி மிகுந்த வருத்தம் அடைந்தார். தோல்விக்கு பிறகு அர்ஜென்டினா கேப்டனான அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சவுதி அரேபியாவுக்கு எதிரான தோல்வி எங்களுக்கு மிகப்பெரிய அடியாகும். இந்த தோல்வியால் மனது வலிக்கிறது. 2-வது பாதி ஆட்டத்தில் 5 நிமிடங்கள் செய்த தவறு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. 1-2 என்ற கோல் கணக்கில் பின் தங்கிய பிறகு அதில் இருந்து மீள்வது கடினமாகி விட்டது.

    சவுதி அரேபியா நல்ல வீரர்களை கொண்ட அணி என்பதை நாங்கள் அறிவோம். அவர்கள் பந்தை நன்றாக நகர்த்தி செல்கிறார்கள். இந்த தோல்வியை நாங்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை.

    நாங்கள் கடினமாக போராடினோம். அதே நேரத்தில் தோல்விக்கு சாக்குகள் எதுவும் கூற விரும்பவில்லை. நாங்கள் முன்பை விட ஒருங்கிணைந்து விளையாட இருக்கிறோம். இந்த தோல்வியில் இருந்து மீண்டு வருவோம். மெக்சிகோவை வீழ்த்த முயற்சிப்போம்.

    இவ்வாறு மெஸ்சி கூறியுள்ளார்.

    இந்த தோல்வியால் அர்ஜென்டினாவுக்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. முதல் சுற்றிலேயே வெளியேற்றப்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

    அர்ஜென்டினா எஞ்சிய ஆட்டங்களில் மெக்சிகோ, போலந்துடன் மோத வேண்டி உள்ளது. இந்த இரண்டு ஆட்டத்திலும் வெல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தோற்றால் 'நாக் அவுட்' சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறி விடும்.

    ஸ்பெயின் நாட்டில் மட்டுமே விளைாடினால் போதுமா? இத்தாலிக்கு வாருங்கள் என்று மெஸ்சிக்க ரொனால்டோ சவால் விடுத்துள்ளார். #Messi #Ronaldo
    கால்பந்து போட்டியில் இந்த தலைமுறையின் சிறந்த வீரர்களாக மெஸ்சி, ரொனால்டோ, நெய்மர் ஆகியோர் கருதப்படுகிறார்கள். இதில் அர்ஜென்டினாவைச் சேர்ந்த மெஸ்சிக்கும், போர்ச்சுக்கலை சேர்ந்த ரொனால்டோவிற்கும் எதிராகத்தான் கடுமையான போட்டி நிலவி வருகிறது. லி லிகா தொடரில் மெஸ்சி பார்சிலோனாவிற்காகவும், ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணிக்காகவும் விளையாடினார்கள். அப்போது இருவரும் எதிரும் புதிருமாகத்தான் இருப்பார்கள். கடும் போட்டி நிலவும்.

    ரொனால்டோ போர்ச்சுக்கல் தேசிய அணிக்காகவும், அங்குள்ள கிளப், இங்கிலாந்து பிரிமீயர் லீக், ஸ்பெயின் லா லிகா தொடர்களிலும் விளையாடியுள்ளார். தற்போது இத்தாலி செரி ஏ கிளப்பில் யுவான்டஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

    ஆனால் அர்ஜென்டினா தேசிய அணிக்காக விளையாடி வரும் மெஸ்சி, ஸ்பெயின் நாட்டில் மட்டுமே விளையாடி வருகிறார். இந்நிலையில் இத்தாலிக்கு வாருங்கள் என்று மெஸ்சிக்கு ரொனால்டோ சவால் விடுத்துள்ளார்.

    இதுகுறித்து ரொனால்டோ கூறுகையில் ‘‘ஒருநாள் மெஸ்சி இத்தாலிக்கு வருவதை நான் கட்டாயம் விரும்புவேன். என்னுடைய சவாலை அவர ஏற்பார் என்று நம்புகிறேன். ஆனால், ஸ்பெயினில் அவர் மகிழ்ச்சியாக இருந்தால், அதற்கு நான் மதிப்பு அளிக்கிறேன்.



    அவர் வாழ்நாள் முழுவதும் பார்சிலோனாவிற்காக விளையாடினால், நான் அவரை இழக்கவில்லை. அவர்தான் என்னை இழக்கிறார். நான் இங்கிலாந்து, ஸ்பெயின், இத்தாலி, போர்ச்சுக்கலில் விளையாடியுள்ளேன். அவர் இன்னும் ஸ்பெயினிலேயே இருக்கிறார். ஒருவேளை அவருக்கு நான் தேவைப்பட்டால், எனக்கு வாழ்க்கை சவாலாக இருக்கும். அதை நான் விரும்புவேன். ரசிகர்கள் மகிழ்ச்சியாக மாற்ற விரும்புவேன்.

    மெஸ்சி மிகவும் சிறந்த வீரர் மற்றும் சிறந்த மனிதர். ஆனால், இங்கே நான் எதையும் தவறவிடவில்லை. இது என்னுடைய புதிய வாழ்க்கை. நான் மகிழ்ச்சியாக உள்ளேன். என்னுடைய வசதியாக இடத்தை விட்டு, இத்தாலியில் இந்த சவாலை எடுத்துள்ளேன். இங்கு எல்லாம் சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. நான் இன்னும் வியக்கத்தக்க வீரர்தான் என்பதை நிரூபித்திருக்கிறேன்’’ என்றார்.
    கால்பந்து விளையாட்டின் மிக உயரிய விருதான பலோன் டி’ஆர் விருதை முதன்முறையாக லூகா மோட்ரிச் தட்டிச் சென்றுள்ளார். #BallondOr
    பிரான்ஸ் நாட்டில் இருந்து பிரசுரிக்கப்படும் கால்பந்து பத்திரிகை சார்பில் ஆண்தோறும் உயரிய விருதான பலோன் டி’ஆர் விருது வழங்கப்படும். இதில் விருதிற்கு கடந்த 10 வருடமாக ரொனால்டோ, மெஸ்சி ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவி வந்தது. இவர்களை வேறு எந்த வீரர்களும் நெருங்க முடியாத நிலை இருந்தது. இந்த விருதை கடந்த 2008-ல் இருந்து மெஸ்சி, ரொனால்டோ ஆகியோர்தான் வாங்கிக் கொண்டிருந்தனர்.



    இந்த வருடம் உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்றது. இதனால் கிளப் போட்டிகளுடன் உலகக்கோப்பை போட்டிகளும் கணக்கிடப்பட்டது. உலகக்கோப்பை தொடரில் குரோஷியா அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதனால் அந்த அணியின் கேப்டனும், மிட்பீல்டரும் ஆன லூகா மோட்ரிச் இந்த முறை முன்னணியில் திகழந்தார்.



    ஏற்கனவே, பிபாவின் சிறந்த வீரருக்கான விருதை தட்டிச் சென்ற லூகா மோட்ரிச் பலோன் டி’ஆர் விருதையும் தட்டிச் சென்றார். கடந்த 2007-ம் ஆண்டு பிரேசில் வீரர் காகா பலோன் டி’ஆர் விருதை கைப்பற்றிய பின்னர், 2008-ல் இருந்து 2017 வரை மெஸ்சியும், ரொனால்டோவும் 10 வருடம் கோலோச்சியிருந்தனர். அவர்களின் சாதனைகளுக்கு லூகா மோட்ரிச் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
    லா லிகா கால்பந்து கிளப் போட்டியில் முன்னணி அணியான பார்சிலோனாவை அதன் சொந்த மைதானத்தில் வைத்து ரியல் பெட்டிஸ் 4-3 என வீழ்த்தியது. #Laliga #Barcelona
    லா லிகா கால்பந்து லீக்கில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் பார்சிலோனா - ரியல் பெட்டிஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டம் பார்சிலோனாவிற்கு சொந்தமான மைதானத்தில் நடைபெற்றது. சில போட்டிகளில் இடம்பெறாமல் இருந்த மெஸ்சி இந்த ஆட்டத்தில் இடம்பிடித்திருந்தார்.

    ஆட்டம் தொடங்கியது முதலே ரியல் பெட்டிஸ் அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஆட்டத்தின் 20-வது நிமிடத்தில் ரியல் பெட்டிஸ் அணியின் ஜூனியர் ஃபிர்போ கோல் அடித்தார். 34-து நிமிடத்தில் ஜோக்குயின் கோல் அடித்தார். இதனால் ரியல் பெட்டிஸ் 2-0 என முன்னிலைப் பெற்றது.

    2-வது பாதி நேரத்தில் பார்சிலோனா வீரர்கள் ஆவேசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். 68-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி மெஸ்சி கோல் அடித்தார். அடுத்த 3-வது நிமிடத்தில் ரியல் பெட்டிஸ் அணியின் செல்சோ கோல் அடித்தார். இதனால் 3-1 என ரியல் பெட்டிஸ் முன்னணி பெற்றது.



    79-வது நிமிடத்தில் விடால் ஒரு கோல் அடிக்க பார்சிலோனா 2-3 என பின்தங்கியிருந்தது. அடுத்த 4-வது நிமிடத்தில் ரியல் பெட்டிங் அணியின் செர்ஜியோ கானலெஸ் கோல் அடித்தார். இதனால் 2-4 என பார்சிலோனா பின்தங்யிருந்தது.

    அதன்பின் 90 நிமிடங்கள் வரை பார்சிலோனா அணியால் கோல் அடிக்கவில்லை. காயம் மற்றும் ஆட்ட நேரம் நிறுத்தம் ஆகியவற்றிற்கான கூடுதல் நேரத்தில், 92-வது நிமிடத்தில் மெஸ்சி ஒரு கோல் அடித்தார். இருந்தாலும் ரியல் பெட்டிஸ் 4-3 என பார்சிலோனாவை வீழ்த்தி அதிர்ச்சிக்குள்ளாக்கிறது.
    ×