search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பலோன் டி’ஆர் விருது: 10 வருடங்களாக கோலோச்சிய மெஸ்சி, ரொனால்டோவிற்கு முடிவு கட்டினார் லூகா மோட்ரிச்
    X

    பலோன் டி’ஆர் விருது: 10 வருடங்களாக கோலோச்சிய மெஸ்சி, ரொனால்டோவிற்கு முடிவு கட்டினார் லூகா மோட்ரிச்

    கால்பந்து விளையாட்டின் மிக உயரிய விருதான பலோன் டி’ஆர் விருதை முதன்முறையாக லூகா மோட்ரிச் தட்டிச் சென்றுள்ளார். #BallondOr
    பிரான்ஸ் நாட்டில் இருந்து பிரசுரிக்கப்படும் கால்பந்து பத்திரிகை சார்பில் ஆண்தோறும் உயரிய விருதான பலோன் டி’ஆர் விருது வழங்கப்படும். இதில் விருதிற்கு கடந்த 10 வருடமாக ரொனால்டோ, மெஸ்சி ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவி வந்தது. இவர்களை வேறு எந்த வீரர்களும் நெருங்க முடியாத நிலை இருந்தது. இந்த விருதை கடந்த 2008-ல் இருந்து மெஸ்சி, ரொனால்டோ ஆகியோர்தான் வாங்கிக் கொண்டிருந்தனர்.



    இந்த வருடம் உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்றது. இதனால் கிளப் போட்டிகளுடன் உலகக்கோப்பை போட்டிகளும் கணக்கிடப்பட்டது. உலகக்கோப்பை தொடரில் குரோஷியா அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதனால் அந்த அணியின் கேப்டனும், மிட்பீல்டரும் ஆன லூகா மோட்ரிச் இந்த முறை முன்னணியில் திகழந்தார்.



    ஏற்கனவே, பிபாவின் சிறந்த வீரருக்கான விருதை தட்டிச் சென்ற லூகா மோட்ரிச் பலோன் டி’ஆர் விருதையும் தட்டிச் சென்றார். கடந்த 2007-ம் ஆண்டு பிரேசில் வீரர் காகா பலோன் டி’ஆர் விருதை கைப்பற்றிய பின்னர், 2008-ல் இருந்து 2017 வரை மெஸ்சியும், ரொனால்டோவும் 10 வருடம் கோலோச்சியிருந்தனர். அவர்களின் சாதனைகளுக்கு லூகா மோட்ரிச் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
    Next Story
    ×