search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கவுட்டினோ"

    லா லிகா 2018-19 சீசனை மெஸ்சி, கவுட்டினோ ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் பார்சிலோனா வெற்றியோடு தொடங்கியுள்ளது. #LaLiga #Messi
    ஐரோப்பா நாடுகளில் நடைபெறும் கிளப்புகளுக்கு இடையிலான கால்பந்து தொடரில் ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா முக்கியத்துவம் வாய்ந்தது. இதில் பங்கேற்கும் பார்சிலோனா அணியில் நட்சத்திர வீரர் மெஸ்சி இடம்பிடித்து விளையாடி வருகிறார்.

    2017-2018 சீசனினல் பார்சிலோனா சாம்பியன் பட்டம் வென்றது. இந்நிலையில் 2018-19 சீசன் நேற்று முன்தினம் தொடங்கியது. பார்சிலோனா தனது முதல் ஆட்டத்தில் நேற்று டிபெர்ட்டிவோ அலெவ்ஸ் அணியை எதிர்கொண்டது.



    முதல் பாதி நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2-வது பாதி நேரத்தில் பார்சிலோனா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 64-வது நிமிடத்தில் மெஸ்சி முதல் கோலை பதிவு செய்தார். 83-வது நிமிடத்தில் கவுட்டினோ ஒரு கோல் அடித்தார். இன்ஜூரி நேரத்தில் ஆட்டத்தின் 92-வது நிமிடத்தில் மெஸ்சி மேலும் ஒரு கோல் அடிக்க பார்சிலோனா 3-0 என வெற்றி பெற்றது.



    மற்ற போட்டிகளில் ரியல் சோசியேடாட், லெவான்டே அணிகள் வெற்றி பெற்றன. செல்டா - எஸ்பான்யல், கிரோனா - வல்லாடோல்டு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது.
    பல முயற்சிகளுக்குப் பிறகு கவுட்டினோ, நெய்மரின் கடைசி நிமிட கோலால் கோஸ்டா ரிகாவை 2-0 என வீழ்த்தியது பிரேசில். #WorldCup2018 #BRACRC
    உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் ‘ஈ’ பிரிவில் இடம்பிடித்துள்ள பிரேசில் - கோஸ்டா ரிகா அணிகள் மோதின. முதல் ஆட்டத்தை டிரா செய்ததால் இந்த போட்டியில் வெற்றி பெற்றேயாக வேண்டும் என்ற நிலையுடன் பிரேசில் களம் இறங்கியது.

    ஆட்டம் தொடங்கியது முதலே பிரேசில் அணியின் நெய்மர், ஜீசஸ், கவுட்டினோ கோஸ்டா ரிகாவின் கோல் எல்லையை நோக்கி பந்தை கொண்டு சென்றே இருந்தனர். ஆனால் அதிர்ஷ்டமின்மை காரணமாக ஒரு பந்தும் கோல் கம்பத்திற்குள் செல்லவில்லை. அதிர்ஷ்டமின்மை மட்டும் காரணமல்ல. கோஸ்டா ரிகா கோல்கீப்பர் நவாஸும் ஒரு காரணம். பிரேசில் அணியின் அத்தனை முயற்சிகளையும் முறியடித்தார். இதனால் 90 நிமிடம் வரை பிரேசில் அணியால் கோல் அடிக்க முடியவில்லை.



    90 நிமிடம் முடிந்தபிறகு காயம், ஆட்டம் நேரம் நிறுத்தத்தை கணக்கில் கொண்டு 7 நிமிடம் கூடுதலாக கொடுக்கப்பட்டது. இதில் பிரேசில் அணிக்கு அதிர்ஷ்டம் கைகொடுத்தது. முதல் நிமிடத்திலேயே ஃபிர்மினோ தலையால் முட்டி பந்தை கேப்ரியல் ஜீசஸிடம் கொடுத்தார். அந்த பந்தை சரியாக ஜீசஸ் காலில் படாமல் நழுவிச் சென்றது. பந்து சென்றதும் அருகில் நின்றிருந்த பிலிப்பே கவுட்டினோ வேகமாக ஓடிவந்து பந்தை கோல் நோக்கி அடித்தார். பந்து நவாஸை ஏமாற்றி அவரது கால் இடைக்குள்ளோடு சென்று கோல் ஆனது. இதனால் பிரேசில் 1-0 என முன்னிலைப் பெற்றது.



    அதன்பின் பிரேசில் சற்று நிம்மதி அடைந்து, தாக்குதல் ஆட்டத்தை கைவிட்டது. ஆட்டத்தின் 7-வது நிமிடத்தில் கடைசி நொடியில் டக்ளஸ் வலது பக்கம் கோல் எல்லைக்குள் வைத்து நெய்மரிடம் பந்தை பாஸ் செய்தார். அதை நெய்மர் எளிதாக கோலாக்கினார். இதனால் பிரேசில் 2-0 என வெற்றி பெற்றது.
    உலகக்கோப்பையில் நெய்மர் ஏராளமான தாக்குதலுக்கு உள்ளாவார் என்று சக வீரரான பிலிப்பே கவுட்டினோ தெரிவித்துள்ளார். #WolrldCup2018 #Neymar
    ரஷியாவில் உலகக்கோப்பை கால்பந்து திருவிழா நடைபெற்று வருகிறது. பிரேசில் அணி தனது முதல் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தை எதிர்கொண்டது. காயத்திற்குப்பின் நெய்மர் இந்த போட்டியில் கலந்து கொண்டார். அவருடன் பார்சிலோனா புகழ் பிலிப்பே கவுட்டினோ, ஜீசஸ், ரியல் மாட்ரிட் புகழ் மார்சிலோ போன்ற தலைசிறந்த வீரர்கள் இணைந்து விளையாடுகிறார்கள்.

    பிரேசில் இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்த்த நிலையில் பிலிப்பே கவுட்டினோவின் கோலால் 1-1 என டிராதான் செய்தது.



    ஆட்டத்தின் பெரும்பாலான நேரத்தில் சுவிட்சர்லாந்து வீரர்கள் தடுப்பாட்டத்துடன், நெய்மரை தாக்கி Foul செய்வதிலேயே குறியாக இருந்தனர். தற்போதுதான் காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள நெய்மர், இந்த தாக்குதலை அதிக அளவில் சந்திப்பார் என்று கவுட்டினோ தெரிவித்துள்ளார்.



    1998-ம் ஆண்டிற்குப் பிறகு நெய்மர்தான் 10 முறை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். இதுகுறித்து கவுட்டினோ கூறுகையில் ‘‘சுவிட்சர்லாந்து வீரர்கள் எங்களை அதிக அளவில் தாக்கினார்கள். ஆனால், எல்லா போட்டிகளிலும் இப்படிதான் நடக்கும் என நான் யூகிக்கிறேன்.



    நாம் உலகக்கோப்பையை பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். ஆகவே, எல்லோரும் போட்டிகளில் வெற்றி பெற முயற்சி செய்வோம். நெய்மர் நன்றாக இருக்கிறார். ஆனால், சுவிட்சர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் தவறு செய்ய வேண்டியதில்லை என்ற போதிலும், தவறு செய்தார்கள். இப்படி நடந்தால் போட்டி முடங்கிவிடும்.

    அனைத்து போட்டிகளிலும் இதுபோன்று நடைபெறும். அதனை எதிர்த்து நாங்கள் முன்னேற வேண்டும்’’ என்றார்.
    ×