search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அர்ஜென்டினா ரசிகர்களின் தியாகத்திற்கு நன்றி- மெஸ்சி உருக்கம்
    X

    அர்ஜென்டினா ரசிகர்களின் தியாகத்திற்கு நன்றி- மெஸ்சி உருக்கம்

    நைஜீரியாவிற்கு எதிராக எந்தவொரு நிலையிலும் தோல்வி குறித்து யோசிக்கவில்லை என்று அர்ஜென்டினா கேப்டன் மெஸ்சி தெரிவித்துள்ளார். #WorldCup2018
    உலகக்கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. தலைசிறந்த அணிகளில் ஒன்றான அர்ஜென்டினா இந்த முறை உலகக்கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக கணிக்கப்பட்டது. ஆனால் கத்துக்குட்டி அணியான ஐஸ்லாந்திற்கு எதிராக டிரா ஆனதால், அந்த அணிக்கு பெரும் தலைவலி ஏற்பட்டது. அத்துடன் குரோசியாவிற்கு எதிராக தோல்வியை சந்தித்தது.

    இதனால் நேற்றைய நைஜீரியா போட்டியில் வெற்றி பெற்றேயாக வேண்டும் என்ற நிலையில் களம் இறங்கியது. இரண்டு போட்டியில் கோல் அடிக்காமல் ஏமாற்றம் அளித்த மெஸ்சி, நேற்றைய போட்டியில் தனது முதல் கோலை அபாரமாக அடித்தார். ரோஜோ மேலும் ஒரு கோல் அடிக்க அர்ஜென்டினா 2-1 என வெற்றி பெற்றது.



    முதல் இரண்டு போட்டியில் கோல் அடிக்காத மெஸ்சி மீது விமர்சனம் எழும்பியது. இந்நிலையில் நைஜீரியா வெற்றிக்குப்பின் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, நாங்கள் தோல்வி குறித்து யோசிக்கவே இல்லை என்றார். மேலும் மெஸ்சி கூறுகையில் ‘‘ நைஜீரியாவிற்கு எதிராக நாங்கள் கடுமையான பாதையை நோக்கி சென்று கொண்டிருந்தோம் என்பது எங்களுக்கு தெரியும். ஆனால், அதிர்ஷ்டவசமாக நாங்கள் எங்களுடைய இலக்கை எட்டினோம்.

    நெருக்கடியை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் என்று நாங்கள் நினைக்கவில்லை. எங்கள் மீது அதிகப்படியான நம்பிக்கை இருந்தது. அதை நோக்கிச் சென்றோம். அதிர்ஷ்டவசமாக அது உண்மையான மாறியது.



    கடவுள் எங்களுடன் இருக்கிறார் என்பது எங்களுக்கு தெரியும். அவர் எங்களை விட்டு சென்றிடவிலலை. மைதானத்தில் கூடியிருந்த மற்றும் அர்ஜென்டினாவில் உள்ள அனைத்து ரசிகர்களுக்கும் அவர்களுடைய தியாகத்திற்காக நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் எப்போதும் எங்களுடன்தான் இருப்பார்கள். அர்ஜென்டினா அணியின் ஜெர்சி எப்போதுமே உயர்வுதான்’’ என்றார்.
    Next Story
    ×