search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யுவான்டஸ்"

    வாரம் ஐந்து லட்சம் பவுண்டு சம்பளத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடி வரும் அலெக்சிஸ் சான்செஸ்-ஐ யுவான்டஸ், இன்டர் மிலன் அணிகள் வாங்க பேச்சுவார்த்தை நடத்துகின்றன.
    சிலி கால்பந்து வீரர் அலெக்சிஸ் சான்செஸ். இவர் அர்செனல் அணிக்காக விளையாடி வந்தார். அங்கிருந்து மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு மாறினார். யுனைடெ் அவருக்கு வாரத்திற்கு ஐந்து லட்சம் பவுண்டு சம்பளமாக வழங்கியது. இருந்தாலும் சான்செஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.



    இதனால் ஐந்து லட்சம் பவுண்டு சம்பளம் கொடுக்க வேண்டுமா? என்று மான்செஸ்டர் யுனைடெட் யோசித்து வந்தது. இந்நிலையில் இத்தாலி செர்ரி-ஏ லீக் அணிகளான யுவான்டஸ் மற்றும் இன்டர் மிலன் அணிகள் அவரை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளன.
    யுவான்டஸ் அணிக்காக விளையாடி வரும் டைபாலாவை 85 மில்லியன் பவுண்டுக்கு வாங்க பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது மான்செஸ்டர் யுனைடெட். #ManUnited #EPL
    இங்கிலீஷ் பிரிமீயர் லீக்கில் தலைசிறந்த கால்பந்து அணிகளில் ஒன்று மான்செஸ்டர் யுனைடெட். இந்த சீசனில் மான்செஸ்டர் யுனைடெட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதனால் தவரிசையில் 6-வது இடம்பிடித்து யூரோ சாம்பியன்ஸ் லீக் தொடருக்கான வாய்ப்பை இழந்தது.

    இதனால் அணியை வலிமைப்படுத்த அந்த அணியின் பயிற்சியாளர் முடிவு செய்துள்ளார். இதனால் இத்தாலியின் தலைசிறந்த கிளப்பான யுவான்டஸில் விளையாடி வரும் பவுலோ டைபாலாவை 85 மில்லியன் பவுண்டுக்கு வாங்க பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது.



    முன்கள வீரரான டைபாலா அர்ஜென்டினாவைச் சேர்ந்தவர். இவர் கடந்த 2015-ல் இருந்து யுவான்டஸ் அணிக்காக விளையாடி வருகிறார். 125 போட்டிகளில் விளையாடி 57 கோல் அடித்துள்ளார். அர்ஜென்டினா அணிக்காக 19 போட்டிகளில் களம் இறங்கி ஒரு கோல் அடித்துள்ளார்.
    கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடிய யுவான்டஸை 2-1 என வீழ்த்தி அஜாக்ஸ் அரையிறுதிக்கு முன்னேறி சாதனைப் படைத்துள்ளது. #UCL
    ஐரோப்பிய நாடுகளில் உள்ள முன்னணி கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையில் ஆண்டுதோறும் சாம்பியன்ஸ் லீக் தொடர் நடைபெற்று வருகிறது.

    2018-19 சீசனுக்கான காலிறுதி ஆட்டங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. காலிறுதிக்கு முன்னேறிய அணிகள், தங்களுடைய எதிரணியுடன் சொந்த மைதானம் மற்றும் எதிரி மைதானம் என தலா ஒருமுறை மோத வேண்டும். இரண்டு போட்டிகளிலும் எந்த அணி அதிக கோல்கள் அடித்துள்ளதோ? அந்த அணி வெற்றி பெற்றதாக கருதப்படும்.

    ஒரு காலிறுதியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடும் யுவான்டஸ் (இத்தாலி) - அஜாக்ஸ் (நெதர்லாந்து) அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அஜாக்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் காலிறுதி லெக்கில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்தன. இதனால் போட்டி டிராவில் முடிந்தது.



    2-வது லெக் யுவான்டஸ் அணிக்கு சொந்தமான மைதானத்தில் நேற்று நள்ளிரவு நடைபெற்றது. 28-வது நிமிடத்தில் யுவான்டஸின் நட்சத்திர வீரரான ரொனால்டோ கோல் அடித்தார். இதனால் யுவான்டஸ் 1-0 என முன்னிலைப் பெற்றது. ஆனால் 34-வது நிமிடத்தில் அஜாக்ஸ் அணியின் டோனி வான் டி பீக் பதில் கோல் அடித்தார். இதனால் 2-வது முதல் பாதி நேரம் ஆட்டத்தில் இரண்டு அணிகளும் 1-1 என சமநிலையில் இருந்தது.



    2-வது பாதி நேரத்தில் ஆட்டத்தின் 67-வது நிமிடத்தில் அஜாக்ஸ் அணியின் மத்திஜ்ஸ் டி லிக்ட் கோல் அடிக்க அஜாக்ஸ் 2-1 என முன்னிலைப் பெற்றது. அதன்பின் யுவான்டஸ் அணி போராடியது. ஆனால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் அஜாக்ஸ் இரண்டு லெக்கிலும் சேர்த்து யுவான்டஸை 3-2 என வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
    இரண்டு ஹெட்டர், ஒரு பெனால்டி என ஹாட்ரிக் கோல் அடித்து யுவான்டஸ் அணியை காலிறுதிக்கு அழைத்துச் சென்றார் கிறிஸ்டியானோ ரொனால்டோ.
    கிளப் அணிகளுக்கு இடையிலான யூரோ சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் தற்போது காலிறுதிக்கு முந்தைய சுற்றுகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஒவ்வொரு அணிகளும் தலா ஒருமுறை அந்தந்த அணிகளின் சொந்த மைதானத்தில் மோத வேண்டும்.

    அதன்படி யுவான்டஸ் - அட்லெடிகோ மாட்ரிட் அணிகளுக்கு இடையிலான முதல் லெக் ஆட்டம் கடந்த சில நாட்களுக்கு முன் அட்லெடிகோ அணிக்கு சொந்தமான மைதானத்தில் நடைபெற்றது. இதில் அட்லெடிகோ 2-0 என யுவான்டஸை வீழ்த்தியிருந்தது. ரொனால்டோ சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

    இந்நிலையில் இன்று அதிகாலை 2-வது லெக் யுவான்டஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் மூன்று கோல்கள் அடித்தால்தான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் யுவான்டஸ் களம் இறங்கியது.

    சொந்த மைதானத்தில் விளையாடியதால் ரசிகர்கள் அதிக அளவில் ஆதரவு அளித்தனர். இதனால் யுவான்டஸ் வீரர்கள் ஆதிக்கம் செலுத்தின. பந்து யுவான்டஸ் வீரர்கள் கால்களுக்கு இடையிலேயே சுழன்று சுழன்று வந்தது. அடிக்கடி அட்லெடிக் மாட்ரிட் கோல் கம்பத்தை நோக்கி பந்து சென்றது. என்றாலும் கோல் விழவில்லை.

    இறுதியாக ஆட்டத்தின் 27-வது நிமிடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலையால் முட்டி அற்புதமாக கோல் அடித்தார். இதனால் முதல் பாதி நேரத்தில் யுவான்டஸ் 1-0 என முன்னிலைப் பெற்றது. 2-வது பாதி நேர ஆட்டம் தொடங்கியதும் 4-வது நிமிடத்தில் அதாவது, ஆட்டத்தின் 49-வது நிமிடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலையால் முட்டி மேலும் ஒரு கோல் அடித்தார்.



    இதனால் யுவான்டஸ் 2-0 என முன்னிலைப் பெற்றது. இரண்டு லெக்கிலும் சேர்த்து 2-2 என இரு அணிகளும் சமமாக இருந்ததால், கோல்கள் விட்டுக்கொடுக்கக் கூடாது என்பதில் யுவுான்டஸ் மிகவும் கவமான செயல்பட்டது. ஆட்டத்தின் 86-வது நிமிடத்தில் யுவுான்டஸ் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை சரியான பயன்படுத்தி கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடித்தார்.

    கிறிஸ்டியோனோ ரொனால்டோவின் ஹாட்ரிக் கோலால் யுவான்டஸ் 3-2 என முன்னிலைப் பெற்றது. அதன்பின் நான்கு நிமிடங்கள் மிகச்சிறந்த வகையில் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டது. அட்லெடிகோ மாட்ரிட் அணியால் கோல் ஏதும் அடிக்க முடியாததால் யுவான்டஸ் 3-0 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.
    யூரோ சாம்பியன்ஸ் லீக்கில் ரொனால்டோ கோல் அடித்த நிலையிலும், ஓன் கோலால் மான்செஸ்டர் யுனைடெட் 2-1 என யுவான்டஸை வீழ்த்தியது. #Ronaldo
    யூரோ சாம்பியன்ஸ் லீக்கில் நேற்று நள்ளிரவு நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் யுவான்டஸ் - மான்செஸ்டர் யுனைடெட் அணிகள் மோதின. யுவான்டஸ் அணியில் இடம்பிடித்து விளையாடும் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஏற்கனவே மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடினார்.

    புகழைத் தேடிக்கொடுத்த அணிக்கெதிராக ரொனால்டோ களம் இறங்கியதால் இந்த போட்டிக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆட்டம் தொடங்கியது முதல் இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக சொந்த மைதானத்தில் விளையாடியதால் யுவான்டஸ் வீரர்கள் கூடுதல் பலத்துடன் விளையாடினார்கள்.

    ஆனாலும் முதல் பாதி நேரத்தில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. 2-வது பாதி நேரத்தில் ஆட்டத்தின் 65-வது நிமிடத்தில் ரொனால்டோ கோல் அடித்தார். இதனால் யுவான்டஸ் 1-0 என முன்னிலைப் பெற்றது. ஆட்டம் முடிய 5 நிமிடங்கள் இருக்கும் வரை மான்செஸ்டர் யுனைடெட் பதில் கோல் அடிக்கவில்லை. இதனால் யுவான்டஸ் வெற்றிபெறும் என எதிர்பார்க்கபட்டது.



    86-வது நிமிடத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் ஜுயன் மட்டா கோல் அடித்தார். இதனால் ஸ்கோர் 1-1 என சமநிலைப் பெற்றது. 89-வது நிமிடத்தில் யுவான்டஸ் வீரர் அலெக்ஸ் சான்ட்ரோ ஓன் கோல் அடிக்க பரபரப்பான கட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் 2-1 என வெற்றி பெற்றது.

    ‘எச்’ பிரிவில் இடம்பிடித்துள்ள யுவான்டஸ் 4 போட்டியில் மூன்று வெற்றியுடன் 9 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது. மான்செஸ்டர் யுனைடெட் 4 போட்டியில் இரண்டில் வெற்றி, தலா ஒரு தோல்வி, டிரா மூலம் 7 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.
    ‘செரி ஏ’ கால்பந்து லீக் தொடரில் கிறிஸ்டியானோ ரொனால்டோ இரண்டு கோல் அடிக்க யுவுான்டஸ் 2-1 என எம்போலியை வீழ்த்தியது. #Juventus #Ronaldo
    இத்தாலியின் முன்னணி கால்பந்து லீக் தொடரான ‘செரி ஏ’-யில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் எம்போலி - யுவான்டஸ் அணிகள் மோதின. ஆட்டத்தின் 28-வது நிமிடத்தில் எம்போலி அணியின் கேபுட்டோ கோல் அடித்தார். இதனால் 1-0 என எம்போலி முன்னிலைப் பெற்றது.

    அதன்பின் முதல் பாதி நேர ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2-வது பாதி நேரத்தில் யுவான்டஸ் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 54-வது நிமிடத்தில் யுவான்டஸ்க்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி கிறிஸ்டியானோ ரொனால்டோ எளிதாக கோல் அடித்தார்.



    அதன்பின் 70-வது நிமிடத்தில் அபாரமான வகையில் ஒரு கோல் அடித்தார். இதனால் யுவான்டஸ் 2-1 என முன்னிலைப் பெற்றது. அதன்பின் 20 நிமிடங்களால் எம்போலி அணியால் கோல் அடிக்க இயலவில்லை. ஆகவே யுவான்டஸ் 2-1 என வெற்றி பெற்றது. இரண் கோல் அடித்து ரொனால்டோ வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
    ரொனால்டோவுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் மான்செஸ்டர் யுனைடெட் ரசிகர்கள் மைதானத்திற்குள் படையெடுத்தனர். ஆனால் ஒருவருக்கே அதிர்ஷ்டம் கிடைத்தது. #Ronaldo
    சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தின் முன்னணி அணியான மான்செஸ்டர் யுனைனெட் அணியும், இத்தாலியின் முன்னணி அணியான யுவான்டஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

    இந்த ஆட்டம் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு சொந்தமான ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் நடைபெற்றது. மான்செஸ்டர் அணிக்கான நீண்ட காலம் விளையாடியவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. பின்னர் ரியல் மாட்ரிட் அணிக்கு சென்றார். தற்போது யுவான்டஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

    பழைய கிளப் உடன் மோதுவதற்கான ரொனால்டோ ஓல்டு டிராஃபோர்டிற்குச் சென்றார். ரொனால்டோவை காண மான்செஸ்டர் யுனைடெட் ரசிகர்கள் ஆர்வம் காட்டினார்கள். நேற்றிரவு நடைபெற்ற மான்செஸ்டர் அணிக்கெதிரான ஆட்டத்தில் யுவான்டஸ் 1-0 என வெற்றி பெற்றது.



    ஆட்டம் முடிந்ததும் ரொனால்டோ மைதானத்தில் இருந்து வெளியே நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது ஏராளமான ரசிகர்கள் ரொனால்டோவுடன் செல்பி எடுக்க மைதானத்திற்குள் நுழைந்தனர்.

    அப்போது பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களை பிடித்து வெளியேற்றினார். ஒரு ரசிகர் மட்டும் ரொனால்டோவை நெருங்கினார். அப்போது பாதுகாப்பு அதிகாரிகள் அவரை பிடித்தனர். அந்த நேரத்தில் ரொனால்டோ ரசிகரின் செல்லை வாங்கி, அவருடன் செல்பி எடுத்து, அதன்பின் செல்லை ரசிகரிடம் வழங்கினார். ரொனால்டோ செல்லை வாங்கி செல்பி எடுத்த சந்தோசத்தில் அந்த ரசிகர் வெளியேறினார்.
    நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை மாற்றுவது எளிதல்ல என யுவான்டஸ் கிளப்பின் டைரக்டர் பேபியோ பராட்டிசி தெரிவித்துள்ளார். #Ronaldo
    ரியல் மாட்ரிட் அணியில் விளையாடி வந்த ரொனால்டோ (33) கடந்த சீசனுக்குப் பிறகு யுவான்டஸ் அணியில் இணைந்தார். யுவான்டஸ் அணி ரொனால்டோவை மனமகிழ்ச்சியுடன் வரவேற்றது. அதேசமயத்தில் ரியல் மாட்ரிட் அணி, ரொனால்டோ வெளியேறியதால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றது.

    இந்த சீசனில் யுவான்டஸ் அணி தோல்வியை சந்திக்காமல் வீறுநடை போட்டு சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் யுவான்டஸ் கிளப் இயக்குனர் பராட்டிசி ரொனால்டோ குறித்து கூறுகையில் ‘‘எக்காரணத்தைக் கொண்டும் ரொனால்டோவை விட்டுத்தர மாட்டோம். எங்கள் அணியில் சேர தொடக்கம் முதலே அவர் ஆர்வம் காண்பித்தார். இது சாதகமாக அமைந்தது.



    இதற்கிடையே யுவான்டஸ் அணியில் இருந்து மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு சென்ற உலகக்கோப்பை வெற்றி வீரரான பால் போக்பா மீண்டும் எங்கள் அணிக்கு வரவாய்ப்பில்லை என்றார். ரொனால்டோவை மாற்றுவது என்பது எளிதான காரியம் அல்ல’’ என்றார்.

    லா லிகா சீசனில் ரியல் மாட்ரிட் கடைசி மூன்று போட்டியில் இரண்டில் தோல்வியடைந்து புள்ளிகள் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.
    ‘செரி ஏ’ லீக்கில் ரொனால்டோ இரண்டு கோல் அடிக்க உதவியதால் யுவான்டஸ் 3-1 என நபோலியை வீழ்த்தியது. #Ronaldo #SerieA #juventus
    இத்தாலி கால்பந்து லீக்கான ‘செரி ஏ’-வில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் யுவான்டஸ் - நபோலி அணிகள் மோதின. ஆட்டத்தின் 10-வது நிமிடத்தில் நபோலி அணியின் டிரையிஸ் மெர்ட்டன்ஸ் கோல் அடித்தார். இதற்கு பதில் கோலாக மரியோ மாண்ட்சுகிச் 26-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதனால் முதல் பாதி நேரத்தில் ஸ்கோர் 1-1 என சமநிலையில் இருந்தது.

    2-வது பாதி நேரத்தில் 49-வது நிமிடத்தில் யுவான்டஸ் அணிக்கு ‘ப்ரீ ஹிக்’ வாய்ப்பு கிடைத்தது. ரொனால்டோ பந்தை மின்னல் வேகத்தில் அடித்தார். நபோலி வீரர்களை தாண்டி கோல் கீப்பர் அருகில் சென்றது. அவர் பந்தை தடுக்க கோல் கம்பத்தில் பந்து பட்டு திரும்பியது. அதை மெண்ட்சுகிச் சிறப்பான வகையில் கோலாக்கினார். இதனால் யுவான்டஸ் 2-1 என முன்னிலைப் பெற்றது.



    ஆட்டத்தின் 76-வது நிமிடத்தில் யுவான்டஸ் அணிக்கு கார்னர் வாய்ப்பு கிடைத்தது. பந்து கார்னர் பகுதியில் இருந்து வர ரொனால்டோ தலையால் முட்டி கோல் எல்லையை நோக்கி தள்ளினார். ஆனால் நபோலி கோல் கீப்பர் பந்தை அபாரமாக தடுத்தார்.

    ஆனால் பந்தை லியோனார்டோ பொனுச்சி கோலாக மாற்றினார். இதனால் யுவான்டஸ் 3-1 என வெற்றி பெற்றது. கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடிக்காவிடிலும் இரண்டு கோல்கள் அடிக்க உதவிகரமாக இருந்தார். யுவான்டஸ் தான் விளையாடிய 7 போட்டிகளிலும் வெற்றியை ருசித்து முதல் இடத்தில் உள்ளது.
    ரொனால்டோவிற்கு ஒரு போட்டியில்தான் விளையாட தடை விதித்திருப்பதால் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கெதிராக விளையாட இருக்கிறார். #Ronaldo
    ஐரோப்பா கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆண்டுதோறும் சிறந்த கிளப் அணிகளுக்கு இடையில் சாம்பியன்ஸ் லீக் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. 2018-19-ம் ஆண்டிற்கான தொடர் கடந்த வாரம் தொடங்கியது. இதில் 32 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த அணிகள் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு பிரிவிலும் நான்கு அணிகள் இடம்பிடித்துள்ளது. இந்த அணிகள் தங்களது பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

    ஒரு ஆட்டத்தில் ‘எச்’ பிரிவில் இடம் பிடித்துள்ள இத்தாலியின் முன்னணி கிளப்பான யுவான்டஸ் ஸ்பெயின் கிளப் அணியான வாலென்சியாவை எதிர்கொண்டது. யுவான்டஸ் அணியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ இடம் பிடித்திருப்பதால், அந்த அணி சிறப்பாக விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    முதல் பாதி ஆட்டத்தில் ஆட்டம் பரபரப்பாக சென்றது. ஆட்டத்தின் 29-வது நிமிடத்தில் யுவான்டஸ் அணிக்கு ‘ப்ரீ ஹிக்’ வாய்ப்பு கிடைத்தது. அப்போது கிறிஸ்டியானோ ரொனால்டோ பந்தை அடிக்க முயற்சி செய்தார். அவருடன் வாலென்சியா வீரரும் சென்றார். அப்போது வாலென்சியா வீரர் கீழே விழுந்தார். உடனே கிறிஸ்டியானா ரொனால்டோ அவரை தலையில் தட்டினார்.

    இதனால் நடுவர் அதிரடியாக ரெட் கார்டு கொடுத்து ரொனால்டோவை வெளியேற்றினார். எவ்வளவு மன்றாடியும் நடுவர் தனது முடிவை மாற்றவில்லை. இதனால் ரொனால்டோ கண்ணீர் வடித்தபடி வெளியேறினார். ரொனால்டோ இல்லாமல் யுவான்டஸ் 10 வீரர்களுடன் விளையாடிய யுவான்டஸ் வெற்றி பெற்றது.

    யுவான்டஸ் அணி அடுத்த போட்டியில் யங் பாய்ஸ் என்ற அணியையும், அதற்கடுத்த போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் அணியையும் எதிர்கொள்கிறது. ரொனால்டோ ரெட் கார்டு பெற்றதால் யங் பாய்ஸ் அணிக்கெதிராக விளையாட முடியாது.



    அதேவேளையில் இதுகுறித்து ஐரோப்பா கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பின் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரித்தது. விசாரணையில் அதிக போட்டியில் விளையாட தடைபோட்டால் முக்கியமான மான்செஸ்டர் போட்டியில் விளையாடாத நிலை ஏற்படும். ஆனால், ஐரோப்பா கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பின் ஒழுங்கு நடவடிக்கை ஒரு போட்டியில் விளையாட மட்டுமே தடைவிதித்துள்ளது.

    இதனால் தனது பழைய கிளப்பான மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு எதிராக கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடுகிறார்.
    யூரோ சாம்பியன்ஸ் லீக்கில் மெஸ்சி ஹாட்ரிக் கோல் அடிக்க, கிறிஸ்டியானோ ரொனால்டோ ரெட் கார்டு பெற்று ஏமாற்றம் அளித்தார். #Messi #Ronaldo
    ஐரோப்பா கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆண்டுதோறும் சிறந்த கிளப் அணிகளுக்கு இடையில் சாம்பியன்ஸ் லீக் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. 2018-19-ம் ஆண்டிற்கான தொடர் நேற்றிரவு தொடங்கியது. இதில் 32 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த அணிகள் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு பிரிவிலும் நான்கு அணிகள் இடம்பிடித்துள்ளது. இந்த அணிகள் தங்களது பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா இரண்டுமுறை மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

    ஒரு ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் இடம்பிடித்துள்ள ஸ்பெயின் நாட்டின் முன்னணி கிளப்பான பார்சிலோனா நெதர்லாந்தின் பிஎஸ்வி எய்ன்டோவன் அணியை எதிர்கொண்டது. ஆட்டம் தொடங்கியது முதலே மெஸ்சி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    32-வது நிமிடத்தில் மெஸ்சி முதல் கோலை பதிவு செய்தார். இதனால் முதல் பாதி நேரத்தில் பார்சிலோனா 1-0 என முன்னிலைப் பெற்றது. 2-வது பாதி நேரத்தில் ஆட்டத்தின் 77 மற்றும் 87-வது நிமிடத்தில் மெஸ்சி அடுத்தடுத்து கோல் அடித்தார். இதற்கிடையில் டெம்பேள் 75-வது நிமிடத்தில் ஒரு கோல் அடிக்க பார்சிலோனா 4-0 என வெற்றி பெற்றது.

    மற்றொரு ஆட்டத்தில் ‘எச்’ பிரிவில் இடம் பிடித்துள்ள இத்தாலியின் முன்னணி கிளப்பான யுவான்டஸ் வாலென்சியாவை எதிர்கொண்டது. யுவான்டஸ் அணியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ இடம் பிடித்திருப்பதால், அந்த அணி சிறப்பாக விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    முதல் பாதி ஆட்டத்தில் ஆட்டம் பரபரப்பாக சென்றது. ஆட்டத்தின் 29-வது நிமிடத்தில் யுவான்டஸ் அணிக்கு ‘ப்ரீ ஹிக்’ வாய்ப்பு கிடைத்தது. அப்போது கிறிஸ்டியானோ ரொனால்டோ பந்தை அடிக்க முயற்சி செய்தார். அவருடன் வாலென்சியா வீரரும் சென்றார். அப்போது வாலென்சியா வீரர் கீழே விழுந்தார். உடனே கிறிஸ்டியானா ரொனால்டோ அவரை தலையில் தட்டினார். இதனால் நடுவர் அதிரடியாக ரெட் கார்டு கொடுத்து ரொனால்டோவை வெளியேற்றினார்.

    எவ்வளவு மன்றாடியும் நடுவர் தனது முடிவை மாற்றவில்லை. இதனால் ரொனால்டோ கண்ணீர் வடித்தபடி வெளியேறினார். ரொனால்டோ இல்லாமல் யுவான்டஸ் 10 வீரர்களுடன் விளையாடியது. முதல் பாதி நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.



    2-வது பாதி நேரத்தில் 45 மற்றும் 51 நிமிடத்தில் யுவான்டஸ் அணிக்கு பெனால்டி வாய்ப்புகள் கிடைத்தது. இதை மிராலெம் சரியாக பயன்படுத்தி கோல் அடித்தார். இதனால் 2-0 என யுவான்டஸ் முன்னிலைப் பெற்றது. அதன்பின் 39 நிமிடங்கள் கோல் அடிக்க விடாமல் பார்த்துக் கொண்டனர். இதனால் ரொனால்டோ இல்லாமலேயே யுவான்டஸ் 2-0 என வெற்றி பெற்றது.

    சாம்பியன்ஸ் லீக் முதல் லீக்கில் மெஸ்சி ஹாட்ரிக் கோல் அடித்து அசத்திய நிலையில், ரொனால்டோ ரெட் கார்டு பெற்று ஏமாற்றம் அளித்தார்.
    கிறிஸ்டியானோ ரொனால்டோ இல்லாத ரியல் மாட்ரிட் அணி வீக்கானது என்று பார்சிலோனா புகழ் மெஸ்சி குறிப்பிட்டுள்ளார். #Messi #Barcelona
    கால்பந்து போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ - மெஸ்சி இடையே கடும் போட்டி நிலவும். இருவரும் பரம எதிரிகளாகவே சித்தரிக்கப்பட்டு வருகிறது.

    கிறிஸ்டியானோ ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணிக்காகவும், மெஸ்சி பார்சிலோனா அணிக்காகவும் விளையாடிய போது இருவரும் எதிரெதிராக விளையாடும்போது அனல் பறக்கும். தற்போது கிறிஸ்டியானோ ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணியில் இருந்து இத்தாலியின் யுவான்டஸ் அணிக்கு மாறியுள்ளார்.



    இந்நிலையில் கிறிஸ்டியானோ ரொனால்டோ இல்லாத ரியல் மாட்ரிட் அணி வீக்கானது என்று பார்சிலோனா புகழ் மெஸ்சி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மெஸ்சி கூறுகையில் ‘‘சிறந்த வீரர்களை கொண்ட ரியல் மாட்ரிட் அணி உலகின் தலைசிறந்த அணிகளில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. ஆனால், கிறிஸ்டியானோ ரொனால்டோ இல்லாத ரியல் மாட்ரிட் சற்று தரம் குறைந்த அணியாக இருப்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.



    யுவான்டஸ் அணி சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக மாறியுள்ளது’’ என்றார்.
    ×