என் மலர்
நீங்கள் தேடியது "Premier League"
- லிவர்பூல் கால்பந்து கிளப்பின் பிரீமியர் லீக் பட்ட வெற்றி அணிவகுப்பு நடந்தது.
- ஒரு குழந்தை மற்றும் ஒரு முதியவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் திங்கட்கிழமை நடைபெற்ற பிரீமியர் லீக் வெற்றி கொண்டாட்டங்களின் போது பெரும் விபத்து ஏற்பட்டது.
ரசிகர்கள் கூட்டத்திற்குள் ஒரு கார் மோதியதில் நான்கு குழந்தைகள் உட்பட கிட்டத்தட்ட 50 பேர் காயமடைந்தனர்.
லிவர்பூல் கால்பந்து கிளப்பின் பிரீமியர் லீக் பட்ட வெற்றியைக் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்ட வெற்றி அணிவகுப்பில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உற்சாகமாக பங்கேற்றனர். பலத்த மழை பெய்த போதிலும், ரசிகர்கள் அதிக எண்ணிக்கையில் திரண்டனர். அப்போது ஒரு கார் கூட்டத்திற்குள் வேகமாக சென்றது.
விபத்தில் காயமடைந்தவர்களில் 27 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் ஒரு குழந்தை மற்றும் ஒரு முதியவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சிறிய காயங்களுடன் மேலும் 20 பேருக்கு சம்பவ இடத்திலேயே முதலுதவி அளிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. மற்றவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் தாங்களாகவே சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக லிவர்பூல் பகுதியைச் சேர்ந்த 53 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் ஊடகங்களுக்குத் தெரிவித்தனர். மேலும் இது பயங்கரவாதச் செயலாகக் கருதப்படவில்லை என்றும் காவல்துறை தெளிவுபடுத்தியது.
- ஆகஸ்ட் 16-ந்தேதி தொடங்கி அடுத்த வருடம் மே மாதம் 25-ந்தேதி வரை போட்டி நடைபெறுகிறது.
- நடப்பு சாம்பியன் மான்செஸ்டர் சிட்டி முதல் போட்டியில் செல்சி அணியை எதிர்கொள்கிறது.
இங்கிலாந்தில் நடைபெறும் முன்னணி கால்பந்து தொடர் பிரிமீயர் லீக். இந்த தொடரின் 2024-25 சீசனுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி போட்டி ஆகஸ்ட் 16-ந்தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் மான்செஸ்டர் யுனெடெட், புல்ஹாம் அணியை எதிர்கொள்கிறது.
நடப்பு சாம்பியனான மான்செஸ்டர் சிட்டி 18-ந்தேதி செல்சி அணியை எதிர்கொள்கிறது, லிவர்பூல் 17-ந்தேதி இப்ஸ்விச் அணிக்கெதிராக விளையாடுகிறது. சனிக்கிழமையான அன்று ஆறு போட்டிகள் நடைபெறுகின்றன.
ஆகஸ்ட் மாதம் 16-ந்தேதி தொடங்கி அடுத்த ஆண்டு மே 25-ந்தேதி வரை பிரிமீயர் லீக் போட்டிகள் நடைபெறும். இதில் 20 அணிகள் பங்கேற்கும் ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளுடன் தங்களுடைய மைதானத்தில் (Home Ground) ஒருமுறை, எதிரணி மைதானத்தில் (Away Ground) ஒருமுறை என இரண்டு முறை மோத வேண்டும். லீக் போட்டிகள் முடிவில் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடிக்கும் அணி சாம்பியன் பட்டம் வெல்லும்.
2023-24 சீசனில் மான்செஸ்டர் சிட்டி 28 வெற்றிகள், 7 டிரா, 3 தோல்விகள் மூலம் 91 புள்ளிகள் பெற்று புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் பிடித்தது. அர்செனல் 28 வெற்றி தலா 5 டிரா, தோல்விகள் மூலம் 89 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தை பிடித்தது.
லிவர்பூல் (82), 3-வது இடத்தையும், அஸ்டோன் வில்லா (68) 4-வது இடத்தையும், டோட்டன்ஹாம் (66) 5-வது இடத்தையும் பிடித்தன. மான்செஸ்டர் யுனைடெட் 60 புள்ளிகளுடன் 8-வது இடத்தை பிடித்தது.
- 2022-ல் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டார்.
- இவரது தலைமையைில் இரண்டு வருடங்களில் யுனைடெட் அணி இரண்டு கோப்பைகளை வென்றுள்ளது.
இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்தின் முன்னணி அணிகளில் ஒன்றாக மான்செஸ்டர் யுனைடெட் அணி திகழ்கிறது. இந்த அணியின் பயிற்சியாளராக நெதர்லாந்தை சேர்ந்த எரிக் டென் ஹேக் (Erik Ten Hag) இருந்து வருகிறார். கடந்த 2022-ம் ஆண்டு இவர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
2025-ம் ஆண்டுடன் இவரது பதவிக்காலம் முடிவடைகிறது. இந்த நிலையில் மான்செஸ்டர் யுனைனெட் நிர்வாகம் அவரை தொடர்ந்து பயிற்சியாளராக வைத்துக் கொள்ள விரும்பியது. இதனால் எரிக் டென் ஹேக்கின் பதவிக்காலத்தை மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டித்துள்ளது. இதனால் 2026 வரை மான்செஸ்ட் யுனைடெட் அணியின் பயிற்சியாளராக நீடிப்பார்.
அணியுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்ற ஒப்பந்தம் நிறைவேறியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என 54 வயதான எரிக் டென் ஹேக் தெரிவித்துள்ளார்.
அஜாக்ஸ் அணியில் இருந்து மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இணைந்தார். இரண்டு வருடங்களில் இரண்டு கோப்பைகைளை யுனைடெட் அணி வென்றுள்ளது.
எரிக் டென் ஹேக்கின் முதல் சீனில் யுனைடெட் அணி பிரீமியர் லீக்கில் 3-வது இடம் பிடித்தது. கரபவோ கோப்பை இறுதிப் போட்டியில் நியூகேஸ்டில் அணியை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
ஆனால் 2-வது சீசனில் பிரீமியர் லீக்கில் 8-வது இடமே பிடித்தது. மேலும் சாம்பியன்ஸ் டிராபியில் குரூப் சுற்றுடன் வெளியேறியது. மான்செஸ்டர் சிட்டி அணிக்கெதிராக 201 எஃப்.ஏ. கோப்பை இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றது.
இதனால் அணியை வலிமைப்படுத்த அந்த அணியின் பயிற்சியாளர் முடிவு செய்துள்ளார். இதனால் இத்தாலியின் தலைசிறந்த கிளப்பான யுவான்டஸில் விளையாடி வரும் பவுலோ டைபாலாவை 85 மில்லியன் பவுண்டுக்கு வாங்க பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது.

முன்கள வீரரான டைபாலா அர்ஜென்டினாவைச் சேர்ந்தவர். இவர் கடந்த 2015-ல் இருந்து யுவான்டஸ் அணிக்காக விளையாடி வருகிறார். 125 போட்டிகளில் விளையாடி 57 கோல் அடித்துள்ளார். அர்ஜென்டினா அணிக்காக 19 போட்டிகளில் களம் இறங்கி ஒரு கோல் அடித்துள்ளார்.
இதில் சிறப்பாக விளையாடும் வீரர்களை கொண்டு பிரிமீயர் லீக் அணி அறிவிக்கப்படும். இந்த அணியில் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் முன்னணி வீரரான பால் போக்பா இடம் பிடித்துள்ளார். மான்செஸ்டர் சிட்டி, லிவர்பூல் அணியைத் தவிர்த்து இடம் பிடித்த ஒரே வீரர் இவர்தான்.
பிரிமீயர் லீக் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. எடர்சன் (மான்செஸ்டர் சிட்டி), 2. டிரென்ட் அலெக்சாண்டர்-அர்னால்டு (லிவர்பூல்), 3. விர்ஜில் வான் திஜ்க் (லிபர்பூல்), 4. அய்மெரிக் லபோர்ட் (மான்செஸ்டர் சிட்டி), 5. ஆண்டி ராபர்ட்சன் (லிபர்பூல்), 6. பால் போக்பா (மான்செஸ்டர் யுனைடெட்). 7. பெர்னார்டோ சில்வா (மான்செஸ்டர் சிட்டி), 8. பெர்னாண்டினோ (மான்செஸ்டர் சிட்டி), 9. செர்ஜியோ அக்யூரோ (மான்செஸ்டர் சிட்டி). 10. ரஹீம் ஸ்டெர்லிங் (மான்செஸ்டர் சிட்டி), 11. சாடியோ மானே (லிவர்பூல்).
இதற்கிடையில் இங்கிலீஷ் பிரிமீயர் லீக்கில் மான்செஸ்டர் யுனைடெட் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் அணிகளின் புள்ளிகள் தரவரிசைப் பட்டியலில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. இந்நிலையில் ஜோஸ் மவுரினோ அதிரடியாக நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக ஒலே கன்னர் சோல்ஸ்க்ஜயரை தற்காலிக பயிற்சியாளராக நியமித்துள்ளது.

சோல்ஸ்க்ஜயர்
ஜோஸ் மவுரினோ 2004 முதல் 2007 வரை செல்சி அணியிலும், 2008 முதல் 2010 வரை இன்டர் மிலன் அணியிலும் 2010 முதல் 2013 வரை ரியல் மாட்ரிட் அணியிலும், 2013 முதல் 2015 வரை செல்சி அணியிலும் பயிற்சியாளராக பணிபுரிந்துள்ளார்.






