search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ajax"

    அரையிறுதி லெக் 2-ல் அயாக்ஸ் அணியை 3-2 என வீழ்த்தி, அவே கோல்ஸ் அடிப்படையில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர். #UCL
    யூரோ சாம்பியன்ஸ் லீக் அரையிறுதி போட்டி ஒன்றில் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் - அயாக்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கடந்த வாரம் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் மைதானத்தில் நடைபெற்ற முதல் லெக்கில் அயாக்ஸ் 1-0 என வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு நடைபெற்ற 2-வது லெக்கில் அயாக்ஸ் அணிக்கு சொந்தமான மைதானத்தில் நடைபெற்றது.

    சொந்த மைதானத்தில் அயாக்ஸ் அணி உத்வேகத்துடன் விளையாடியது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணியும் ஈடுகொடுத்து விளையாடியது.

    ஆனால் சொந்த மைதான ரசிகர்கள் ஆதரவால் அயாக்ஸ் சிறப்பான தொடக்கம் கண்டது. ஆட்டம் தொடங்கிய ஐந்தாவது நிமிடத்தில் அயாக்ஸ் அணியின் மத்திஜ்ஸ் டி லிக்ட் முதல் கோலை பதிவு செய்தார். 35-வது நிமிடத்தில் ஹகிம் ஜியெச் கோல் அடித்தார். இதனால் அயாக்ஸ் முதல் பாதி நேரத்தில் 2-0 என முன்னிலைப் பெற்றிருந்தது. முதல் லெக்கில் ஏற்கனவே ஒரு கோல் அடித்திருந்ததால் ஒட்டுமொத்தமாக 3-0 என முன்னிலைப் பெற்றிருந்தது.

    இதனால் அயாக்ஸ் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2-வது பாதி நேர ஆட்டம் தொடங்கியதும் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணி வீரர்கள் வீறுகொண்டு எழுந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    குறிப்பாக லூகாஸ் மவுரா ஆட்டத்தில் அனல் பறந்தது. லூகாஸ் 55-வது நிமிடத்திலும், 59-வது நிமிடத்திலும் அடுத்தடுத்து கோல் அடித்து அயாக்ஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்தனர். அதன்பின் அயாக்ஸ் அணி சுதாரித்துக் கொண்டு மேலும் கோல் ஏதும் வாங்காத அளவிற்கு தடுப்பாட்டத்தில் ஈடுபட்டது.



    இதனால் 90 நிமிடம் முடிவில் 2-2 என இரு அணிகளும் சமநிலையில் இருந்தன. காயம் மற்றும் ஆட்டம் தடை ஆகியவற்றை கணக்கிட்டு இன்ஜூரி நேரம் கொடுக்கப்பட்டது. போட்டி முடியும் 6-வது நிமிடத்தில் லூகாஸ் ஹாட்ரிக் கோல் அடிக்க டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் 3-2 என வெற்றி பெற்றது.

    இரண்டு லெக்கையும் சேர்த்து ஆட்டம் 3-3 என சமநிலைப் பெற்றாலும், வெளிமைதான கோல்கள் (Away Goals) விதிப்படி டோட்டன்ஹாம் அயாக்ஸ் மைதானத்தில் 3 கோல்கள் அடித்ததால் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
    கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடிய யுவான்டஸை 2-1 என வீழ்த்தி அஜாக்ஸ் அரையிறுதிக்கு முன்னேறி சாதனைப் படைத்துள்ளது. #UCL
    ஐரோப்பிய நாடுகளில் உள்ள முன்னணி கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையில் ஆண்டுதோறும் சாம்பியன்ஸ் லீக் தொடர் நடைபெற்று வருகிறது.

    2018-19 சீசனுக்கான காலிறுதி ஆட்டங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. காலிறுதிக்கு முன்னேறிய அணிகள், தங்களுடைய எதிரணியுடன் சொந்த மைதானம் மற்றும் எதிரி மைதானம் என தலா ஒருமுறை மோத வேண்டும். இரண்டு போட்டிகளிலும் எந்த அணி அதிக கோல்கள் அடித்துள்ளதோ? அந்த அணி வெற்றி பெற்றதாக கருதப்படும்.

    ஒரு காலிறுதியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடும் யுவான்டஸ் (இத்தாலி) - அஜாக்ஸ் (நெதர்லாந்து) அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அஜாக்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் காலிறுதி லெக்கில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்தன. இதனால் போட்டி டிராவில் முடிந்தது.



    2-வது லெக் யுவான்டஸ் அணிக்கு சொந்தமான மைதானத்தில் நேற்று நள்ளிரவு நடைபெற்றது. 28-வது நிமிடத்தில் யுவான்டஸின் நட்சத்திர வீரரான ரொனால்டோ கோல் அடித்தார். இதனால் யுவான்டஸ் 1-0 என முன்னிலைப் பெற்றது. ஆனால் 34-வது நிமிடத்தில் அஜாக்ஸ் அணியின் டோனி வான் டி பீக் பதில் கோல் அடித்தார். இதனால் 2-வது முதல் பாதி நேரம் ஆட்டத்தில் இரண்டு அணிகளும் 1-1 என சமநிலையில் இருந்தது.



    2-வது பாதி நேரத்தில் ஆட்டத்தின் 67-வது நிமிடத்தில் அஜாக்ஸ் அணியின் மத்திஜ்ஸ் டி லிக்ட் கோல் அடிக்க அஜாக்ஸ் 2-1 என முன்னிலைப் பெற்றது. அதன்பின் யுவான்டஸ் அணி போராடியது. ஆனால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் அஜாக்ஸ் இரண்டு லெக்கிலும் சேர்த்து யுவான்டஸை 3-2 என வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
    ×