search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "medicine"

    • சதன்திருமலைக்குமார் எம்.எல்.ஏ., யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தனர்.
    • மக்களை தேடி மருத்துவம் சார்பாக மக்களுக்கு மருத்துவ பெட்டி வழங்கப்பட்டது.

    சிவகிரி:

    பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டம் சிறப்பு முகாம் தென்காசி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் முரளிசங்கர் அறிவுரையின்படி, வாசுதேவநல்லூர் வட்டார மருத்துவ அலுவலகம் ராயகிரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் ராயகிரி இந்து நாடார் உறவின்முறை சி.பா.சிவந்தி ஆதித்தனார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    சதன்திருமலைக்குமார் எம்.எல்.ஏ., யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி முகாமை தொடங்கி வைத்தனர்.

    வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சாந்தி சரவணபாய் தலைமை தாங்கினார். சிவகிரி பேரூர் தி.மு.க. செயலாளர் செண்பகவிநாயகம், ராயகிரி பேரூராட்சி மன்ற தலைவர் இந்திரா, துணைத்தலைவர் குறிஞ்சி மகேஷ், செயல் அலுவலர் சுதா, மருத்துவ அலுவலர் கிருபா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தலைமை ஆசிரியர் வெங்டகிருஷ்ணன் வரவேற்று பேசினார். சதன்திருமலைக்குமார் எம்.எல்.ஏ., யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் ஆகியோர் நிகழ்ச்சியில் மக்களை தேடி மருத்துவம் சார்பாக மக்களுக்கு நீரழிவு நோய் மற்றும் ரத்த அழுத்தம் நோய்களுக்கான மருத்துவம் பெட்டி வழங்கினர்.

    முன்னதாக இளையோர் செஞ்சிலுவை சங்க மாணவ- மாணவிகள் பள்ளியின் சார்பாக அனைவருக்கும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இம்முகாமில் கலந்து கொண்ட அனைத்து தரப்பு பொதுமக்களுக்கும் சிறப்பு மருத்துவம், ரத்த பரிசோதனை, கண் பரிசோதனை உட்பட்ட அனைத்து பரிசோதனைகளும் நடத்தப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

    நிகழ்ச்சியில் இந்து நாடார் உறவின்முறை தலைவர் அம்மையப்பன், செயலர் சண்முகானந்தம், சி.பா.சிவந்தி ஆதித்தனார் மேல்நிலைப்பள்ளி கமிட்டி செயலர் கணேசன், தலைமை ஆசிரியர் வெங்கடகிருஷ்ணன், உதவி தலைமை ஆசிரியர் சமுத்திரபாண்டியன், ஆசிரியர்கள் நாராயணன், நாகராஜ், பாபு, இந்து நாடார் உறவின்முறை நிர்வாகிகள், ம.தி.மு.க. கிருஷ்ணகுமார், தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் மனோகரன், விவேகானந்தன், பேரூர் செயலாளர் குருசாமி, தென்மலை கவுன்சிலர் முனியராஜ், ராஜகுரு, வார்டு கவுன்சிலர்கள், மணிகண்டன், விக்கி, வாசுதேவநல்லூர் வட்டார சுகாதார அலுவலகம் சார்பில் அனைத்து மருத்துவ அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், பகுதி சுகாதார செவிலியர்கள், பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் ரவிக்குமார் செய்திருந்தார்.

    • சில மருந்துகள் கிடைக்காமல் தனியார் மருந்தகங்களை நாட வேண்டிய சூழல் உள்ளது.
    • அருகில் உள்ள எந்த மருத்துவமனையில் மருந்து இருப்பு இருக்கும் என்பதை தெரிவித்து விடுவர்.

    திருப்பூர் :

    அரசு மருத்துவமனை, மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் அத்தியாவசிய மருந்துகள் கிடைக்கவில்லையெனில் 104க்கு தொடர்பு கொள்ளுங்கள் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

    நோயாளிகளுக்கு தேவையான மருந்துகளை போதிய அளவில் இருப்பு வைத்துள்ள போதும் சில நேரங்களில், குறிப்பிட்ட சில மருந்துகள் கிடைக்காமல் தனியார் மருந்தகங்களை நாட வேண்டிய சூழல் உள்ளது. விலை உயர்வாக இருக்கும் மருந்துகளை வாங்க முடியாமல் நோயாளிகள் சிரமப்படுகின்றனர்.

    இந்நிலையில் அரசு மருத்துவமனை, மேம் படுத்தப்பட்ட, ஆரம்ப, துணை சுகாதார நிலையங்களில் குறிப்பிட்ட சில மருந்துகள் இல்லையென தெரிவித்தால் அந்த மருந்து குறித்து 104 என்ற அரசின் இலவச உதவி எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.உடனே, அவர்கள் அருகில் உள்ள எந்த மருத்துவமனையில் மருந்து இருப்பு இருக்கும் என்பதை தெரிவித்து விடுவர். மருந்து கிடைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து தருவர் என திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தண்டுவடம் பாதிக்கப்பட்டு 2016-ம் ஆண்டு அறுவை சிகிச்சை செய்து வீட்டிலேயே உள்ளார்.
    • சுபஸ்ரீ தஞ்சாவூர் மருத்துவகல்லூரியிலும், ஸ்ரீபரன் கன்னியாகுமாரியில் உள்ள மருத்துவகல்லூரியில் இடம்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா நெய்விளக்கு வடகாடு பகுதியைச் சேர்ந்தவர் வீராசாமி- ராணி தம்பதிக்கு ஸ்ரீபரன் (வயது 21) என்ற மகனும், சுபஸ்ரீ (18) என்ற மகளும் உள்ளனர்.

    இவர்கள் இருவரும் இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று மருத்துவ கல்லூரியில் சேர்ந்து படிக்க உள்ளனர்.

    பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள வீராசாமி விவசாய கூலி வேலை பார்த்து வந்தார். மூட்டை தூக்கும் தொழில் செய்யும் போது விபத்து ஏற்பட்டு அதில் தண்டுவடம் பாதிக்கப்பட்டு 2016 ஆம் ஆண்டு அறுவை சிகிச்சை செய்து வீட்டிலேயே உள்ளார்.

    இவரது மனைவி ராணி அதன்பிறகு தையல் வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார்.

    இந்த ஏழ்மையான சூழ்நிலையில் தன் மகன் மகள்களை மருத்துவராக பார்க்க வேண்டும் என பெற்றோர் கனவு கண்டனர்.

    இதற்காக இரவு பகல் பாராது ராணி தையல் வேளையிலும் ஆடு வளர்ப்பிலும் ஈடுபட்டு தனது பிள்ளைகளை படிக்க வைத்தார்.

    மிகுந்த சிரமங்களுக்கு இடையே ஸ்ரீபரன், சுபஸ்ரீ இருவரும் மருத்துவக் கல்லூரியின் கனவுகளோடு தஞ்சாவூரிலே பயிற்சியில் சேர்ந்து நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்றனர்.

    இதில் சுபஸ்ரீ தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியிலும் ஸ்ரீபரன் கன்னியாகுமாரியில் உள்ள மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. 

    • தேங்காய் சிரட்டைகள், டீகப்புகள், பிளாஸ்டிக் பைகள் ஆகியவற்றை சேகரித்து அப்புறப்படுத்தினர்.
    • தண்ணீரில் லார்வா புழுக்கள் உற்பத்தியாகியிருந்ததை சேகரித்து அதனை ஆய்வுக்கு உட்படுத்திடனர்.

    சீர்காழி:

    சீர்காழி நகராட்சி சார்பில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் டெங்கு கொசுக்கள்உற்பத்தியை தடுத்து காய்ச்சல்ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரப்படு த்தப்பட்டு உள்ளது.

    முதல்கட்டமாக பள்ளி, கல்லூரிகளில் டெங்கு கொசு உற்பத்தியாகும் பகுதிகளை டெங்கு தடுப்பு பணியாளர்கள் ஆய்வு செய்து கண்டறிந்து அழித்து வருகின்றனர்.

    பள்ளி குடிநீர் தொட்டிகள், கழிவறை, கைகள் சுத்தம் செய்யும் பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தி யாவதை தடுக்க மருந்து தெளிக்கப்பட்டது.

    மேலும் பள்ளிவளாகங்களை சுற்றி பழையடயர்கள், உடைந்த பாட்டில்கள், தேங்காய் சிரட்டைகள், டீகப்புகள், பிளாஸ்டிக் பைகள் ஆகியவற்றை சேகரித்து அப்புறப்படுத்தப்பட்டு பிளிசிங் பவுடர் தெளித்தும் மருந்து தெளித்தும் தூய்மைபடுத்தினர்.

    மேலும் பள்ளி ஒன்றில் தண்ணீரில் லார்வா புழுக்கள் உற்பத்தியாகியிருந்ததை சேகரித்து அதனை ஆய்வுக்கு உட்படுத்திட பாட்டிலில் களபணியாளர்கள் எடுத்து சென்றனர்.

    • 2 ஆயிரத்து 700 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு கவுன்சிலிங்கில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது.
    • திருப்பூர் மாவட்டத்தில் அழைக்கப்பட்ட 166 பேரில், 84 பேர் முதல் நாள் கவுன்சிலிங்கில் பங்கேற்றனர்.

    திருப்பூர் :

    அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளில் உள்ள மொத்த இடங்களில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கான கவுன்சிலிங், கடந்த 20ந் தேதி துவங்கியது. சென்னையில் நேரடியாக நடந்த இந்த கலந்தாய்வில் அரசு பள்ளி ஒதுக்கீட்டில், 2 ஆயிரத்து 700 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு கவுன்சிலிங்கில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது.

    திருப்பூர் மாவட்டத்தில் அழைக்கப்பட்ட 166 பேரில், 84 பேர் முதல் நாள் கவுன்சிலிங்கில் பங்கேற்றனர். இதில் ஜெய்வாபாய் மாதிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மட்டும் 7 மாணவிகளுக்கு விரும்பிய கல்லுாரியில் மருத்துவம் பயில வாய்ப்பு கிடைத்துள்ளது.

    குறிப்பாக சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லூரி, கோவை மருத்துவ கல்லூரி, கோவை இ.எஸ்.ஐ., பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லூரி, கே.எம்.சி.எச்., மருத்துவ கல்லூரி, ராமகிருஷ்ணா பல் மருத்துவ கல்லூரி, ராஜா முத்தையா கல்லூரி, சென்னை, துாத்துக்குடி, கடலூர் பல் மருத்துவமனை, நந்தா பல் மருத்துவமனை ஈரோடு, மதுரை, திருச்சி, அரியலூர், கரூர், திருப்பூர் போன்ற மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து பயில மாணவ, மாணவிகள் தேர்வாகியுள்ளனர்.

    அதிகபட்சமாக ஜெய்வாபாய் மாதிரி பெண்கள் பள்ளியில் 7 பேர், கணபதிபாளையம் பள்ளியில் 3, உடுமலை பெண்கள் பள்ளியில் 3, அய்யன்காளிபாளையத்தில் 2, பெருமாநல்லூர் ஆண்கள் பள்ளியில் 2, கணக்கம்பாளையத்தில் 2 பேர் வீதம் மருத்துவ படிப்பில் சேர இடம் கிடைத்துள்ளது. எம்.பி.பி.எஸ்., படிப்பில், 18 பேர், பி.டி.எஸ்., பல் மருத்துவ படிப்பில் 15 பேருக்கு சீட் கிடைத்துள்ளது.

    இது குறித்து மாவட்ட 'நீட்' ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் கூறுகையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி வழங்க துவங்கியது முதல் நிறைய மாணவர்கள் ஆர்வத்துடன் மருத்துவ கல்வி பயில முன்வருகின்றனர். அரசின் 7.5 ஒதுக்கீடு திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    திருப்பூரில் கடந்தாண்டை விட 5 பேர் இம்முறை கூடுதலாக மருத்துவ கவுன்சிலிங்கில் தேர்வாகியுள்ளனர். அரசு பள்ளி அளவில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் மருத்துவ கல்லூரிகளை சேர்ந்தவர்களின் எண்ணிக்கையில், திருப்பூர் மாநில அளவில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. திருப்பூர் அரசு பள்ளி மாணவர்களிடையே மருத்துவ கல்வி பயில்வதற்கான ஆர்வமும், முனைப்பும் அதிகரித்துள்ளதை காட்டுகிறது என்றார்.

    • கிருமாம்பாக்கத்தில் உள்ள ஆறுபடை வீடு மருத்துவக்கல்லூரியின் நுண்ணுயிரியல் துறையும், உயிரியல் மருத்துவ ஆராய்ச்சி மையமும் இணைந்து, கம்பெக்டிங் அண்டிமைக்ரோபியல் ரெசிஸ்டண்ட் எனும் முதல் சர்வதேச மாநாடு புதுவை, ஆனந்தா இன் ஓட்டல் கன்வென்ஷன் ஹாலில் நடைபெற்றது.
    • புதுவை வி.சி. ஆர்.சி. தலைவர் டாக்டர். அஸ்வனிகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    புதுச்சேரி:

    கிருமாம்பாக்கத்தில் உள்ள ஆறுபடை வீடு மருத்துவக்கல்லூரியின் நுண்ணுயிரியல் துறையும், உயிரியல் மருத்துவ ஆராய்ச்சி மையமும் இணைந்து, கம்பெக்டிங் அண்டிமைக்ரோபியல் ரெசிஸ்டண்ட் எனும் முதல் சர்வதேச மாநாடு புதுவை, ஆனந்தா இன் ஓட்டல் கன்வென்ஷன் ஹாலில் நடைபெற்றது.

    மாநாட்டுக்கு விநாயகா மிஷன் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் நிர்வாக குழு உறுப்பினர் சுரேஷ் சாமுவேல் தலைமை தாங்கினார்.

    புதுவை வி.சி. ஆர்.சி. தலைவர் டாக்டர். அஸ்வனிகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். புதுவை பல்கலைக்கழக நுண்ணுயிரியல் துறை தலைவர் டாக்டர் ஜோசப் செல்வின் கவுரவ விருந்தினரக கலந்து கொண்டார்.

    ஆறுபடை வீடு மருத்துவக்கல்லூரி நுண்ணுயிரியல் துறை தலைவர் டாக்டர் லதா வரவேற்றார். கல்லூரி முதல்வர் டாக்டர். கோட்டூர் தொடக்கவுரை ஆற்றினார். கல்லூரி ஆராய்ச்சித்துறை தலைவர் டாக்டர் விஷ்ணு பட் மாநாட்டு செயல்பாட்டினை விளக்கும் நினைவுப் புத்தகத்தை வெளியிட்டார். கல்லூரி உயிரியல் மருத்துவ ஆராய்ச்சி மைய இணை பேராசிரியர் டாக்டர்.ரவிக்குமார் நன்றியுரை ஆற்றினார்.

    கல்லூரி நுண்ணுயிரியல் துறை இணை பேராசிரியர் டாக்டர். கவிதா விழா ஏற்பாட்டினை செய்திருந்தார். மாநாட்டில் லண்டன் இம்பிரியல் கல்லூரி பேராசிரியர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

    மேலும் இந்தியாவில் உள்ள 200-க்கும் மேற்பட்ட மருத்துவக்கல்லூரிகளின் பேராசிரியர்களும், மாணவர்களும், மேற்ப–டிப்பு மாணவர்களும் மற்றும் ஆராய்ச்சி துறை மாணவர்களும் கலந்துகொண்டு வாய்வழி மற்றும் சுவரொட்டி விளக்கக்காட்சி வழங்கினர்.

    இதில் சிறப்பான விளக்கக்காட்சிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மேலும் சென்னை, மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் கல்லூரியில் நுண்ணுயிரியல் துறையில் மருத்துவ மேற்படிப்பு பயிலும் டாக்டர். ஹிமாணி டெம்பர்மாவுக்கு "இளம் ஆராய்ச்சியாளர் விருதும் ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகையும்" வழங்கப்பட்டது. இறுதியில் மருத்துவ மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    • நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி, ஆடுகளுக்கு குடற்புழு நீக்க மருந்து வழங்கல் உள்ளிட்ட கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு, ஆடு மற்றும் கன்றுகளுக்கு குடற்புழு நீக்க மருந்து வழங்கப்பட்டது.

    மன்னார்குடி:

    மன்னார்குடி மிட்டவுன் ரோட்டரி அறக்கட்டளை வளாகத்தில் நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி, ஆடுகளுக்கு குடற்புழு நீக்க மருந்து வழங்கல் உள்ளிட்ட கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.

    இந்த முகாமில் சிறப்பு விருந்தினர்களாக மிட்டவுன் ரோட்டரி சங்க 2981 ரோட்டரி மாவட்ட ஆளுநர் வி. செல்வநாதன், மன்னார்குடி நகராட்சி ஆணையர் தா.

    சென்னுகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மிட்டவுன் ரோட்டரி சங்க தலைவர் டி.ரெங்கையன் தலைமை தாங்கினார். ரோட்டரி மாவட்ட கால்நடை மருத்துவ முகாம் தலைவர் டாக்டர் வி.பாலகிருஷ்ணன்,

    ரோட்டரி உதவி ஆளுநர் டி.ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    திருவாரூர் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர்

    டி.ராமலிங்கம் கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டார்.

    ஆடு மற்றும் கன்றுகளுக்கு குடற்புழு நீக்க மருந்து வழங்கினார்.

    நிகழ்ச்சியில் ரோட்டரி முன்னாள் தலைவர்கள் சி.குருசாமி, எம்.நடராஜன், ஜி.மனோகரன், ஜி.சிவக்கொழுந்து, ஆர்.மாரியப்பன், டாக்டர் கே.மோகனசுந்தரம், பி.ரமேஷ், ஹரிரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக ரோட்டரி செயலாளர் வி. கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். முடிவில் ரோட்டரி பொருளாளர் டி.அன்பழகன் நன்றி கூறினார்.

    • சிறு துளையிட்டு மணியில் உள்ள சாற்றினை உறிஞ்சி குடிப்பதால் அந்த குறிப்பிட்ட நெல்மணி பதராகி விடும்.
    • பயிர் அதிக அடர்த்தியாக உள்ள இடங்களில் இலையுறை அழுகல் நோய் ஆங்காங்கே தென்படுகிறது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அருகே திருவலஞ்சுழி கிராமத்தில் குறுவைப் பயிரில் கதிர் நாவாய் பூச்சியின் தாக்குதல் தென்படுவதாக விவசாயிகளிடமிருந்து தகவல் வந்ததை தொடர்ந்து திருத்துறைப்பூண்டி வேளாண்மை உதவி இயக்குனர் சாமிநாதன் அந்த அந்த பகுதி வேளாண்மை உதவி அலுவலர் உடன் கள ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அவர் கூறும்போது:-

    பொதுவாக பின் தாளடி பருவத்தில் காணப்படும் கதிர் நாவாய் பூச்சியின் தாக்குதல்கள் இந்த குறுவை பயிரில் காணப்படுகிறது.

    இந்த பூச்சிகள் கதிரில் அமர்ந்து நெல்மணிகள் உருவாகும் தருணத்தில் நெல்மணிகளில் சிறு துளையிட்டு மணியில் உள்ள சாற்றினை உறிஞ்சி குடிப்பதால் அந்த குறிப்பிட்ட நெல் மணி பதராகி விடும்.

    எனவே மருந்து அடிக்கும் போது சுற்று விழா போட்டு ஒரு சாகுபடி தளையை ஒரே முறையில் மருந்து அடிக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு தலா 1 கிலோ இஞ்சி, வெள்ளை பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை அரைத்து சார் எடுத்து அந்த சாற்றினை தண்ணீரில் கலந்து கைத்தறிப்பான் கொண்டு மாலை வேளை யில் தெளிக்க வேண்டும். இப்படி செய்வதால் எளிய முறையில் பூச்சி கட்டுப்படுத்தப்படும்.

    பயிர் அதிக அடர்த்தியாக உள்ள இடங்களில் இலை யுறை அழுகல் நோய் ஆங்காங்கே தென்படுகிறது.

    எனவே குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தங்கள் வயலில் பட்டம் பிரித்து விட்டு நோய் தென்படும் இடங்களில் ப்ரோபிகோனோசோல் எனும் மருந்தினை ஏக்கருக்கு 250 மில்லி 200 லிட்டர் நீரில் கலந்து தெளித்து நோயை கட்டுப்படுத்தலாம்.

    புகையான் தாக்குதல் வழக்க மாக ஏற்படும் இடங்களிலும் பயிர் அதிக அடர்த்தியாக உள்ள இடங்களிலும் புகையான் வராமல் தடுப்பதற்கு வயலில் பட்டம் பிரித்து ஒரு அங்குலம் நீர் நிறுத்தி ஏக்கருக்கு 5 கிலோ தவிடுவுடன் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் கலந்து தூவினால் புகையானை வராமல் தடுக்கலாம் என்றார்.

    மாத்திரைகளை சுடுநீரை பயன்படுத்தி சாப்பிடலாமா? மாத்திரை சாப்பிட எந்த முறை சரியானது என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    ஒவ்வொரு பொருளையும் உட்கொள்ளும் போது அவற்றின் தன்மை அறிந்து நாம் எடுத்து கொள்ள வேண்டும். இல்லையேல் அவை நம் உயிருக்கே ஆபத்தை உண்டாக்கி விடும். அந்த வகையில் உடல்நல கோளாறுகளை தீர்க்கும் மாத்திரைகளை நாம் தவறான முறையிலே சாப்பிட்டு வருகின்றோம். இவ்வாறு சாப்பிட்டு வருவதால் நிச்சயம் மேலும் பல ஆபத்துகள் நம்மை நோக்கி வர தொடங்கும். மாத்திரைகளை சுடு நீரை பயன்படுத்தி சாப்பிடலாமா? அல்லது குளிர்ந்த நீரை பயன்படுத்தலாமா? சரியான நீரை பயன்படுத்தவில்லை என்றால் எப்படிப்பட்ட அபாயங்கள் உண்டாகும் என்பது பற்றி அறிந்து கொள்ளலாம்.

    பொதுவாக நாம் உட்கொள்ளும் மருந்துகளை மற்ற உறுப்புகளுக்கு எடுத்து செல்ல ஒரு கருவியாக இருப்பவை தான் திரவ பொருட்கள். இதில் தண்ணீர் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. மாத்திரைகளில் பலவிதங்கள் உண்டு. அவற்றின் தன்மைக்கேற்ப தான் சரியான தட்பவெப்பம் கொண்ட நீரை நாம் பயன்படுத்த வேண்டும். உதாரணத்திற்கு கேப்சுயூல் மாத்திரைகள், வீரியம் அதிகம் கொண்ட மாத்திரைகள், சாதாரண காய்ச்சல் மாத்திரைகளை சொல்லலாம். இவை ஒவ்வொன்றையும் ஒவ்வொரு தட்பவெப்ப நீருடன் நாம் எடுத்து கொள்ள வேண்டும்.

    வைட்டமின் டி, கால்சியம் போன்ற மாத்திரைகளை பாலை பயன்படுத்தி நாம் குடித்து வரலாம். ஆனால், இது எல்லா வகை மாத்திரைகளுக்கும் உகந்தது அல்ல.

    சில வகையான மாத்திரைகளுக்கு வெந்நீரை நாம் பயன்படுத்த கூடாது. முக்கியமாக கேப்சியூல் வகை மாத்திரைகளை வெந்நீரை பயன்படுத்தி நாம் குடித்து வந்தால் அவை நாக்கிலே ஒட்டி கொள்ளும்.

    பாராசிட்டமால் போன்ற காய்ச்சல் வகை மாத்திரைகள் விரைவில் கரைய வெது வெதுப்பான நீரை பயன்படுத்தலாம். மேலும், தொண்டையில் வலி, இரும்பல் போன்றவற்றிற்கு பயன்படுத்தும் மாத்திரைகளை வெண்ணீருடன் எடுத்து கொள்ளலாம்.

    பலர் மாத்திரைகளை அப்படியே சாக்லேட் போன்று சாப்பிடும் பழக்கம் கொண்டுள்ளனர். ஆனால், அவ்வாறு சாப்பிடவது தவறு. மாத்திரை சாப்பிடும் போது போதுமான அளவு நீரை குடிக்க வேண்டும். இல்லையேல் வாயில் இருந்து வயிற்று பகுதிக்கு அவை செல்லாது. இதனால் அஜீரண கோளாறு ஏற்பட்டு, மாத்திரையும் சரியாக தனது வேலையை செய்ய இயலாது.

    சாப்பிட அடுத்த நொடியே மாத்திரை போடும் பழக்கம் பலருக்கும் உள்ளது. ஆனால், அப்படி மாத்திரைகளை எடுத்து கொள்வது மோசமான விபரீத நிலையை நமக்கு தந்து விடும். ஆதலால், சாப்பிட்ட பிறகு குறைந்தது 15 நிமிடம் கழித்து மாத்திரைகளை சாப்பிடுவது நல்லது.

    ஆதலால் எப்போது மாத்திரைகளை எடுத்து கொண்டாலும் அவற்றை அதிக சூடும், அதிக குளிர்ந்த தன்மையும் இல்லாத மிதமான நீரை பயன்படுத்தி சாப்பிடலாம்.

    பல அரிய நோய்களுக்கு சித்த மருத்துவத்தில் மட்டுமே மருந்து உள்ளது என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார். #ministersrinivasan

    திண்டுக்கல்:

    சித்த மருத்துவர்களுக்கு தலைவராக விளங்கும் அகஸ்தியர் பிறந்ததினம் சித்தமருத்துவ தினவிழாவாக கொண்டாடப்படுகிறது. அதன்படி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை சார்பில் தேசிய சித்தமருத்துவ தினவிழா கொண்டாடப்பட்டது.

    விழாவிற்கு சித்தமருத்துவ அலுவலர் டாக்டர் விஜயா வரவேற்புரையாற்றினார். மாவட்ட கலெக்டர் வினய் தலைமை வகித்தார். விழாவில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

    உலகில் நம்முன்னோர்கள் சித்தமருத்துவத்தில் பல நோய்களுக்கு மருந்து கண்டுபிடித்து உள்ளனர். தற்போது கூட டெங்கு, சிக்குன்குனியா உள்ளிட்ட பல்வேறு காய்ச்சலுக்கு சித்தமருத்துவ முறையே சிறந்ததாக உள்ளது. இதுபோல பல அரியநோய்களுக்கு சித்த மருத்துவத்தில் மட்டுமே மருந்து உள்ளது.

    வீடுகளில் பிரசவம் பார்த்த சமயங்களில் தாயும், சேயும் நலமாக காப்பாற்றப்பட்டனர். எனவே சித்தமருத்துவத்தை நாம் ஒவ்வொருவரும் போற்றி மதிக்கவேண்டும். தமிழகஅரசு சித்தமருத்துவத்திற்காக அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது. குழந்தைகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்க சென்னையில் தனியாக ஆஸ்பத்திரி அமைக்கப்பட்டுள்ளது.

    திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் 24 மணிநேரமும் செயல்படும் 6 ரத்த சுத்திகரிப்பு மையங்கள், பழனியில் ஒரு மையம் செயல்பட்டு வருகிறது. இந்திய அளவில் தமிழக சுகாதாரத்துறை சிறப்பான இடத்தை பெற்றுள்ளது. அதனால்தான் பல பகுதிகளில் இருந்து மருத்துவ சிகிச்சைக்காக தமிழகத்திற்கு வருகின்றனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் முன்னாள் மேயர் மருதராஜ், நலப்பணிகள் இணைஇயக்குனர் டாக்டர் மாலதிபிரகாஷ், மாநகராட்சி ஆணையாளர் மனோகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு மூலிகை கண்காட்சியை அமைச்சர் சீனிவாசன் தொடங்கி வைத்தார். #ministersrinivasan

    ஊத்தங்கரையில் 10-ம் வகுப்பு படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்த போலி டாக்டர் கைதானார்.
    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை கல்லாவி ரோட்டில் போலி டாக்டர் இருப்பதாக மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் அசோக்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், அவர் கல்லாவி ரோடு பகுதிக்கு சென்று நேற்று திடீரென்று ஆய்வு நடத்தினார்.

    அப்போது வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் பாச்சல் கிராமத்தை சேர்ந்த மணி (58) என்பவர் 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்தது தெரியவந்தது. 

    அவரை மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் அசோக்குமார் பிடித்து ஊத்தங்கரை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இது குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து மணியை கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஊத்தங்கரை கிளை சிறையில் அடைத்தனர்.
    தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் 3 மாதத்திற்கு தேவையான மருந்துகள் அனைத்தும் போதிய கையிருப்பில் உள்ளன என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
    சிவகங்கை:

    தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நேற்று சிவகங்கை வந்தார். அவர் சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கான வார்டுகளை பார்வையிட்டார். மேலும் அங்குள்ள பேரிடர் மேலாண்மை பிரிவு, முதியோர்களுக்கான தனிப்பிரிவு, குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சை பிரிவு, டெங்கு நோய் தடுப்பு வார்டு, சிடி ஸ்கேன் பிரிவு, எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பிரிவு ஆகியவற்றை ஆய்வு செய்து, அங்கு போதுமான வசதிகள் உள்ளதா என்றும் அவைகள் சரியாக செயல்படுகிறதா என்றும் கேட்டறிந்தார்.

    தொடர்ந்து ரூ.4½ கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் விபத்து சிகிச்சை பிரிவு பகுதியை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர உத்தரவிட்டார். நிகழ்ச்சியில் கலெக்டர் ஜெயகாந்தன், மருத்துவமனை டீன் வனிதா, மருத்துவத் துறை இணை இயக்குனர் விஜயன்மதமடக்கி, சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் யசோதாமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பின்னர் சுாதாரத்துறை செயலாளர் நிருபர்களிடம் கூறியதாவது:- பருவமழை தொடங்க உள்ளதால் மழை காலத்தில் ஏற்படும் டெங்கு, சிக்குன்குனியா, பன்றிகாய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு வைரஸ்காய்ச்சல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் இந்த நோய்களின் தாக்கம் இல்லை என்றாலும், முன்னெச்சரிக்கையாக தற்காப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 3 மாதத்திற்கு தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளன. மாவட்டத்தில சிங்கம்புணரி, அழகமாநகரி மற்றும் காரைக்குடி ஆகிய பகுதிகளில் கலெக்டர், சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஆகியோர் இணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தற்போது ரூ.87 லட்சம் மதிப்பில் முதியோர்களுக்கான புதிய பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. விபத்து சிகிச்சை பிரிவு இன்னும் 2 மாதத்தில் செயல்படும். மேலும் நிலவேம்பு கசாயம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
    ×