search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "inadequate"

    • சேதமடைந்த வீடுகளுக்கு வழங்கப்பட்ட நிதி போதுமானதாக இல்லை என்று பாதிக்கப்பட்ட பெண்கள் கூறினர்.
    • மராமத்து பணிக்காக ஒதுக்கப்பட்ட நிதி மிகவும் குறைவாக உள்ளது.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே ஆதித்தனேந்தல் கிராமத்தில் கடந்த 2009-ல் தி.மு.க. ஆட்சியின் போது ரூ.2.46 கோடி செலவில் பெரியார் நினைவு சமத்துவபுரம் அமைக்கப்பட்டது. இங்கு 100 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டது. இதனை அப்போதைய துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    இந்த நிலையில் கட்டி முடிக்கப்பட்டு 12 வருடங்களுக்கும் மேலான நிலையில் சமத்துவபுரத்தில் எந்தவொரு மராமத்து பணிகளும் மேற்கொள் ளப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    சமத்துவபுரம் வீடுகள் புனரமைப்பு திட்டம் 2022 -23 நிலை-2 திட்டத்தின் கீழ் நரிக்குடி சமத்துவ புரத்தில் உள்ள வீடுகளை புனரமைக்க வேண்டி நரிக்குடி யூனியன் பி.டி.ஓ.,வாக இருந்த பிரின்ஸ் தலைமையிலான அதிகாரிகள் சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டு பாதிப்புக்கு ஏற்றவாறு நிதிகளை வழங்கும் வகையில் கடந்த 1 வருட காலமாக ஆய்வுகள் மேற்கொண்டு அதற்கான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

    அதன் பின்னர் சமத்துவ புரத்தில் குடியிருந்து வரும் பயனாளிகளே தங்களது வீட்டிற்கான மராமத்து பணிகளை மேற்கொண்டு 2 மாத காலத்திற்குள் பணி களை முடித்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு ஒவ்வொரு வீட்டிற்கும் பாதிப்புக்கு தகுந்தவாறு ரூ.35 ஆயிரம் முதல் அதிக பட்சமாக ரூ.51 ஆயிரம் வரை நிதி ஒதுக்கப்பட்ட தாக தெரிகிறது.

    ஆனால் மராமத்து பணிக்காக ஒதுக்கப்பட்ட நிதி மிகவும் குறைவாக இருப்ப தால் சேதமடைந்த வீடுகளில் வர்ணம் பூசுதல், சிறு சிறு பழுதுகள் பார்த்தல் போன்ற மராமத்து பணியை மேற்கொள்ள முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ள தாகவும், கதவு, கழிவறை, வீட்டின் மேற்கூரையில் தட்டு ஓடு பதித்தல் போன்ற ஒவ்வொரு பணிக்கும் வீட்டின் உரிமையாளர்கள் செலவிட ஒரு குறிப்பிட்ட தொகையை அரசு நிர்ணயம் செய்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

    ஆனால் சிமெண்டு, மணல்,தட்டு ஓடுகளின் தற்போதைய விலைவாசி உயர்வு, வேலையாட்களுக்கு கொடுக்கப்படும் கூலி ஆகியவற்றை வைத்து கணக்கிட்டு பார்க்கும் போது தற்போது வழங்கப்பட்டுள்ள குறைவான தொகையால் மராமத்து பணிகளை இன்னும் தொடங்க முடியாத சூழ்நிலையே உருவாகி இருப்பதாக அந்த பகுதி பெண்கள் தெரிவித்தனர்.

    தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் 3 மாதத்திற்கு தேவையான மருந்துகள் அனைத்தும் போதிய கையிருப்பில் உள்ளன என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
    சிவகங்கை:

    தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நேற்று சிவகங்கை வந்தார். அவர் சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கான வார்டுகளை பார்வையிட்டார். மேலும் அங்குள்ள பேரிடர் மேலாண்மை பிரிவு, முதியோர்களுக்கான தனிப்பிரிவு, குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சை பிரிவு, டெங்கு நோய் தடுப்பு வார்டு, சிடி ஸ்கேன் பிரிவு, எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பிரிவு ஆகியவற்றை ஆய்வு செய்து, அங்கு போதுமான வசதிகள் உள்ளதா என்றும் அவைகள் சரியாக செயல்படுகிறதா என்றும் கேட்டறிந்தார்.

    தொடர்ந்து ரூ.4½ கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் விபத்து சிகிச்சை பிரிவு பகுதியை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர உத்தரவிட்டார். நிகழ்ச்சியில் கலெக்டர் ஜெயகாந்தன், மருத்துவமனை டீன் வனிதா, மருத்துவத் துறை இணை இயக்குனர் விஜயன்மதமடக்கி, சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் யசோதாமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பின்னர் சுாதாரத்துறை செயலாளர் நிருபர்களிடம் கூறியதாவது:- பருவமழை தொடங்க உள்ளதால் மழை காலத்தில் ஏற்படும் டெங்கு, சிக்குன்குனியா, பன்றிகாய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு வைரஸ்காய்ச்சல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் இந்த நோய்களின் தாக்கம் இல்லை என்றாலும், முன்னெச்சரிக்கையாக தற்காப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 3 மாதத்திற்கு தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளன. மாவட்டத்தில சிங்கம்புணரி, அழகமாநகரி மற்றும் காரைக்குடி ஆகிய பகுதிகளில் கலெக்டர், சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஆகியோர் இணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தற்போது ரூ.87 லட்சம் மதிப்பில் முதியோர்களுக்கான புதிய பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. விபத்து சிகிச்சை பிரிவு இன்னும் 2 மாதத்தில் செயல்படும். மேலும் நிலவேம்பு கசாயம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
    ×