search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேதமடைந்த வீடுகளுக்கு வழங்கப்பட்ட நிதி போதுமானதாக இல்லை
    X

    குறைந்த நிதி ஒதுக்கப்பட்டதற்கான ஆவணங்களை பெண்கள் காட்டியபோது எடுத்த படம்.

    சேதமடைந்த வீடுகளுக்கு வழங்கப்பட்ட நிதி போதுமானதாக இல்லை

    • சேதமடைந்த வீடுகளுக்கு வழங்கப்பட்ட நிதி போதுமானதாக இல்லை என்று பாதிக்கப்பட்ட பெண்கள் கூறினர்.
    • மராமத்து பணிக்காக ஒதுக்கப்பட்ட நிதி மிகவும் குறைவாக உள்ளது.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே ஆதித்தனேந்தல் கிராமத்தில் கடந்த 2009-ல் தி.மு.க. ஆட்சியின் போது ரூ.2.46 கோடி செலவில் பெரியார் நினைவு சமத்துவபுரம் அமைக்கப்பட்டது. இங்கு 100 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டது. இதனை அப்போதைய துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    இந்த நிலையில் கட்டி முடிக்கப்பட்டு 12 வருடங்களுக்கும் மேலான நிலையில் சமத்துவபுரத்தில் எந்தவொரு மராமத்து பணிகளும் மேற்கொள் ளப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    சமத்துவபுரம் வீடுகள் புனரமைப்பு திட்டம் 2022 -23 நிலை-2 திட்டத்தின் கீழ் நரிக்குடி சமத்துவ புரத்தில் உள்ள வீடுகளை புனரமைக்க வேண்டி நரிக்குடி யூனியன் பி.டி.ஓ.,வாக இருந்த பிரின்ஸ் தலைமையிலான அதிகாரிகள் சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டு பாதிப்புக்கு ஏற்றவாறு நிதிகளை வழங்கும் வகையில் கடந்த 1 வருட காலமாக ஆய்வுகள் மேற்கொண்டு அதற்கான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

    அதன் பின்னர் சமத்துவ புரத்தில் குடியிருந்து வரும் பயனாளிகளே தங்களது வீட்டிற்கான மராமத்து பணிகளை மேற்கொண்டு 2 மாத காலத்திற்குள் பணி களை முடித்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு ஒவ்வொரு வீட்டிற்கும் பாதிப்புக்கு தகுந்தவாறு ரூ.35 ஆயிரம் முதல் அதிக பட்சமாக ரூ.51 ஆயிரம் வரை நிதி ஒதுக்கப்பட்ட தாக தெரிகிறது.

    ஆனால் மராமத்து பணிக்காக ஒதுக்கப்பட்ட நிதி மிகவும் குறைவாக இருப்ப தால் சேதமடைந்த வீடுகளில் வர்ணம் பூசுதல், சிறு சிறு பழுதுகள் பார்த்தல் போன்ற மராமத்து பணியை மேற்கொள்ள முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ள தாகவும், கதவு, கழிவறை, வீட்டின் மேற்கூரையில் தட்டு ஓடு பதித்தல் போன்ற ஒவ்வொரு பணிக்கும் வீட்டின் உரிமையாளர்கள் செலவிட ஒரு குறிப்பிட்ட தொகையை அரசு நிர்ணயம் செய்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

    ஆனால் சிமெண்டு, மணல்,தட்டு ஓடுகளின் தற்போதைய விலைவாசி உயர்வு, வேலையாட்களுக்கு கொடுக்கப்படும் கூலி ஆகியவற்றை வைத்து கணக்கிட்டு பார்க்கும் போது தற்போது வழங்கப்பட்டுள்ள குறைவான தொகையால் மராமத்து பணிகளை இன்னும் தொடங்க முடியாத சூழ்நிலையே உருவாகி இருப்பதாக அந்த பகுதி பெண்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×