search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fake doctor arrested"

    • ஜெயராமன் நோயாளிகளுக்கு சிகிச்சை பார்த்து மருந்து கொடுத்தது தெரியவந்தது.
    • வருவாய் துறை அலுவலர்கள் ஜெயராமன் நடத்தி வந்த கிளினிக்கை பூட்டி சீல் வைத்தனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள சிவகாமி புரத்தை சேர்ந்தவர் ஜீவா (வயது 35) என்ற பெண் ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.

    இவரது கணவர் ஜெயராமன்(38) டிப்ளமோ பார்மசி முடித்துள்ளார். இவர்களது கிளினிக் நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலையில் சிவகாமிபுரம் விலக்கில் இயங்கி வந்தது.

    மருத்துவர் ஜீவா அரசு மருத்துவமனைக்கு பணிக்கு செல்லும் நேரங்களில் அவரது கணவர் ஜெயராமன் கிளினிக்கில் மருத்துவராக செயல்பட்டு வந்துள்ளார். பல நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்ததில் அவர்களுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டு அவர்கள் மற்றொரு மருத்துவமனையில் சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இது குறித்து முதலமைச்சரின் தனி பிரிவிற்கு புகார் சென்றது

    அதன் பேரில் தென்காசி ஆர்.டி.ஓ. லாவண்யா, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பிரேமலதா, ஆலங்குளம் தாசில்தார் கிருஷ்ணவேல் ஆகியோர் கிளினிக்கில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அதில் ஜெயராமன் நோயாளிகளுக்கு சிகிச்சை பார்த்து மருந்து கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து பாவூர்சத்திரம் போலீசார் அவரை கைது செய்தனர்.

    மேலும் ஜெயராமன் கைது செய்யப்பட்ட நிலையில் தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் உத்தரவின் பெயரில் ஆர்.டி.ஓ. லாவண்யா, சுகாதாரத்துறை இணை இயக்குனர் பிரேமலதா மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் ஜெயராமன் நடத்தி வந்த கிளினிக்கை பூட்டி சீல் வைத்தனர்.

    • ஓமியோபதி படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்தார்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ராணிப்பேட்டை

    சோளிங்கர் அடுத்த பரவத் தூரில் ஒருவர் ஓமியோபதி படித்து ஆங்கில மருத்துவம் பார்ப்பதாக கலெக்டருக்கு புகார்கள் வந்தது.

    அதைத்தொ டர்ந்து கலெக்டர் உத்தரவின் பேரில் சோளிங்கர் அரசு மருத் துவமனை தலைமை மருத்துவர் பாஸ்கர், டாக்டர் கருணாகரன், மருந்தாளுனர் சேகர் ஆகியோர் பெரியவைலம்பாடி கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    அதில் பெரிய தெருவை சேர்ந்த விஜய் (வயது 29) என்பவர் ஓமியோபதி படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்தது தெரியவந்தது.

    அதைத்தொடர்ந்து அங்கி ருந்த ஊசிகள் மற்றும் ஆங்கில மருந்துகளை பறிமுதல் செய்த னர். விஜயை சோளிங்கர் போலீஸ் நிலையத்தில் ஒப்ப டைத்தனர்.

    இது குறித்து சோளிங் கர் இன்ஸ்பெக்டர் பாரதி, சப்- இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விஜயை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கலாவதி என்பவர் தனது வீட்டிலேயே நோயாளிகளுக்கு ஊசி மருந்து செலுத்தி வந்தது தெரியவந்தது.
    • பள்ளி படிப்பை மட்டுமே படித்துமுடித்து விட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டியில் உள்ள ஒரு வீட்டில் கிளினிக் செயல்படுவதாக மாவட்ட சுகாதார நலப்பணிகள் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பூமிநாதன் தலைமையில் கொசவபட்டி வட்டார மருத்துவ அலுவலர் அசோக்குமார் ஆகியோர் அந்த கிளினிக்கில் ஆய்வு செய்தனர்.

    அப்போது கலாவதி என்பவர் தனது வீட்டிலேயே நோயாளிகளுக்கு ஊசி மருந்து செலுத்தி வந்தது தெரியவந்தது. மருத்துவ குழுவினரிடம் அவர் தன்னை டாக்டர் என்றே அறிமுகம் செய்து கொண்டார். அதன்பின்பு அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் கலாவதி(45) என்பதும், பல வருடங்களாக கோபால்பட்டியில் தங்கி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்ததும் தெரியவந்தது.

    இவர் பள்ளி படிப்பை மட்டுமே படித்துமுடித்து விட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார். ஊசி மருந்து போட்டதுடன் காயங்களுக்கு கட்டு போட்டும், மருந்துகள் கொடுத்தும் வந்துள்ளார்.

    திண்டுக்கல் மாவட்டத்தில் கோபால்பட்டி, சாணார்பட்டி, சிறுமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இதுபோன்ற போலி டாக்டர்கள் நடமாட்டம் அவ்வப்போது கண்டறியப்பட்டு அவர்களை கைது செய்து வருகின்றனர். கிளினிக் நடத்த வேண்டும் என்றால் முறையான படிப்பு முடித்து அரசால் அங்கீகாரம் பெற வேண்டும். ஆனால் இதுபோன்ற எந்த நடைமுறையும் பின்பற்றாமல் கிளினிக் நடத்துவதும், கிராமங்களுக்கு சென்றே சிகிச்சை அளிப்பதும் தொடர் கதையாகி வருகிறது.

    இதுகுறித்து மருத்துவத்துறை அதிகாரிகள் சாணார்பட்டி போலீசில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் சிராஜூதீன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று கலாவதியை கைது செய்ததுடன் கிளினிக்கையும் பூட்டி சீல் வைத்தனர். அவர் மருத்துவம் பார்த்ததன் மூலம் நோயாளிகளுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டதா என்பது குறித்தும் மருத்துவக்குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டேனிஷ்பேட்டை பகுதியை சேர்ந்த முருகேசன் (52), என்பவரிடம் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற சென்றுள்ளார்.
    • பழனியப்பனுக்கு உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் ஏமாற்றி, மருத்துவம் பார்த்தாக கூறப்படுகிறது.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த டேனிஷ்பேட்டை பாலமேடு பகுதியை சேர்ந்தவர் காளியப்பன். இவரது மகன் பழனியப்பன் (வயது 36). இவர் கடந்த 2010-ம் ஆண்டு ஏப்ரல் 15-ந் தேதி டேனிஷ்பேட்டை பகுதியை சேர்ந்த முருகேசன் (52), என்பவரிடம் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற சென்றுள்ளார்.

    போலி டாக்டர்

    அப்போது அவர், பழனியப்பனுக்கு உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் ஏமாற்றி, மருத்துவம் பார்த்தாக கூறப்படுகிறது. இதுகுறித்து தீவட்டிப்பட்டி போலீசில் பழனியப்பன் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி போலி டாக்டர் முருகேசனை கைது செய்தனர்.

    4 ஆண்டு ஜெயில்

    இந்த வழக்கு விசாரணை, ஓமலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 20-ந் நடுவர் நீதிமன்ற நீதிபதி முருகேசனுக்கு 4 வருட சிறை தண்டனை மற்றும் அபராதம் ரூ.6 ஆயிரம் விதித்து தீர்ப்பளித்தார். இதனை எதிர்த்து முருகேசன் சேலம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். சேலம் நீதிமன்றமும் தண்டனையை உறுதிப்படுத்தியது.

    தலைமறைவு

    இதனைத் தொடர்ந்து, ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜராக கடந்த மார்ச் 13-ம் தேதி உத்தரவு போடப்பட்ட நிலையில், முருகேசன் ஆஜராகாமல் தலை முறைவாக இருந்தார்.

    இதனை யடுத்து நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க தீவட்டிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் பழனிசாமி மற்றும் போலீசார், தலைம றைவாக இருந்த போலி மருத்துவர் முருகேசனை நேற்று கைது செய்தனர். பின்னர் அவர் ஓமலூர் கோர்ட்டில் ஆஜர்ப டுத்தப்பட்டு சிறையில் அடைக்க ப்பட்டார்.

    • மேலும் ஒருவர் தப்பி ஓட்டம்
    • மருத்துவ பொருட்கள் பறிமுதல்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் சிவக்குமார் அவர்கள் உத்தரவின் பேரில் அரசு மருத்துவர் செல்வநாதன் உள்ளிட்ட துறை அலுவலர்கள் நேற்று தாமலேரி முத்தூரில் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த சம்பத் (வயது 48) என்பவர் தனது வீட்டில் நோயாளிகளுக்கு மருத்துவம் அளிக்கப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    மேலும் அவரிடம் சுகாதாரத் துறையினர் விசாரணை மேற்கொண்ட போது அவர் டிப்ளமோ பார்மசி படித்துவிட்டு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததும் தெரிய வந்தது.

    அவரை கைது செய்து மருத்துவத்திற்கு பயன்படுத்த வைத்திருந்த மருந்து, மாத்திரைகள், சிரஞ்சி உள்ளிட்ட மருத்துவ உபகரணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    மேலும் இதே போன்று மூக்கனூர் புதூர் பகுதியில் ஆரோக்கியராஜ் என்பவர் வீட்டில் மருத்துவம் படிக்காமல் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தார்.

    சுகாதாரத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்ற போது ஆரோக்கியராஜ் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    போலி மருத்துவர் ஆரோக்கியராஜ் என்பவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

    • குழந்தை இல்லாத பெண்களுக்கு சிகிச்சை அளித்துள்ளார்
    • கடைக்கு சீல் வைத்தனர்

    திருப்பத்தூர்:

    ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்கின்ற (வயது 49) இவர் கச்சேரி தெரு பகுதியில் மணி மெடிக்கல் ஷாப் நடத்தி வருகிறார்.

    இவர் மருத்துவ படிப்பு படிக்காமலேயே அவருடைய மெடிக்கல் ஷாப்பில் குழந்தை இல்லாத பெண்களுக்கு மருத்துவம் பார்த்து வந்துள்ளார்

    மேலும் எம்பிபிஎஸ் டாக்டர்கள் கொடுக்காத அதிக வீரியம் வாய்ந்த மருந்துகளையும் கொடுத்து வந்ததாக பல்வேறு புகார்கள் வந்தது.

    இதன் காரணமாக மருத்துவம் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட ஊரக நலப் பணிகள் இணை இயக்குனரும் கிடைத்த ரகசிய தகவலின்படி மருந்து கடைக்கு சென்ற இணை இயக்குனர் டாக்டர் மாரிமுத்து மற்றும் மாவட்ட மருந்து ஆய்வாளர் சபரிநாதன் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை மருந்தாளுனர் அருள் ஆகியோர் சென்று மெடிக்கல் ஷாப்பில் ஆய்வு நடத்தினர்.

    அப்போது சுப்பிரமணி வீரியம் மிகுந்த மருந்துகள் உபயோகிப்பதும் மேலும் நோயாளிகளுக்கு மருத்துவம் அளிப்பதை உறுதி செய்தனர்.

    இதன் காரணமாக திருப்பத்தூர் டவுன் போலீசில் இணை இயக்குனர் டாக்டர் மாரிமுத்து அளித்த புகாரின் பேரில் சுப்பிரமணியை கைது செய்து அவர் கர்ப்பிணி பெண்களுக்கு கொடுத்த மாத்திரை மருந்துகளை கைப்பற்றி அனுமதி பெறாமல் மருந்துகள் விநியோகம் செய்த வந்த அவருடைய மெடிக்கல் ஷாப்புக்கு திருப்பத்தூர் தாசில்தார் சிவப்பிரகாசம் தலைமையில் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • சுப்பிரமணியன் பார்மசி முடித்துவிட்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தார்.
    • எம்.பி.பி.எஸ் மருத்துவப் படிப்பு படிக்காமல் சுப்பிரமணியன் சிகிச்சை அளித்து வருவதாக புகார்கள் எழுந்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் கணபதி நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 75). இவர் பார்மசி படித்திருந்தார். தஞ்சாவூர் நகராட்சியாக இருந்தபோது மருந்து ஆளுநராக வேலை பார்த்து கடந்த 2005-ம் ஆண்டு ஓய்வுபெற்றார்.

    இந்த நிலையில் சுப்பிரமணியன் மாதாக்கோட்டை சாலையில் கிளினிக் வைத்து நடத்தி வந்தார். மேலும் இவர் பார்மசி முடித்துவிட்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தார். எம்.பி.பி.எஸ் மருத்துவப் படிப்பு படிக்காமல் சுப்பிரமணியன் சிகிச்சை அளித்து வருவதாக புகார்கள் எழுந்தது.

    இதுகுறித்து மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் திலகம், தமிழ் பல்கலைக்கழகம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிளினிக்கை மூடினர். மருத்துவ படிப்பு படிக்காமல் சிகிச்சை அளித்ததாக சுப்பிரமணியனை கைது செய்தனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ஏரோ நாட்டிக்கல் என்ஜினீயரிங் முடித்திருந்த செம்பியன் டாக்டர் ஆகும் வகையில் போலியாக சான்றிதழ் தயாரித்து ஆஸ்பத்திரி நடத்தி வந்து உள்ளார்.
    • செம்பியன் கடந்த 8 ஆண்டுகளில் சென்னையில் பல்வேறு இடங்களில் கிளினிக் நடத்தியதாக கூறப்படுகிறது.

    அண்ணாநகர்:

    தரமணியை சேர்ந்தவர் செம்பியன் (வயது 34). இவர் அப்பகுதியில் கிளினிக் நடத்தி சிகிச்சை அளித்து வந்தார். ஆஸ்பத்திரியுடன் மெடிக்கலும் நடத்தி வந்தார்.

    இந்த நிலையில் செம்பியன் மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளித்து வருவதாக அரும்பாக்கத்தில் உள்ள மருத்துவ கவுன்சில் அலுவலகத்துக்கு புகார் வந்தது.

    இதையடுத்து போலீசார் மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்திய போது செம்பியன் மருத்துவம் படிக்காமல் கடந்த 8 ஆண்டுகளாக கிளினிக் நடத்தி சிகிச்சை அளித்தது உறுதியானது.

    இதையடுத்து செம்பியனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. ஏரோ நாட்டிக்கல் என்ஜினீயரிங் முடித்திருந்த செம்பியன் டாக்டர் ஆகும் வகையில் போலியாக சான்றிதழ் தயாரித்து ஆஸ்பத்திரி நடத்தி வந்து உள்ளார்.

    தஞ்சாவூரை சேர்ந்த அவரது பெயரில் உள்ள செம்பியன் என்பவர் மருத்துவம் படித்து விட்டு டெல்லியில் டாக்டராக உள்ளார்.

    இதனை கண்டுபிடித்த போலி டாக்டர் செம்பியன் அவரது சான்றிதழை ஆன்லைன் மூலம் பெற்று ஆஸ்பத்திரி நடத்தி வந்து உள்ளார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் உள்ள டாக்டர் செம்பியன் தனது உயர்படிப்பு சான்றிதழை பதிவு செய்ய முயன்ற போது தான் தனது பெயரில் தரமணியில் போலியாக ஆஸ்பத்திரி நடத்தியது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து டாக்டர் செம்பியன் மருத்துவ கவுன்சிலில் அளித்த புகாரின் அடிப்படையில் போலி டாக்டர் செம்பியன் சிக்கிக் கொண்டார்.

    அவர் கடந்த 8 ஆண்டுகளில் சென்னையில் பல்வேறு இடங்களில் கிளினிக் நடத்தியதாக கூறப்படுகிறது.

    கொரோனா கால கட்டத்திலும் அவரிடம் ஏராளமானோர் சிகிச்சை பெற்று உள்ளனர்.

    தற்போது செம்பியன் போலி டாக்டர் என்பது தெரியவந்து உள்ளதால் அவரிடம் சிகிச்சை பெற்றவர்கள் கலக்கம் அடைந்து உள்ளனர்.

    என்ஜினியரிங் படித்த செம்பியன் எப்படி சிகிச்சை அளித்தார்? மருத்துகளை பரிந்துரைத்தது எப்படி? ஆன்லைன், யூடியூப் பார்த்து சிகிச்சை அளித்தாரா? என்று அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

    • விசாரணையில் ராஜா மருந்தாளுநர் படிப்பு மட்டுமே படித்துவிட்டு, அலோபதி சிகிச்சை அளித்து வந்துள்ளது தெரியவந்தது.
    • ஊசி மற்றும் கழிவுகளை தொற்று பரவும் வகையிலும், சட்டப்படி அதனை அகற்றாமலும் வைத்துள்ளார்.

    திருப்பூர்:

    திருப்பூர் ஊத்துக்குளி சாலை சர்க்கார் பெரியபாளையத்தில் போலியாக ஒரு கிளீனிக் செயல்பட்டு வருவதாகவும், அங்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர் மீது சந்தேகம் இருப்பதாகவும், மாவட்ட கலெக்டர் வினீத்துக்கு புகார் சென்றது. இதையடுத்து திருப்பூர் மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குநர் கனகராணி தலைமையில், திட்ட ஒருங்கிணைப்பாளர் அருண்பாபு மற்றும் நிர்வாக அலுவலர் மகேஷ்குமார், அலுவலக கண்காணிப்பாளர் செ.ரமேஷ்குமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் சம்பந்தப்பட்ட 'நல்லாண்டவர்' என்ற கிளீனிக்கில் ஆய்வு செய்தனர்.

    அப்போது அங்கு அலோபதி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது தெரியவந்தது. இது தொடர்பாக அங்கு சிகிச்சை அளித்து வந்த அவிநாசியை சேர்ந்த ராஜா (வயது 44) என்பவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் ராஜா மருந்தாளுநர் படிப்பு மட்டுமே படித்துவிட்டு, அலோபதி சிகிச்சை அளித்து வந்துள்ளது தெரியவந்தது.

    இதுபோல் ஊசி மற்றும் கழிவுகளை தொற்று பரவும் வகையிலும், சட்டப்படி அதனை அகற்றாமலும் வைத்துள்ளார். இதையடுத்து கிளீனிக்கை அதிகாரிகள் குழு சீல் வைத்தது. இது தொடர்பாக மேல் விசாரணை நடத்த ராஜாவை திருப்பூர் மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குநர் அலுவலகத்திற்கு அதிகாரிகள் வர உத்தரவிட்டிருந்தனர். அதன்பேரில் ராஜா அங்கு சென்றார்.

    அப்போது கனகராணி தலைமையிலான அதிகாரிகள் கிளீனிக்கின் ஆவணங்கள் மற்றும் பதிவு, ராஜாவின் படிப்பு விவரங்களை ஆய்வு செய்தனர். அப்போது அவருக்கு பதிலாக மற்றொருவர் மருந்துகள் விற்பனை செய்து வந்ததும், ராஜா அலோபதி சிகிச்சை அளித்து வந்ததும், அதற்கு தகுதியான படிப்பு அவர் படிக்காததும் உறுதியானது. இதனைத்தொடர்ந்து இது தொடர்பான அறிக்கை மாவட்ட கலெக்டர் வினீத்திடம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து போலி மருத்துவர் ராஜா மீது குற்ற நடவடிக்கை எடுக்க ஊத்துக்குளி காவல்நிலையத்தில் மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் புகார் அளித்தார். இதையடுத்து ராஜா கைது செய்யப்பட்டார்.

    இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அதே பகுதியில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்திருப்பது போலீசார் மற்றும் சுகாதாரத்துறையினர் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இது குறித்து திருப்பூர் மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குநர் கனகராணி கூறியதாவது:-

    ராஜா அலோபதி முறையில் சிகிச்சை அளித்துள்ளார். நோயாளிகளுக்கு எழுதிக்கொடுத்த மருந்து சீட்டு உள்ளிட்டவைகளை கைப்பற்றி உள்ளோம். இவை அனைத்தும் முறையாக மருத்துவம் பயின்றவர் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். அதே போல் மருத்துவ உபகரணங்களையும் பயன்படுத்தி உள்ளார். மருத்துவக் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தப்படாமல் பாறைக்குழியில் எரித்துள்ளார். இதையடுத்து பொதுமக்களின் நலன் காக்கும் வகையில் கிளீனிக் மூடி சீல் வைக்கப்பட்டது.

    அதேபோல் தமிழ்நாடு மருத்துவ நிறுவன சட்டம் 1997-ன் படி அனைத்து மருத்துவமனைகளிலும் (டிஎன்சிஇஏ) எனப்படும் தமிழ்நாடு மருத்துவ நிறுவன சட்டத்துக்கான பதிவு சான்றிதழ், பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் பார்வையில் படும் படி, அனைத்து மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள் வைத்திருக்க வேண்டும். அலோபதி, சித்தா உட்பட அனைத்து விதமான சிகிச்சைக்களுக்கு இந்த சான்று அவசியம். இது இல்லாத மருத்துவமனைகள் மீது பொதுமக்கள் மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் அலுவலகத்தில் புகார் அளிக்கலாம். அதேபோல் அனைத்து மருத்துவமனைகளும் இதனை பின்பற்றாவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • உரிய தகுதி இன்றி மருத்துவம் பார்ப்பது உறுதியாகவே மணிகண்டன் சமூக நலத்துறை இணை இயக்குநர் சந்திராவிடம் புகார் தெரிவித்தார்.
    • அதன் பேரில் சமூக நலத்துறை இணை இயக்குநர் சந்திரா கருமத்தம்பட்டி போலீசில் புகார் அளித்தார்.

    சூலூர்:

    கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியை சேர்ந்தவர் கனகராஜ்.

    இவரது மனைவி சத்யா(வயது49). இவர் கருமத்தம்பட்டி நால்ரோடு அருகே மருந்துக்கடை நடத்தி வருகிறார்.

    இந்த மருந்துக்கடையில் மருந்து, மாத்திரைகள் கொடுப்பது மட்டுமல்லாமல், நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கப்படுவதாகவும் ஊரக சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் அதிகாரிகள் அந்த கடையை கண்காணிக்க தொடங்கினர். மேலும் சமூக நலத்துறையை சேர்ந்த மணிகண்டன் என்பவர் அங்கு உண்மையிலேயே நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கப்படுகிறதா என்பதை அறிய சம்பவத்தன்று அந்த மருந்து கடைக்கு சென்றார்.

    பின்னர் அங்கிருந்த சத்யாவிடம், தனக்கு உடல் வலிப்பதாக கூறியுள்ளார். அதற்கு அவர் மருத்துவம் பார்த்து விட்டு மருந்துகளையும் கொடுத்தார்.

    அவர் உரிய தகுதி இன்றி மருத்துவம் பார்ப்பது உறுதியாகவே, இதுகுறித்து மணிகண்டன் சமூக நலத்துறை இணை இயக்குநர் சந்திராவிடம் புகார் தெரிவித்தார். அதன் பேரில் சமூக நலத்துறை இணை இயக்குநர் சந்திரா கருமத்தம்பட்டி போலீசில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் உரிய தகுதியின்றி நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்ததாக சத்யா மீது வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து அவரை கைது செய்தனர். விசாரணை முடிந்த பின்பு அவரை சொந்த ஜாமீனில் விடுவித்தனர்.

    • 10-ம் வகுப்பு மாணவியை ஆசை வார்த்தை கூறி வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
    • இதில் மாணவி 4 மாதம் கர்ப்பமானார். முருகன் மாணவியை ரெட்டியார்பாளையத்தில் உள்ள காந்தி என்ற பெண்ணிடம் அழைத்து சென்று மாத்திரைகள் கொடுத்து கருக்கலைப்பு செய்ய முயன்றுள்ளார்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த தானிப்பாடி அருகில் உள்ள மலையனூர் செக்கடி கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 27).

    இவர் அப்பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவியை ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    இதில் மாணவி 4 மாதம் கர்ப்பமானார். முருகன் மாணவியை ரெட்டியார்பாளையத்தில் உள்ள காந்தி (65) என்ற பெண்ணிடம் அழைத்து சென்று மாத்திரைகள் கொடுத்து கருக்கலைப்பு செய்ய முயன்றுள்ளார்.

    இதற்கு பிரபு என்பவரும் உடந்தையாக இருந்துள்ளார். கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்ட மாணவி திடீரென மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் தானிப்பாடி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் வழக்குப் பதிவு செய்து முருகன், பிரபு ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். கருக்கலைப்பு மாத்திரை கொடுத்த காந்தியை போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் தலைமறைவான காந்தியின் வீட்டில் மருத்துவ அதிகாரிகள் மற்றும் போலீசார் சோதனை செய்ததில் வீட்டில் ஏராளமான ஆங்கில மருந்து, மாத்திரைகள், ஊசி போன்றவை இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டு அதனை பறிமுதல் செய்தனர்.

    காந்தி 10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு தன்னை டாக்டர் என்றும், பிரபல மருத்துவமனையில் வேலை பார்த்ததாகவும் அறிமுகப்படுத்திக்கொண்டு தானிப்பாடி பகுதியில் பலருக்கு இதுபோன்ற சிகிச்சைகளை அளித்து வந்தது தெரியவந்துள்ளது.

    அதை தொடர்ந்து தலைமறைவாக இருந்த போலி பெண் டாக்டர் காந்தியை போலீசார் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தவரை போலீசார் கைது செய்தனர்.

    மதுரை:

    மதுரை வண்டியூர் சவுராஷ்டிராபுரம் பகுதியில் 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக மாநகராட்சி நகர்நல பிரிவுக்கு புகார்கள் வந்தன.

    இது குறித்து நகர்நல அதிகாரிகள் அண்ணா நகர் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் சம்பவத்தன்று சவுராஷ்டிரா புரம் பகுதியில் குறிப்பிட்ட கிளீனிக்குக்கு சென்று சோதனை நடத்தினர்.

    அப்போது ஆனந்தன் என்பவர் மருத்துவம் படிக்காமல் கிளீனிக் நடத்தி பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் ஆனந்தனை கைது செய்தனர்.

    ×