search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mayam"

    • பிளஸ்-2 மாணவி மாயமானார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுரை

    மதுரை பெத்தானி யாபுரம் மேட்டுத்தெரு கோடாங்கி காம்பவுண்டை சேர்ந்தவர் விஜய்பாண்டி, ஆட்டோ டிரைவர். இவரது மனைவி அன்னலட்சுமி(42). இவர்களது மகள் அர்ச்சனா(19), பிளஸ்-2 படித்துவிட்டு வீட்டில் இருந்தார்.

    அன்ன லட்சுமியும், மகனும் சேர்ந்து ஆரப்பாளையம் கண்மாய் கரை பகுதியில் சிக்கன் கடை வைத்துள்ளனர். கடந்த 6-ந் தேதி மதியம் அன்னலட்சுமி சாப்பிடு வதற்காக வீட்டுக்கு வந்தபோது அர்ச்சனா மாயமாகி விட்டது தெரியவந்தது.

    பல இடங்களில் தேடிப்பா ர்த்தும் தகவல் கிடைக்க வில்லை.

    இதுகுறித்து தாயார் கரிமேடு போலீசில் புகார் செய்தார். அதில், தங்கள் கடைக்கு வந்து செல்லும் கண்மாய் கரையை சேர்ந்த கவுதம் என்பவர் அர்ச்சனாவை அழைத்து சென்றிருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சிறப்பு வகுப்புக்கு சென்ற கவியரசு அதன் பிறகு வீடு திரும்பவில்லை.
    • பெற்றோர் இது குறித்து அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    அம்மாபேட்டை:

    ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டையை அடுத்த பூனாச்சி கிராமம் மூலகவுண்டன் கோட்டை பகுதியை சேர்ந்தவர் செல்லப்பராஜ். இவரது மகன் கவியரசு (17).

    கவியரசு 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பருவாச்சியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்தார். பின்னர் 11-ம் வகுப்புக்காக அவரை அந்தியூரில் உள்ள தனியார் பள்ளியில் அவரது பெற்றோர் சேர்த்தனர்.

    இது கவியரசுக்கு பிடிக்கவில்லை. தான் பழைய பள்ளியில் படிப்பதாக கூறினார். அதற்கு அவரது பெற்றோர் பிளஸ்-1 மட்டும் இந்த பள்ளியில் படிக்க வேண்டும் என்றும் அதன் பிறகு உன்னை பழைய பள்ளியில் சேர்த்து விடுவதாகவும் கூறினர்.

    இதனால் விருப்பமின்றி கவியரசு அந்த பள்ளியில் படித்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திடீரென வீட்டில் யாருக்கும் சொல்லாமல் ரெயில் ஏறி சென்னை சென்று விட்டார். பின்னர் சென்னையில் உள்ள சேத்துப்பட்டு போலீஸ் நிலையத்தில் கவியரசை அவரது பெற்றோர் மீட்டு வந்தனர்.

    அதன் பின்னர் பிளஸ்-1 பொதுத்தேர்வை கவியரசு எழுதி முடித்தார். அதன் பின்னர் பிளஸ்-2 சிறப்பு வகுப்புக்கு சென்று வந்தார்.

    சம்பவத்தன்று வழக்கம் போல் சிறப்பு வகுப்புக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற கவியரசு அதன் பிறகு வீடு திரும்பவில்லை.

    அவரை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. அவரது பெற்றோர் பள்ளியில் தொடர்பு கொண்டு கேட்ட போது உங்கள் மகன் பள்ளிக்கு வரவில்லை என்று கூறி விட்டனர்.

    இதனையடுத்து அவரது பெற்றோர் இது குறித்து அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 19 வயது கல்லூரி மாணவி சம்பவத்தன்று கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை,
    • இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் மாணவியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    கடலூர்:

    கடலூர் அடுத்த கட்டியாங்குப்பத்தை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி சம்பவத்தன்று கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் மாணவியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    இது குறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து திடீரென்று காணாமல் போன கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.

    • இன்ஸ்டாகிராமில் வாலிபர் தொல்லை கொடுத்ததால் இளம்பெண் திடீரென மாயமானார்.
    • அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை கோமதிபுரத்தை சேர்ந்தவர் அக்பர். இவரது மகள் ஹசீரா (வயது19). இவருக்கு இன்ஸ்டாகிராமில் கணக்கு உள்ளது.

    இவர், ஜெய்ஹிந்த்புரம் பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவருடன் இன்ஸ்டா கிராம் மூலம் பழகி வந்தார். அப்போது சதீஷ், ஹசீராவை காதலிப்பதாக கூறியுள்ளார். தொடர்ந்து அவர் ஹசீராவை தொடர்பு கொண்டு தொல்லை கொடுத்து வந்ததால் அவர் மனவேதனை அடைந்தார்.

    இதைத்தொடர்ந்து ஹசீரா நேற்று மதியம் வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. அவரை உறவினர்கள் வீடுகளில் தேடிப் பார்த்த னர். ஆனாலும் அவர் எங்கு சென்றார்? என்பது தெரியவில்லை.

    இதனால் அதிர்ச்சிய டைந்த அக்பர் தனது மகள் மாயமானது குறித்து அண்ணாநகர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    • கலையரசி (வயது 35). இவருக்கும் இவரது கணவருக்கும் கடந்த சில மாதத்துக்கு முன்பு குடும்ப சண்டை ஏற்பட்டது.
    • சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியில் வந்த கலையரசி திடீரென்று காணவில்லை.

    கடலூர்:

    கடலூர் அடுத்த குண்டியமல்லூர் சேர்ந்தவர் கலையரசி (வயது 35). இவருக்கும் இவரது கணவருக்கும் கடந்த சில மாதத்துக்கு முன்பு குடும்ப சண்டை ஏற்பட்டது. இதன் காரணமாக கலையரசி அவரது தாய் வீட்டில் இருந்து வருகிறார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியில் வந்த கலையரசி திடீரென்று காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் கலையரசியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்த புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பைரவி (வயது 17) பிளஸ் -2வகுப்பு தேர்வு எழுதியுள்ள நிலையில்தற்போது மாணவி நீட் பயிற்சி பெற்று வருகிறார்
    • வீட்டிலிருந்து வந்த மாணவி பைரவி திடீரென மாயமாகியுள்ளார்

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் அருகே உள்ள எரவார் கிராமத்தை சேர்ந்த ரவி மகள் பைரவி (வயது 17) இவர் அருகிலுள்ள பெரிய சிறுவத்தூர் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் -2வகுப்பு தேர்வு எழுதியுள்ள நிலையில்தற்போது மாணவி நீட் பயிற்சி பெற்று வருகிறார் எனகூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டிலிருந்து வந்த மாணவி பைரவி திடீரென மாயமாகியுள்ளார். இது சம்பந்தமாக அவரது பெற்றோர் மாணவியை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காத பட்சத்தில் இது சம்பந்தமாக மாணவியின் தந்தை ரவி சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்அடிப்படையில் சின்ன சேலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மதுரையில் இளம்பெண் திடீரென மாயமானார்.
    • இதுகுறித்து கரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாணை நடத்தி வருகிறார்.

    மதுரை

    மதுரை கரிமேடு மோதிலால் மெயின்ரோடு, யோகாநந்தசாமி தெற்கு மடம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன்(38), டிரைவர். இவரது மனைவி மணிமேகலை(26). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். கடந்த 6 மாதமாக மணிமேகலை யாருடனோ அடிக்கடி செல்போனில் பேசி வந்தார். இதன் காரணமாக கணவன்-மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டது. கடந்த 2-ந் தேதி இரவு வீட்டில் இருந்து பையுடன் வெளியேறிய மணிமேகலை அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் தகவல் கிடைக்கவில்லை. இதுகுறித்து கணவர் கார்த்திகேயன் கொடுத்த புகாரின்பேரில் கரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் முகமது இத்ரீஸ் வழக்குப்பதிவு செய்து விசாணை நடத்தி வருகிறார்.

    • சேலம் கன்னங்குறிச்சி பிறந்தநாள் கோவில் தெருவை சேர்ந்த வாலிபர் மாயமானார்.
    • இந்த நிலையில் கடந்த 20-ந் தேதி வீட்டில் இருந்து சென்ற கிருபாகரன் வீடு திரும்பவில்லை.

    சேலம்:

    சேலம் கன்னங்குறிச்சி பிறந்தநாள் கோவில் தெருவை சேர்ந்தவர் கந்தசாமி அமிர்தம். இவரது மகன் கிருபாகரன் (வயது 35). இவர், பிளஸ்- 2 வரை படித்துவிட்டு கூலி வேலைக்கு சென்றார். ஒரு விபத்தில் இவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டது. அதிலிருந்து இவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 20-ந் தேதி வீட்டில் இருந்து சென்ற கிருபாகரன் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் காணவில்லை. இதுகுறித்து கன்னங்குறிச்சி போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருபாகரனை தேடி வருகின்றனர்.

    • அகஸ்தியா புதுவை மாநிலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. நர்சிங் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
    • 3 மாதமாக கடலூர் அரசு மருத்துவமனையில் பயிற்சி பெற்று வருகிறார்.

    கடலூர்:

    புதுச்சேரி பிள்ளையார் குப்பம் சேர்ந்த அகஸ்தியா (வயது 19). இவர் புதுவை மாநிலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. நர்சிங் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 3 மாதமாக கடலூர் அரசு மருத்துவமனையில் பயிற்சி பெற்று வருகிறார். சம்பவத்தன்று அகஸ்தியா தனது வீட்டில் இருந்து கடலூர் அரசு மருத்துவமனைக்கு பயிற்சிக்காக வந்தார். பின்னர் அகஸ்தியா மீண்டும் வீட்டுக்கு செல்லவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் அகஸ்தியாவை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விருதுநகர் மாவட்டத்தில் சிறுமி-இளம்பெண் உள்பட 3 பேர் மாயமானார்கள்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை ரோடு பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி தமிழ்செல்வி(28). கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் வீட்டில் இருந்த தமிழ்செல்வி திடீரென மாயமானார். எங்கு சென்றார் என தெரியவில்லை. பல இடங்க ளில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.

    இதையடுத்து நாகராஜ் கொடுத்த புகாரின்பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காரியாபட்டி அருகே மந்திரியோடை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் பிளஸ்-2 முடித்து விட்டு தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். கடந்த ஒரு மாதமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். இந்நிலையில் அந்த சிறுமி வீட்டில் இருந்து மாயமானார். பல இடங்களில் தேடிப்பார்த்தும், விசாரித்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதை யடுத்து அவரது தாயார் ஆவியூர் போலீஸ் நிலை யத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வருகின்றனர்.

    சாத்தூர் பாரதிநகரை சேர்ந்தவர் மேட்டுராஜா(43), பிளாஸ்டிக் கம்பெனி நடத்தி வருகிறார். இவரது மனைவி கிருஷ்ணவேணி. வியாபார நஷ்டம் காரணமாக மேட்டுராஜா பலரிடம் கடன் வாங்கி குடும்பத்தை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்ததால் மீண்டும் கடன் வாங்க முடிவு செய்தார்.

    ஆனால் இதற்கு கிருஷ்ணவேணி சம்மதிக்கவில்லை. இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் வெளியே சென்ற மேட்டுராஜா மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப் பார்த்தும் காணமுடியா ததால், கிருஷ்ணவேணி சாத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விருதுநகர் மாவட்டத்தில் கல்லூரி மாணவி உள்பட 3 பேர் மாயமாகினர்.
    • அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விருதுநகர்

    அல்லம்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவரது மகள் யோகலட்சுமி. இவர் தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்தார்.இந்தநிலையில் கல்லூரிக்கு சென்ற அவர் மாயமாகிவிட்டார். இதுபற்றி கிருஷ்ணசாமி விருதுநகர் கிழக்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.

    சிவகாசியை அடுத்த சொக்கலிங்காபுரத்தை சேர்ந்தவர் மாரீஸ்வரன். இவரது மனைவி ரஷியா (வயது19). சம்பவத்தன்று எம்.புதுப்பட்டிக்கு சென்றார். அதன்பின் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுபற்றி மாரீஸ்வரன் எம்.புதுப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    வத்திராயிருப்பு அருகே கான்சாபுரம் நடுதெருவை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவரது 17 வயது மகள் கிருஷ்ணன் கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். சம்பவத்தன்று கல்லூரிசென்ற அவர் வீடு திரும்பவில்லை.

    இதுதொடர்பாக கிருஷ்ணசாமி கூமாபட்டி போலீசில் புகார் செய்தார். அதில் தனது மகளை அதே பகுதியை சேர்ந்த கணேசன் என்பவர் கடத்தி சென்று விட்டதாக தெரிவித்துள்ளார்.அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சிறுமிகள் உட்பட 4 பேர் மாயமானார்கள்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    திருச்சுழி அருகே உள்ள மடத்துப்பட்டியைச் சேர்ந்தவர் முத்துராஜா (வயது 49), மில் தொழிலாளி. இவர் 11 வருடத்திற்கு முன்பு சரஸ்வதி (35) என்பவரை இரண்டாம் தாரமாக திருமணம் செய்துகொண்டார். சரஸ்வதி தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று முத்துராஜா பணிக்குச் சென்று விட்டு திரும்பி வந்த பார்த்த போது மனைவி வீட்டில் இல்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து முத்துராஜா கொடுத்த புகாரின் பேரில் திருச்சுழி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர் அருகே உள்ள ஆமத்தூர் பெருமாள் நகரைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி மகேஸ்வரி (38). இவர் கோபாலன்பட்டியில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 11ம் வகுப்பு படிக்கும் மகளும் (16) 8-ம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர். கடந்த 30-ந் தேதி மாலை பாலமுருகன் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் திருத்தங்கல் - ஆமத்தூர் ரோட்டில் வடமலாபுரம் அருகே வந்து கொண்டிருந்த போது கீழே விழுந்தனர். இதில் மகேஸ்வரிக்கு காயம் ஏற்பட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவருடன் இரண்டு மகள்களும் இருந்தனர். பாலமுருகன் வீட்டிற்கு வந்து மறுநாள் காலை ஆஸ்பத்திரிக்கு சென்றபோது அங்கு மனைவி மற்றும் இரண்டு மகள்களும் இல்லை. எங்கு சென்றார்கள் என தெரியவில்லை. பலஇடங்களில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து மனைவி மற்றும் மகள்களைக் கண்டுபிடித்துத் தருமாறு

    விருதுநகர் கிழக்கு போலீஸ் நிலையத்தில் பாலமுருகன் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×