search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mayam"

    • மகளுடன் இளம்பெண் மாயமானார்.
    • சிவகங்கை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோட்டை சாமி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    சிவகங்கை

    சிவகங்கை அருகே உள்ள எம்.ேவலன்குளத்தை சேர்ந்தவர் சவுந்தர்யா. இவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தனது 3 வயது மகளுடன் தாய் வீட்டில் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாக சவுந்தர்யா சிவகங்கையில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்தார்.

    சம்பவத்தன்று மகளை அழைத்துக்கொண்டு வேலைக்கு செல்வதாக கூறி சென்ற சவுந்தர்யா அதன் பின் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தாய் லதா கொடுத்த புகாரின்பேரில் தாலுகார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    சிவகங்கை அருகே தமராக்கி கிராமத்தில் கரும்பு விற்கும் ஆலையில் கொத்தடிமைகளாக இருந்த 9 பேரை போலீசார் மீட்டு அங்குள்ள சமுதாய கூடத்தில் தங்க வைத்தனர். இந்த நிலையில் மீட்கப்பட்ட சந்தோஷ் என்பவர் திடீரென மாயமாகி உள்ளார். இதுகுறித்து தமராக்கி கிராம நிர்வாக அதிகாரி சதீஸ்குமார் கொடுத்த புகாரின்பேரில் சிவகங்கை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோட்டை சாமி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • தனியார் கல்லூரியில் பட்டப் படிப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.
    • சௌமியாவை கண்டுபிடித்து தருமாறு புகார் மனு அளித்தார்.

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் அருகே உள்ள நைனார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த செல்வராணி (வயது 43) இவருடைய கணவர் செந்தில்குமார் இவர்களுக்கு மகன் மற்றும் சௌமியா என்ற மகள் உள்ளார். சௌமியா ஆத்தூர் அருகே உள்ள தலைவாசல் தனியார் கல்லூரியில் பட்டப் படிப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் செல்வராணி, மற்றும் இவரது மகனும் சொந்த வேலை காரணமாக வெளியூருக்கு சென்றுள்ளனர். வீட்டில் சௌமியா மட்டும் தனியாக இருந்துள்ளார் பின்னர் வேலையை முடித்துவிட்டு செல்வராணியும் அவரது மகனும் வீட்டிற்கு வந்து பார்த்தபொழுது சௌமியா இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அக்கம் பக்கம் மற்றும் தெரிந்த இடங்களிலும் தேடியும் எங்கேயும் கிடைக்காததால் நேற்று கீழ்குப்பம் போலீஸ் நிலையத்தில் செல்வராணி தனது மகள் சௌமியாவை கண்டுபிடித்து தருமாறு புகார் மனு அளித்தார். புகாரைப் பெற்றுக் கொண்ட கீழ்குப்பம் போலீசார் வழக்கை பதிவு செய்து மாயமான சௌமியாவை தேடி வருகின்றனர்.

    • வேலைக்கு சென்ற இளம்பெண் திடீரென மாயமானார்.
    • கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை மேலக்கால் டோக் நகரை சேர்ந்தவர் ரங்கதுரை. இவரது மகள் மீனாட்சி(வயது19). இவர் பி.பி.சாவடியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று இரவு வேலையை முடித்துவிட்டு மீனாட்சி வீட்டுக்கு செல்லாமல் மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    • திருமங்கலம் அருகே இளம்பெண் மாயமானார்.
    • அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள சிவரக்கோட்டை பாண்டியன் நகரை சேர்ந்தவர் நாகேந்திரன். இவரது மகள் காயத்ரி(21). விருதுநகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதாக கூறி சென்றார். பின்னர் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

    உறவிருக்கு நாகேந்திரன் ேபான் செய்தபோது காயத்ரி அங்கு வரவில்லை என்பது தெரியவந்தது. பல இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடிய வில்லை. இதைத்தொடர்ந்து கள்ளிக்குடி போலீஸ் நிலையத்தில் நாகேந்திரன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காயத்ரியை தேடி வருகின்றனர்.

    • விருதுநகர் மாவட்டத்தில் கல்லூரி மாணவி-வியாபாரி உள்பட 4 பேர் மாயமானார்கள்.
    • பல இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி காமராஜர் நகரை சேர்ந்தர் லட்சுமி(வயது40). இவரது மகள் முனீஸ்வரி(20). தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரது வீட்டின் அருகே செல்போன் டவர் அமைத்தபோது அதில் வேலை செய்த ஒருவருடன் முனீஸ்வரிக்கு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    அவருடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்தார். இதனை பெற்றோர் கண்டித்தனர். இந்த நிலையில் கடைக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து சிவகாசி டவுன் போலீஸ் நிலையத்தில் லட்சுமி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வியாபாரி

    மல்லாங்கிணறு அருகே உள்ள கண்டியநேந்தல் பகுதியை சேர்ந்தவர் அஜித்(21). காய்கறி வியா பாரம் செய்து வருகிறார்.வழக்கம் போல் வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கு சென்றார் என தெரியவில்லை. இதுகுறித்து அஜித்தின் தாய் மாரி யம்மாள் மல்லாங்கிணறு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில்போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாணவி

    ஏழாயிரம்பண்ணை தேவர் நகரை சேர்ந்தவர் மோகன்(56). இவரது முதல் மனைவி 15 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். அப்போது 4 மாத பெண் குழந்தையை அவர் தத்தெடுத்து வளர்த்தார்.அதன்பின்னர் பாண்டிசெல்வி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 5 வயதில் குழந்தை உள்ளது. வளர்ப்பு மகள் தற்போது 10-ம் வகுப்பு முடித்துள்ளார். பிளஸ்-1 சேர்ப்பதற்காக சாத்தூரில் உள்ள பள்ளிக்கு அழைத்து செல்வதாக அவரிடம் மோகன் கூறியுள்ளார்.

    அதிகாலையில் பார்த்தபோது மகளை காணவில்லை. எங்கு சென்றார் என தெரியவில்ைல. பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் ஏழாயிரம்பண்ணை போலீசில் மோகன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்னறர்.

    மாணவன்

    சாத்தூர் சத்திரப் பட்டியை சேர்ந்தவர் பொன்னுகிளி. இவரது மகன் சாத்தூர் பள்ளியில் பிளஸ்-1 படிக்கிறார். குருலிங்காபுரத்தில் உள்ள பாட்டி வீட்டிற்கு திரு விழாவுக்காக சென்றார். அவரது கையில் ரூ.1000 பணம் கொடுத்து பாட்டி ஊருக்கு திருப்பி அனுப்பி வைத்தார். ஆனால் அவர் வீட்டிற்கு வரவில்லை. எங்கு சென்றார் என தெரியவில்ை. இதுகுறித்து சாத்தூர் டவுன் போலீசில் பொன்னுகிளி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நர்சிங் மாணவி உள்பட 3 பேர் மாயமானார்கள்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    சாத்தூர் முள்ளிவேல் நகரை சேர்ந்தவர் சங்கீதா. இவரது மகள் தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் பாட்டி வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து சங்கீதா கொடுத்த புகாரின் பேரில் சாத்தூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து நர்சிங் மாணவியை தேடி வருகின்றனர்.

    டி.கே.எஸ்.பி. நகரைச் சேர்ந்தவர் ராம்குமார் (வயது 45). இவர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் டீசல் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் சம்பவத்தன்று கோவில்பட்டி சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றார் அதன் பின் அவர் எங்கு சென்றார் என்பது குறித்து தெரியவில்லை இது குறித்து அவரது மனைவி மாரியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் பாண்டியன் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அருப்புக்கோட்டை அருகே உள்ள காரியாபட்டியை சேர்ந்தவர் மணி (வயது 60). இவர் அடிக்கடி வெளியூரில் வசிக்கும் தனது மகன், மகள்களை பார்த்து வருவதாக மனைவியிடம் கூறிவிட்டு செல்வது வழக்கம். இந்த நிலையில் வெளியூரில் வசிக்கும் தனது பிள்ளைகளை பார்த்து வருவதாக கூறிச் சென்ற மணி அதன்பின் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து மணியின் மனைவி பேச்சியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் காரியாபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிறுமி-கல்லூரி மாணவி மாயமானார்கள்.
    • புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    சிவகாசி அருகே உள்ள எஸ்.புதுப்பட்டி நல்லம்மாள் நகரை சேர்்நதவர் ரத்னா. இவரது 17 வயது மகள் பிளஸ்-2 ேதர்வில் 3 பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை. அதற்காக வீட்டில் இருந்து படித்து வந்தார். எப்போதும் செல்போனிலேயே மூழ்கி இருந்ததால் ரத்னா அவரை கண்டித்துள்ளார்.

    இந்த நிலையில் ரத்னா வெளியே சென்றுவிட்டு திரும்பி வந்தபோது மகளை காணவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்ைல. இதுகுறித்து மல்லி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேத்தூர் அருகே அயன்கொல்லங்கொண்டான் பகுதியை சேர்ந்த சூர்யா என்ற சூசையப்பர், ஆடு வியாபாரி. இவரது மகள் வெண்ணிலா(வயது19). தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

    இந்த நிலையில் சூர்யா வெளியூர் சென்று திரும்பியபோது மகளை காணவில்லை. எங்கு சென்றார் என தெரியவில்லை.

    இதுகுறித்து சேத்தூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பொன்னம்மா பேட்டையில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.காம் சி.ஏ. பட்டப்படிப்பு படித்து வருகிறார்.
    • இந்த நிலையில் சிவஜோதி கடந்த 31-ந்தேதி வீட்டில் கடைக்கு செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றார்.

    சேலம்:

    சேலம் அன்ன தானப்பட்டி நாரா யணபிள்ளை தெருவை சேர்ந்தவர் சுப்ரமணி. கூலி தொழிலாளி. இவ ரது மகள் சிவஜோதி (வயது 19). இவர், பொன்னம்மா பேட்டையில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.காம் சி.ஏ. பட்டப்படிப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் சிவஜோதி கடந்த 31-ந்தேதி வீட்டில் கடைக்கு செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்ப வில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், தங்க ளது மகளை பல்வேறு இடங்க ளில் தேடினர். ஆனால் கண்டு பிடிக்க முடியவில்லை.

    இது குறித்து அன்னதா னப்பட்டி போலீஸ் நிலை யத்தில் புகார் கொடுக்க ப்பட்டது. அதன்பேரில் போலீசார், வழக்குப்பதிவு செய்து, மாய மான கல்லூரி மாணவி சிவ ஜோதியை தேடி வருகின்றனர். மாணவி மாயமானதற்கு காதல் விவகாரம் உள்ளதா? என்ற கோணத்திலும் போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோழி வியாபாரி மாயமானார்.
    • அவர் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார்.

    திருமங்கலம்

    திருமங்கலம் சண்முகா நகரை சேர்ந்த கோழி வியாபாரி சந்திரகுமார் (வயது55). இவருடைய மனைவி நாகரஞ்சனி. இவர்களது ஒரே மகன் சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

    இந்நிலையில் சந்திரகுமார் கரிசல்பட்டியில் உள்ள தனது உறவினர் கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். மனைவி நாகரஞ்சனி உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்று விட்டு இரவு 10 மணிக்கு வீட்டுக்கு வந்து பார்த்தபோது கணவர் வீட்டில் இல்லை. அவர் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார்.

    அதில் வேலை விசயமாக வெளியூருக்கு போகிறேன் என்று எழுதியிருந்தார். இதையடுத்து தனது கணவரை நாகரஞ்சனி பல இடங்களில் தேடினார். ஆனால் அவர் கிடைக்காததால், தனது கணவர் மாயமானது குறித்து திருமங்கலம் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

    • கடந்த 22-ந் தேதி நானும், எனது மனைவி செல்வியும் கூலி வேலைக்காக வெளியே சென்றோம்.
    • திரும்பி வந்தபோது வீட்டில் இருந்த, எனது மூத்த மகள் பிரியதர்ஷினி (வயது 17), 2-வது மகள் கீர்த்திகா (15) ஆகிய இருவரையும் காணவில்லை.

    நாமக்கல்:

    நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட, தும்மங்குறிச்சி யைச் சேர்ந்த கேசவன் என்பவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ண னிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:-

    நான், எனது மனைவி செல்வி மற்றும் 2 மகள்கள், 1 மகனுடன் தும்மங்குறிச்சியில் வசித்து வருகிறேன். நான் கேரளாவில் மண் வெட்டி எடுக்கும் வேலை, செய்து வருகிறேன்.

    தற்போது அங்கு மழைக்காலம் என்பதால் வேலை இல்லை. எனவே தும்மங்குறிச்சியில் எனது குடும்பத்துடன் வசித்து வருகிறேன்.

    இந்நிலையில் கடந்த 22-ந் தேதி நானும், எனது மனைவி செல்வியும் கூலி வேலைக்காக வெளியே சென்றோம். திரும்பி வந்தபோது வீட்டில் இருந்த, எனது மூத்த மகள் பிரியதர்ஷினி (வயது 17), 2-வது மகள் கீர்த்திகா (15) ஆகிய இருவரையும் காணவில்லை. உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடிப் பார்த்தும் அவர்கள் கிடைக்கவில்லை.

    இதுதொடர்பாக நல்லிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தோம். அங்கு பெண் குழந்தைகள் காணவில்லை என வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது. எனினும், இதுவரை எனது 2 மகள் களும் மீட்கப்படவில்லை.

    அவர்கள் காணாமல் போய் 10 நாட்களுக்கு மேல் ஆனதால், இருவருக்கும் என்ன நடந்தது என்பது தெரியவில்லை. அதனால் நாங்கள் மிகவும் பாதிக்கப் பட்டுள்ளோம். எனவே எங்களின் 2 மகள்களையும் கண்டுபிடித்து தரும்படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த மனுவில் தெரிவித்துள்ளார். 

    • இளம்பெண்கள் உள்பட 4 பேர் மாயமானார்கள்.
    • பல இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    மதுரை

    மதுரை வெளிச்சநத்தம் வி.மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது பெண் புதூர் பகுதியில் உள்ள ஒரு மையத்தில் டைப்ரைட்டிங் பயின்று வருகிறார்.

    சம்ப வத்தன்று டைப்ரைட்டிங் மையத்திற்கு செல்வதாக கூறிச் சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டு பிடிக்க முடிய வில்லை.

    இது குறித்த புகாரின் பேரில் சத்திரப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்

    வாடிப்பட்டி அருகே உள்ள பெரிய ஊர்சேரியை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி பூமா (30). சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்க ளில் தேடி பார்த்தும் கண்டு பிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து அலங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் ராஜா புகார் செய்தார்.அலங்காநல்லூர் அருகே உள்ள மேலப்பனங்காடி வாகைகுளத்தை சேர்ந்தவர் ஆனந்தகுமார். சம்பவத்தன்று வேலைக்கு சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து ஆனந்த குமாரின் மனைவி ரதி அலங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.மதுரை குலமங்கலம் யோகநரசிம்மன் நகரை சேர்ந்தவர் சரவணகுமார். இவரது மகள் கீர்த்திகா (19). சம்பவத்தன்று வெளியே சென்று வருவதாக கூறிச் சென்ற இவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து சரவண குமார் மகளை கண்டுபிடித்து தருமாறு அலங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமானவர்களை தேடி வருகின்றனர்.

    • இளம்பெண் திடீரென மாயமானார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாஅமராவதியை தேடி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கண்மாய்பட்டி தெருவை சேர்ந்தவர் ஜெயபாலன். இவரது மகள் ராஜாஅமராவதி(19). பேஷன் டிசைனிங் படித்துவிட்டு வீட்டில் இருந்தார். இந்த நிலையில் வெளியே சென்று வருவதாக கூறி சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் ேதடிப்பார்த்தும் விசாரித்து கண்டுபிடிக்க முடியவில்ைல.

    இதையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் ஜெயபாலன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாஅமராவதியை தேடி வருகின்றனர்.

    ×