search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுவையை சேர்ந்த கல்லூரி மாணவி கடலூரில் திடீர் மாயம்
    X

    புதுவையை சேர்ந்த கல்லூரி மாணவி கடலூரில் திடீர் மாயம்

    • அகஸ்தியா புதுவை மாநிலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. நர்சிங் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
    • 3 மாதமாக கடலூர் அரசு மருத்துவமனையில் பயிற்சி பெற்று வருகிறார்.

    கடலூர்:

    புதுச்சேரி பிள்ளையார் குப்பம் சேர்ந்த அகஸ்தியா (வயது 19). இவர் புதுவை மாநிலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. நர்சிங் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 3 மாதமாக கடலூர் அரசு மருத்துவமனையில் பயிற்சி பெற்று வருகிறார். சம்பவத்தன்று அகஸ்தியா தனது வீட்டில் இருந்து கடலூர் அரசு மருத்துவமனைக்கு பயிற்சிக்காக வந்தார். பின்னர் அகஸ்தியா மீண்டும் வீட்டுக்கு செல்லவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் அகஸ்தியாவை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×