search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்லூரி மாணவி உள்பட 3 பேர் மாயம்
    X

    கல்லூரி மாணவி உள்பட 3 பேர் மாயம்

    • விருதுநகர் மாவட்டத்தில் கல்லூரி மாணவி உள்பட 3 பேர் மாயமாகினர்.
    • அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விருதுநகர்

    அல்லம்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவரது மகள் யோகலட்சுமி. இவர் தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்தார்.இந்தநிலையில் கல்லூரிக்கு சென்ற அவர் மாயமாகிவிட்டார். இதுபற்றி கிருஷ்ணசாமி விருதுநகர் கிழக்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.

    சிவகாசியை அடுத்த சொக்கலிங்காபுரத்தை சேர்ந்தவர் மாரீஸ்வரன். இவரது மனைவி ரஷியா (வயது19). சம்பவத்தன்று எம்.புதுப்பட்டிக்கு சென்றார். அதன்பின் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுபற்றி மாரீஸ்வரன் எம்.புதுப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    வத்திராயிருப்பு அருகே கான்சாபுரம் நடுதெருவை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவரது 17 வயது மகள் கிருஷ்ணன் கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். சம்பவத்தன்று கல்லூரிசென்ற அவர் வீடு திரும்பவில்லை.

    இதுதொடர்பாக கிருஷ்ணசாமி கூமாபட்டி போலீசில் புகார் செய்தார். அதில் தனது மகளை அதே பகுதியை சேர்ந்த கணேசன் என்பவர் கடத்தி சென்று விட்டதாக தெரிவித்துள்ளார்.அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×