search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Family feud"

    • கலையரசி (வயது 35). இவருக்கும் இவரது கணவருக்கும் கடந்த சில மாதத்துக்கு முன்பு குடும்ப சண்டை ஏற்பட்டது.
    • சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியில் வந்த கலையரசி திடீரென்று காணவில்லை.

    கடலூர்:

    கடலூர் அடுத்த குண்டியமல்லூர் சேர்ந்தவர் கலையரசி (வயது 35). இவருக்கும் இவரது கணவருக்கும் கடந்த சில மாதத்துக்கு முன்பு குடும்ப சண்டை ஏற்பட்டது. இதன் காரணமாக கலையரசி அவரது தாய் வீட்டில் இருந்து வருகிறார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியில் வந்த கலையரசி திடீரென்று காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் கலையரசியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்த புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சங்கருக்கும் பாக்கியலட்சுமி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு நடைபெறுவது வழக்கம்.
    • ஆத்திரமடைந்த சங்கர் கத்தியை எடுத்து பாக்கியலட்சுமி தலையில் சரமாரியாக வெட்டினார்.

    விழுப்புரம் :

    விழுப்புரம் அருகே தைலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 45) ஆசாரி வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பாக்கியலட்சுமி (40) இந்நிலையில் சங்கருக்கும் பாக்கியலட்சுமி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு நடைபெறுவது வழக்கம். மேலும் சங்கர் தனது மனைவி பாக்கியலட்சுமி மீது நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி குடும்ப தகராறில் ஈடுபடுவாராம்.

    இன்று காலை வழக்கம்போல் சங்கருக்கும் பாக்கிய லட்சுமிக்கும் இடையில் குடும்பத் தகராறு காரணமாக சண்டை ஏற்பட்டது. சிறிது நேரத்தில் இது பயங்கரமாக வெடித்தது. இதில் ஆத்திரமடைந்த சங்கர் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தனது மனைவி என்றும் கூட பாராமல் பாக்கியலட்சுமி தலையில் சரமாரியாக வெட்டினார். இதில் பாக்கியலட்சுமி அலறி துடித்து ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் இருந்தவர்கள் வந்து பார்த்தபோது பாக்யலட்சுமி வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை மீட்டு புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பாக்கியலட்சுமி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த கிளியனூர்போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாலமுரளி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து மனைவியை கத்தியால் வெட்டி கொன்ற சங்கரை கைது செய்தனர். மேலும் போலீசார் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டபகலில் கணவன் மனைவியை வெட்டிக் கொன்றது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×