என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "married"
திருப்புவனம் மன்னர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த முத்துராஜா என்பவரின் மகன் மகேந்திரன் (வயது 29). திருமணமாகாத இவர் கட்டிடத் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இதுகுறித்து அவரது தந்தை திருப்புவனம் போலீசில் புகார் செய்தார். அதில், திருமணமாகாமல் ஏக்கத்தில் மனமுடைந்து காணப்பட்டு வந்த நிலையில், மகேந்திரன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறியிருந்தார். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சேது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார். #tamilnews
இத்தாலியை சேர்ந்தவர் வேலன்டின் (34). இவரது காதலி ஆன்கா ஆர்சன் (29). இவர்கள் இருவரும் நிர்வாணமாக திருமணம் செய்து கொள்ள விரும்பினர்.
அதன்படி இத்தாலியில் உள்ள ஒரு தீவில் நிர்வாண நிலையில் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் இயற்கையை விரும்புபவர்கள். எனவே இவர்கள் இவ்வாறு திருமணம் செய்தனர்.
எங்கள் நிர்வாண திருமணத்துக்கு பெற்றோர் ஒத்துக் கொள்ளமாட்டார்கள். அதனால்தான் கும்பத்தினர் மற்றும் நண்பர்களை அழைக்காமல் 2 பேரை மட்டுமே அழைத்தோம்.
இந்த ஆண்டு இறுதியில் இருவரும் முறைப்படி திருமணம் செய்ய இருக்கிறோம். அதற்கு உறவினர்கள் மற்றும் பெற்றோர் அழைக்கப்படுவார்கள் என்றார்.
இந்த திருமணத்தின் போது மணமகள் ஆன்கா ஆர்சன் தலைக்கு பின்னால் மணப் பெண்கள் அணியும் வெள்ளை நிற துணி மற்றும் பூ போன்ற மொடல் அணிந்திருந்தார். மணமகனோ ‘போ’ என்றழைக்கப்படும் டையை மட்டும் அணிந்திருந்தார். இந்த ஜோடியின் போட்டோக்கள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நேதாஜி தெருவைச் சேர்ந்தவர் குபேந்திரன் இவருடைய மகள் சிவரஞ்சனி (வயது 27). எம்.சி.ஏ. பட்டதாரி.
சம்பவத்தன்று காலை தேர்வு எழுதுவதற்காக சிவரஞ்சனி மதுரை சென்று உள்ளார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் குபேந் திரன் உசிலம்பட்டி டவுன் போலீசில், மகள் மாயமானது குறித்து புகார் கொடுத்தார். அதில், திருமங்கலம் மறவன்குளத்தை சேர்ந்த வீரபாண்டி (29) என்பவர் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தைகள் கூறி, சிவரஞ்சனியை கடத்தி சென்று உள்ளார்.
இதற்கு அவரின் தந்தை கணேசன், தாய் பழனியம்மாள் மற்றும் நல்லபெருமாள் பட்டியை சேர்ந்த உறவினர்கள் மகாலிங்கம், தாய் பாப்பு ஆகியோர் உடந்தையாக இருந்தனர் என்று குறிப் பிட்டு உள்ளார்.
அதன் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாடசாமி வழக்குப்பதிவு செய்து மாயமான பெண் மற்றும் வாலிபரை வலை வீசி தேடி வருகிறார். #tamilnews
உலகையே அச்சத்தின் உச்சியில் வைத்திருந்த பயங்கரவாத இயக்கங்களில் ஒன்று அல் கொய்தா.. இந்த இயக்கத்தின் தலைவரான ஒசாமா பின் லேடன் சர்வதேச நாடுகளால் தேடப்பட்டு வந்தார். இவர் 2011-ம் ஆண்டு அமெரிக்க ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டார்.
அப்போது அவர் பதுங்கி இருந்த இடத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ஒசாமா எழுதிய கடிதம் ஒன்று ராணுவத்தால் கைப்பற்றப்பட்டது. அல் கொய்தா இயக்கத்தில் தனது இடத்தை அவரது மகன்களில் ஒருவரான ஹம்ஜா பின் லேடன் நிரப்புவார் என குறிப்பிடப்பட்டிருந்தார். இதையடுத்து, தலைமறைவாக இருக்கும் ஹம்ஜா பின் லேடன் சர்வதேச அளவில் தேடப்பட்டு வருகிறார்.
இந்நிலையில், அல் கொய்தா இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரும், அமெரிக்காவில் 2001-ம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதலின் மூளையாகவும் செயல்பட்ட முகமது அட்டாவின் மகளை, ஒசாமா பின் லேடனின் மகன் ஹம்ஜா திருமணம் செய்துகொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலை அவரது உறவினர் ஒருவர் உறுதிபடுத்தியுள்ளார். #OsamaBinLaden #HamzaBinLaden
மார்த்தாண்டம் அருகே 16 வயது சிறுமியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் போது, அதிகாரிகள் குறுக்கிட்டு மணப்பெண்ணை பிரித்துச் சென்றதால், அவமானம் அடைந்த புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் பாறவிளையை சேர்ந்தவர் வினு (வயது 31), கட்டிட தொழிலாளி. இவருக்கும், தக்கலை அருகே கோழிப்போர்விளையை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் செய்ய இரு வீட்டாரும் பேசி முடிவு செய்தனர். அதன்படி, நேற்று முன்தினம் காலையில் இருவருக்கும் மண்டைக்காட்டில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் நடந்தது.
மாலையில், மார்த்தாண்டத்தில் உள்ள மணமகன் இல்லத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி அங்கு மேடையில் மணமக்கள் அமர்ந்திருந்தனர். உறவினர்களின் வருகையால் திருமண வீடு களைகட்டியிருந்தது.
இந்தநிலையில், மணப்பெண்ணுக்கு 16 வயதே ஆவதாக மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி குமுதாவுக்கு தகவல் கிடைத்தது. உடனே, அதிகாரி குமுதா மற்றும் சமூக நல அதிகாரி பியூலா, சைல்டு லைன் அமைப்பினர் திருமண வீட்டுக்கு விரைந்து சென்றனர். அங்கு மணப்பெண்ணிடம் விசாரணை நடத்திய போது அவருக்கு 16 வயதே ஆவது தெரிய வந்தது. உடனே திருமண வரவேற்பு நிகழ்ச்சியை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு திரண்டிருந்த உறவினர்கள் இடையே பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து, வினுவையும், சிறுமியையும் நாகர்கோவிலுக்கு அழைத்து சென்றனர். சிறுமியிடம் விசாரணை நடத்திய போது, அவர் தான் 10-ம் வகுப்பு வரை படித்து இருப்பதாகவும், தொடர்ந்து படிக்க விரும்புவதாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதற்கு நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர், அந்த சிறுமி நாகர்கோவிலில் உள்ள அரசு காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும், வினுவுக்கு அறிவுரை கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
அதன் பின்பு நேற்று முன்தினம் இரவு வினு மிகவும் சோகத்துடன் வீட்டுக்கு வந்தார். திருமண வீடு களை இழந்து போனது. வினு தனது அறைக்கு தூங்க சென்றார்.
நேற்று காலையில் நீண்ட நேரமாகியும் அவரது அறையின் கதவு திறக்கப்படவில்லை. இதனால், சந்தேகம் அடைந்த பெற்றோர் அறையின் கதவை தட்டினர். ஆனால், உள்ளிருந்து எந்த சத்தமும் வரவில்லை.
கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அங்கு அனைவருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் வினு பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதை பார்த்த பெற்றோர் கதறி அழுதனர். திருமண நாள் இரவில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்த சம்பவத்தால் உறவினர்கள் சோகத்தில் மூழ்கினர்.
இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, வினுவின் உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், திருமண வரவேற்பின் போது அதிகாரிகள் தலையிட்டு மணப்பெண்ணை பிரித்துச் சென்றதால் ஏற்பட்ட அவமானத்தால் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்திருக்கலாம் என தெரியவந்தது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நேற்று முன்தினம் மணக்கோலத்துடன் கலகலப்பாக காணப்பட்ட வினு, தனது அறையில் விபரீதமாக தற்கொலை செய்துகொண்டு மறுநாள் காலையில் பிணமாக கிடந்த காட்சி பரிதாபத்தை ஏற்படுத்துவதாக அமைந்திருந்தது.
ஜப்பான் மன்னர் அகி ஹிட்டோவின் மூத்த பேத்தி இளவரசி மாகோ (25). இவர் டோக்கியோவில் உள்ள பல்கலைக்கழகத்தில் படித்தபோது தன்னுடன் படித்த கீ கொமுரோ என்ற வாலிபரை காதலித்தார்.
இதுகுறித்து இளவரசி மாகோ கூறும்போது, “இளவரசியாக இருக்கும் நான் சாதாரண நபரை திருமணம் செய்து கொண்டால் எனது இளவரசி அந்தஸ்து பறிபோய் விடும் என எனக்கு சிறுவயதிலேயே தெரியும்.
ஆனால் எங்களின் இருவரது மனமும் ஒத்துப்போய் விட்டதால் அந்த அந்தஸ்து எனக்கு பெரிதாக தெரியவில்லை. தற்போது வரை அரச குடும்பத்தில் எனது கடமைகளை முழுமையாக நிறைவேற்றியுள்ளேன்” என்றார். #JapanesePrincess
சீர்காழி அருகே காரைமேட்டில் ஒளிலாயம் அமைந்துள்ளது. இங்கு 18 சித்தர்களுக்கு தனித்தனியாக கோயில் அமைந்துள்ளது. மேலும், இக்கோவிலில் சிவன். முருகன், விநாயகர் கோயில்களும் அமைந்துள்ளது. இக்கோயிலில் 27 நட்சத்திரத்திற்குரிய மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இக்கோயிலுக்கு வந்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்து முறைப்படி திருமணம் செய்து செல்கின்றனர்.
சீனா பெய்ஜிங்கை சேர்ந்த யன் என்பவர் மருத்துவதுறையில் பணிபுரிந்து வருகிறார். சீனா சங்காயைச் சேர்ந்த ரூபிங் அழகுகலை நிபுணராக இருந்து வருகிறார். இருவரும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் இந்து முறைப்படி திருமணம் செய்து கொள்ள விருப்பட்டு நாகை மாவட்டத்தில் சீர்காழி அருகே உள்ள காரைமேடு ஒளிலாயத்தை தேர்வு செய்து அங்கு வந்தனர். அருள், கணேஷ், செந்தில், பழனி சிவாச்சாரியார்கள் முன்னிலையில் யன், ரூபிங் திருமணம் நாதஸ்வரம், மேளக்கச்சேரி இசைக்க மணமக்கள் பட்டு வேட்டி, பட்டு புடவை அணிந்து மணமேடைக்கு அழைத்து வரப்பட்டு யன், ரூபிங் கழுத்தில் தாலி கட்டினார்.
அப்போது பலரும் அர்ச்சகை தூவி ஆசி வழங்கினர். பின்னர் இருவீட்டார் சார்பில் மணபெண்ணிற்கு நெற்றி பட்டம் கட்டப்பட்டது. தொடர்ந்து அம்மி மிதித்து, அருந்ததி பார்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மணமக்களுக்கு திரண்டிருந்தவர்கள் அன்பளிப்பு பொருட்களை வழங்கினர். தொடர்ந்து அனைவருக்கு அறுசுவையுடன் விருந்து வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நாடி முத்து, செந்தமிழன், மாமல்லன் செய்திருந்தனர். #ChineseCouple
பாகூர்:
கடலூர் மாவட்டம் வடலூரை சேர்ந்தவர் இளவரசி (வயது 26). இவர், புதுவை கிருமாம்பாக்கம் தனியார் மருத்துவ கல்லூரி எதிரே உள்ள அழகு நிலையத்தில் (பியூட்டி பார்லர்) வேலை பார்த்து வருகிறார்.
இவரிடம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவ கல்லூரியில் ஸ்டோர் கீப்பராக வேலை பார்த்து வரும் திருச்செந்தூரை சேர்ந்த யஷ்வந்தய்யா (28) என்பவர் பழக்கமானார். நாளடைவில் இது காதலாக மாறியது.
இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர். இருவரும் சில மாதங்கள் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் தாம்பத்திய உறவில் யஷ்வந்தய்யாவுக்கு நாட்டம் இல்லாததால் அவர் மீது இளவரசிக்கு சந்தேகம் ஏற்பட்டது.
பின்னர் விசாரித்த போது, யஷ்வந்தய்யா பெண்ணாக இருந்து ஆணாக மாறி அறுவை சிகிச்சை செய்திருப்பது இளவரசிக்கு தெரியவந்தது.
இதனால் யஷ்வந்தய்யாவை பிரிந்து இளவரசி வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று திருமண நாளையொட்டி இளவரசியை யஷ்வந்தய்யா சந்தித்தார். அப்போது இருவரும் சேர்ந்து வாழலாம் என அவர் இளவரசியிடம் வற்புறுத்தினார்.
ஆனால், இதற்கு இளவரசி சம்மதிக்கவில்லை. இதனால் விரக்தி அடைந்த யஷ்வந்தய்யா பாட்டிலில் தயாராக எடுத்து சென்ற பெட்ரோலை உடலில் ஊற்றி தீவைத்து கொண்டார்.
தீ உடல் முழுவதும் பரவியதால் வலி தாங்காமல் யஷ்வந்தய்யா அலறி துடித்தார். பின்னர் அருகில் இருந்த கழிவுநீர் வாய்க்காலில் உருண்டு புரண்டார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் கிருமாம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று யஷ்வந்தய்யாவை மீட்டு அவர் வேலை பார்க்கும் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு யஷ்வந்தய்யா ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தை சேர்ந்தவன் 13 வயது சிறுவன். கர்நாடக மாநிலம் சனிக்கனூரை சேர்ந்த அய்யம்மாள்(23) என்பவர் சிறுவனின் உறவினர் ஆவார். இதனால் இருவரும் ஒருவர் வீட்டுக்கு மற்றொருவர் அடிக்கடி சென்று வந்து உள்ளனர். அப்போது அவர்களுக்கு இடையே வயது வித்தியாசம் இல்லாமல் காதல் மலர்ந்தது.
மைனரான சிறுவனுக்கும், மேஜர் பெண்ணுக்கும் ஏற்பட்ட இந்த காதல் உறவு பெற்றோர்களுக்கு தெரியவந்தது. பெற்றோர்கள் இந்த விநோத காதலுக்கு பச்சைக்கொடி காட்டி சிறுவனுக்கும், அந்த பெண்ணுக்கும் கடந்த மாதம் 27-ந்தேதி உப்பரஹால் கிராமத்தில் திருமணத்தை நடத்தினார்கள்.
இந்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் சமீபத்தில் வெளியாகி வைரலாக பரவியது. இது ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் மைனர் பையனுக்கு 23 வயது பெண்ணை பெற்றோர் திருமணம் செய்து வைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த திருமணத்தை செய்து வைத்த பெற்றோர்களை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
இதை அறிந்ததும் மணமக்களும் அவர்களது பெற்றோர்களும் தற்போது போலீசுக்கு பயந்து தலைமறைவாகி விட்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்