என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "marriage desire"
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகே ஸ்ரீரங்கபட்டியை சேர்ந்த மைனர் பெண்ணிடம் அதே ஊரைச் சேர்ந்த சந்திரசேகர் (வயது22) என்பவர் பழகி வந்தார். நாளடைவில் காதலிப்பதாக கூறி அந்த பெண்ணிடம் நெருங்கி பேசி பழகி உள்ளார்.
மேலும் திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்து பலமுறை உல்லாசமாக இருந்துள்ளனர். இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு மைனர் பெண்ணுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சோதனை செய்ததில் அவர் 9 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்ணின் பெற்றோர் சந்திரசேகரிடம் தங்கள் மகளை திருமணம் செய்துகொள்ளுமாறு கூறி உள்ளனர்.
ஆனால் சந்திரசேகர் திருமணத்திற்கு மறுத்து அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதற்கு அவரது தாய் சந்திரிகா, தந்தை செல்வக்குமார் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். இது குறித்து நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் பேபி மைனர் பெண்ணை ஏமாற்றிய சந்திரசேகர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை:
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள முடுவார்பட்டியைச் சேர்ந்தவர் மோகன். இவரது மகள் வர்ஷா (வயது 19). வீட்டில் தனியாக இருந்த வர்ஷாவை திருமண ஆசைக்காட்டி அதே பகுதியைச் சேர்ந்த ரவி என்பவரது மகன் பாண்டித்துரை (21) கடத்திச் சென்று விட்டார்.
இளம்பெண்ணை கடத்திச் செல்ல பாண்டித்துரைக்கு அவரது நண்பர்கள் சுதர்சன், முத்துப்பாண்டி, அழகர் ஆகியோர் உதவியதாக தெரியவந்தது.
இது குறித்து மோகன் பாலமேடு, போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை கடத்திச் சென்ற வாலிபர் உள்ளிட்ட 4 பேரை தேடி வருகிறார்கள்.
மதுரை:
மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள கண்மாய்பட்டியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த களச்சி கருப்பன் என்பவரது மகன் ராஜபிரபு கடந்த 6 மாதமாக காதலித்து வந்தார்.
அப்போது திருமணம் செய்து கொள்வதாக கூறிய ராஜபிரபு அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பிணியானார்.
தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி சிறுமி கேட்டபோது, ராஜ பிரபு மற்றும் அவரது தந்தை களச்சி கருப்பன் ஆகியோர் மறுத்து விட்டனர்.
இது குறித்து மேலவளவு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் நிர்மலா வழக்குப்பதிவு செய்து ராஜபிரபு, அவரது தந்தை களச்சி கருப்பன் ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆண்டிப்பட்டி:
சின்னமனூர் அருகே உள்ள கீழப்பூலாந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேல் (வயது 23). இவர் ஆண்டிப்பட்டியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். அதே கல்லூரியில் தேனி அரண்மனைப் புதூரைச் சேர்ந்த மாணவியும் படித்து வந்துள்ளார். இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. காதல் ஜோடி பல்வேறு இடங்களுக்கு சென்று தங்கள் காதலை வளர்த்துள்ளனர்.
மேலும் திருமணம் செய்து கொள்வதாக கூறி கிருஷ்ணவேல் அந்த மாணவியை பலாத்காரம் செய்துள்ளார். இதனால் மாணவி உடல்நிலை பாதிக்கப்பட்டு தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மாணவி கிருஷ்ணவேலிடம் வற்புறுத்தியுள்ளார். இருவரும் வெவ்வேறு பிரிவு என்பதால் கிருஷ்ணவேல் திருமணத்துக்கு மறுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தார்.
எஸ்.பி. உத்தரவின் பேரில் ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து கிருஷ்ணவேலை கைது செய்தனர்.
ராஜபாளையம்:
ராஜபாளையம் செல்லம்பட்டியை சேர்ந்தவர் ஆண்டிச்சாமி. இவரது மகள் அன்புச்செல்வி (வயது19). நர்சிங் பயிற்சி முடித்துள்ள இவர் நெல்லை மாவட்டம் திசையன்விளையில் உள்ள ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீசில் அன்புச் செல்வி ஒரு புகார் கொடுத்தார்.
அதில் தங்கள் பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் மாரீஷ் வரன் (24) என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்தோம்.
அப்போது திருமண ஆசைகாட்டி அவர் பாலியல் பலாத்காரம் செய்தார். இதனால் நான் கர்ப்பமானேன்.
இதுபற்றி மாரீஷ்வரனிடம் கூறி தற்போது திருமணம் செய்யக்கேட்டபோது மறுத்து விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே உள்ள தெப்பம்பட்டியைச் சேர்ந்த ராஜூ மகன் அழகுபாண்டி (வயது 22). இவர் அதே பகுதியைச் சேர்ந்த பிரேமா (16) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருடன் நட்பாக பழகி வந்தார். இவர் பிளஸ்-1 படித்து வந்தார். நாளடைவில் இவர்கள் பழக்கம் அதிகரிக்கவே பிரேமாவை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
பின்னர் சம்பவத்தன்று அவரை பல்லடத்தில் உள்ள தனது நண்பர் வினோத் என்பவரின் அறைக்கு அழைத்துச் சென்றார். திருமணம் செய்து கொள்வதாக கூறி பல முறை உல்லாசமாக இருந்துள்ளார்.
தனது மகளை காணாமல் திடுக்கிட்ட பிரேமாவின் பெற்றோர்கள் அழகுபாண்டி கடத்திச் சென்றது தெரிய வரவே அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து ராஜதானி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அழகுபாண்டியை கைது செய்தனர். பிரேமாவை மீட்டு காப்பகத்தில் தங்க வைத்தனர்.
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள காவேரியம்மாபட்டியை சேர்ந்த மாரிமுத்து மகன் கவிபிரியா (வயது17), காப்பிளிய பட்டியை சேர்ந்த பிச்சை முத்து மகள் கவுரி (17). இவர்கள் 2 பேரும் ஒட்டன்சத்திரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகின்றனர்.
சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற மாணவிகள் வீடு திரும்பவில்லை. அவர்களது பெற்றோர் பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்க வில்லை.
இதனால் ஒட்டன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் கவிபிரியாவின் தந்தை மாரிமுத்து புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் திருமண ஆசை காட்டி மாணவிகளை 2 வாலிபர்கள் கடத்தி சென்றது தெரியவந்தது.
பெரியகோட்டையை சேர்ந்த சூர்யா (19), மகேந்திரன் (19) ஆகிய 2 பேரும் பஸ்சில் ஒட்டன்சத்திரம் வந்தபோது மாணவிகளிடம் பழகி வந்துள்ளனர்.
பின்னர் காதலிப்பதாக கூறினர். இந்த சூழ்நிலையில் திருமண ஆசை காட்டி அவர்களை சென்னைக்கு கடத்தி சென்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது. போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.
மதுரை:
மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள ஹார்விபட்டியைச் சேர்ந்த 17 வயதுடைய இளம்பெண் வில்லாபுரம் மீனாட்சி நகரில் உள்ள ஒரு டெய்லர் கடையில் வேலை பார்த்து வந்தார்.
அப்போது இவருக்கும், அவனியாபுரம் வைக்கம் பெரியார் நகரைச் சேர்ந்த கணேசன் மகன் ராஜசேகரன் (வயது 22) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது.
இருவரும் பல்வேறு இடங்களில் சுற்றித் திரிந்தனர். அப்போது திருமணம் செய்வதாக கூறி ராஜசேகரன், அந்த பெண்ணுடன் நெருங்கி பழகினார்.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக ராஜசேகரன், அந்த பெண்ணிடம் பழகுவதை நிறுத்தினார். மேலும் பிரச்சினை செய்ததாகவும் தெரிகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜசேகரனை கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம், சென்னிமலை நல்லபாளி செல்வராஜ் மகன் கார்த்திக் (வயது 22). திருப்பூர் பனியன் கம்பெனியில் பணியாற்றி வருகிறார்.
சென்னிமலை முருங்க தொழுவு பகுதியில் தாய் பராமரிப்பில் 17 வயது ஒரு பெண் வசித்து வருகிறார். இவர் ஈரோட்டில் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். அவருக்கு திருமண ஆசை காட்டி, வீட்டை விட்டு தன்னுடன் அழைத்து சென்றார். காரத்திக் .
அப்பெண்ணின் தாய் தனது, மகள் காணாமல் போனது குறித்து சென்னிமலை போலீசில் புகார் செய்தார்.
பெண்ணுக்கு 17 வயதே ஆவதால் ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு வழக்கு மாற்றப்பட்டது. ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சென்னிமலை பகுதியில் இருவரையும் பிடித்தனர்.
இருவரையும் ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். பின்னர் அப்பெண்ணுக்கு ஈரோடு அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து அவரது பெற்றோரிடம் பெண் ஒப்படைக்கப்பட்டார்.
திருமண வயதை அடையாத பெண்ணை திருமண ஆசை வார்த்தை காட்டி கடத்தி சென்ற கார்த்திக்கை போக்சோ சட்டத்தின் கீழ் ஈரோடு மகளிர் போலீசார் கைது செய்தனர்.
ராஜபாளையம்:
ராஜபாளையம் அருகேயுள்ள ஆதிதிராவிடர் தெருவைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மகள் பாஞ்சாலி (வயது 14). 8-ம் வகுப்பு படித்துள்ள இவர் டெய்லர் கடையில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் அதே தெருவைச் சேர்ந்த பாலமுருகன் (20) என்ற கல்லூரி மாணவர் கடந்த 2 வருடமாக பாஞ்சாலியிடம் நெருங்கி பழகினார்.
அப்போது, உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி பாஞ்சாலியை அவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் பாஞ்சாலியை திருமணம் செய்ய பாலமுருகன் மறுத்து விட்டார். மேலும் சம்பவம் பற்றி வெளியே கூறினால் கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.
இது குறித்து ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீசில் பாஞ்சாலி புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மீனா வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை போக்சோ சட்டத்தில் கைது செய்தார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.
பொள்ளாச்சி:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள பொட்டயம் பாளையத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் சூரியகிருஷ்ணன் (23). இவர் கோவை இருகூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார்.
சூரிய கிருஷ்ணன் பொள்ளாச்சியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்த போது கல்லூரி மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. சூரிய கிருஷ்ணன் கல்லூரி படிப்பு முடிந்ததும் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு வேலைக்கு சென்று விட்டார்.
தற்போது அந்த மாணவி கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். மாணவி தனது காதலன் சூரிய கிருஷ்ணனை பார்ப்பதற்காக அடிக்கடி கோவைக்கு வந்து சென்று உள்ளார்.
அப்போது திருமண ஆசை வார்த்தை கூறி மாணவியுடன் சூரிய கிருஷ்ணன் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மாணவி கூறி இருக்கிறார்.
அதற்கு சூரிய கிருஷ்ணன தனது சகோதரி திருமணத்திற்கு பின் நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என தெரிவித்து உள்ளார். இந்த நிலையில் மாணவியை சந்திப்பதை தவிர்த்து வந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி காதலன் சூரிய கிருஷ்ணன் தன்னை ஏமாற்றி விட்டதாக கோட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன் பேரில் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றுதல், கற்பழித்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து சூரிய கிருஷ்ணனை கைது செய்தனர். பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவ பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். கைதான சூரிய கிருஷ்ணனை போலீசார் பொள்ளாச்சி ஜே.எம். எண்-2 மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்