என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருமண ஆசை காட்டி சிறுமி பாலியல் பலாத்காரம்- கல்லூரி மாணவர் கைது
Byமாலை மலர்12 Oct 2018 11:54 AM GMT (Updated: 12 Oct 2018 11:54 AM GMT)
ராஜபாளையம் அருகே திருமண ஆசை காட்டி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கல்லூரி மாணவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
ராஜபாளையம்:
ராஜபாளையம் அருகேயுள்ள ஆதிதிராவிடர் தெருவைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மகள் பாஞ்சாலி (வயது 14). 8-ம் வகுப்பு படித்துள்ள இவர் டெய்லர் கடையில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் அதே தெருவைச் சேர்ந்த பாலமுருகன் (20) என்ற கல்லூரி மாணவர் கடந்த 2 வருடமாக பாஞ்சாலியிடம் நெருங்கி பழகினார்.
அப்போது, உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி பாஞ்சாலியை அவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் பாஞ்சாலியை திருமணம் செய்ய பாலமுருகன் மறுத்து விட்டார். மேலும் சம்பவம் பற்றி வெளியே கூறினால் கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.
இது குறித்து ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீசில் பாஞ்சாலி புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மீனா வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை போக்சோ சட்டத்தில் கைது செய்தார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X