search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொள்ளாச்சியில் மாணவியை கற்பழித்த அதிகாரி சிறையில் அடைப்பு
    X

    பொள்ளாச்சியில் மாணவியை கற்பழித்த அதிகாரி சிறையில் அடைப்பு

    பொள்ளாச்சியில் ஆசை வார்த்தை கூறி மாணவியை கற்பழித்த அதிகாரி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    பொள்ளாச்சி:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள பொட்டயம் பாளையத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் சூரியகிருஷ்ணன் (23). இவர் கோவை இருகூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார்.

    சூரிய கிருஷ்ணன் பொள்ளாச்சியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்த போது கல்லூரி மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. சூரிய கிருஷ்ணன் கல்லூரி படிப்பு முடிந்ததும் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு வேலைக்கு சென்று விட்டார்.

    தற்போது அந்த மாணவி கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். மாணவி தனது காதலன் சூரிய கிருஷ்ணனை பார்ப்பதற்காக அடிக்கடி கோவைக்கு வந்து சென்று உள்ளார்.

    அப்போது திருமண ஆசை வார்த்தை கூறி மாணவியுடன் சூரிய கிருஷ்ணன் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மாணவி கூறி இருக்கிறார்.

    அதற்கு சூரிய கிருஷ்ணன தனது சகோதரி திருமணத்திற்கு பின் நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என தெரிவித்து உள்ளார். இந்த நிலையில் மாணவியை சந்திப்பதை தவிர்த்து வந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி காதலன் சூரிய கிருஷ்ணன் தன்னை ஏமாற்றி விட்டதாக கோட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    அதன் பேரில் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றுதல், கற்பழித்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து சூரிய கிருஷ்ணனை கைது செய்தனர். பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவ பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். கைதான சூரிய கிருஷ்ணனை போலீசார் பொள்ளாச்சி ஜே.எம். எண்-2 மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×