search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Malaysia"

    மலேசியாவில் மழைநீர் கால்வாய் மீது பஸ் மோதிய விபத்தில் சரக்கு விமான நிறுவனத்தில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களில் 11 பேர் உடல் நசுங்கி உயிர் இழந்தனர். #Malaysia #BusAccident
    கோலாலம்பூர்:

    மலேசியாவின் பிரபல சரக்கு விமான நிறுவனத்தில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்கள் 43 பேரை ஏற்றிக்கொண்டு, நாகிரி சிம்பிலான் மாகாணத்தின் நிலாய் நகரில் இருந்து தலைநகர் கோலாலம்பூருக்கு பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது.

    இந்த பஸ் கோலாலம்பூரில் உள்ள சர்வதேச விமானநிலையத்துக்கு அருகே சென்றுகொண்டிருந்த போது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிக்கெட்டு ஓடியது.

    பின்னர் சாலையோரம் இருந்த மழைநீர் கால்வாய் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோரவிபத்தில் பஸ் டிரைவர் உள்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிர் இழந்தனர்.

    35 பேர் பலத்த காயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த மீட்பு குழுவினர் படுகாயம் அடைந்த அனைவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலன் இன்றி 3 பேர் பரிதாபமாக இறந்தனர். மற்ற அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடக்கிறது.   #Malaysia #BusAccident
    மலேசியாவுக்கு எதிரான ஆக்கி தொடரின் இரண்டாவது ஆட்டத்திலும் இந்திய அணி 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 2-0 என முன்னிலை வகிக்கிற்து. #India #Malaysia #WomenHockey
    கோலாலம்பூர்:

    மலேசியாவுக்கு சென்றுள்ள இந்திய பெண்கள் ஆக்கி அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் வென்ற இந்தியா 1-0 என முன்னிலை வகித்தது.

    இந்நிலையில், மலேசியா, இந்தியா அணிகள் மோதும் இரண்டாவது போட்டி நேற்று கோலாலம்பூரில் நடைபெற்றது.

    இந்த போட்டியிலும் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய இந்தியா 5 - 0 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது. இந்திய தரப்பில் நவ்ஜோத் கவுர், வந்தனா, நவ்னீத் கவுர், லால்ரெம்சியாமி, நிக்கி பிரதான் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். 

    இதன்மூலம் இந்திய அணி 2 -0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது போட்டி நாளை நடக்கிறது. #India #Malaysia #WomenHockey
    அஸ்லான் ஷா ஹாக்கி தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் போலந்தை 10 - 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இந்தியா. #AzlanShahhockey
    அஸ்லான் ஷா ஹாக்கி தொடர் மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா போலந்தை எதிர்கொண்டது. இதில் இந்தியா 10 - 0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வெற்றி பெற்றது.

    வருண் குமார் 18, 25-வது நிமிடத்திலும், மந்தீப் சிங் 50, 51-வது நிமிடத்திலும் தலா 2 கோல் அடித்தனர். விவேக் பிரசாத் (1), சுமித் குமார் (7), சுரேந்தர் குமார் (19), சிம்ரன்ஜித் (29), நீலகண்டா ஷர்மா (36), அமித் ரோஹிதாஸ் (55) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். #AzlanShahhockey
    அஸ்லான் ஷா ஆக்கி போட்டியில் இந்திய அணி 4-2 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி 2-வது வெற்றியை ருசித்தது.
    இபோக்:

    6 அணிகள் இடையிலான 28-வது அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி போட்டி மலேசியாவில் உள்ள இபோக் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய அணி, மலேசியாவுடன் மோதியது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 4-2 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி 2-வது வெற்றியை ருசித்தது. இந்திய அணி தரப்பில் சுமித் (17-வது நிமிடம்), சுமித் குமார் (27-வது நிமிடம்), வருண்குமார் (36-வது நிமிடம்), மன்தீப் சிங் (58-வது நிமிடம்) தலா ஒரு கோல் அடித்தனர். மலேசிய அணியில் ராஸி ரஹிம் (21-வது நிமிடம்), முகமது பிர்ஹான் (57-வது நிமிடம்) தலா ஒரு கோல் திருப்பினார்கள்.

    இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்திய அணி, கனடாவை (பிற்பகல் 3.35 மணி) சந்திக்கிறது.
    மலேசியாவில் எற்பட்டுள்ள பிளாஸ்டிக் மாசுபாட்டினை கட்டுப்படுத்தும் முயற்சியில் கிராம மக்கள் ஈடுபட்டுள்ளனர். #MalaysiaPlasticPollution
    கோலா லம்பூர்:

    மலேசியாவின் பல்வேறு பகுதிகளிலும் பிளாஸ்டிக் குப்பைகள் குவிக்கப்பட்டு எரிக்கப்படுகின்றன. இவை அனைத்தும் தொழிற்சாலைகளின் கழிவுகள் ஆகும். மேலும் பல நாடுகளில் இருந்தும் பிளாஸ்டிக் கழிவுகள் மலேசியாவிற்கு வந்து குவிந்துள்ளன.

    இவற்றை அகற்றும் முயற்சியில் ஜெஞ்ரோம் பகுதியைச் சேர்ந்த டேனியல் டாய், டன் சிங் ஹின் ஈடுபட்டுள்ளனர். மேலும் இப்பகுதியைச் சேர்ந்த பலரும் இவர்களுடன் இயற்கை சமூக ஆர்வலர்களாக இணைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் அப்பகுதி மக்களின் நலன் கருதி பிளாஸ்டிக் எரிக்கப்படுவதற்கு எதிராகவும், பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    இது குறித்து டேனியல் டாய் கூறுகையில், ‘திறந்த வெளிப்பகுதிகளில் இரவில் பிளாஸ்டிக் பொருட்களை எரிக்கும் போது கடுமையாக காற்று மாசுப்படுகிறது. சுவாசிக்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது.  இதனை சகித்துக்கொள்ள எங்களால் இயலவில்லை.

    நள்ளிரவு 2 மணி அளவில் திடீரென துர்நாற்றம் வீசத் தொடங்கும். அந்த நேரத்தில் பலரும் தூக்கமிழந்து, மன உளைச்சலுக்கு ஆளாகினார்கள். இந்த வாடை பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதால் வரும் நாற்றத்தினை போல் இருப்பதை உணர்ந்தோம்.    

    பின்னர் இந்த நாற்றம் வேகமாக காற்றில் பரவி அனைத்து பகுதிகளிலும் அதிகமாக வீசத் துவங்கியது. இது தொடர்பாக குழுக்களாக செயல்பட்டு விசாரித்தோம். இதில் 12க்கும் மேற்பட்ட அரசு அங்கீகாரம் இல்லாத பிளாஸ்டிக்  தொழிற்சாலைகள் கடந்த ஆண்டு உருவாகியுள்ளன என்பது தெரியவந்துள்ளது.

    இந்த பிளாஸ்டிக் கழிவுகள் பெரும்பாலும் ஆஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து வந்த வண்ணம் உள்ளது. இந்த கழிவுகளை யாருக்கும் தெரியாத வகையில் இரவில் திறந்த வெளி நிலப்பரப்பில் எரித்து வந்தனர்.

    இது என்னுடைய நகரம், இங்குதான் நான் வாழ வேண்டும். இந்த துர்நாற்றத்துடன் போராடுவதை விட, இவற்றை தடுக்க நடவடிக்கை எடுப்பதே சிறந்தது என்பதை உணர்ந்தேன். இதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டேன்.

    இதற்காக ரகசியமாக எங்கள் செல்போன் மூலம் வீடியோ எடுத்தோம். எங்கள் நகரம் கொஞ்சம் பெரியது என்பதால் இது போன்ற சம்பவங்களில் யாரேனும் ஈடுபட்டால் தங்களுக்கு தெரிவிக்குமாறும் அனைவருக்கும் தெரிவித்தோம்.

    இதையடுத்து செல்போனில் ஒரு தனி வாட்ஸ் அப் குரூப் உருவாக்கி தகவல்கள் தெரிவிக்க வலியுறுத்தினோம்.  இதில் பலரும் பிளாஸ்டிக் கழிவுகளை வீடியோவாக அனுப்பி வைக்கின்றனர்.

    மலேசியாவின் அனைத்து  ஊடகங்களுக்கும், அரசிற்கும் இது குறித்த தகவல் அனுப்பப்பட்டது. இதையடுத்து தற்போது இந்த பிளாஸ்டிக் கழிவுகள் மிக சிறந்த முறையில் வேகமாக அகற்றப்பட்டு வருகின்றன. மேலும் இப்பகுதியில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.

    இந்நிலையில் மேலும் இது போன்று மலேசியாவின் பல்வேறு இடங்களிலும், மறைவான பகுதிகளில் தொழிற்சாலைகள் செயல்படுவதாக அறிந்தோம். இவற்றை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளோம். பிளாஸ்டிக் மாசு குறித்த தகவல்களை ஒருங்கிணைப்பதால் என்னை இப்பகுதி மக்கள் நெட்வொர்க்கிங் அதிகாரி என அழைக்கின்றனர்’ என மகிழ்ச்சியுடன் கூறினார்.  #MalaysiaPlasticPollution



     





     






     
    பிறந்து 4 மாதமே ஆன குழந்தையை வைத்து அபாயகரமான முறையில் வித்தை காட்டிய ரஷிய தம்பதியை மலேசிய போலீசார் கைது செய்தனர். #RussianCouple #BabySwinging #Malaysia
    கோலாலம்பூர்:

    ரஷியாவை சேர்ந்த ஒரு தம்பதி உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வதை பொழுதுபோக்காக கொண்டுள்ளனர். இவர்களுக்கு 4 மாத பெண் குழந்தை உள்ளது. தற்போது இந்த தம்பதி தெற்கு ஆசிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்கள். பயண செலவிற்காக அவர்கள் தாங்கள் செல்லும் நாடுகளில் வித்தை காட்டி பணம் சேகரிக்கிறார்கள்.

    அந்த வகையில் மலேசியா சென்ற ரஷிய தம்பதி தலைநகர் கோலாலம்பூரில் மக்கள் மத்தியில் வித்தை காட்டினர். அப்போது அந்த 4 மாத குழந்தையின் தந்தை குழந்தையை வைத்து அபாயகரமான முறையில் வித்தை காட்டினார். குழந்தையின் காலை பிடித்து தலைகீழாக சுற்றியும், குழந்தையை தலைக்கு மேல் வீசி ஏறிந்து கைகளால் பிடித்தும் வித்தை செய்ய, அருகில் உட்கார்ந்திருந்த தாய் கைதட்டி உற்சாகப்படுத்திக்கொண்டிருந்தார். இதை ஒருவர் செல்போனில் படம் பிடித்து ‘பேஸ்புக்’கில் பதிவிட்டார். இந்த வீடியோவை பார்த்த போலீசார் குழந்தையை வைத்து அபாயகரமான முறையில் வித்தை காட்டிய ரஷிய தம்பதியை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.  #RussianCouple #BabySwinging #Malaysia
    மலேசியாவில் சாப்பாடு மற்றும் சம்பளம் கொடுக்காமல் கொடுமைப்படுத்தி வந்த சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த 48 தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.
    சங்கரன்கோவில்:

    நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள தலைவன்கோட்டை, தாருகாபுரம், மலையடிக்குறிச்சி பகுதிகளை சேர்ந்த 48 தொழிலாளர்கள் கடந்த 4 மாதத்திற்கு முன்பு தனியார் நிறுவனம் மூலம் மலேசியாவிற்கு சென்றனர். அங்கு அவர்களுக்கு உயர் மின் கோபுரம் அமைக்கும் பணி என தெரிவிக்கப்பட்டது.

    அங்கு சென்றவர்களுக்கு நிறுவனத்தினர் தங்க இடம் கொடுத்து பணி கொடுத்துள்ளனர். முதல் ஒரு மாதம் அனைத்தும் நல்ல படியாக சென்றுள்ளது. முதல் மாதம் சம்பளம் மட்டும் தொழிலாளர்களுக்கு அந்த நிறுவனம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக சாப்பாடு மற்றும் சம்பளம் கொடுக்காமல் நிறுவனத்தினர் தமிழக தொழிலாளர்களை கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். இதனால் அவர்கள் பட்டினியால் வாடியுள்ளனர். ஒரு வேளை சாப்பாடு மட்டுமே கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் மிகுந்த மனவேதனை அடைந்த தொழிலாளர்களை சம்பவம் பற்றி வெளியே தகவல் தெரிவித்து விடக்கூடாது என அவர்களை கண்காணிக்க சிலரை நிறுவனம் நியமனம் செய்துள்ளது. இதன் காரணமாக வெளியில் தகவல் கூட தெரிவிக்க இயலாமல் தொழிலாளர்கள் மிகுந்த பயத்துடன் காணப்பட்டுள்ளனர்.

    சம்பவ இடத்தில் கண்காணிப்பு கும்பல் இல்லாத நேரத்தில் அந்த வழியாக வந்த தமிழகத்தை சேர்ந்த மற்றொரு தொழிலாளி மூலம் பாதிக்கப்பட்ட 48 தொழிலாளர்களும், தங்கள் சோகத்தை செல்போனில் வீடியோ எடுத்து தங்கள் ஊரில் உள்ளவர்களுக்கு அனுப்பி வைக்க கூறியுள்ளனர். அதன்பேரில் அவரும் அனுப்பி வைத்துள்ளார்.

    அந்த வீடியோவை பார்த்த சங்கரன்கோவில் பகுதியில் உள்ள அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். அந்த வீடியோ சங்கரன்கோவில் பகுதியில் உள்ள அனைவருக்கும் பரவியது. அவர்களது உறவினர்கள் அனைவரும் சோகத்துடன் காணப்பட்டனர். இதனால் பெரும்பாலான வீடுகளில் இந்த முறை தீபாவளி பண்டிகை கூட கொண்டாடப்படவில்லை.

    தமிழ் வம்சாவளி எம்.எல்.ஏ. காமாட்சி துரைராஜ்

    இந்நிலையில் அந்த வீடியோ மலேசியாவிலும் பரவ தொடங்கியது. இது அங்குள்ள தமிழ் வம்சாவளி எம்.எல்.ஏ. காமாட்சி துரைராஜிற்கும் சென்றது. அவர் உடனே தமிழக தொழிலாளர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு சென்றார். பின்னர் அங்கிருந்து தொழிலாளர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    பின்னர் வீடியோ மூலம் அவர்களது உறவினர்கள் அனைவரும் பயப்பட வேண்டாம். இந்த தொழிலாளர்கள் அனைவரையும் மீட்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தாருடன் பேசி அவர்களின் ஊதியத்தை பெற்று தந்து நாட்டிற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இந்த சம்பவத்தால் அவர்களின் உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். #tamilnews
    ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டியில் இந்தியா, மலேசியா அணிகள் மோதிய அரையிறுதி ஆட்டம் டிரா ஆனது. #AsianChampionsTrophy2018
    மஸ்கட்:

    5-வது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டி ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடைபெற்று வருகிறது.

    இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், தென் கொரியா, மலேசியா, ஓமன் ஆகிய 6 நாடுகள் பங்கேற்று உள்ளன.

    ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். ‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.

    இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் 11-0 என்ற கணக்கில் ஓமனையும், 2-வது ஆட்டத்தில் பாகிஸ்தானை 3-1 என்ற கணக்கிலும், 3-வது போட்டியில் ஜப்பானை 9-0 என்ற கணக்கிலும் வென்றது.

    4-வது ஆட்டத்தில் மலேசியாவை நேற்று எதிர் கொண்டது. இந்த ஆட்டம் கோல் எதுவுமின்றி ’டிரா’ ஆனது.

    இதன் மூலம் 3 வெற்றி, 1 டிராவுடன் 10 புள்ளிகளை பெற்று இந்தியா அரை இறுதிக்கு முன்னேறியது. இதேபோல மலேசியாவும் இதே நிலையில் அரை இறுதிக்கு தகுதி பெற்றது.

    இந்திய அணி கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் தென் கொரியாவை இன்று சந்திக்கிறது. நேற்று நடந்த மற்றொரு ஆட்டத்தில் தென் கொரியா 4-2 என்ற கோல் கணக்கில் ஓமனை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது. #AsianChampionsTrophy2018
    மலேசியாவின் போர்ட் டிக்சன் நாடாளுமன்ற தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் முன்னாள் துணை பிரதமர் அன்வர் இப்ராஹிம் 71 சதவீதம் வாக்குகளுடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #MalaysiaPM #AnwarIbrahim #AnwarIbrahimvictory
    கோலாலம்பூர்:

    மலேசிய அரசின் நிதியில் இருந்து 680 மில்லியன் டாலர் அளவுக்கு முறைகேடு செய்து அந்த தொகையை தனது தனிப்பட்ட வங்கிக் கணக்குகளில் மடைமாற்றி விட்டதாக மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரஜாக் மீது அவரது ஆட்சிக்காலத்தில் குற்றச்சாட்டு எழுந்தது. 

    இதையடுத்து, அவர் பதவி விலக வேண்டும் என முன்னாள் பிரதமரும் எதிர்க்கட்சி தலைவருமான மஹதிர் முஹம்மது வலியுறுத்தி வந்தார்.

    பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் நஜிப் ரஜாக் மீதான மக்களின் அதிருப்தியை தங்களுக்கு சாதகமாக மாற்றி விடலாம் என முன்னர் 22 ஆண்டு காலம் பிரதமராக பதவி வகித்த மஹதிர் முஹம்மது தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டணி தீர்மானித்தது.

    முன்னர் மலேசிய துணை பிரதமராக இருந்து ஓரினச் சேர்க்கை மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சி தலைவரான அன்வர் இப்ராஹிமுடன் முன்னாள் பிரதமர் மஹதிர் முஹம்மது நீண்டகாலமாக பகை பாராட்டி வந்தார். நஜிப் ரஜாக்கை வீழ்த்துவதற்காக அன்வர் இப்ராஹிமுடன் மஹதிர் முஹம்மது கூட்டணி அமைத்தார். 

    இந்நிலையில், மலேசிய நாட்டு பாராளுமன்றத்துக்கு கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்தலில் முன்னாள் பிரதமர் மஹதிர் முஹம்மது (92) எதிர்க்கட்சிகள் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

    பாராளுமன்ற தேர்தலில் இந்த எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி பெற்றால் சிறையில் இருக்கும் அன்வர் இப்ராஹிமுக்கு அரசின் சார்பில் பொது மன்னிப்பு அளிப்பதன் மூலம், அவர் தேர்தலில் போட்டியிட விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி, அந்நாட்டின் பிரதமர் பதவியில் அமரவைப்பதாக எதிர்க்கட்சிகள் கூட்டணி வாக்குறுதி அளித்திருந்தது.

    அதன்படி, பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற மஹதிர் முஹம்மது மலேசிய பிரதமராக பதவியேற்ற பின்னர் சிறையில் இருந்த முன்னாள் துணை பிரதமர் அன்வர் இப்ராஹிமுக்கு பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்தார். 

    இதற்கு மலேசிய துணை பிரதமரும் அன்வர் இப்ராஹிமின் மனைவியுமான வான் அஸிஸா வான் இஸ்மாயில் உறுதுணையாக இருந்தார். அன்வர் இப்ராஹிமை மீண்டும் பாராளுமன்ற உறுப்பினராக்கி, பிரதமர் பதவியில் அமர வைக்கும் முயற்சிகள் தொடங்கின.



    அன்வர் இப்ராஹிம் தேர்தலில் போட்டியிட வசதியாக போர்ட் டிக்சன் நாடாளுமன்ற எம்.பி.யாக இருந்த டேன்யல் பாலகோபால் அப்துல்லா தனது பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்தார். இதையடுத்து அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இன்று அந்த தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

    சுமார் 75 ஆயிரம் வாக்காளர்களை கொண்ட தொகுதி வாக்காளர்களில் 21.4 சதவீதம் பேர் இந்தியர்கள். அன்வர் இப்ராகிமை எதிர்த்து 6 வேட்பாளர்கள் இந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டனர். 

    இன்றிரவு சுமார் 8 மணியளவில் வெளியான தகவலின்படி, மொத்தம் பதிவான வாக்குகளில் 71 சதவீதம் வாக்குகளை பெற்ற அன்வர் இப்ராஹிம் 31 ஆயிரத்து 16 வாக்குகளை வாங்கி வெற்றி பெற்றதாக தெரியவந்துள்ளது. அவருக்கு அடுத்தபடியாக வந்த வேட்பாளர் வெறும் 7 ஆயிரத்து 456 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார். 

    இந்த வெற்றியை தொடர்ந்து, வரும் திங்கட்கிழமை பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்கும் அன்வர் இப்ராஹிம், விரைவில் மலேசியாவின் புதிய பிரதமராக பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #MalaysiaPM #AnwarIbrahim #AnwarIbrahimvictory
    மலேசியாவில் விஷ சாராயம் குடித்து 21 பேர் பலியாகினர். மேலும் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். #Malaysia #LiqourDeath
    கோலாலம்பூர்:

    மலேசியாவில் மதுபானங்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்படுகிறது. இதன் காரணமாக வீடுகளில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் மதுபானங்கள் பிரபலமாக உள்ளது.

    ஆசிய நாடுகளில் இருந்து அங்கு சென்று குடியேறி உள்ள தொழிலாளர்கள் வீடுகளில் தயாரிக்கப்படும் சாராயத்தை குடிக்கின்றனர்.

    இந்நிலையில், தலைநகர் கோலாலம்பூர் மற்றும் செலங்கோர் மாகாணத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சாராயம் குடித்தவர்களில் சுமார் 57 பேர் மயங்கி சரிந்தனர். மெத்தனால் கொண்டு தயாரிக்கப்படுகிற இந்த சாராயத்தில் வி‌ஷத்தன்மை கலந்து இருந்ததை அறியாமல் அவர்கள் குடித்து உள்ளனர்.



    உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி 21 பேர் உயிரிழந்தனர். எஞ்சியவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

    போலீசார் நடத்திய விசாரணையில், சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களில் 5 பேர் மலேசியர்கள். மற்றவர்கள் வங்காளதேசம், இந்தோனேசியா, மியான்மர், நேபாளம் போன்ற நாடுகளை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அந்நாட்டு போலீசார் சோதனைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 9 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். விஷ சாராயம் குடித்து 21 பேர் பலியானது மலேசியாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Malaysia #LiqourDeath
    தமிழ்நாட்டில் மணல் தட்டுப்பாட்டை போக்க மலேசியாவில் இருந்து கப்பல் மூலம் 30 லட்சம் டன் மணல் கொண்டுவரப்படுகிறது. இந்த மணல் விற்பனை இந்த மாத இறுதியில் தொடங்கும்.
    சென்னை:

    மணல் தட்டுப்பாட்டை போக்க வெளிநாட்டில் இருந்து தமிழகத்துக்கு மணல் இறக்குமதி செய்ய அரசு முடிவு செய்தது.

    இதற்காக ரூ.548 கோடி மதிப்புள்ள 30 லட்சம் டன் மணல் இறக்குமதி செய்ய டெண்டர் கோரப்பட்டது. இதற்கு பல்வேறு நிறுவனங்கள் விண்ணப்பித்தன.

    தற்போது இதில் ஒரு நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் மூலம் மலேசியாவில் இருந்து மணல் இறக்குமதி செய்யப்படுகிறது.

    இதன்படி, மலேசியாவில் இருந்து கப்பல் மூலம் மாதந்தோறும் 5 லட்சம் டன் வீதம் மணல் தமிழகத்துக்கு கொண்டுவரப்படுகிறது. 6 மாதங்களில் மொத்தம் 30 லட்சம் டன் மணல் தமிழகம் வந்து சேரும்.

    தூத்துக்குடி துறைமுகம் மூலம் இந்த மணலை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மணல் விற்பனை இந்த மாத இறுதியில் தொடங்கும்.

    இதன் மூலம் தமிழ்நாட்டில் மணல் தட்டுப்பாடு பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் என்று மணல்குவாரி செயல்பாடுகளின் திட்ட இயக்குனரகம் தெரிவித்துள்ளது.#tamilnews
    மலேசியாவில் ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட 2 பெண்களுக்கு முதன்முறையாக பிரம்படி தண்டனை நிறைவேற்றப்பட்டது. #Malaysia #lesbian
    கோலாலம்பூர்:

    முஸ்லிம் நாடான மலேசியாவில் இஸ்லாமிய சட்டம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிலையில் டிரெங்கானு மாநிலத்தில் காருக்குள் 22 மற்றும் 32 வயது மதிக்கத்தக்க பெண்கள் ஓரின சேர்க்கையில் (‘லெஸ்பியன்’ )ஈடுபட்டிருந்தனர்.

    அவர்களை கைது செய்த போலீசார் ‌ஷரியா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அவர்களை குற்றவாளி என அறிவித்தார்.

    மேலும் அப்பெண்கள் 2 பேருக்கும் தலா 6 தடவை பிரம்படி தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். அதை தொடர்ந்து கோர்ட்டில் வைத்தே அவர்களுக்கு பிரம்படி தண்டனை நிறைவேற்றப்பட்டது.

    அப்போது கோர்ட்டில் 100-க்கும் மேற்பட்டோர் கூடியிருந்தனர். ஓரின சேர்க்கை குற்றத்துக்காக மலேசியாவில் பெண்களுக்கு பிரம்படி தண்டனை நிறை வேற்றப்பட்டது. இதுவே முதன்றையாகும்.



    இதற்கு மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது ஒரு கொடுஞ்செயல் என கூறியுள்ளனர். அதே நேரத்தில் டிரெங்கானு மாநில செயல் கவுன்சில் உறுப்பினர் சாதிபுல் பக்ரி மமத் கூறும்போது, ‘‘ஒருவரை துன்புறுத்தி காயப்படுத்த இந்த தண்டனை வழங்கப்படவில்லை. இத்தகைய குற்றம் புரியக்கூடாது என பொதுமக்களுக்கு உணர்த்தவே தண்டனை வழங்கப்பட்டுள்ளது’’ என்றார். #Malaysia #lesbian
    ×