என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி அரைஇறுதியில் இந்தியா மலேசியாவுடன் ‘டிரா’
Byமாலை மலர்24 Oct 2018 5:01 AM GMT (Updated: 24 Oct 2018 5:01 AM GMT)
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டியில் இந்தியா, மலேசியா அணிகள் மோதிய அரையிறுதி ஆட்டம் டிரா ஆனது. #AsianChampionsTrophy2018
மஸ்கட்:
5-வது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டி ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், தென் கொரியா, மலேசியா, ஓமன் ஆகிய 6 நாடுகள் பங்கேற்று உள்ளன.
ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். ‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.
இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் 11-0 என்ற கணக்கில் ஓமனையும், 2-வது ஆட்டத்தில் பாகிஸ்தானை 3-1 என்ற கணக்கிலும், 3-வது போட்டியில் ஜப்பானை 9-0 என்ற கணக்கிலும் வென்றது.
4-வது ஆட்டத்தில் மலேசியாவை நேற்று எதிர் கொண்டது. இந்த ஆட்டம் கோல் எதுவுமின்றி ’டிரா’ ஆனது.
இதன் மூலம் 3 வெற்றி, 1 டிராவுடன் 10 புள்ளிகளை பெற்று இந்தியா அரை இறுதிக்கு முன்னேறியது. இதேபோல மலேசியாவும் இதே நிலையில் அரை இறுதிக்கு தகுதி பெற்றது.
இந்திய அணி கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் தென் கொரியாவை இன்று சந்திக்கிறது. நேற்று நடந்த மற்றொரு ஆட்டத்தில் தென் கொரியா 4-2 என்ற கோல் கணக்கில் ஓமனை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது. #AsianChampionsTrophy2018
5-வது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டி ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், தென் கொரியா, மலேசியா, ஓமன் ஆகிய 6 நாடுகள் பங்கேற்று உள்ளன.
ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். ‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.
இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் 11-0 என்ற கணக்கில் ஓமனையும், 2-வது ஆட்டத்தில் பாகிஸ்தானை 3-1 என்ற கணக்கிலும், 3-வது போட்டியில் ஜப்பானை 9-0 என்ற கணக்கிலும் வென்றது.
4-வது ஆட்டத்தில் மலேசியாவை நேற்று எதிர் கொண்டது. இந்த ஆட்டம் கோல் எதுவுமின்றி ’டிரா’ ஆனது.
இதன் மூலம் 3 வெற்றி, 1 டிராவுடன் 10 புள்ளிகளை பெற்று இந்தியா அரை இறுதிக்கு முன்னேறியது. இதேபோல மலேசியாவும் இதே நிலையில் அரை இறுதிக்கு தகுதி பெற்றது.
இந்திய அணி கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் தென் கொரியாவை இன்று சந்திக்கிறது. நேற்று நடந்த மற்றொரு ஆட்டத்தில் தென் கொரியா 4-2 என்ற கோல் கணக்கில் ஓமனை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது. #AsianChampionsTrophy2018
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X