search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PlasticPollution"

    மலேசியாவில் எற்பட்டுள்ள பிளாஸ்டிக் மாசுபாட்டினை கட்டுப்படுத்தும் முயற்சியில் கிராம மக்கள் ஈடுபட்டுள்ளனர். #MalaysiaPlasticPollution
    கோலா லம்பூர்:

    மலேசியாவின் பல்வேறு பகுதிகளிலும் பிளாஸ்டிக் குப்பைகள் குவிக்கப்பட்டு எரிக்கப்படுகின்றன. இவை அனைத்தும் தொழிற்சாலைகளின் கழிவுகள் ஆகும். மேலும் பல நாடுகளில் இருந்தும் பிளாஸ்டிக் கழிவுகள் மலேசியாவிற்கு வந்து குவிந்துள்ளன.

    இவற்றை அகற்றும் முயற்சியில் ஜெஞ்ரோம் பகுதியைச் சேர்ந்த டேனியல் டாய், டன் சிங் ஹின் ஈடுபட்டுள்ளனர். மேலும் இப்பகுதியைச் சேர்ந்த பலரும் இவர்களுடன் இயற்கை சமூக ஆர்வலர்களாக இணைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் அப்பகுதி மக்களின் நலன் கருதி பிளாஸ்டிக் எரிக்கப்படுவதற்கு எதிராகவும், பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    இது குறித்து டேனியல் டாய் கூறுகையில், ‘திறந்த வெளிப்பகுதிகளில் இரவில் பிளாஸ்டிக் பொருட்களை எரிக்கும் போது கடுமையாக காற்று மாசுப்படுகிறது. சுவாசிக்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது.  இதனை சகித்துக்கொள்ள எங்களால் இயலவில்லை.

    நள்ளிரவு 2 மணி அளவில் திடீரென துர்நாற்றம் வீசத் தொடங்கும். அந்த நேரத்தில் பலரும் தூக்கமிழந்து, மன உளைச்சலுக்கு ஆளாகினார்கள். இந்த வாடை பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதால் வரும் நாற்றத்தினை போல் இருப்பதை உணர்ந்தோம்.    

    பின்னர் இந்த நாற்றம் வேகமாக காற்றில் பரவி அனைத்து பகுதிகளிலும் அதிகமாக வீசத் துவங்கியது. இது தொடர்பாக குழுக்களாக செயல்பட்டு விசாரித்தோம். இதில் 12க்கும் மேற்பட்ட அரசு அங்கீகாரம் இல்லாத பிளாஸ்டிக்  தொழிற்சாலைகள் கடந்த ஆண்டு உருவாகியுள்ளன என்பது தெரியவந்துள்ளது.

    இந்த பிளாஸ்டிக் கழிவுகள் பெரும்பாலும் ஆஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து வந்த வண்ணம் உள்ளது. இந்த கழிவுகளை யாருக்கும் தெரியாத வகையில் இரவில் திறந்த வெளி நிலப்பரப்பில் எரித்து வந்தனர்.

    இது என்னுடைய நகரம், இங்குதான் நான் வாழ வேண்டும். இந்த துர்நாற்றத்துடன் போராடுவதை விட, இவற்றை தடுக்க நடவடிக்கை எடுப்பதே சிறந்தது என்பதை உணர்ந்தேன். இதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டேன்.

    இதற்காக ரகசியமாக எங்கள் செல்போன் மூலம் வீடியோ எடுத்தோம். எங்கள் நகரம் கொஞ்சம் பெரியது என்பதால் இது போன்ற சம்பவங்களில் யாரேனும் ஈடுபட்டால் தங்களுக்கு தெரிவிக்குமாறும் அனைவருக்கும் தெரிவித்தோம்.

    இதையடுத்து செல்போனில் ஒரு தனி வாட்ஸ் அப் குரூப் உருவாக்கி தகவல்கள் தெரிவிக்க வலியுறுத்தினோம்.  இதில் பலரும் பிளாஸ்டிக் கழிவுகளை வீடியோவாக அனுப்பி வைக்கின்றனர்.

    மலேசியாவின் அனைத்து  ஊடகங்களுக்கும், அரசிற்கும் இது குறித்த தகவல் அனுப்பப்பட்டது. இதையடுத்து தற்போது இந்த பிளாஸ்டிக் கழிவுகள் மிக சிறந்த முறையில் வேகமாக அகற்றப்பட்டு வருகின்றன. மேலும் இப்பகுதியில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.

    இந்நிலையில் மேலும் இது போன்று மலேசியாவின் பல்வேறு இடங்களிலும், மறைவான பகுதிகளில் தொழிற்சாலைகள் செயல்படுவதாக அறிந்தோம். இவற்றை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளோம். பிளாஸ்டிக் மாசு குறித்த தகவல்களை ஒருங்கிணைப்பதால் என்னை இப்பகுதி மக்கள் நெட்வொர்க்கிங் அதிகாரி என அழைக்கின்றனர்’ என மகிழ்ச்சியுடன் கூறினார்.  #MalaysiaPlasticPollution



     





     






     
    ×