search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Maintenance"

    • ஆயக்காரன்புலம் துணை மின் நிலையங்களில் நாளை 17-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள்.
    • தென்னம்புலம், கரியாப்பட்டினம் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ரவிக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    வேதாரண்யம் துணை மின் நிலையம், வாய்மேடு துணை மின் நிலையம்,ஆயக்காரன்புலம் துணை மின் நிலையம் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை 17- ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான வேதாராண்யம் நகரம், கோடியக்காடு, கோடியக்கரை, அகஸ்தியம்ப்பள்ளி, தோப்புதுறை, பெரியக்குத்தகை, தேத்தாக்குடி, புஷ்பவனம், கள்ளிமேடு, அவரிக்காடு, மறைஞாயநல்லூர், அண்டர்காடு, நெய்விளக்கு, ஆலங்காடு, துளசியாப்பட்டினம், கற்பக நாதர் குளம்,இடும்பவனம் தொண்டியக்காடு,

    தாணிக்கோட்டகம், வாய்மேடு, தகட்டூர் பஞ்நதிக்குளம், மருதூர், தென்னடார், பன்னாள், ஆயக்கா ரன்புலம், கருப்பம்புலம, கடிநெல்வயல், கத்தரிபுலம், செட்டிபுலம் ,நாகக்குடை யான், குரவ ப்புலம் ,தென்ன ம்புலம், கரியாப்ப ட்டினம், ஆகிய பகுதிகளுக்கு காலை 9.00 மணி முதல் 5.00மணி வரை மின் விநியோகம் இருக்காது.இவ்வாறு அதில் கூறப்பட்டு ள்ளது.

    • துணை மின்நிலைய பராமரிப்பு பணிகள், மின்பாதை பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது.
    • ஏ.பி.சுவிட்ச் வரை, வ.உ.சி. நகர், ராமநாதன் ஆஸ்பத்திரி வரை மின் வினியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை நீதிமன்ற சாலையில் அமைந்துள்ள நகர துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) துணை மின்நிலைய பராமரிப்பு பணிகள், மின்பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதனால் கீழ்கண்ட மின்வழித்தடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    ஸ்டேடியம் மின் வழித்தடத்தில் மேம்பாலம், சிவாஜிநகர், சீதாநகர், சீனிவாசபுரம், ராஜன்ரோடு, தென்றல்நகர், கிரிரோடு, காமராஜ்ரோடு, ஆபிரகாம்ப ண்டிதர் நகர். திலகர்திடல் வழித்தடத்தில் மேலவீதி, தெற்கு வீதி, பெரிய கோவில், செக்கடி ரோடு, மேலஅலங்கம் ஆகிய இடங்களில் மின் வினியோகம் இருக்காது.

    வண்டிக்காரத்தெரு வழித்தடத்தில் ரெயிலடி, சாந்தப்பிள்ளைகேட், மகர்நோன்புச்சாவடி, வண்டிக்காரத்தெரு, தொல்காப்பியர் சதுக்கம், வி.பி.கோவில், சேவியர் நகர், சோழன்நகர். சர்க்யூட்ஹவுஸ் வழித்தடத்தில் கல்லணைக் கல்வாய்ரோடு, திவான்நகர், சின்னையாபாளையம், மிஷன்சர்ச்ரோடு, ஜோதிநகர், ஆடக்காரத்தெரு, ராதாகிருஷ்ணன் நகர் ஆகிய இடங்களில் மின் வினியோகம் இருக்காது.

    இதேபோல் மார்க்கெட் வழித்தடத்தில் பர்மாபஜார், ஜூபிடர் தியேட்டர் ரோடு, ஆட்டுமந்தை தெரு, கீழவாசல், எஸ்.என்.எம்.ரகுமான்நகர், அரிசிக்காரதெரு, கொள்ளுபேட்டை தெரு, வாடிவாசல் கடைத்தெரு. கீழவாசல் வழித்தடத்தில் பழைய மாரியம்மன்கோவில் ரோடு, ராவுத்தாபாளையம், கரம்பை, சாளக்காரதெரு, பழைய பஸ் நிலையம், கொண்டிராஜபாளையம். வ.உ.சி. நகர் வழித்தடத்தில் மகளிர் போலீஸ் ஸ்டேசன், ஏ.பி.சுவிட்ச் வரை, வ.உ.சி. நகர், ராமநாதன் ஆஸ்பத்திரி வரை மின் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை தஞ்சை நகர மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கருப்பையா தெரிவி த்துள்ளார்.

    • தஞ்சை நகர துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள்.
    • வணிக வளாகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கருப்பையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை நகர துணை மின்நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளது. எனவே அண்ணாநகர் மின்பாதையில் இருந்து மின் வினியோகம் பெறும், அருளானந்த நகர், பிலோமினா நகர், காத்தூண் நகர், சிட்கோ, அண்ணாநகர், காமராஜர் நகர், பாத்திமா நகர், அன்பு நகர் ஆகிய பகுதிகளிலும், மேரீஸ் கார்னர் மின்பாதையில் இருந்து மின்வினியோகம் பெறும் திருச்சி சாலை, வ.உ.சி. நகர், பூக்கார தெரு, இருபது கண் பாலம், கோரிக்குளம் ஆகிய இடங்களிலும், மங்களபுரம் மின்பாதையில் இருந்து மின்வினியோகம் பெறும் ராஜப்பா நகர், மகேஸ்வரி நகர், திருப்பதி நகர், செல்வம் நகர், அண்ணாமலை நகர், ஜெ.ஜெ. நகர், டி.பி.எஸ். நகர், சுந்தரம் நகர், பாண்டியன் நகர் ஆகிய இடங்களிலும், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் இருந்து மின்வினியோகம் பெறும் எஸ்.இ. ஆபீஸ், கலெக்டர் பங்களா சாலை, டேனியல் தாமஸ் நகர், ராஜ ராஜேஸ்வரி நகர், காவேரி நகர், நிர்மலா நகர், என்.எஸ் போஸ் நகர், தென்றல் நகர், துளசியாபுரம், தேவன் நகர், பெரியார் நகர், இந்திரா நகர், கூட்டுறவு காலனி ஆகிய பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

    இதேபோல் நிர்மலா நகர் மின்பாதையில் இருந்து மின்வினியோகம் பெறும் புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, நட்சத்திரா நகர், வி.பி. கார்டன், ஆர்.ஆர்.நகர், சேரன் நகர் ஆகிய பகுதிகளிலும், யாகப்பாநகர் மின்பாதையில் இருந்து மின்வினியோகம் பெறும் யாகப்பா நகர், அருளானந்த அம்மாள் நகர், குழந்தை ஏசு கோவில் மற்றும் அதன் அருகில் உள்ள வணிக வளாகம் ஆகிய பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கோரிக்கை மனுக்களை விரைவாக தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
    • பதிவறையில் பராமரிக்கப்பட்டு வரும் அலுவலகக் கோப்புகள் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் முன்னேற்றம் குறித்து அலுவலகக் கோப்புகளை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் முன்னேற்றம் குறித்து பதிவறையில் பராமரிக்கப்பட்டு வரும் அலுவலகக் கோப்புகள் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

    இதில் அனைத்து கோப்புகளும் முறையாக பராமரிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை விரைவாக தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சங்கர், ஒரத்தநாடு வட்டாட்சியர்சுரேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள்ரமேஷ், ரகுநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 

    • காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை மூடப்படும் என ரெயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
    • தென்காசி-நெல்லை சாலையில் செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் ரெயில்வே கேட், தண்ட வாளம், கடவுப்பாதை பராமரிப்புப் பணிகளுக்காக நேற்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை மூடப்படும் என ரெயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி காலை 8 மணிக்கு ரெயில்வே கேட் மூடப்பட்டு, பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

    இதனால் தென்காசி-நெல்லை சாலையில் செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன. தென்காசி யில் இருந்து நெல்லை நோக்கி செல்லும் வாகனங்கள் அனைத்தும் கடபோகத்தி, குபேர பட்டணம், சடையப்பபுரம், பாவூர்சத்திரம் வழியாகவும், நெல்லையில் இருந்து தென்காசி செல்லும் வாகனங்கள் பாவூர்சத்திரம்- கடையம் சாலை, மலையராமபுரம், கல்லூரணி, செல்வ விநாயகபுரம் வழியாக தென்காசி சாலையில் வந்தடைந்து வழக்கமான சாலையில் சென்றது. இதனால் வாக னத்தில் செல்வோர் சிரமத்திற்குள்ளானார்கள்.

    • ரோட்டில் சுற்றித்திரியும் கழுதைகள் சண்டையிட்டு ஓடுவதால் விபத்துக்கள் ஏற்படுகின்றன.
    • பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் அன்றாடம் சாலையில் செல்கின்றனர்.

    கடலூர்; 

    கடலூர் மாவட்டம் திட்ட க்குடியில் விருத்தாச்சலம் மாநில சாலையில் போக்கு வரத்துக்கு இடையூறாக ரோட்டில் சுற்றித்திரியும் கழுதைகள் சண்டையிட்டு ஓடுவதால் விபத்துக்கள் ஏற்படுகின்றன. மேலும் சாலையில் செல்லும் இருசக்கர வாக னங்கள், 4 சக்கர வாகன ங்கள், பாதசாரிகள், பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் அன்றாடம் சாலையில் செல்கின்றனர்.

    திட்டக்குடியில் மண ல்மேடு பகுதியைச் சேர்ந்த கழுதைகள் ரோட்டில் காலை, மாலை, இரவு என அனைத்து நேரங்களிலும் ரோட்டில் சுத்தி திரிவது மட்டு மில்லாமல் ஒன்று க்கொன்று சண்டையிட்டுக் கொண்டு தாறுமாறாக ரோட்டில் ஓடுவதால் இருசக்கர வாகனங்கள் மீது மோதுவதால் அன்றாட விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே திட்டக்குடி காவ ல்து றை மற்றும் நகரா ட்சி நிர்வாகம் திட்டக்கு டியில் கழுதை களை பராமரிக்கும் உரிமையாளர்களை வரவ ழைத்து ரோட்டில் சுத்தி திரியும் கழுதைகளை கட்டிப்போட்டு முறையாக பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்துமாறு வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • கன்றுகள் நட்டு மரமாகும் வரை பராமரிக்க வேண்டும்.
    • மரக்கன்றுகள் நட்டு சிறந்த முறையில் பராமரித்து வரும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.5000.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே கொன்றைக்காடு அரசு உயர்நிலைப் பள்ளியில் வீட்டுக்கு ஒரு விருட்சம் மரக்கன்றுகள் வழங்கும் தொடக்க விழா நடைபெற்றது.

    விழாவிற்கு தலைமை ஆசிரியர் மகேஸ்வரி தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமமூர்த்தி, பேராவூரணி லயன்ஸ் சங்க தலைவர் ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி கலந்துரையாடினார். கன்றுகள் நட்டு மரமாகும் வரை பராமரிக்க வேண்டும். இதன் மூலம் பசுமை புரட்சி ஏற்படுத்த வேண்டும் என கூறினார்.

    மரக்கன்றுகள் நட்டு சிறந்த முறையில் பராமரித்து வரும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5000, 2-ம் பரிசாக 2 பேருக்கு ரூ.2000 3-ம் பரிசாக 3 பேருக்கு ரூ.1000 என மொத்தம் 6 பேருக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் என தலைமை ஆசிரியர் அறிவித்தார்.

    நிகழ்ச்சியில் கவின்மிகு தஞ்சை இயக்க தலைவர் ராதிகாமைக்கேல், பட்டுக்கோட்டை ஆர்.டி.ஓ பிரபாகரன், பேராவூரணி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தவமணி, செல்வேந்திரன், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் தேன்மொழி, ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். பசுமை பூமி வேளாண்மை சமூக நல அறக்கட்டளை சார்பில் 1000 மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

    முன்னதாக சேதுபாவாசத்திரம் ஒன்றியம் ரெட்டவயல் கிராமத்தில் தாய் தந்தையரை இழந்து, மூளை நரம்பியலால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி சகோதரியுடன் வசித்து வந்த பாண்டிமீனா என்ற ஏழை மாணவிக்கு சாலை வசதியுடன் கூடிய கான்கிரீட் வீடு பாரத பிரதமர் வீடு கட்டும் திட்டம் மற்றும் சொந்த நிதி, தன்னார்வலர்கள் உதவியுடன் ரூ.6 லட்சம் செலவில் கட்டி கொடுத்து திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் சேதுபாவாசத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, சடையப்பன், ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்செல்வி கண்ணன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி மரக்கன்றுகளை பராமரிப்பது குறித்து பேசினார்.
    • பள்ளி வளாகத்தில் மாணவர்களுடைய பெயரில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் காரப்பிடாகை அரசு உயர்நிலைப் பள்ளியில் தேசிய பசுமை படை சார்பில் 100 மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் இன்டராக்ட் கிளப் தொடக்க விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க பள்ளி) கார்த்திகேசன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நாகை வனச்சரகர் ஆதி லிங்கம் மாணவர்களுக்கு 100 மரக்கன்றுகளை வழங்கி மரக்கன்றுகளை பராமரிப்பது குறித்து பேசினார்.

    தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன் "சுற்றுச்சூழல் காப்பதில் மாணவர்களின் பங்கு" என்ற தலைப்பில் உரையாற்றினார். வேளாங்கண்ணி ரோட்டரி கிளப் சார்பில் ஐந்து இரும்பு கூண்டுகள் வழங்கப்பட்டன.

    இன்டராக்ட் சங்க தொடக்க விழாவில் ரோட்டரி கிளப்பை சேர்ந்தவர் சாமிநாதன், பிரகாஷ், அனுஷா நீலகண்டன், ஆராமுதன் மற்றும் பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மாணவிகள் சுதர்ஷினி மற்றும் ஹரிணி இன்ட்ராக்ட் சங்க நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். முன்னதாக பள்ளி உதவி தலைமை ஆசிரியர் நடராஜன் வரவேற்புரை ஆற்றினார். தேசிய பசுமைப்படை பள்ளி பொறுப்பாசிரியர் கயிலை ராஜன் நன்றி கூறினார்.

    பின்னர் பள்ளி வளாகத்தில் 100 மாணவர்களுக்கு நூறு மரக்கன்றுகள் வழங்கப்பட்டு மாணவர்களுடைய பெயரில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

    • 500-க்கும் மேற்பட்ட பழமரக்கன்றுகள் நடப்பட்டு கூண்டு வைத்து பராமரிக்கும் பணி நடைபெற்றது.
    • செம்பனார்கோயில், குத்தாலம் உள்ளிட்ட பகுதிகளில் 2600 மரக்கன்றுகள் நட தீர்மானம்.

    சீர்காழி:

    சீர்காழி அடுத்த கன்னியாக்குடி கிராமத்தில் அரசு மனநல காப்பகம் அமையவுள்ள வளாகம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஒரு வீட்டிற்கு மூன்று மரக்கன்றுகள் என்ற அமைப்பின் சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. சீர்காழி ஒன்றிய ஆணையர் இளங்கோவன் தலைமை வகித்தார்.

    வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், ஒன்றிய பொறியாளர் கலைசெல்வன், ஒரு வீட்டிற்கு மூன்று மரக்கன்றுகள் அமைப்பினை சேர்ந்த யாமினிஅழகுமலர் முன்னிலை வகித்தனர். சீர்காழி கோட்டாட்சியர் உ.அர்ச்சனா பங்கேற்று மரக்கன்றுகளை நட்டு துவக்கிவைத்தார்.

    தொடர்ந்து 500க்கும் மேற்பட்ட பல்வேறு பலன் தரும் பழமரக்கன்றுகள் ஒரேநாளில் நடப்பட்டு கூண்டு வைத்து பராமரிக்கும் பணி நடைபெற்றது. இந்த அமைப்பு சார்பில் மயிலாடுதுறை, கொள்ளிடம், செம்பனார்கோயில், குத்தாலம் உள்ளிட்ட பகுதிகளில் 2600மரக்கன்றுகள் நட தீர்மானிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

    • சுமார் 80 ஆயிரம் மரக்கன்றுகள் பாதுகாக்கப்பட்ட இடங்களில் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றோம்.
    • இம்மாத இறுதியில் ஒரு லட்சமாவது மரம் நடப்பட உள்ளது என்பது சிறப்புக்குரியதாகும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட பசுமைக் குழு, கவின்மிகு தஞ்சை இயக்கம், தன்னார்வ மற்றும் சேவை அமைப்புகள் சார்பில் வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டத்தில் ஓராண்டில் ஒரு லட்சம் மரங்கள் வளர்க்கும் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் பணியினை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மேற்கொண்டார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட பசுமைக் குழு, கவின்மிகு தஞ்சை இயக்கம், தன்னார்வ மற்றும் சேவை அமைப்புகள் சார்பில் வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டத்தில் ஓராண்டில் ஒரு லட்சம் மரங்கள் வளர்க்கும் திட்டம் உலக புவி தினத்தன்று துவங்கி வைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் 80 ஆயிரம் மரக்கன்றுகள் பாதுகாக்கப்பட்ட இடங்க ளில் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றோம்.

    இம்மாத இறுதியில் ஒரு லட்சம் ஆவது மரம் நடப்பட உள்ளது என்பது சிறப்புக்குரியதாகும்.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் பசுமை பரப்பளவினை அதிகப்படுத்தும் நோக்கில் தஞ்சாவூர் மாவட்டத்தில் வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டத்தினை தொடர்ந்து ஊருக்கு ஒரு வனம் திட்டம் தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டி ஊராட்சி யில் தொடங்கப்பட்டு உள்ளது.

    இத்திட்டத்தின் கீழ் மியாவாக்கி அடிப்படையில் அடர்ந்த காடுகள் உருவாக்கப்படுகிறது. இதில் ஆயிரம் சதுர அடியில் 200 முதல் 250 மர கன்றுகள் நடலாம். தற்போது ஒரு ஏக்கர் பரப்பளவில் பத்தாயிரம் மரக்கன்றுகள் நடும் பணி துவங்கப்பட்டுள்ளது.

    இதேபோல் தஞ்சாவூர் மாவட்டத்தில் 100 ஊராட்சிகளில் 100 ஏக்கர் பரப்பளவில் 10 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி ஊரக வளர்ச்சித்துறை உதவியுடன் இன்னும் 4 மாத காலத்தில் செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் சங்கர், கவின்மிகு தஞ்சை இயக்க தலைவர் டாக்டர். ராதிகா மைக்கேல், செயலாளர் முனைவர் ராம் மனோகர், இணைச் செயலாளர் பொறியாளர். முத்துக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், அறிவானந்தம் பிள்ளையார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் உதயகுமார், துணைத் தலைவர் ஜெயந்தி சதானந்தம், ஒன்றிய குழு உறுப்பினர் சௌமியா ஜனார்த்தனன், ஊராட்சி மன்ற செயலாளர் சக்தி, இயக்க உறுப்பினர்கள் முனைவர் சுகுமாரன், செல்வராணி, தன்னார்வலர்கள் லத்தீப், ரவிக்குமார், கார்த்தி, பிரபாகரன், குருபிரசாத், அருந்ததி, இளவரசன் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், சுயஉதவி குழு உறுப்பினர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • 2030-ம் ஆண்டுக்குள் நாய்கள் வழியாக பரவும் வெறிநோய் இறப்பை பூஜ்ஜியமாக்க வேண்டும்.
    • பொதுமக்கள், தங்கள் செல்லப் பிராணிகளுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

    சுவாமிமலை:

    உலக வெறிநோய் தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. அதன்படி, கும்பகோணத்தில் 'ஒன் ஹெல்த்ஜீரோ டெத்' அடிப்படையில் அனைத்து துறைகளும் 2030-ம் ஆண்டுக்குள் நாய்கள் வழியாக பரவும் வெறிநோய் இறப்பை பூஜ்ஜியமாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கடைபிடிக்கப்படுகிறது.

    ரேபிஸ் நோயால் ஏற்படும் மனித மற்றும் செல்லப் பிராணிகளின் உயிரிழப்புகளை தவிா்க்கவும், ரேபிஸ் இல்லா உலகை உருவாக்கும் வகையிலும் கால்நடை பராமரிப்பு துறை மற்றும் டெல்டா இன்னர் வீல் கிளப் சார்பில் மண்டல இணை இயக்குனர் மருத்துவர் தமிழ்ச்செல்வன் வழிகாட்டுதலின்படி, உதவி இயக்குனர் மருத்துவர் கண்ணன், கால்நடை மருத்துவமனையில் டெல்டா இன்னர் வீல் கிளப் தலைவர் பிஸ்மில்லா பேகம் தலைமையில் செல்லப் பிராணிகளுக்கு வெறிநாய்கடி தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

    முகாமில் டெல்டா இன்னர் வீல் கிளப் செயலாளர் மணிமேகலை ராஜேந்திரன், துணைத்தலைவர் வச்சலா கருப்பண்ணன், துணைச் செயலாளர் லட்சுமி பிரபாகரன், பொருளாளர் இந்திராணி கிருஷ்ணன், இதழாசிரியர் சந்திரா, ஐஎஸ்ஓ ஜெயந்தி, உறுப்பினர்கள் வைத்தியநாதன், பிரேமா பாலு மருத்துவ ஷெரின் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள், பொறுப்பாளர்கள், கால்நடை உதவி மருத்துவர்கள் கணேஷ், ரகுநாத், யாழினி தேவி, தேவ பிரசன்னா, கால்நடை ஆய்வாளர் ரமேஷ், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் பழனிவேல், மதியழகன், கற்பகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து பொதுமக்கள், தங்கள் செல்லப் பிராணிகளுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

    • பெரிய கோவில் குளத்தில் ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் புதிதாக விட்டு நிரப்பப்டும்.
    • குளத்தை பராமரிக்காமல் தண்ணீர் விட்டதால் சாக்கடை நீர் மற்றும் பாசி படிந்து கிடைக்கிறது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி வட்டத்துக்கு உள்பட்ட நெடும்பலம் கிராமத்தில் திருத்துறைப்பூண்டி பெரிய கோயிலுக்கு சொந்தமான குளம் உள்ளது.

    ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் புதிதாக குளத்தில் விட்டு நிரப்பப்டும்.

    அதுபோல் இந்த ஆண்டும் குளத்தில் தண்ணீர் விடப்பட்டது.

    குளத்தில் மழை பெய்து சாக்கடை நீர் மற்றும் பாசி படிந்து கிடைக்கிறது.

    அதை பராமரிக்காமல் தண்ணீர் விட்டதால் பாசி படிந்த தண்ணீருடன் கலந்து கிடைக்கிறது.

    அதனால் துர்நாற்றம் வீசுகிறது.

    அதனை சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    கோவில் நிர்வாகம் தண்ணீரை இறைத்து விட்டு புதிதாக நீர் விட்டு கட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ×