search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வளாகம்"

    • மதுரை காமராஜர் பல்கலைக்கழக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
    • வளாகம் முழுவதும் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

    மதுரை

    தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஏராள மான மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். பல்கலைக்கழக வளாகத்தி லேயே இரு பாலருக்கும் தனித்தனியே தங்கும் விடுதிகள் உள்ளன.

    இந்த நிலையில் நேற்று இரவு பெய்த மழையின் போது பல்கலைக்கழக பெண்கள் விடுதி அருகே இருந்த மின் கம்பத்தில் திடீரென தீ பற்றி எரிய தொடங்கியது. இதனால் செய்வதறியாது திணறிய மாணவிகள் விடுதியில் இருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

    இதுகுறித்து மாணவிகள் பல்கலைகழக நிர்வாகத்தி னருக்கு தகவல் தெரிவித்தனர். சில விடுதி மாணவி களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படவே தீயணைப்பு துறையினருக்கும், 108 ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவல் அறிந்து பெரியார் மற்றும் திருப்பரங்குன்றம் தீயணைப்பு நிலையங்களில் இருந்து 2 வாகனங்கள் மூலம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்குச் விரைந்து வந்தனர்.

    மின்சார வாரியத்திற்கும் உடனடியாக தகவல் தெரி விப்பட்டது. மின்வாரி யத்தினர் உடனடியாக மின்சாரத்தை துண்டி த்ததால் பெரும் அசம்பா விதம் நடப்பது தவிர்க்கப் பட்டது. இதனால் மின் கம்பத்தில் இருந்து புகை வந்ததால் பல்கலைக்கழக மாணவிகள் விடுதி வளாகம் முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது.

    இதில் 4 மாணவிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனே அவர்களை அருகில் உள்ள பல்கலைக்கழக மருத்துவமனையில் முதலு தவி சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டனர்.

    மழையினால் மதுரை காமராஜர் பல்கலைக்கழக மாணவிகள் விடுதி அருகே இருந்த மின் கம்பத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மாணவி விடுதி வளாகம் முழுவதும் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாகமலை புதுக்கோட்டை இன்ஸ் பெக்டர் சிவகுமார் மற்றும் தீயணைப்புத்துறையினர் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கொத்தமங்கலம் கிராமத்தில் சுமார்-5௦௦க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
    • மின்துறை ஊழியர்கள் அதைசரிசெய்வதற்கு அரசு பள்ளிக்கு வந்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கொந்த மங்கலம் கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் பல்வேறு சாலைகளில் உள்ள மின்கம்பங்களின் வயர்கள் தாழ்வாக செல்கின           இது குறித்து கிராம மக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. அதே போலஅரசு பள்ளி வளாகத்தில் தாழ்வான மின்கம்பிகள் செல்வதாகவும் பலமுறை புகார் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு பள்ளி வளாகத்தில் உள்ள மின் வயர் அருந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக மாணவ மாணவிகள் உயிர்த்தப்பினர். இதுகுறித்து மின்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மின் துறை ஊழியர்கள் அதை சரி செய்வதற்காக அரசு பள்ளிக்கு வந்தனர்.  மின் உயர் கீழே அறுந்து விழுந்ததை கேள்விப்பட்ட பள்ளி மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி மின் ஊழியர்களை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    பள்ளி வளாகத்தில் உள்ள மின்கம்பத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். கொத்தமங்கலத்தில் பல்வேறு தெருகளில் உள்ள மின்கம்பங்களில் வயர்கள் தாழ்வாக உள்ளதை அதை சரி செய்ய வேண்டும் இல்லை என்றால் சாலை மறியலில் ஈடுபடுவோம் என பொதுமக்கள் தெரிவித்தனர்  .மேலும் பள்ளி மாணவர்கள் கூறுகையில், இந்த பள்ளியில் படிப்பதற்கே எங்களுக்கு பயமாக உள்ளது மின் வயர்கள் தாழ்வாக செல்வதால் விபத்து நடக்கும் அபாயம் உள்ளது எனவும், பள்ளி வளாகத்தில் உள்ள மின்கம்பத்தை மாற்ற பலமுறை நாங்களும் எங்கள் பெற்றோரும் பள்ளி தலைமை ஆசிரியரிடமும், மின்துறை ஊழியர்களிடமும் கூறி இருந்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறினா ர்கள். எனவே, இதனை உடனடியாக மின்க ம்ப ங்களை மா ற்ற தேவை யான நடவ டிக்கை களை எடுக்க வே ண்டு மென கோரிக்கை விடுத்தனர்.

    • அடித்தளம், தரைத்தளம், முதல் தளம் என மூன்று பிரிவுகள் உள்ளது.
    • 4 சக்கர வாகனங்கள் 30 எண்ணிக்கையில் நிறுத்தும் அளவுக்கு இட வசதி உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. அதன்படி தஞ்சாவூர் காந்திஜி சாலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.15 கோடி மதிப்பில் காந்திஜி வணிக வளாகம் கட்டப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இன்று வணிக வளாக கட்டுமான பணிகளை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பணிகள் முடிந்த விவரங்களை கேட்டு அறிந்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    காந்திஜி வணிக வளாகம் மேம்படுத்துதல் கட்டுமான பணி பெருமளவில் முடிந்து விட்டது. விரைவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார்.இதில் அடித்தளம், தரைத்தளம், முதல் தளம் என மூன்று பிரிவுகள் உள்ளது.

    மொத்த பரப்பளவு 51992 சதுர அடி ஆகும். அடித்தளத்தில் 4 சக்கர வாகனங்கள் 30 எண்ணிக்கையில் நிறுத்தும் அளவுக்கு இட வசதி உள்ளது.

    தரை மற்றும் முதல் தளங்களில் கடைகள் வரவுள்ளன. நிர்ணயிக்கப்பட்ட காலத்தை விட விரைவிலே இந்த கட்டுமான பணிகள் முடிந்து விட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, கவுன்சிலர் மேத்தா, செயற்பொறியாளர் ஜெகதீசன், உதவி பொறியாளர் கார்த்திகேயன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • இதன் அடிதளத்தில் 4 சக்கர வாகனங்கள் 130 நிறுத்தலாம்.
    • 22 ஆயிரத்து 249 சதுர அடியில் 45 கடைகள் உள்ளன.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே திருவள்ளுவர் தியேட்டர் மற்றும் அதனை சுற்றியுள்ள கடைகள் இடிக்கப்பட்டு, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.48 கோடியே 5 லட்சம் மதிப்பில் அடுக்குமாடிகளுடன் வணிக வளாகம் கட்டப்பட்டு வருகிறது. அதன்படி அடித்தளம், தரைதளம், முதல்தளம், 2-வது தளம் ஆகியவற்றுடன் கட்டப்பட்டுள்ளது.

    இந்த பணிகளை மேயர் சண்.ராமநாதன் பார்வையிட்டார். அப்போது மாநகராட்சி செயற்பொறியாளர் ஜெகதீசன், உதவி பொறியாளர் கார்த்திகேயன், மண்டலக்குழு தலைவர் மேத்தா மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    பின்னர் மேயர் சண்.ராமநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வணிக வளாகம் கட்டும் பணி கடந்த 2020-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 18 மாதங்களில் முடிக்கும் வகையில் பணிகள் தொடங்கப்பட்டது. தொல்லியல் துறை ஆட்சேபனை காரணமாக தாமதம் ஆனது. தற்போது மாநகராட்சி சார்பில் பணிகள் நிறைவடைந்து விட்டது. கடைகள் ஏலம் எடுத்துள்ளவர்கள் அந்தந்த கடைகளில் டைல்ஸ் உள்ளிட்ட இதர பணிகள் மேற்கொள்வதாக தெரிவித்துள்ளனர். இந்த பணிகள் மே மாதத்துக்குள் முடிந்து பயன்பாட்டுக்கு வரும்.

    இதன் அடிதளத்தில் 4 சக்கர வாகனங்கள் 130 நிறுத்தலாம். தரைதளம் 22 ஆயிரத்து 249 சதுர அடியில் 45 கடைகள் உள்ளன. இதில் நகைக்கடைகள், ஜவுளி கடைகள் இடம்பெறுகின்றன இதே போல் முதல்தளம், 2-வது தளத்திலும் ஜவுளிகடைகள், நகைகடைகள் இடம் பெறுகின்றன. இதில் ஒவ்வொரு தளத்திலும் ஆண், பெண்களுக்கு தனித்தனி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. லிப்ட் வசதி, எஸ்கலேட்டர் வசதி, குளிர்சாதன வசதியும் அமைக்கப்படுகின்றன.

    இதே போல் தஞ்சாவூர் காந்திஜி சாலையில் உள்ள வணிக வளாகம், புதிய பஸ் நிலையத்தில் உள்ள பன்னோக்கு வணிக வளாகம் ஆகியவற்றின் பணிகள் விரைந்து முடிக்கப்படும். தஞ்சை மேலவீதி மூலஅனுமார் கோவில் அருகே கட்டப்பட்டு பயன்படுத்தப்படாமல் உள்ள பாலத்தின் முன் பகுதியில் உள்ள வீடுகளை அகற்றி பாலம் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்றார்.

    • தடுக்க சென்ற பேராசிரியர் மூக்கு உடைந்தது
    • போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை

    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் உள்ள கல்லூரி ஒன்றில் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராள மான மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    நேற்று காலையில் வழக்கம்போல் கல்லூரி திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்தது. அப்போது கல்லூரி வளாகத்தில் உள்ள மைதானத்தில் மாணவர்கள் பேசிக்கொண்டு இருந்தனர்.மாணவிகள் சிலரும் அங்கு அமர்ந்திருந்தனர். திடீரென மாணவர்கள் இரு தரப்பினராகப் பிரிந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர்.

    அப்போது ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ள முயன்றனர். அங்கு வந்த பேராசிரியர் ஒருவர் இரு தரப்பு மாணவர்களையும் சமாதானம் செய்தார்.அப்போது மாணவர் ஒருவர் திடீரென பேராசிரியரை சரமாரியாக குத்தினார்.இதில் பேராசிரியரின் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது.

    இதை பார்த்து சக மாணவ மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். படுகாயம் அடைந்த பேராசிரியரை மீட்டு சிகிச்சைக்காக அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது பற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி னார்கள்.

    படுகாயம் அடைந்து சிகிச்சையில் உள்ள பேரா சிரியரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. பேராசிரியர் மீது தாக்குதல் நடந்தது குறித்து கல்லூரி நிர்வாகம் விசா ரணை மேற்கொண்டு வருகிறது. பேராசிரியரை தாக்கிய மாணவன் மீது கல்லூரி நிர்வாகம் நடவ டிக்கை எடுக்க ஆலோசித்து வருகிறது.

    கல்லூரி வளாகத்திற்குள் மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் ஆசிரியரின் மூக்கு உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • 100 அடி அகலத்துக்கு சாலையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
    • வணிக வளாக வாகனம் நிறுத்தும் பகுதியில் பூச்சந்தை தற்காலிக இடமாற்றம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பூக்கார தெருவில் பூச்சந்தை உள்ளது. இந்த சந்தைக்கு தினமும் திண்டுக்கல், ஓசூர், நிலக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பூக்கள் விற்பனைக்காக கொண்டுவரப்படும்.

    மேலும் இங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு பூக்கள் அனுப்பி வைக்கப்படும். எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும்.

    இந்த நிலையில் பூக்கார தெருவில் சாலை குறுகியதாக உள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதனால் மாநகராட்சி சார்பில் பூக்கார தெருவில் 100 அடி அகலத்துக்கு சாலையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

    இதற்கான பணிகள் தொடங்க உள்ளது. பூக்கார தெருவில் இருந்து சில கிலோமீட்டர் தூரத்துக்கு சாலை விரிவாக்கம் செய்யப்படுகின்றன.

    இதனால் இங்கு பல ஆண்டுகளாக இயங்கி வரும் பூச்சந்தையை தற்காலிகமாக வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட பழைய பஸ் நிலையம் எதிரே உள்ள வணிக வளாக வாகனம் நிறுத்தும் பகுதியில் இன்று முதல் பூச்சந்தை தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டது.

    இதனையொட்டி ஏற்கனவே இயங்கி வந்த இடத்தில் கடை வைத்திருந்தவர்களில் பெரும்பாலானோர் தங்களது கடைகளை மாற்றினர். இன்னும் சில கடைகள் மட்டும் பூச்சந்தையில் உள்ளது. அதுவும் வரக்கூடிய நாட்களில் இடமாற்றம் ஆகி விடும். 

    • தஞ்சை நகர துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள்.
    • வணிக வளாகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கருப்பையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை நகர துணை மின்நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளது. எனவே அண்ணாநகர் மின்பாதையில் இருந்து மின் வினியோகம் பெறும், அருளானந்த நகர், பிலோமினா நகர், காத்தூண் நகர், சிட்கோ, அண்ணாநகர், காமராஜர் நகர், பாத்திமா நகர், அன்பு நகர் ஆகிய பகுதிகளிலும், மேரீஸ் கார்னர் மின்பாதையில் இருந்து மின்வினியோகம் பெறும் திருச்சி சாலை, வ.உ.சி. நகர், பூக்கார தெரு, இருபது கண் பாலம், கோரிக்குளம் ஆகிய இடங்களிலும், மங்களபுரம் மின்பாதையில் இருந்து மின்வினியோகம் பெறும் ராஜப்பா நகர், மகேஸ்வரி நகர், திருப்பதி நகர், செல்வம் நகர், அண்ணாமலை நகர், ஜெ.ஜெ. நகர், டி.பி.எஸ். நகர், சுந்தரம் நகர், பாண்டியன் நகர் ஆகிய இடங்களிலும், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் இருந்து மின்வினியோகம் பெறும் எஸ்.இ. ஆபீஸ், கலெக்டர் பங்களா சாலை, டேனியல் தாமஸ் நகர், ராஜ ராஜேஸ்வரி நகர், காவேரி நகர், நிர்மலா நகர், என்.எஸ் போஸ் நகர், தென்றல் நகர், துளசியாபுரம், தேவன் நகர், பெரியார் நகர், இந்திரா நகர், கூட்டுறவு காலனி ஆகிய பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

    இதேபோல் நிர்மலா நகர் மின்பாதையில் இருந்து மின்வினியோகம் பெறும் புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, நட்சத்திரா நகர், வி.பி. கார்டன், ஆர்.ஆர்.நகர், சேரன் நகர் ஆகிய பகுதிகளிலும், யாகப்பாநகர் மின்பாதையில் இருந்து மின்வினியோகம் பெறும் யாகப்பா நகர், அருளானந்த அம்மாள் நகர், குழந்தை ஏசு கோவில் மற்றும் அதன் அருகில் உள்ள வணிக வளாகம் ஆகிய பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ரூ. 5.20 கோடி மதிப்பீட்டில் தென்னை வணிக வளாக கட்டிட கட்டுமான பணிகள் ஆய்வு.
    • வணிக வளாகத்தின் மூலம் தினமும் 100 பேருக்கு வேலை.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்ட த்திற்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொ ன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டம்

    பட்டுக்கோட்டை தம்பி க்கோட்டை வடகாடு இறால் பண்ணைசெயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்ப ட்டது. பட்டுக்கோட்டையில் அமைந்துள்ள மாற்று த்திறனாளிகள் முகாமில் சமையலறை, கழிவறை போன்ற பல்வேறு அடிப்படை வசதிகள் சுகாதாரமாக உள்ளதா என்றும், மாற்று த்திறனா ளிகளின் கோரிக்கைகளை கேட்டறிய ப்பட்டது, மேலும் தம்பிக்கோட்டை வடகாடு நியாய விலை கடையில்

    உணவுப் பொருட்கள் தரம் மற்றும் இருப்பு குறித்தும், பொன்னவராயன் கோட்டையில் ரூ. 5.20 கோடி மதிப்பீட்டில் தென்னை வணிக வளாகம் கட்டிடத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும் ஆய்வு செய்து மேற்கண்ட பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென சம்பந்த ப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த வணிக வளாகத்தின் மூலம் தினமும் 100 பேருக்கு வேலை கிடைக்கும் வகையில் உரிய

    நடவடிக்கை எடுக்கப்ப டும் . இந்த வளாகத்தில் தேங்காய் பால் எண்ணெய் , தேங்காய் துருவல் பவுடர், குழந்தைகளுக்கான எண்ணெய், நார்ச்சத்து மாத்திரைகள் என தேங்காயில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட ஐந்து பொருட்கள் இங்கு உற்பத்தி செய்யப்படவுள்ளன.

    மேலும் ரூ.2.40 கோடியில் 500 டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு , தேங்காய்களை இறக்க பிளாட்பார்ம் ஆகியவை அமைப்பதற்கு அனுமதி கிடைத்தவுடன் பணிகள் முடிக்கப்பட்டு தென்னை வணிக வளாகம் விரைவில் முழு செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும் .

    இவ்வாறு அவர் கூறினார்.

    இவ்வாய்வின் போது பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பிரபாகரன், தாசில்தார் ராமச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோவிந்தராஜன் , சாமிநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • மருத்துவ கல்லூரி பணியாளர்கள் ஆசாரிபள்ளம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
    • ஆசாரிபள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    ஆசாரிபள்ளம் அருகே பார்வதிபுரம் மேம்பாலம் அருகில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சம்பவத்தன்று மயங்கிய நிலையில் கிடந்தார். 

    உடனடியாக அப்பகுதி பொதுமக்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். மீட்கப்பட்ட முதியவர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் அவர் மருத்துவ மனையில் அருகில் உள்ள வார்டு அருகே இறந்த நிலையில் பிணமாக கிடந்தார்.

    இது பற்றி மருத்துவ கல்லூரி பணியாளர்கள் ஆசாரிபள்ளம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். ஆசாரிபள்ளம் சப்-இன்ஸ்பெக்டர் மேரி மேரிபா வழக்குப்பதிவு செய்து இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி விசாரணை செய்து வருகிறார்.

    • பூச்சந்தை பகுதியில் நவீன வசதிகளுடன் பூச்சந்தை வளாகம் அமைக்க வேண்டும்.
    • மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் உள் விளையாட்டு அரங்கம் அமைத்து தர வேண்டும்.

    தஞ்சாவூர்,

    தஞ்சை சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. டி.கே.ஜி.நீலமேகம் , தஞ்சை தொகுதிக்குட்பட்ட இடங்களில் நிறைவேற்ற வேண்டிய 10 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை, கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவரிடம் அளித்தார்.

    அதில் கூறியிருப்பதாவது;-

    தஞ்சாவூர் மேரிஸ் கார்னர் பகுதியில் அமைந்துள்ள மேம்பாலம் போக்குவரத்திற்கு இடையூறாகவும் அதிக விபத்துகள் ஏற்படும் காரணத்தாலும்அ ப்பாலத்தை மேரீஸ் கார்னரிலிருந்து ராமநாதன் ரவுண்டானா வரை நீட்டிக்க வேண்டும்.

    தஞ்சை சட்டமன்ற தொகுதியில் ஆண்,பெண் இருபாலரும் பயிலும் வகையில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி அமைக்க வேண்டும். தஞ்சைகாட்டுத்தோட்டம் பகுதியில்ர அரசுவேளாண்கல்லூரி அமைக்க வேண்டும்.

    தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருதய சிகிச்சை செய்யும் வசதி அமைத்து தர வேண்டும். தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நவீன அரிசி ஆலை அமைத்து தர வேண்டும்.

    மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் உள் விளையாட்டு அரங்கம் அமைத்து தர வேண்டும்.

    தஞ்சை பெரிய கோவிலில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையில் சோழன் சிலை அருகே பேருந்து நிறுத்தம் அமைத்து பெரிய கோவில் எதிரே உள்ள வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்லும்படி சாலை அமைத்து, தற்சமயம் சாலையாக உள்ள தடத்தை மக்கள் நடந்து செல்லும் பாதையாகவும், வாகனங்களை நிறுத்தும் இடமாகவும் பயன்படுத்த வேண்டும்.

    சி.இ.ஓ, டி.இ.ஓ, பி.ஓ.அலுவலக கட்டிடங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை வளாகம் அமைத்து தர வேண்டும்.

    பூக்காரத் தெரு பூச்சந்தை பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய (குளிரூட்டப்பட்ட) பூச்சந்தை வளாகம் அமைக்க வேண்டும். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் சித்த மருத்துவ கல்லூரி

    மற்றும் முழுமையான தமிழ் வழி பொறியியல் கல்லூரி அமைத்து தர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மதிப்பு கூட்டும் எந்திரங்கள் மானியங்களில் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.
    • மதிப்புக்கூட்டும் எந்திரங்கள் பரவலாக்கம் திட்டத்தின் கீழ் பொது பிரிவினர் மற்றும் பட்டியல் இனத்தவர்களுக்கு 40 சதவீதம் பின்னேற்பு மானியத்தில் கருவிகள் வழங்கப்பட உள்ளன.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

    வேளாண்மை பொறியியல் துறையின் மூலமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் அறுவடைக்குப் பின் சார்பு பொருட்களை மதிப்புக்கூட்டும் எந்திரங்கள் பரவலாக்கம் திட்டத்தின் கீழ் பொது பிரிவினர் மற்றும் பட்டியல் இனத்தவர்களுக்கு 40 சதவீதம் பின்னேற்பு மானியத்தில் கருவிகள் வழங்கப்பட உள்ளன.

    இந்த திட்டத்தின் கீழ் மரவகை மற்றும் இரும்பு உருளைகளை கொண்ட எண்ணெய் பிழியும் எந்திரங்களுக்கு அதிகபட்சமாக ரூ.94,683, தென்னை மட்டை உரிக்கும் எந்திரங்களுக்கு அதிகபட்சமாக ரூ.61,600, வாழை மட்டை நார் உரிக்கும் எந்திரங்களுக்கு ரூ.52,000, சிறிய வகை நெல் அரைக்கும் எந்திரங்களுக்கு அதிகபட்சமாக ரூ.17,000, நெல் உமி நீக்கும் எந்திரங்களுக்கு அதிகபட்சமாக ரூ.44,000 பின்னேற்பு மானியமாக விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

    விவசாயிகள் இத்திட்டத்தில் பயனடைய ஆதார் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் முதல் பக்க நகல், பாஸ்போர்ட் போட்டோ, சிட்டா அடங்கல், மும்முனை மின்சாதன வசதியுடன் கூடிய 10 அடி நீளம் 10 அடி அகலம் உள்ள இடம் உள்ளதற்கான ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

    மேற்காணும் எந்திரங்கள் தேவைப்படும் தஞ்சாவூர், ஒரத்தநாடு, திருவையாறு, பூதலூர் மற்றும் திருவோணம் வட்டாரங்களை சேர்ந்த விவசாயிகள் தஞ்சாவூர் உபகோட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலகம், எண்.15, கிருஷ்ணா நகர், மனோஜிபட்டி ரோடு, மருத்துவக் கல்லூரி அஞ்சல், தஞ்சாவூர்-613004 என்ற முகவரியிலும்,

    கும்பகோணம், அம்மாபேட்டை, பாபநாசம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள் வட்டாரங்களை சேர்ந்த விவசாயிகள் கும்பகோணம் உபகோட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலகம், தொழில்பேட்டை அருகில், திருபுவனம், திருவிடைமருதூர் தாலுகா, கும்பகோணம்-612103 என்ற முகவரியிலும்,

    பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி, சேதுபாவாசத்திரம் வட்டாரங்களை சேர்ந்த விவசாயிகள் பட்டுக்கோட்டை உபகோட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலகம், ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகம், பாளையம், பட்டுக்கோட்டை-614601 என்ற முகவரியிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

    ×