என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மரக்கன்று நடும் விழா
- 500-க்கும் மேற்பட்ட பழமரக்கன்றுகள் நடப்பட்டு கூண்டு வைத்து பராமரிக்கும் பணி நடைபெற்றது.
- செம்பனார்கோயில், குத்தாலம் உள்ளிட்ட பகுதிகளில் 2600 மரக்கன்றுகள் நட தீர்மானம்.
சீர்காழி:
சீர்காழி அடுத்த கன்னியாக்குடி கிராமத்தில் அரசு மனநல காப்பகம் அமையவுள்ள வளாகம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஒரு வீட்டிற்கு மூன்று மரக்கன்றுகள் என்ற அமைப்பின் சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. சீர்காழி ஒன்றிய ஆணையர் இளங்கோவன் தலைமை வகித்தார்.
வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், ஒன்றிய பொறியாளர் கலைசெல்வன், ஒரு வீட்டிற்கு மூன்று மரக்கன்றுகள் அமைப்பினை சேர்ந்த யாமினிஅழகுமலர் முன்னிலை வகித்தனர். சீர்காழி கோட்டாட்சியர் உ.அர்ச்சனா பங்கேற்று மரக்கன்றுகளை நட்டு துவக்கிவைத்தார்.
தொடர்ந்து 500க்கும் மேற்பட்ட பல்வேறு பலன் தரும் பழமரக்கன்றுகள் ஒரேநாளில் நடப்பட்டு கூண்டு வைத்து பராமரிக்கும் பணி நடைபெற்றது. இந்த அமைப்பு சார்பில் மயிலாடுதுறை, கொள்ளிடம், செம்பனார்கோயில், குத்தாலம் உள்ளிட்ட பகுதிகளில் 2600மரக்கன்றுகள் நட தீர்மானிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்