search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lalu Prasad Yadav"

    • ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் லாலுபிரசாத் யாதவ் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வருகிறார்.
    • சிங்கப்பூர் மருத்துவமனையில் லாலுவுக்கு நேற்று சிறுநீரக மாற்று ஆபரேஷன் வெற்றிகரமாக நடந்தது.

    பாட்னா:

    ராஷ்டிரீய ஜனதா தள கட்சியின் தலைவர் லாலுபிரசாத் யாதவ், உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வருகிறார். அவருக்கு சிறுநீரக மாற்று ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று சிங்கப்பூர் டாக்டர்கள் அறிவுறுத்தினர்.

    இதற்கிடையே, கடந்த வாரம் லாலுவும், அவருடைய குடும்பத்தினரும் சிங்கப்பூர் சென்றனர்.

    இந்நிலையில், சிங்கப்பூர் மருத்துவமனையில் லாலுவுக்கு நேற்று சிறுநீரக மாற்று ஆபரேஷன் வெற்றிகரமாக நடந்தது. இத்தகவலை லாலுவின் மகனும், பீகார் மாநில துணை முதல் மந்திரியுமான தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.

    லாலுவின் மகள் ரோகிணி ஆச்சார்யாவின் ஒரு சிறுநீரகம், லாலுவுக்கு பொருத்தப்பட்டது. இருவரும் நலமுடன் இருப்பதாக தேஜஸ்வி யாதவ் கூறினார்.

    • லாலு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக சிங்கப்பூரில் இருக்கிறார்.
    • லாலு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக சிங்கப்பூரில் இருக்கிறார்.

    குரானி :

    பீகார் முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வருகிறார். அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அவரது மகளே தந்தைக்கு சிறுநீரகம் தானமாக வழங்க முன் வந்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து லாலு பிரசாத் யாதவுக்கு வருகிற 5-ந்தேதி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடப்பதாக அவரது மகனும், மாநில துணை முதல்-மந்திரியுமான தேஜஸ்வி, நேற்று குரானி சட்டசபை இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது தெரிவித்தார்.

    அவர் கூறுகையில், 'லாலு ஜி இங்கு உங்களை சந்திக்க விரும்பினார். ஆனால் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக சிங்கப்பூரில் இருக்கிறார். அங்கு அவருக்கு 5-ந்தேதி அறுவை சிகிச்சை நடக்கிறது. ஆனாலும் பா.ஜனதாவை தோற்கடிக்க உங்களிடம் தெரிவிக்குமாறு என்னிடம் அவர் கேட்டுக்கொண்டார்' என்று கூறினார்.

    தனது உடல் நலக்குறைவுக்கு பா.ஜனதாவின் பழிவாங்கும் அரசியல்தான் காரணம் என்பதை உங்களுக்கு நினைவுபடுத்தக்கூறுமாறும் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்ததாக தேஜஸ்வி மேலும் குறிப்பிட்டார்.

    • சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் டிசம்பர் 5-ந்தேதி அறுவை சிகிச்சை நடக்கிறது.
    • லாலுவின் மகள் ரோகிணி ஆச்சார்யா, சிறுநீரக தானம் செய்கிறார்.

    புதுடெல்லி

    ராஷ்டிரீய ஜனதாதள கட்சி நிறுவனர் லாலுபிரசாத் யாதவ் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். அவருக்கு சிறுநீரகம் பழுதடைந்ததால், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்ல திட்டமிட்டார். கோர்ட்டும் அனுமதி அளித்தது.

    சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் டிசம்பர் 5-ந்தேதி அறுவை சிகிச்சை நடக்கிறது. லாலுவின் மகள் ரோகிணி ஆச்சார்யா, சிறுநீரக தானம் செய்கிறார். இதற்காக லாலுபிரசாத் யாதவ், இன்று (சனிக்கிழமை) சிங்கப்பூர் செல்வார் என்று தெரிகிறது.

    லாலுவுடன் அவருடைய மூத்த மகள் மிசா பாரதி, மருமகன் சைலேஷ்குமார் ஆகியோர் செல்ல டெல்லி தனிக்கோர்ட்டு நீதிபதி எம்.கே.நாக்பால் அனுமதி அளித்துள்ளார். மிசா பாரதி, சைலேஷ்குமார் ஆகியோர் மீது ரூ.1 கோடியே 20 லட்சம் சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே, கோர்ட்டு விதித்த நிபந்தனைகளுடன் இருவரும் சிங்கப்பூர் செல்கிறார்கள்.

    • தனது அப்பா லாலு பிரசாத் யாதவும், அம்மா ரப்ரி தேவியும் இறைவனுக்கு சமமானவர்கள், அப்பாவுக்கு தான் கொஞ்சம் உதவுவதற்கு வாய்ப்பு கிடைத்தது தனது அதிர்ஷ்டம்.
    • என் அப்பாவுக்கு நான் தரப்போவது ஒரு சிறிய சதைப்பகுதிதான். நான் அவருக்காக எதையும் செய்வேன்.

    பாட்னா:

    பீகார் முன்னாள் முதல்-மந்திரியும், முன்னாள் மத்திய ரெயில்வே மந்திரியும், ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் (வயது 74), கால்நடைத் தீவன ஊழல் வழக்குகளில் தண்டிக்கப்பட்டுள்ளார். ஜாமீனில் உள்ள இவர் தற்போது உடல் உபாதைகளால் அவதிப்படுகிறார்.

    டெல்லியில் மகள் மிசா பாரதியின் இல்லத்தில் தங்கியுள்ள லாலு பிரசாத் யாதவுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைதான் மறு வாழ்வு தரும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

    தனக்கு உயிர் தந்த தந்தைக்கு மற்றொரு மகளான ரோகிணி ஆச்சார்யா சிறுநீரகம் தந்து மறு வாழ்வு தர மனமுவந்து முன்வந்துள்ளார்.

    இந்த அறுவை சிகிச்சை தொடர்பாக லாலு பிரசாத் யாதவ் கடந்த மாதம் சிங்கப்பூர் சென்று மருத்துவ பரிசோதனைகள் முடித்து வந்தார்.

    அவருக்கு தனது இரு சிறுநீரகங்களில் ஒன்றை வழங்க முன்வந்துள்ள மகள் ரோகிணி ஆச்சார்யா, ஒரு டாக்டர் ஆவார். இவரது கணவர் சாம்ஷெர் சிங், சாப்ட்வேர் என்ஜினீயர். இவர்கள் தற்போது சிங்கப்பூரில்தான் வசித்து வருகின்றனர்.

    தனது அப்பா லாலு பிரசாத் யாதவும், அம்மா ரப்ரி தேவியும் இறைவனுக்கு சமமானவர்கள், அப்பாவுக்கு தான் கொஞ்சம் உதவுவதற்கு வாய்ப்பு கிடைத்தது தனது அதிர்ஷ்டம்தான் என்று ரோகிணி ஆச்சார்யா உருகுகிறார்.

    தந்தைக்கு சிறுநீரகம் அளிப்பது குறித்து ரோகிணி ஆச்சார்யா உருக்கமுடன் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:-

    என் அப்பாவுக்கு நான் தரப்போவது ஒரு சிறிய சதைப்பகுதிதான். நான் அவருக்காக எதையும் செய்வேன். எல்லாம் நல்ல விதமாக நடந்தேற வேண்டும் என்று தயவு செய்து பிரார்த்தித்துக்கொள்ளுங்கள். உங்கள் அனைவருக்கும் மீண்டும் குரல் கொடுக்க அப்பா தகுதியானவராக இருக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    அரசியல் களத்தில் இருந்து வெளியே உள்ள இவர், தனது தந்தை லாலுவின் மடியில் குழந்தையாக இருந்தபோது எடுத்துக்கொண்ட 2 புகைப்படங்களையும் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். (அதில் ஒன்றை இங்கே காணலாம்.)

    இவர் அவ்வப்போது லாலு பிரசாத்தின் ஆதரவாளர்களை, தனது தந்தையின் ரசிகர்களாக கருதி அவர்களுடன் டுவிட்டர் வழியாக பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சிறுநீரகம் பாதிக்கப்பட்ட லல்லுபிரசாத்துக்கு சிங்கப்பூரில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
    • டெல்லியில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வரும் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    ராஷ்டிரிய ஜனதா தலைவர் லல்லுபிரசாத் யாதவ் பல்வேறு உடல்நல பிரச்சினைகள் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரகம் பாதிக்கப்பட்ட அவருக்கு சிங்கப்பூரில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது டெல்லியில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வரும் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் அவருக்கு சிறுநீரகம் தானம் செய்ய அவரது மகள் ரோஷினி முன்வந்துள்ளார். சிங்கப்பூரில் வசித்து வரும் ரோஷினி இதற்காக டெல்லி வந்துள்ளார்.

    • 2017-ம் ஆண்டு, ஊழலுக்காக லாலுபிரசாத் யாதவிடம் இருந்து நிதிஷ்குமார் விலகினார்.
    • தற்போது, ஊழல் விவகாரத்தில் கண்ணை மூடிக்கொண்டிருப்பது வெட்கக்கேடானது

    புதுடெல்லி :

    ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் லாலுபிரசாத் யாதவ், ரெயில்வே மந்திரியாக இருந்தபோது, வேலை வழங்க நிலம் லஞ்சமாக கைமாறியதாக புகார் எழுந்தது. அதன்பேரில், லாலுபிரசாத், அவருடைய மனைவி ராப்ரிதேவி, மூத்த மகள் மிசார பாரதி எம்.பி. உள்பட 14 பேர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்திருந்தது.

    இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாக சி.பி.ஐ. கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

    ஆனால் இதுபற்றி கருத்து தெரிவித்த பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார், ''அந்த வழக்கில் எதுவுமே வெளிவரவில்லை. நான் இப்போது அவருடன் கூட்டணியில் இருக்கிறேன். சி.பி.ஐ. தங்கள் ஆசைக்கேற்ப செயல்படுகிறது'' என்று கூறினார்.

    இந்தநிலையில், நிதிஷ்குமாருக்கு பா.ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நிதிஷ்குமார், தான் வாழ்நாளில் கட்டிக்காப்பாற்றிய முக்கிய கொள்கைகளை லாலுவையும், அவரது குடும்பத்தையும் ஊழல் வழக்கில் ஆதரித்து பேசுவதன் மூலம் சமரசம் செய்து கொண்டு விட்டார்.

    2017-ம் ஆண்டு, ஊழலுக்காக லாலுபிரசாத் யாதவிடம் இருந்து நிதிஷ்குமார் விலகினார். ஆனால் அவரே தற்போது, ஊழல் விவகாரத்தில் கண்ணை மூடிக்கொண்டிருப்பது வெட்கக்கேடானது, துரதிருஷ்டவசமானது.

    அவர் சட்டத்தை செயல்பட விட வேண்டும். அதில் குறுக்கிடக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒரு லட்சம் சதுர அடி நிலம் லாலு பிரசாத் யாதவின் குடும்பத்திற்கு வேலைக்காக மாற்றப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
    • லாலு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 16 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    புதுடெல்லி:

    மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின்போது 2004-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் ரெயில்வே மந்திரியாக இருந்தார். அப்போது, ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதற்காக லாலுவும் அவரது குடும்பத்தினரும் நிலங்களை லஞ்சமாக பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இது தொடர்பாக லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரி தேவி, இரண்டு மகள்கள் மற்றும் ரெயில்வேயில் வேலை பெற்ற 12 நபர்கள் மீது சிபிஐ கடந்த மே மாதம் 18ம் தேதி புதிய வழக்கு பதிவு செய்தது. வேலைக்கு விண்ணப்பித்தவர்களின் குடும்பங்களுக்குச் சொந்தமான 1 லட்சம் சதுர அடி நிலம் லாலு பிரசாத் யாதவின் குடும்பத்திற்கு வேலைக்காக மாற்றப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    இதன் தொடர்ச்சியாக லாலு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 16 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி ஆவணங்களை ஆய்வு செய்தனர்.

    இந்நிலையில், குற்றம்சாட்டப்பட்ட 16 பேருக்கு எதிராகவும் சிபிஐ இன்று டெல்லி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. ரெயில்வேயில் குரூப் டி பதவிகளுக்கு விண்ணப்பித்த மூன்று நாட்களுக்குள் அவர்கள் ரெயில்வே அதிகாரிகளால், தற்காலிக பணியாளர்களாக நியமிக்கப்பட்டதாகவும், வேலை பெற்ற நபர்களோ அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்களோ தங்கள் நிலத்தை பத்திரப்பதிவு செய்து மாற்றியபோது அவர்கள் பணிநிரந்தரம் செய்யப்பட்டதாகவும் சிபிஐ குற்றம் சாட்டி உள்ளது. ராப்ரி தேவி மற்றும் இரு மகள்களின் பெயரில் விற்பனைப் பத்திரம் மூலம் நிலப் பரிமாற்றம் செய்யப்பட்டதாகவும் சிபிஐ குறிப்பிட்டுள்ளது.

    • லாலு பிரசாத் யாதவ் பாஸ்போர்ட்டு, கோர்ட்டு வசம் உள்ளது.
    • சிறுநீரக சிகிச்சைக்காக லாலு பிரசாத் யாதவ் சிங்கப்பூர் செல்லவேண்டியுள்ளது.

    ராஞ்சி :

    பீகார் முன்னாள் முதல்-மந்திரியும், ராஸ்டிரீய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத் யாதவுக்கு மாட்டுத் தீவன ஊழல் தொடர்பான பல்வேறு வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவரது பாஸ்போர்ட்டு, கோர்ட்டு வசம் உள்ளது.

    இந்நிலையில், சிறுநீரக சிகிச்சைக்காக தான் சிங்கப்பூர் செல்லவேண்டியுள்ளது. சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் அதற்காக வருகிற 24-ந்தேதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே தனது பாஸ்போர்ட்டை விடுவிக்க உத்தரவிட வேண்டும் என்று லாலு பிரசாத் சார்பில் ராஞ்சி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அந்த மனுவை நேற்று ஏற்ற கோர்ட்டு, இதுதொடர்பாக பிரமாணபத்திரம் தாக்கல் செய்ய சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டது. பின்னர் விசாரணையை நாளை மறுதினத்துக்கு ஒத்திவைத்தது.

    தனது பாஸ்போர்ட்டை விடுவிக்க கோரி லாலு பிரசாத் யாதவ் கோர்ட்டை அணுகியிருப்பது இது 2-வது முறையாகும்.

    இதற்கு முன்பு லாலுவின் கோரிக்கையின் பேரில், அவரது பாஸ்போர்ட்டை புதுப்பிப்பதற்காக விடுவிப்பதற்கு சி.பி.ஐ. கோர்ட்டு கடந்த ஜூன் 14-ந்தேதி உத்தரவிட்டது.

    • கடந்த 2009-ஆம் ஆண்டு ஜார்க்கண்ட் சட்டமன்ற தோ்தலின்போது, அவர் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக கூறப்படுகிறது.
    • இந்த வழக்கு தொடர்பாக பாலாமு மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று லாலு பிரசாத் ஆஜரானார்.

    மேதினி நகா்:

    கடந்த 2009-ஆம் ஆண்டு ஜார்க்கண்ட் சட்டமன்ற தோ்தலின்போது, லாலு பிரசாத் யாதவ் பாலாமு மாவட்டத்துக்கு ஹெலிகாப்டரில் சென்று மேற்கொண்டார். அவர் சென்ற ஹெலிகாப்டர் மேதினிநகரில் உள்ள ஹெலிபேடுக்கு பதிலாக கார்வா பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் தரையிறக்கப்பட்டது.

    இந்த விவகாரத்தில், அவர் தேர்தல் நடத்தை விதிமீறல் செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக பாலாமு மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று லாலு பிரசாத் ஆஜரானார். அப்போது அவர், தான் தோ்தல் நடத்தை விதிகளை மீறியதை அவா் ஒப்புக்கொண்டு, மன்னிப்பு கேட்டார்.

    இதையடுத்து, அவரது மன்னிப்பை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், லாலு பிரசாத்துக்கு ரூ.6,000 அபராதம் விதித்து உத்தரவிட்டது.

    அந்த அபராதத்தை லாலு செலுத்தியதைத் தொடா்ந்து, வழக்கு முடித்துவைக்கப்பட்டது.

    காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு காரணமாக லாலு பிரசாத் யாதவ் எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
    புதுடெல்லி:

    பீகார் முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்டிரிய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் மாட்டுத்தீவன ஊழல் தொடர்பான பல வழக்குகளில் தண்டனை பெற்றுள்ளார்.

    3 ஆண்டுகளுக்கு பிறகு லாலு கடந்த மாதம் ஜாமீனில் விடுதலையானார். இதற்கு முன்பு கடந்த ஏப்ரல் மாதம் அவருக்கு ஜார்க்கண்ட் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது.

    ஜாமீனில் வெளியே வந்த லாலு பிரசாத் யாதவ் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாட்டு தீவன ஊழல் வழக்கில் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் ஆஜரானார்.

    இந்தநிலையில் லாலு பிரசாத் யாதவ் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு காரணமாக அவர் நேற்று இரவு எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

    அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

    ராகுல் காந்தியின் ராஜினாமா முடிவு தற்கொலைக்கு சமம் என்று லாலுபிரசாத் யாதவ் கருத்து தெரிவித்துள்ளார்.
    பாட்னா:

    ராஷ்டிரீய ஜனதாதளம் கட்சித் தலைவர் லாலுபிரசாத் யாதவ் கால்நடை தீவன ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டார். அவர் தற்போது உடல்நிலை பாதிக்கப்பட்டதால் ராஞ்சியில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தேர்தல் தோல்விக்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ராஜினாமா செய்ய முடிவெடுத்து இருப்பது குறித்து லாலுபிரசாத் டுவிட்டர் மூலம் கருத்து தெரிவித்துள்ளார்.

    அதில், “ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்து இருப்பது அவரது கட்சிக்கு மட்டுமல்ல, சங்பரிவாருக்கு எதிரான அனைத்து கட்சிகள் மற்றும் சமுதாய அமைப்புகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் தற்கொலை முடிவுக்கு சமம்.



    நேரு குடும்பத்தை தவிர வேறு யாராவது ஒருவர் கட்சிக்கு தலைவராக நியமிக்கப்பட்டால் அவரை ராகுல்காந்தி, சோனியா காந்தியின் ரிமோட் மூலம் இயங்கும் பொம்மையாக நரேந்திர மோடி, அமித்ஷா படை சித்தரிக்கும். ராகுல் காந்தி ஏன் தனது அரசியல் எதிரிகளுக்கு அப்படி ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார். 
    ஜெயிலில் இருந்தபடி லாலுபிரசாத் யாதவ் பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமாரை கண்டித்து எழுதியுள்ள கடிதத்தை ராஷ்டீரிய ஜனதா தள கட்சி தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
    பாட்னா:

    பீகார் மாநில முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்டீரிய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.

    அவர் தேர்தல் பிரசாரத்துக்காக ஜாமீன் பெற முயன்றார். ஆனால் ஜாமீன் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் ஜெயிலில் இருந்தபடி லாலுபிரசாத் யாதவ் பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமாரை கண்டித்து எழுதியுள்ள கடிதத்தை ராஷ்டீரிய ஜனதா தள கட்சி தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

    கொள்கைகள், கோட்பாடுகள் என்று எதையும் பின்பற்றாத நீங்கள் (நிதிஷ்குமார்) ஆட்சி அதிகாரத்தை தக்க வைக்க குறுக்கு வழியில் பயணித்து வருகிறீர்கள்.

    தேர்தல் பிரசாரத்தில் என்னையும், எனது கட்சியின் சின்னமான லாந்தர் விளக்கையும் தொடர்ந்து விமர்சித்து வருகிறீர்கள். உங்கள் தேர்தல் பிரசாரம் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

    ஏழைகளின் வாழ்க்கையில் இருளை நீக்கி வெளிச்சத்தை அளிக்கும் லாந்தர் விளக்கு சின்னத்தை நாங்கள் பெற்று இருக்கிறோம். அது அன்பையும், சகோதரத்துவத்தையும் உணர்த்தும் சின்னம்.

    ஆனால் உங்கள் கட்சியின் சின்னமான அம்பு, வன்முறையின் ஆயுதம். பீகாரில் உங்கள் ஆட்சியில் ஏழை-எளிய மக்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர்.

    அதை எதிரொலிப்பதாக இந்த தேர்தல் முடிவுகள் அமையும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    இது தொடர்பாக நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி செய்தி தொடர்பாளர் சஞ்சய்சிங் கூறும்போது, “சிறையில் இருக்கும் ஒருவர் தேர்தல் பிரசாரத்துக்காக கடிதம் எழுதுவது விதிமீறல். இது தொடர்பாக ராஞ்சி சிறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
    ×