search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தோ்தல் நடத்தை விதிமீறல் வழக்கு: லாலு பிரசாத் யாதவுக்கு ரூ.6,000 அபராதம்
    X

    லாலு பிரசாத் யாதவ்

    தோ்தல் நடத்தை விதிமீறல் வழக்கு: லாலு பிரசாத் யாதவுக்கு ரூ.6,000 அபராதம்

    • கடந்த 2009-ஆம் ஆண்டு ஜார்க்கண்ட் சட்டமன்ற தோ்தலின்போது, அவர் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக கூறப்படுகிறது.
    • இந்த வழக்கு தொடர்பாக பாலாமு மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று லாலு பிரசாத் ஆஜரானார்.

    மேதினி நகா்:

    கடந்த 2009-ஆம் ஆண்டு ஜார்க்கண்ட் சட்டமன்ற தோ்தலின்போது, லாலு பிரசாத் யாதவ் பாலாமு மாவட்டத்துக்கு ஹெலிகாப்டரில் சென்று மேற்கொண்டார். அவர் சென்ற ஹெலிகாப்டர் மேதினிநகரில் உள்ள ஹெலிபேடுக்கு பதிலாக கார்வா பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் தரையிறக்கப்பட்டது.

    இந்த விவகாரத்தில், அவர் தேர்தல் நடத்தை விதிமீறல் செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக பாலாமு மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று லாலு பிரசாத் ஆஜரானார். அப்போது அவர், தான் தோ்தல் நடத்தை விதிகளை மீறியதை அவா் ஒப்புக்கொண்டு, மன்னிப்பு கேட்டார்.

    இதையடுத்து, அவரது மன்னிப்பை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், லாலு பிரசாத்துக்கு ரூ.6,000 அபராதம் விதித்து உத்தரவிட்டது.

    அந்த அபராதத்தை லாலு செலுத்தியதைத் தொடா்ந்து, வழக்கு முடித்துவைக்கப்பட்டது.

    Next Story
    ×