search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லாலுபிரசாத் யாதவ்"

    • கடந்த ஜூலை 3-ந்தேதி சி.பி.ஐ. 2-வது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தது.
    • வழக்கில் லாலுபிரசாத் யாதவ், ராப்ரிதேவி உள்ளிட்ட 14 பேர் கோர்ட்டில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

    புதுடெல்லி:

    ரெயில்வே பணி வழங்குவதற்கு நிலத்தை லஞ்சம் பெற்றதாக முன்னாள் மத்திய மந்திரியும், ராஷ்ட்ரிய ஜனதா தள நிறுவனருமான லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவியும், பீகார் முன்னாள் முதல்-மந்திரியுமான ராப்ரிதேவி, மகனும், பீகார் துணை முதல்-மந்திரியுமான தேஜஸ்வி யாதவ், மகள் மிசா பார்தி உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது.

    இதுதொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது.

    இந்த வழக்கில் கடந்த ஜூலை 3-ந்தேதி சி.பி.ஐ. 2-வது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கில் லாலுபிரசாத் யாதவ், ராப்ரிதேவி உள்ளிட்ட 14 பேர் கோர்ட்டில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

    இதைத்தொடர்ந்து லாலு பிரசாத் உள்ளிட்டோர் இன்று காலை டெல்லியில் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் ஆஜரானார்கள்.

    ரெயில்வே பணிக்கு நிலம் லஞ்சமாக பெற்ற வழக்கில் லாலு பிரசாத் யாதவ், ராப்ரிதேவி, தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோருக்கு ஜாமின் வழங்கி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு நீதிபதி கீதாஞ்சலி கோயல் உத்தரவிட்டார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' என்ற புதிய கூட்டணியை பிரதமர் மோடி குற்றம் சாட்டி பேசியிருப்பது குறித்து கேள்வி எழுப்பினர்.
    • மோடி தனக்கு பிடித்த இடத்தை தேடிக்கொண்டு இருக்கிறார்.

    பாட்னா:

    ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலுபிரசாத் யாதவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுநீரக பாதிப்பு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்று வந்தார். அதன்பிறகு மீண்டும் பல்வேறு கூட்டங்கள், நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் அவர் நேற்று அவரது மூத்த மகனும், பீகார் மந்திரியுமான தேஜ் பிரதாப் யாதவ் ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

    அப்போது அவரிடம், எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' என்ற புதிய கூட்டணியை பிரதமர் மோடி குற்றம் சாட்டி பேசியிருப்பது குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து லாலுபிரசாத் கூறுகையில், மோடி பாராளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்த பிறகு வெளிநாட்டில் குடியேறுவார்.

    அவர் தான் விலகுவதற்கு திட்டமிட்டு இருக்கிறார். இதுவே அவர் பல நாடுகளுக்கு செல்வதற்கு காரணம். அவர் தனக்கு பிடித்த இடத்தை தேடிக்கொண்டு இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

    அவரது இந்த கிண்டல் பேச்சு அங்கு தொண்டர்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

    • ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் லாலுபிரசாத் யாதவ் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வருகிறார்.
    • சிங்கப்பூர் மருத்துவமனையில் லாலுவுக்கு நேற்று சிறுநீரக மாற்று ஆபரேஷன் வெற்றிகரமாக நடந்தது.

    பாட்னா:

    ராஷ்டிரீய ஜனதா தள கட்சியின் தலைவர் லாலுபிரசாத் யாதவ், உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வருகிறார். அவருக்கு சிறுநீரக மாற்று ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று சிங்கப்பூர் டாக்டர்கள் அறிவுறுத்தினர்.

    இதற்கிடையே, கடந்த வாரம் லாலுவும், அவருடைய குடும்பத்தினரும் சிங்கப்பூர் சென்றனர்.

    இந்நிலையில், சிங்கப்பூர் மருத்துவமனையில் லாலுவுக்கு நேற்று சிறுநீரக மாற்று ஆபரேஷன் வெற்றிகரமாக நடந்தது. இத்தகவலை லாலுவின் மகனும், பீகார் மாநில துணை முதல் மந்திரியுமான தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.

    லாலுவின் மகள் ரோகிணி ஆச்சார்யாவின் ஒரு சிறுநீரகம், லாலுவுக்கு பொருத்தப்பட்டது. இருவரும் நலமுடன் இருப்பதாக தேஜஸ்வி யாதவ் கூறினார்.

    ×