search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kovai"

    • ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும், வாழைத்தார்கள் கேரளாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.
    • தற்போது பூக்கள் மற்றும் பழங்களின் விலை சற்று அதிகரித்து உள்ளது.

    கோவை,

    கேரளா மாநிலத்தில் நாளை ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டா டப்படுகிறது. கேரளா மட்டு மின்றி அதனையொட்டிய கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களிலும் ஏராள மான மலையாளிகள் வசித்து வருகின்றனர். அவர்கள் கடந்த ஒருவார மாக ஓணம் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவை மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்தும் பெருமளவில் மலர்கள் மற்றும் வாழைத்தார்கள் ஆகியவை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இதனால் கோவை மாவட்டத்தில் தற்போது பூக்கள் மற்றும் பழங்களின் விலை சற்று அதிகரித்து உள்ளது.

    கோவை தடாகம் ரோட்டில் வாழைக்காய் மண்டி இயங்கி வருகிறது. இங்கு உள்ளூர் விவசாயிகள் தோட்டத்தில் விளைந்த வாழைப்பழ தார்களை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். மேலும் சத்தியமங்கலம், கடலூர், குளித்தலை, கரூர், திருச்சி ஆகிய பகுதிகளில் இருந்தும் பெருமளவில் வாழைத்தா ர்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

    ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும், வாழைத்தார்கள் கேரளாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இதனால் கோவையில் வாழைத்தார்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது.கோவை தடாகம் வாழைக்காய் மண்டியில் ஒரு கிலோ பழங்களின் விலை விவரம் வருமாறு (அடைப்புக்குறிக்குள் நேற்றைய விலை): நேத்திரம் வாழைப்பழம்-55 (40), செவ்வாழை-60 (45), பூவம்பழம்-40 (25), கற்பூரவள்ளி-50 (30), கதலி-70 (50).

    கோவை ஆர்.எஸ்.புரம் மலர்ச்சந்தையிலும் பூக்களின் வரத்து குறைவு காரணமாக அவற்றின் விலை சற்று அதிகரித்து உள்ளது. அங்கு ஒரு கிலோ ஜாதி மல்லி ரூ.400-க்கு விற்கப்பட்டு வருகிறது. அதேபோல செவ்வந்தி ரூ.160, ரோஜா-ரூ.160 என்று விற்பனையாகிறது.

    கோவை பூ மார்க்கெட்டில் விற்பனையாகும் இதர பூக்களின் விலை விவரம் பின்வருமாறு (ஒரு கிலோ வுக்கு):- செண்டுமல்லி-50, சம்பங்கி-120, அரளி-100, மருது ஒரு கட்டு-10, வாடாமல்லி-80, துளசி ஒரு கட்டு-40, கோழிக்கொ ண்டை-100, தாமரைப்பூ ஒன்று-15, மரிக்கொழுந்து ஒரு கட்டு-20, முல்லை-400, சவுக்கு ஒரு கட்டு-50.

    கேரளாவில் ஓணம் பண்டிகை காரணமாக கோவை மாவட்டத்துக்கு பூக்கள் மற்றும் பழங்களின் வரத்து குறைந்து உள்ளது. இதனால் தான் மார்க்கெ ட்டுகளில் அவற்றின் விலை உயர்ந்து காணப்படுகிறது. ஓணம் பண்டிகை கொண்டா ட்டத்துக்கு பிறகு தான் கோவையில் உள்ள மார்க்கெட்டுகளில் பூக்கள் மற்றும் பழங்களின் விலை குறைய வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்து உள்ளனர்.

    • இதுகுறித்து ஆரோக்கியசாமி சரவணம்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
    • இதுதொடர்பாக சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை,

    கோவை கணபதி, தெய்வநாயகி நகர், 3-வது வீதியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (56). இவர் தனது மனைவி மற்றும் மகன்கள் பிரேம், ஸ்டீபன் ஆகியோருடன் வசித்து வரு கிறார்.

    ஆரோக்கியசாமி கணபதி பகுதியில் பேக்கரி நடத்தி வருகிறார். இவரது மகன்கள் வெள்ளக்கிணறு பகுதியில் டைல்ஸ் வியாபாரம் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் ஆரோக்கியசாமி சனிக்கிழமை வியாபாரம் முடித்து அன்று வசூலான பணத்தை வீட்டில் உள்ள பீரோவில் வைத்து உள்ளார். அதன்பிறகு குடும்பத்தினருடன் சிவகங்கையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார்.

    பின்னர் இன்று அதிகாலை ஊர் திரும்பியபோது வீட்டின் முன்புற கதவு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். எனவே அவர் உடனடியாக உள்ளே சென்று பார்த்தார். அங்கு துணிமணிகள் இறைந்து கிடந்தன.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ஆரோக்கியசாமி பீரோவை திறந்து பார்த்தார். அப்போது அதில் இருந்த ரூ.1.72 லட்சம் மற்றும் 30 சவரன் தங்க நகைகள் மாயமானது தெரிய வந்தது.

    இதுகுறித்து ஆரோக்கியசாமி சரவணம்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ஆரோக்கியசாமி வீட்டில் கைரேகை பதிவுகள் மற்றும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி காமிரா பதிவுகளை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பேக்கரி அதிபர் வீட்டுக்குள் எத்தனை பேர் புகுந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர் என்பது பற்றிய விவரம் தெரியவில்லை. இதுதொடர்பாக சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டுக்குள் இருந்த பீரோ மற்றும் மேஜை ஆகியவை உடைக்கப்பட்டு அதில் தங்க மற்றும் வெள்ளி நகைககள் கொள்ளையடி க்கப்பட்டு இருந்தன.
    • கொள்ளை தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது.

    கோவை

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் வீட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று ள்ளனர். பொள்ளாச்சி சேரன் நகர் லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் குழந்தைவேல் (வயது 68). அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி கலைச்செல்வி (61). மகன் விஷ்ணு (32).

    குழந்தைவேலின் மூத்த மகள் கவிதா என்பவர் கோவை தண்ணீர் பந்தல் பகுதியில் புதிதாக வீடு கட்டி உள்ளார். அந்த வீட்டின் புதுமனை புகுவிழா நடந்தது. இதற்காக குழந்தைவேல், வீட்டை பூட்டி விட்டு விழாவுக்கு சென்று விட்டார்.

    4 நாட்களுக்கு பிறகு பொள்ளாச்சிக்கு திரும்பிச் சென்றார். அங்கு அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. வீட்டுக்குள் இருந்த பீரோ மற்றும் மேஜை ஆகியவை உடைக்கப்பட்டு அதில் தங்க மற்றும் வெள்ளி நகைககள் கொள்ளையடி க்கப்பட்டு இருந்தது. கம்மல், செயின், தங்க நாணயம், வளையல் உள்பட 10¾ பவுன் தங்க நகையும், வெள்ளி குங்கும சிமிழ், சந்தன கிண்ணம் ஆகிய வையும் கொள்ளை போய் இருந்தது.

    இதுபற்றி பொள்ளாச்சி மகாலிங்கபுரம் போலீஸ்நி லையத்தில் குழந்தைவேல் புகார் செய்தார். இன்ஸ்பெ க்டர் வெங்கடேசன் நேரில் சென்று விசாரணை மேற்ெகாண்டார். தொடர்ந்து கொள்ளை தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது.

    • கொள்ளையர்களை பிடிக்க விடிய, விடிய தனிப்படை போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
    • பஸ்நிலையங்கள், ரெயில் நிலையங்கள், மார்க்கெட் பகுதிகள் என மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தீவிர ரோந்து பணிகள் மேற்கொ ள்ளப்ப ட்டு வருகிறது.

    கோவை,

    கோவை மாநகரில் கடந்த சில நாட்களாக செயின் பறிப்பு சம்பவங்கள், பணம் பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது. குறிப்பாக ரத்தினபுரி, டாடாபாத், பாப்பநாயக்கன் பாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 3 பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவம் ஒரே நாளில் நடந்தது.

    இது குறித்து பாதிக்க ப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செயின் பறிப்பில் ஈடுபடும் நபர்களை பிடிப்பதற்காக மாநகர போலீஸ் சார்பில், 7 தனிப்ப டைகள் அமைக்கப்பட் டுள்ளது. இந்த தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு செயின் பறிப்பில் ஈடுபடும் நபர்க ளை தேடி வருகின்றனர்.

    மேலும் செயின் பறிப்பு சம்பவம் நடந்த பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு காமிரா க்களில் மர்ம நபர்கள் வந்து செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளதா? என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் மாநகர் முழுவதும் போலீசார் தீவிரவாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நேற்று இரவு 2-வது நாளாக வாகன சோதனை தீவிரப்படுத்தப்ப ட்டது. பஸ்நிலையங்கள், ரெயில் நிலையங்கள், மார்க்கெட் பகுதிகள் என மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தீவிர ரோந்து பணிகள் மேற்கொ ள்ளப்ப ட்டு வருகிறது.

    மேலும் உக்கடம், போத்தனூர், கரும்புக்கடை, ரத்தினபுரி, என பல்வேறு பகுதிகளில் இரவு முழுவதும் விடிய, விடிய வாகன சோதனை நடத்தப்பட்டது. வாகனங்களில் வருபவர்க ளிடம் தீவிர விசாரணை நடத்தி, அதன் பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

    • 20 வயது வாலிபர் சிங்காநல்லூரில் உள்ள லாட்ஜில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
    • லாட்ஜ் ஊழியர் அந்த வாலிபரிடம் அநாகரீகமான முறையில் நடந்து கொண்டார் .

    கோவை,

    கோவை வரதராஜ புரத்தை சேர்ந்தவர் 20 வயது வாலிபர். இவர் சிங்காநல்லூரில் உள்ள லாட்ஜில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    இருவரும் இன்ஸ்டாகிராம் மூலம் பழகினர். இந்தநிலையில், ஓரின சேர்க்கையாளரான லாட்ஜ் ஊழியர் அந்த வாலிபரிடம் நாம் இருவரும் தனிமையில் ஜாலியாக இருக்கலாம் என கூறி அழைத்தார்.

    அவர்கள் நீலிகோணாம்பாளையம் ரெயில்வே கேட் அருகே சந்திக்க முடிவு செய்தனர். அதன்படி லாட்ஜ் ஊழியர் அங்கு சென்று வாலிபரின் வருகைக்காக காத்திருந்தார்.

    சிறிது நேரத்தில் அங்கு அவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான அந்த வாலிபர் வந்தார். இருவரும் பேசி கொண்டிருந்தனர்.

    அப்போது லாட்ஜ் ஊழியர் அந்த வாலிபரிடம் அநாகரீகமான முறையில் நடந்து கொண்டார் . இதனால் அந்த வாலிபர் அவரது நண்பர்கள் 2 பேரை அங்கு வரவழைத்தார்.

    அங்கு வந்த அவரது நண்பர்கள் லாட்ஜ் ஊழியரின் நடவடிக்கையை கண்டித்தனர். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த 3 பேரும் சேர்ந்து தகாத வார்த்தைகளால் பேசி பீர்பாட்டிலால் லாட்ஜ் ஊழியரை தாக்கி மிரட்டி விட்டு அங்கு இருந்து தப்பி சென்றனர்.

    இதில் காயமடைந்த லாட்ஜ் ஊழியரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாட்ஜ் ஊழியரை தாக்கிய சிங்காநல்லூர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த ஆலன் சாயா(19), நீலிகோணாம்பாளையத்தை சேர்ந்த மோகனசுந்தர்(22), மற்றும் வரதராஜபுரத்தை சேர்ந்த கங்காதரன்(21) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • கண்ணன் மோட்டார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார்.
    • பீரோவில் இருந்த 18 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

    கோவை,

    கோவை சிவானந்தபுரம் கிருஷ்ணா அவென்யூவை சேர்ந்தவர் கண்ணன் (வயது38).

    இவர் மோட்டார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு கண்ணன் தனது மனைவி, குழந்தை மற்றும் தாயுடன் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றார்.

    வீட்டின் முதல் மாடியில் அவரது தந்தை மோகன் தூங்கி கொண்டிருந்தார். அப்போது தரைத்தளத்தின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 18 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

    கண்ணன் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதுகுறித்து கண்ணன் சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார்.

    போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு பதிவாகியிருந்த 3 பேரின் கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபரகளை தேடி வருகின்றனர்.

    இதேபோல், கோவை கணபதி இளங்கோ நகரை சேர்ந்தவர் முஸ்தபா(53). சொந்த தொழில் செய்து வருகிறார். இவரது சகோதரர் ஹசீபா பீளமேடு புரானி காலனியில் வசித்து வருகிறார். இவர் கடந்த 18-ந்தேதி துபாய் சென்றார்.

    நேற்று அவரது உறவினர் ஒருவர் ஹசீபாவின் வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது. இது குறித்து அவர், முஸ்தபாவுக்கு தகவல் கொடுத்தார். அவர் அங்கு சென்று பார்த்த போது, பீரோவில் வைத்திருந்த 10 பவுன் தங்க வளையல், ரூ.50 ஆயிரம் பணம் மற்றும் 5 வாட்சுகள் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த முஸ்தபா பீளமேடு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    • ஆத்து பிள்ளையார் கோவிலில் வைத்து பெருமாளும், வர்ஷாவும் திருமணம் செய்து கொண்டனர்.
    • இன்ஸ்பெக்டர் வைரம், 2 வீட்டு பெற்றோரையும் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்தார்.

    குனியமுத்தூர்,

    கோவை மதுக்கரை மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ். இவரது மகன் பெருமாள் (வயது 25). இவர் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

    இவர் தினமும் மலுமிச்சம்பட்டியில் உள்ள ஒரு உடற்பயிற்சி நிலையத்திற்கு உடற்பயிற்சி செய்ய செல்வது வழக்கம்.

    அப்போது கடந்த 8 மாதங்களுக்கு முன்பு, பெருமாளுக்கு உடற்பயிற்சி நிலையத்திற்கு வரும் மலுமிச்சம்பட்டியை சேர்ந்த வர்ஷா (19) என்ற இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.

    அடிக்கடி பார்த்து கொண்டதால் 2 பேரும் நட்பாக பேசி வந்தனர். நட்பு காதலாக மாறியது. 2 பேரும் பரஸ்பரம் தங்களது செல்போன் எண்ணை மாற்றி கொண்டு செல்போனிலும், அடிக்கடி நேரில் சந்தித்தும் தங்களது காதலை வளர்த்தனர்.

    இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், தங்களது காதலை பெற்றோர் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதனால் நாம் 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ளலாம் என காதல் ஜோடி முடிவு செய்தது.

    அதன்படி நேற்று வர்ஷா தனது தாயிடம் வெளியில் செல்வதாக கூறி விட்டு சென்றார். அவர் நேராக தனது காதலன் பெருமாளை சந்தித்து அவருடன் பேரூருக்கு சென்றார்.

    அங்குள்ள ஆத்து பிள்ளையார் கோவிலில் வைத்து பெருமாளும், வர்ஷாவும் திருமணம் செய்து கொண்டனர். இந்த தகவல் அறிந்தால் தங்கள் பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்பதால் 2 பேரும் நேராக மதுக்கரை போலீஸ் நிலையத்திற்கு சென்று பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் வைரம், 2 வீட்டு பெற்றோரையும் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்தார். இதை கேட்டதும் பதறி போன 2 வீட்டு பெற்றோரும் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர்.

    அங்கு தங்கள் பிள்ளைகள் மாலையும் கழுத்துமாக நிற்பதை பார்த்ததும் 2 வீட்டு பெற்றோருமே அதிர்ச்சியில் உறைந்து போயினர். இதையடுத்து பெண்ணின் பெற்றோர் பெண்ணிடம், வாலிபரின் பெற்றோர் அவரிடம் பேசி பார்த்தனர். ஆனால் 2 பேருமே நாங்கள் மேஜர் ஒன்றாகவே வாழ்வோம் என தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீசார் 2 வீட்டு பெற்றோரிடம் எழுதி வாங்கி கொண்டு, பெண்ணையும், வாலிபரையும், வாலிபரின் பெற்றோருடன் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் போலீஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • மாத வாடகை 15 லட்ச ரூபாய், ஆண்டுதோறும் 10 சதவீத வாடகை உயர்வு என ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
    • ராமச்சந்திரன் உள்பட 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக இன்று கோவை கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி போலீசார் மனுதாக்கல் செய்து உள்ளனர்.

    கோவை,

    கோவை காந்திபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் தலைவர் ராமச்சந்திரன் (வயது72).

    இவரிடம் கடந்த 3 ஆண்டிற்கு முன்பு சென்னையை சேர்ந்த உமா சங்கர்(54) என்பவர் தான் தனது நிறுவன பெயரில் மருத்துவமனை நடத்த விருப்பம் தெரிவித்தார். வயதான காரணத்தினாலும், தொட ர்ந்து மருத்துவமனையை கவனிக்க இயலாததாலும் இதற்கு ராமச்சந்திரன் ஒப்பு கொண்டார்.

    மருத்துவமனை கட்டிடத்தை வாடகை அடிப்படையில் உமாசங்கரிடம் ஒப்படைத்து விட்டதாக தெரிகிறது. மாத வாடகை 15 லட்ச ரூபாய், ஆண்டுதோறும் 10 சதவீத வாடகை உயர்வு என ஒப்பந்தம் மேற்கொள்ளப்ப ட்டதாகவும் கூறப்படுகிறது. உமாசங்கர் பேசியபடி வாடகை தரவில்லை என தெரிகிறது.

    4.95 கோடி ரூபாய் வாடகை பாக்கி தொடர்பாக இரு தரப்பினருக்கும் பிரச்சினை நிலவியது. இந்நிலையில் ராமச்சந்திரன் 100 கோடி ரூபாய் மதிப்பிலான தனது மருத்துவமனையை அபகரிக்க உமாசங்கர் முயற்சிப்பதாக, கொலை மிரட்டல் விடுத்ததாக மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். மேலும் மருத்துவமனை வளாகத்தில் ஒரு கும்பல் புகுந்து அங்கியிருந்தவர்களை தாக்கியதாக தெரிகிறது.

    இது தொடர்பான வீடியோ பதிவும் வெளியானது. இந்த விவகாரம் தொடர்பாக உமாசங்கர், அவரது மேலாளர் மருதவாணன் ஆகியோர் மீது ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே இந்த வழக்கில் ஜாமீன் பெற்ற உமாசங்கர் கண்ணப்ப நகர் பகுதியில் நடந்து சென்ற போது கார் மோதி பலியானார்.

    இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த ஆண்டில் மருத்துவமனையில் நடந்த தாக்குதல் தொடர்பான வழக்கில் மருத்துவமனை தலைவர் ராமச்சந்திரன் நேற்று கைது செய்யப்பட்டார். மேலும் இவருடன் உதவியாளர் காமராஜ் (45), மூர்த்தி (45), முருகேசன் (47), டிரைவர் பழனிசாமி ஆகிய 5 பேரையும் சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் இவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்நிலையில், கைது செய்யப்பட்ட ராமச்சந்திரன் உள்பட 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக இன்று கோவை கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி போலீசார் மனுதாக்கல் செய்து உள்ளனர். விசாரணைக்கு பிறகு எத்தனை நாட்கள் காவல் கொடுக்கப்படும் என்பது தெரியவரும்.

    இவர்களை காவலில் எடுத்து விசாரிக்கும் பட்சத்தில் இந்த விவகாரத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவரும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. மேலும் டாக்டர் உமாசங்கர் விபத்தில்தான் மரணம் அடைந்தாரா? அல்லது மர்மம் உள்ளதா? என்பன போன்ற கேள்விகளுக்கும் விடை கிடைக்கும் என தெரிகிறது.

    • மருத்துவர்கள், ஆசிரியர்களின் அலட்சியமே காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டினர்.
    • குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

    கோவை,

    கோவை மதுக்கரை சர்ச் காலனியை சேர்ந்தவர் பார்த்திபன். இவரது மனைவி– சகாயராணி. இந்த தம்பதிக்கு சவுமியா (13) என்ற மகள் உள்ளார்.

    இவர் கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று கோடை விடுமுறைக்கு பின்பு பள்ளி திறக்கப்பட்டதால், மாணவி உற்சாகத்துடன் பள்ளிக்கு சென்றார்.இந்த நிலையில் பள்ளியில் இருந்து சவுமியாவின் பெற்றோருக்கு போன் வந்தது. அதில் பேசிய நபர்கள், பள்ளியில் இருந்த சவுமியா, மயங்கி விழுந்ததாக தெரிவித்தனர்.

    மேலும் பள்ளியில் இருந்த ஆசிரியர்கள் மாணவியை பள்ளி அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த, சவுமியாவுக்கு மாலை 4 மணிக்கு மேல் இதய துடிப்பு படிப்படியாக குறையத்துவங்கியதாக தெரிகிறது. ஆனால் அடுத்தக்கட்ட சிகிச்சைக்கு அழைத்துச் செல்வதற்குள் சிறுமி உயிரிழந்தாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதையறிந்ததும் சிறுமியின் பெற்றோர் கதறி அழுதனர். மேலும் மாணவியின் உறவினர்களும் ஆஸ்பத்திரி முன்பு குவிந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆஸ்பத்திரி நிர்வாகம் மற்றும், பள்ளி ஆசிரியர்கள் அலட்சியத்தாலேயே இறந்ததாக தெரிவித்தனர்.

    இது குறித்து சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் கூறியதாவது:-

    எனது மகளை இந்த மருத்துவமனைக்கு அழைத்து செல்வதை ஆசிரியர்கள் எங்களிடம் தெரிவிக்கவில்லை. பள்ளியில் இருப்பதாகவே கூறினர். மீண்டும் நீண்ட நேரம் கழித்து அழைத்து தனியார் மருத்துவமனையில் சேர்த்ததாக கூறினார்கள், குழந்தைக்கு பிரச்சனை என்றால் மேல் சிகிச்சைக்கு கோவை அரசு மருத்துவமனை போன்ற பெரிய மருத்துவமனைக்கு அனுப்பிருந்தால் எனது மகளை காப்பாற்றி யிருக்கலாம்.

    ஆனால் அவசர சிகிச்சை பிரிவு கூட இல்லாத இந்த மருத்துவமனையில் சுயநினைவு இல்லாத குழந்தையை 5 மணி நேரம் வைத்துள்ளனர். மருத்து வர்கள் மற்றும் ஆசிரியர்கள் அலட்சியத்தால் தான் எங்க ளது குழந்தை உயிரிழந்தது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்தததும் குனியமுத்துர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவியின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். பின்னர் போலீசார் சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே சிறுமி யின் பெற்றோர் குனிய முத்தூர் போலீசில் ஆஸ்பத்திரி மீதும், பள்ளி நிர்வாகத்தின் மீதும் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமியின் உயிரிழப்பிற்கான காரணம் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான பிறகே தெரியவரும்.

    • கிரிக்கெட் பந்தை எடுக்க முயன்றபோது இந்த விபரீத சம்பவம் நடந்தது.
    • ஞயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் அவர் தனது நண்பர்களுடன் சரவணம்பட்டி அம்மன்நகரில் உள்ள கம்பெனி வளாகத்தில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தார்.

    கோவை,

    ஒடிசாவை சேர்ந்தவர் கார்த்திக் போய் (வயது 31). இவர் கோவை சரவணம்பட்டியில் தங்கி அங்குள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

    இவர் விடுமுறை நாளில் தனது நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவது வழக்கம். இதேபோன்று, ஞயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் அவர் தனது நண்பர்களுடன் சரவணம்பட்டி அம்மன்நகரில் உள்ள கம்பெனி வளாகத்தில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தார்.

    அப்போது பந்தை அடித்த போது கம்பெனியில் மேற்கூரையில் விழுந்தது. இதனை எடுக்க கார்த்திக் போய் மேலே ஏறினார். அப்போது பந்தை எடுக்க முயன்ற போது மேற்கூரை பெயர்ந்து சுமார் 20 அடி உயரத்தில் இருந்து அவர் கீழே விழுந்தார்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் உடனே அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 2-வது மனைவியுடன் புரோக்கரை போலீசார் கைது செய்தனர்.
    • வாலிபர் ஏ.டி.எம் சென்று பணம் எடுத்து வருவதாக கூறி அங்கிருந்து வடவள்ளி போலீஸ் நிலையம் சென்று புகார் கொடுத்தார்.

    கோவை:

    கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த 33 வயது மதிக்கதக்க வாலிபர் ஒருவர் தனது நண்பரை சந்திக்க வடவள்ளியை அடுத்த வேடப்பட்டிக்கு சென்றார்.

    அங்கு மின் வாரிய அலுவலகம் முன்பு தனது நண்பருக்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர், அந்த வாலிபரிடம் எனது வீட்டில் அழகான இளம்பெண்கள் உள்ளனர்.

    உல்லாசம் அனுபவிக்க ஆைசப்பட்டால் அனுபவிக்கலாம் ரூ.550 கொடுத்தால் போதும் என்றார். இதனை கேட்ட அந்த வாலிபர் சரி சென்று கூறி அவருடன் சென்றார்.

    அங்கு சென்ற வாலிபர் அந்த வீட்டையும், அங்கு இருந்த இளம்பெண்களையும் பார்த்தார். பின்னர் அந்த வாலிபர் ஏ.டி.எம் சென்று பணம் எடுத்து வருவதாக கூறி அங்கிருந்து வடவள்ளி போலீஸ் நிலையம் சென்றார்.

    போலீசாரிடம் வேடப்பட்டியில் உள்ள வீட்டில் விபசாரம் நடப்பதாக புகார் அளித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் அங்கு சென்று சோதனை செய்தார்.

    அதில் வீட்டில் கணபதியை சேர்ந்த 36 மற்றும் ஆவராம்பாளையத்தை சேர்ந்த 28 வயது இளம்பெண்களை வைத்து விபசாரம் நடைபெறுவது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த 2 இளம்பெண்களை மீட்டனர்.

    விபசார புரோக்கர்களான வடவள்ளியை அடுத்த வேடப்பட்டியை சேர்ந்த தனசேகரன் (52) மற்றும் அவரது 2-வது மனைவி புங்கொடி (47) ஆகியோரை ைகது செய்தனர். அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இளம்பெண்களை காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    • ரவிக்குமார் மதுக்கரை அடுத்த பாலத்துறையில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் விரைந்து சென்று அவரை கைது செய்தனர்.
    • லியோ மரியா இருதயராஜை ஆக்சாபிளேடால் வெட்டி விட்டு அலுவலகத்தில் இருந்து ரூ.82 லட்சம் பணத்தை எடுத்து கொண்டு காரில் தப்பினார்.

    கோவை:

    கோவை கருமத்தம்பட்டி புதூரை சேர்ந்தவர் லியோ மரியா இருதயராஜ்(53). இவர் கோவையில் உள்ள ஒரு ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். அந்த ரியல் எஸ்டேட் சார்பில் விளாங்குறிச்சி ஜீவா நகர் அருகே வீட்டுமனை பிரிக்கப்பட்டு அங்கு தற்காலிக அலுவலகம் உள்ளது.

    கடந்த 9-ந் தேதி அந்த அலுவலகத்துக்கு அதே ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் புரோக்கராக பணியாற்றும் ரவிக்குமார் என்ற கென்னடி(45) வந்தார். அவர் திடீரென்று லியோ மரியா இருதயராஜை ஆக்சாபிளேடால் வெட்டி விட்டு அலுவலகத்தில் இருந்து ரூ.82 லட்சம் பணத்தை எடுத்து கொண்டு காரில் தப்பினார்.

    இதுகுறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவிக்குமாரை தேடி வந்தனர். இந்த நிலையில் ரவிக்குமார் மதுக்கரை அடுத்த பாலத்துறையில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் விரைந்து சென்று அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ. 23 லட்சம் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

    போலீசாரிடம் ரவிக்குமார் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    நான் பல பேரிடம் கடன் வாங்கியிருந்தேன். பணம் கேட்டு அவர்கள் எனக்கு நெருக்கடி கொடுத்தனர். இதனால் அந்த கடனை எப்படி திருப்பி கொடுப்பது என யோசித்து வந்தேன்.

    அப்ேபாது தான் நான் வேலை செய்யும ரியல்எஸ்டேட் அலுவலகத்தின் மேலாளரிடம் ரூ.82 லட்சம் இருப்பதை அறிந்தேன். அதை பறிக்க திட்டமிட்டேன். அதன்படி சம்பவத்தன்று அலுவலகத்துக்கு சென்றபோது, மேலாளர் மட்டுமே இருந்தார். இதுதான் சரியான நேரம் என்று நினைத்து நான் வைத்திருந்த ஆக்சா பிளேடால் அவரை வெட்டினேன். இதில் காயம் அடைந்த அவர் அப்படியே கீழே விழுந்தார். உடனே நான் 82 லட்சம் பணத்தை பறித்துக் கொண்டு நான் வந்த காரில் ஏறி தப்பினேன். அந்த பணத்தை கொண்டு நான் கடன் வாங்கியவர்களுக்கு திருப்பி கொடுத்தேன். மீதி பணத்தை வைத்துக் கொண்டு பாலத்துறை அருகே வந்த போது போலீசார் என்னை கைது செய்து விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதற்கிடையே போலீசார் ரவிக்குமாரை காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

    இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

    கைதான ரவிக்குமார் சுமார் 10 பேரிடம் கடன் வாங்கியிருப்பதாக தெரிகிறது. மேலும் வீட்டுமனை மற்றும் வீடு வாங்கி தருகிறேன் என பலரிடம் அவர் கடன் வாங்கியிருக்கிறார். இதற்காக அவர்களுக்கு எழுதியும் கொடுத்திருக்கிறார். அவர் பறித்துச் சென்ற 82 லட்ச ரூபாயில் கடன் வாங்கிய சிலருக்கு கடனை திருப்பி கொடுத்ததாக கூறியிருக்கிறார். அவர் கூறுவது உண்மைதானா என்பதை சரிபார்ப்பதற்காக சிலரிடம் நாங்கள் விசாரித்த போது அவர்களும் அதை ஒப்புக் கொண்டுள்ளனர். இருந்தபோதிலும் ரவிக்குமாருக்கு கடன் கொடுத்தவர்கள் மற்றும் பணத்தை திருப்பி வாங்கியவர்களை போலீஸ் நிலையத்துக்கு வருமாறு கூறியுள்ளோம். ரவிக்குமார் அவர்களிடம் கடன் வாங்கினாரா? அதற்கான ஆதாரம் உள்ளதா? என்று அவர்களிடம் விசாரணை நடத்த உள்ளோம். இதற்கிடையில் ரவிக்குமாரையும் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியுள்ளது. அப்போது தான் இதில் உண்மையான விவரங்கள் தெரியவரும்

    ×