search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "3 men assaulted"

    • 20 வயது வாலிபர் சிங்காநல்லூரில் உள்ள லாட்ஜில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
    • லாட்ஜ் ஊழியர் அந்த வாலிபரிடம் அநாகரீகமான முறையில் நடந்து கொண்டார் .

    கோவை,

    கோவை வரதராஜ புரத்தை சேர்ந்தவர் 20 வயது வாலிபர். இவர் சிங்காநல்லூரில் உள்ள லாட்ஜில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    இருவரும் இன்ஸ்டாகிராம் மூலம் பழகினர். இந்தநிலையில், ஓரின சேர்க்கையாளரான லாட்ஜ் ஊழியர் அந்த வாலிபரிடம் நாம் இருவரும் தனிமையில் ஜாலியாக இருக்கலாம் என கூறி அழைத்தார்.

    அவர்கள் நீலிகோணாம்பாளையம் ரெயில்வே கேட் அருகே சந்திக்க முடிவு செய்தனர். அதன்படி லாட்ஜ் ஊழியர் அங்கு சென்று வாலிபரின் வருகைக்காக காத்திருந்தார்.

    சிறிது நேரத்தில் அங்கு அவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான அந்த வாலிபர் வந்தார். இருவரும் பேசி கொண்டிருந்தனர்.

    அப்போது லாட்ஜ் ஊழியர் அந்த வாலிபரிடம் அநாகரீகமான முறையில் நடந்து கொண்டார் . இதனால் அந்த வாலிபர் அவரது நண்பர்கள் 2 பேரை அங்கு வரவழைத்தார்.

    அங்கு வந்த அவரது நண்பர்கள் லாட்ஜ் ஊழியரின் நடவடிக்கையை கண்டித்தனர். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த 3 பேரும் சேர்ந்து தகாத வார்த்தைகளால் பேசி பீர்பாட்டிலால் லாட்ஜ் ஊழியரை தாக்கி மிரட்டி விட்டு அங்கு இருந்து தப்பி சென்றனர்.

    இதில் காயமடைந்த லாட்ஜ் ஊழியரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாட்ஜ் ஊழியரை தாக்கிய சிங்காநல்லூர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த ஆலன் சாயா(19), நீலிகோணாம்பாளையத்தை சேர்ந்த மோகனசுந்தர்(22), மற்றும் வரதராஜபுரத்தை சேர்ந்த கங்காதரன்(21) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    ×