என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கோவையில் லாட்ஜ் ஊழியரை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து தாக்கிய 3 பேர் கும்பல்
- 20 வயது வாலிபர் சிங்காநல்லூரில் உள்ள லாட்ஜில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
- லாட்ஜ் ஊழியர் அந்த வாலிபரிடம் அநாகரீகமான முறையில் நடந்து கொண்டார் .
கோவை,
கோவை வரதராஜ புரத்தை சேர்ந்தவர் 20 வயது வாலிபர். இவர் சிங்காநல்லூரில் உள்ள லாட்ஜில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இருவரும் இன்ஸ்டாகிராம் மூலம் பழகினர். இந்தநிலையில், ஓரின சேர்க்கையாளரான லாட்ஜ் ஊழியர் அந்த வாலிபரிடம் நாம் இருவரும் தனிமையில் ஜாலியாக இருக்கலாம் என கூறி அழைத்தார்.
அவர்கள் நீலிகோணாம்பாளையம் ரெயில்வே கேட் அருகே சந்திக்க முடிவு செய்தனர். அதன்படி லாட்ஜ் ஊழியர் அங்கு சென்று வாலிபரின் வருகைக்காக காத்திருந்தார்.
சிறிது நேரத்தில் அங்கு அவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான அந்த வாலிபர் வந்தார். இருவரும் பேசி கொண்டிருந்தனர்.
அப்போது லாட்ஜ் ஊழியர் அந்த வாலிபரிடம் அநாகரீகமான முறையில் நடந்து கொண்டார் . இதனால் அந்த வாலிபர் அவரது நண்பர்கள் 2 பேரை அங்கு வரவழைத்தார்.
அங்கு வந்த அவரது நண்பர்கள் லாட்ஜ் ஊழியரின் நடவடிக்கையை கண்டித்தனர். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த 3 பேரும் சேர்ந்து தகாத வார்த்தைகளால் பேசி பீர்பாட்டிலால் லாட்ஜ் ஊழியரை தாக்கி மிரட்டி விட்டு அங்கு இருந்து தப்பி சென்றனர்.
இதில் காயமடைந்த லாட்ஜ் ஊழியரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாட்ஜ் ஊழியரை தாக்கிய சிங்காநல்லூர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த ஆலன் சாயா(19), நீலிகோணாம்பாளையத்தை சேர்ந்த மோகனசுந்தர்(22), மற்றும் வரதராஜபுரத்தை சேர்ந்த கங்காதரன்(21) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்