search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓய்வு பெற்ற அரசு பஸ் கண்டக்டர் வீட்டில்  நகை கொள்ளை
    X

    ஓய்வு பெற்ற அரசு பஸ் கண்டக்டர் வீட்டில் நகை கொள்ளை

    • வீட்டுக்குள் இருந்த பீரோ மற்றும் மேஜை ஆகியவை உடைக்கப்பட்டு அதில் தங்க மற்றும் வெள்ளி நகைககள் கொள்ளையடி க்கப்பட்டு இருந்தன.
    • கொள்ளை தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது.

    கோவை

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் வீட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று ள்ளனர். பொள்ளாச்சி சேரன் நகர் லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் குழந்தைவேல் (வயது 68). அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி கலைச்செல்வி (61). மகன் விஷ்ணு (32).

    குழந்தைவேலின் மூத்த மகள் கவிதா என்பவர் கோவை தண்ணீர் பந்தல் பகுதியில் புதிதாக வீடு கட்டி உள்ளார். அந்த வீட்டின் புதுமனை புகுவிழா நடந்தது. இதற்காக குழந்தைவேல், வீட்டை பூட்டி விட்டு விழாவுக்கு சென்று விட்டார்.

    4 நாட்களுக்கு பிறகு பொள்ளாச்சிக்கு திரும்பிச் சென்றார். அங்கு அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. வீட்டுக்குள் இருந்த பீரோ மற்றும் மேஜை ஆகியவை உடைக்கப்பட்டு அதில் தங்க மற்றும் வெள்ளி நகைககள் கொள்ளையடி க்கப்பட்டு இருந்தது. கம்மல், செயின், தங்க நாணயம், வளையல் உள்பட 10¾ பவுன் தங்க நகையும், வெள்ளி குங்கும சிமிழ், சந்தன கிண்ணம் ஆகிய வையும் கொள்ளை போய் இருந்தது.

    இதுபற்றி பொள்ளாச்சி மகாலிங்கபுரம் போலீஸ்நி லையத்தில் குழந்தைவேல் புகார் செய்தார். இன்ஸ்பெ க்டர் வெங்கடேசன் நேரில் சென்று விசாரணை மேற்ெகாண்டார். தொடர்ந்து கொள்ளை தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது.

    Next Story
    ×