search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "of jewelery and cash were stolen"

    • கண்ணன் மோட்டார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார்.
    • பீரோவில் இருந்த 18 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

    கோவை,

    கோவை சிவானந்தபுரம் கிருஷ்ணா அவென்யூவை சேர்ந்தவர் கண்ணன் (வயது38).

    இவர் மோட்டார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு கண்ணன் தனது மனைவி, குழந்தை மற்றும் தாயுடன் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றார்.

    வீட்டின் முதல் மாடியில் அவரது தந்தை மோகன் தூங்கி கொண்டிருந்தார். அப்போது தரைத்தளத்தின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 18 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

    கண்ணன் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதுகுறித்து கண்ணன் சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார்.

    போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு பதிவாகியிருந்த 3 பேரின் கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபரகளை தேடி வருகின்றனர்.

    இதேபோல், கோவை கணபதி இளங்கோ நகரை சேர்ந்தவர் முஸ்தபா(53). சொந்த தொழில் செய்து வருகிறார். இவரது சகோதரர் ஹசீபா பீளமேடு புரானி காலனியில் வசித்து வருகிறார். இவர் கடந்த 18-ந்தேதி துபாய் சென்றார்.

    நேற்று அவரது உறவினர் ஒருவர் ஹசீபாவின் வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது. இது குறித்து அவர், முஸ்தபாவுக்கு தகவல் கொடுத்தார். அவர் அங்கு சென்று பார்த்த போது, பீரோவில் வைத்திருந்த 10 பவுன் தங்க வளையல், ரூ.50 ஆயிரம் பணம் மற்றும் 5 வாட்சுகள் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த முஸ்தபா பீளமேடு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    ×