search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வடமாநில வாலிபர் பலி"

    • காவிரி ரெயில் பாலத்தில் ஆணின் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு அடுத்த காவிரி ரெயில் பாலத்தில் சம்பவத்தன்று 40 வயது மதிக்கத்தக்க ஆணின் உடல் கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? போன்ற விவரம் தெரியவில்லை.

    போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் ரெயில் வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தை கடந்த போது ரெயில் மோதி இறந்தது தெரிய வந்தது.

    இறந்தவர் வலது கையில் இந்தியில் டேட்டோ குத்தப்பட்டுள்ளது. எனவே அவர் வட மாநில வாலிபராக இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

    இது குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேடபட்டி ஒத்தக்கண் பாலம் அருகே இன்று காலை ரெயிலில் அடிபட்டு ஒரு வாலிபர் இறந்து கிடப்பதாக போலீ சாருக்கு தகவல் கிடைத்தது.
    • ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் வேடபட்டி ஒத்தக்கண் பாலம் அருகே இன்று காலை ரெயிலில் அடிபட்டு ஒரு வாலிபர் இறந்து கிடப்பதாக போலீ சாருக்கு தகவல் கிடைத்தது. இதனைதொடர்ந்து ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் விசாரணையில் இறந்த வாலிபர் மேற்குவங்க மாநிலம் கோத்ராவை சேர்ந்த அலாவுதீன் சகாஜி(24) என தெரியவந்தது. இவர் திண்டுக்கல்லில் தங்கி வேலை பார்த்தவரா அல்லது வெளியூர் செல்லும்போது தவறிவிழுந்தாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    • கிரிக்கெட் பந்தை எடுக்க முயன்றபோது இந்த விபரீத சம்பவம் நடந்தது.
    • ஞயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் அவர் தனது நண்பர்களுடன் சரவணம்பட்டி அம்மன்நகரில் உள்ள கம்பெனி வளாகத்தில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தார்.

    கோவை,

    ஒடிசாவை சேர்ந்தவர் கார்த்திக் போய் (வயது 31). இவர் கோவை சரவணம்பட்டியில் தங்கி அங்குள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

    இவர் விடுமுறை நாளில் தனது நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவது வழக்கம். இதேபோன்று, ஞயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் அவர் தனது நண்பர்களுடன் சரவணம்பட்டி அம்மன்நகரில் உள்ள கம்பெனி வளாகத்தில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தார்.

    அப்போது பந்தை அடித்த போது கம்பெனியில் மேற்கூரையில் விழுந்தது. இதனை எடுக்க கார்த்திக் போய் மேலே ஏறினார். அப்போது பந்தை எடுக்க முயன்ற போது மேற்கூரை பெயர்ந்து சுமார் 20 அடி உயரத்தில் இருந்து அவர் கீழே விழுந்தார்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் உடனே அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×