search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tiruvottiyur Accident"

    • விபத்து குறித்து திருவொற்றியூர் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • விபத்து ஏற்படும் பதைபதைக்கும் காட்சி அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ளது.

    திருவொற்றியூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் ரகு (வயது 19). இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக திருவொற்றியூர் பெரியார் நகரில் தங்கி எல்லையம்மன் கோவில் அருகே எலக்ட்ரானிக்ஸ் கடையில் வேலை பார்த்து வந்தார்.

    நேற்று இரவு அவர் வீட்டில் இருந்து கடைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது முன்னால் மணலியில் இருந்து பிராட்வே நோக்கி சென்ற மாநகர பஸ்சை (56டி) இடது புறமாக முந்தி செல்ல முயன்றார். அப்போது சாலையோரத்தில் சென்ற சரக்கு ஏற்றி செல்லும் சைக்கிளின் மீது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மோதியது. இதில் நிலை தடுமாறிய ரகு மோட்டார் சைக்கிளோடு சாலையில் விழுந்தார்.

    அப்போது பின்னால் வந்த மாநகர பஸ்சின் சக்கரத்தில் அவர் சிக்கிக்கொண்டார். இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக பலியானார். இதுகுறித்து திருவொற்றியூர் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் விபத்து ஏற்படும் பதைபதைக்கும் காட்சி அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ சமூகவலை தளத்தில் பரவி வருகிறது.

    ×