search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காதல் ஜோடி தஞ்சம்"

    • பாதுகாப்பு கேட்டு போலீசாரிடம் கோரிக்கை
    • ஆனைமலை போலீசார் காதலர்களிடம் விசாரணை

    கோவை,

    புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் கொடிக்காள் வீதியை சேர்ந்தவர் சாகுல் அமீது. இவரது மகள் ஆப்லின் பானு (வயது 20). கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு திருவள்ளுவர் நகரை சேர்ந்த செந்தில்குமார் என்பவரது மகன் நந்திஸ்வரன் (22) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போனில் பேசியும் காதலை வளர்த்து வந்தனர்இந்த காதல் விவகாரம் ஆப்லின் பானுவின் வீட்டிற்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனால் காதலை பிரிந்து விடுவார்கள் என்ற பயத்தில் இருந்த காதலர்கள் வீட்டை விட்டு வெளி யேறுவது என முடிவு செய்தனர். அதன்படி 2 பேரும் கடந்த 4-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறி ஈரோட்டிற்கு சென்றனர். பின்னர் ஈரோட்டில் இருந்து கேரள மாநிலம் பாலக்காட்டிற்கு சென்றனர். தங்களது மகள் மாயமானது குறித்து ஆப்லின் பானுவின் பெற்றோர் அந்த பகுதியில் உள்ள போலீசில் புகார் செய்தனர்.

    புகாரின் பேரில் போலீசார் அவரை தேடி வந்தனர். போலீசார் தேடுவதை தெரிந்து கொண்ட காதல் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம் அடைவது என முடிவு செய்தனர். அதன்படி 2 பேரும் கோவை மாவட்டம் ஆனைமலை போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் காதலர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி போலீசில் தஞ்சமடைந்தனர்.
    • 2 பேரும் மேஜர் என்பதால் அவர்கள் விருப்பப்படி செல்லலாம் என அறிவுறை கூறி அனுப்பி வைத்தனர்.

    வடமதுரை:

    எரியோடு அருகே கோவிலூர் கணபதிபுரம் குறிகோடாங்கி பட்டியைச் சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 25). பட்டதாரி வாலிபர். இவருக்கும் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நிவேதா (வயது 20) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது.

    கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி வீராப்பூர் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் பாதுகாப்பு கேட்டு வடமதுரை போலீஸ் நிலை யத்தில் தஞ்சமடைந்தனர். போலீசார் இரு தரப்பின ரையும் அழைத்து சமரச பேச்சு வார்த்தை நடத்தினர்.

    மேலும் 2 பேரும் மேஜர் என்பதால் அவர்கள் விருப்பப்படி செல்லலாம் என அறிவுறை கூறி அனுப்பி வைத்தனர்.

    • வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்
    • 6 வருடங்களாக காதலித்து வந்தனர்

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த மானாமதுரை கிராமத்தில் வசித்து வரும் ஆறுமுகம் என்பவரின் மகன் அரிகிருஷ்ணன்(28).எம்.காம் படித்துவிட்டு தற்போது தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.

    இவரும் காஞ்சிபுரம் மாவட்டம், வேளியூர் கிராமத்தில் வசித்து வரும் மணிகண்டன் மகள் சாந்தி(23) என்பவரும் கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியது.இந்நிலையில் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டனர்.

    வெவ்வேறு சமூகத்தை சார்ந்தவர்கள் என்பதால் தங்கள் உயிருக்கு பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்தில் நேற்று நெமிலி போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் புகுந்தனர். தொடர்ந்து நெமிலி போலீசார் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    • 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்
    • போலீசார் கணவனுடன் அனுப்பி வைத்தனர்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அடுத்த வெள்ளநாயக்கனேரி பகுதியைச் சேர்ந்தவர் கிருபதாஸ். இவரது மகள் கீர்த்தனா (வயது 19). இவருக்கும் நாட்டறம்பள்ளி மகாத்மா காந்தி தெருவைச் சேர்ந்தவர் மகி என்பவரின் மகன் வெற்றிவேல் (வயது 22) என்பவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

    இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 14-ந் தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி பச்சூர் அருகேசாமுண்டீஸ்வரி கோவிலில் திருமணம் செய்து கொண்டு கோவைக்கு சென்றுவிட்டனர்.

    இந்த நிலையில் கீர்த்தனாவுடைய தந்தை கிருபதாஸ் தன் னுடைய மகளை காணவில்லை என நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதுகுறித்து நாட் டறம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் தன்னை தேடுவதை அறிந்த கீர்த்தனா நேற்று நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் காதல் கணவனுடன் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தார்.

    பின்னர் போலீசார் பெற்றோர்களை போலீஸ் நிலையத் துக்கு வரவழைத்து அறிவுரை வழங்கினர். அப்போது இருவரும் மேஜர் என்பதால் காதல் திருமணம் செய்து கொண்டனர். எனகூறி காதல் கணவனுடன் கீர்த்தனாவை அனுப்பி வைத்தனர்.

    • சசிக்குமார் (22). ராசிபுரம் அடுத்த பாச்சல் தனியார் கல்லூரியில் பி.இ. 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
    • இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. மேலும் ஒரே தெருவில் வசித்து வந்ததால் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

    அன்னதானப்பட்டி:

    சேலம் நெத்திமேடு கே.பி. கரடு பகுதியை சேர்ந்தவர் சசிக்குமார் (22). ராசிபுரம் அடுத்த பாச்சல் தனியார் கல்லூரியில் பி.இ. 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் ஷாலினி (20). இவர் சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. மேலும் ஒரே தெருவில் வசித்து வந்ததால் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

    நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்துள்ளனர்.

    இவர்களது காதல் விவகாரம் தெரிந்து இருதரப்பு வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியது. இதைத் தொடர்ந்து வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

    இந்த நிலையில் நேற்று நாமக்கல் நரசிம்மர், ஆஞ்சநேயர் கோவிலில் வைத்து இருவரும் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து பாதுகாப்பு கேட்டு இரவு அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இது தொடர்பாக அவர்களின் பெற்றோரை அழைத்து போலீசார் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து காதல் ஜோடியை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

    • காதல் ஜோடியினர் வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
    • போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

    கோபி:

    திருப்பூர் மாவட்டம் முத்தூ ரை சேர்ந்தவர் அங்கு ராஜ். இவருடைய மகள் சுபாஷினி (21). விஜயமங்க லத்தை சேர்ந்தவர் பஞ்சு ராஜ். இவரது மகன் யஸ்வந்த்ராஜ். இவரும் சுபாஷினி ஆகிய இருவரும் காங்கே யத்தில் உள்ள வெவ்வேறு தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்து வருகிறார் கள்.

    இந்த நிலையில் அவர்கள் காங்கேயம் வந்து சென்ற போது அவர்களுக்கிடையே பழக்கம் ஏற்பட்டது. இது அவர்களுக்குள் காதலாக மாறியது. இதையடுத்து அவர்கள் 2 பேரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இது குறித்து அவர்களின் பெற்றோருக்கு தெரிய வந்தது. இதற்கு அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    இந்த நிலையில் காதல் ஜோடியினர் யஸ்வந்த் ராஜ், சுபாஷினி ஆகியோர் வீட்டை விட்டு வெளியேறி கோபி செட்டிபாளைய த்தில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இதை தொடர்ந்து அவர்கள் கோபிசெட்டி பாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

    இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரின் பெற்றோரையும் போலீஸ் நிலையத்துக்கு வரவ ழைத்து பேசினர். இதில் யஸ்வந்த் ராஜ் வீட்டில் அவரது திரு மணத்தை ஏற்று கொண்ட னர்.

    இதையடுத்து காதல் ஜோடியை அவர்களுடன் போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

    • இருவரும் திருப்பூரில் உள்ள ஒரு ஜவுளி நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர்.
    • வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    நாமக்கல்:

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி தாலுகா மொரட்டுபாளையம் அடுaத்த தொட்டியவளவு பகுதியை சேர்ந்த கந்தசாமி மகன் கலைச்செல்வன்(28). ஊத்துக்குளி சிவசக்தி நகரை சேர்ந்த சீனிவாசன் மகள் தனலட்சுமி (24).காதலர்களான இருவரும் திருப்பூரில் உள்ள ஒரு ஜவுளி நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் திருமணம் செய்ய வீட்டை விட்டு வெளியேறிய இருவரும், பாதுகாப்பு கேட்டு நாமக்கல் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்து உள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து இருவீட்டாரும் நாமக்கல் போலீஸ் நிலையத்திற்கு வந்துள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆத்து பிள்ளையார் கோவிலில் வைத்து பெருமாளும், வர்ஷாவும் திருமணம் செய்து கொண்டனர்.
    • இன்ஸ்பெக்டர் வைரம், 2 வீட்டு பெற்றோரையும் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்தார்.

    குனியமுத்தூர்,

    கோவை மதுக்கரை மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ். இவரது மகன் பெருமாள் (வயது 25). இவர் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

    இவர் தினமும் மலுமிச்சம்பட்டியில் உள்ள ஒரு உடற்பயிற்சி நிலையத்திற்கு உடற்பயிற்சி செய்ய செல்வது வழக்கம்.

    அப்போது கடந்த 8 மாதங்களுக்கு முன்பு, பெருமாளுக்கு உடற்பயிற்சி நிலையத்திற்கு வரும் மலுமிச்சம்பட்டியை சேர்ந்த வர்ஷா (19) என்ற இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.

    அடிக்கடி பார்த்து கொண்டதால் 2 பேரும் நட்பாக பேசி வந்தனர். நட்பு காதலாக மாறியது. 2 பேரும் பரஸ்பரம் தங்களது செல்போன் எண்ணை மாற்றி கொண்டு செல்போனிலும், அடிக்கடி நேரில் சந்தித்தும் தங்களது காதலை வளர்த்தனர்.

    இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், தங்களது காதலை பெற்றோர் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதனால் நாம் 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ளலாம் என காதல் ஜோடி முடிவு செய்தது.

    அதன்படி நேற்று வர்ஷா தனது தாயிடம் வெளியில் செல்வதாக கூறி விட்டு சென்றார். அவர் நேராக தனது காதலன் பெருமாளை சந்தித்து அவருடன் பேரூருக்கு சென்றார்.

    அங்குள்ள ஆத்து பிள்ளையார் கோவிலில் வைத்து பெருமாளும், வர்ஷாவும் திருமணம் செய்து கொண்டனர். இந்த தகவல் அறிந்தால் தங்கள் பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்பதால் 2 பேரும் நேராக மதுக்கரை போலீஸ் நிலையத்திற்கு சென்று பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் வைரம், 2 வீட்டு பெற்றோரையும் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்தார். இதை கேட்டதும் பதறி போன 2 வீட்டு பெற்றோரும் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர்.

    அங்கு தங்கள் பிள்ளைகள் மாலையும் கழுத்துமாக நிற்பதை பார்த்ததும் 2 வீட்டு பெற்றோருமே அதிர்ச்சியில் உறைந்து போயினர். இதையடுத்து பெண்ணின் பெற்றோர் பெண்ணிடம், வாலிபரின் பெற்றோர் அவரிடம் பேசி பார்த்தனர். ஆனால் 2 பேருமே நாங்கள் மேஜர் ஒன்றாகவே வாழ்வோம் என தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீசார் 2 வீட்டு பெற்றோரிடம் எழுதி வாங்கி கொண்டு, பெண்ணையும், வாலிபரையும், வாலிபரின் பெற்றோருடன் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் போலீஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • ஆலங்காயத்தில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்
    • பெற்றோரையும் நேரில் அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.

    ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி கிராமத்தை சேர்ந்தவர் கல்யாணராமன். இவரது மகள் ஆர்த்தி (வயது 19). ஆர்த்தியும், திருப்பத்தூர் அடுத்த கொரட்டி தண்டூர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (25) என்பவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர்.

    பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி ஆலங்காயத்தில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து காதல்ஜோடி விக்னேஷ் மற்றும் ஆர்த்தி பாதுகாப்பு கேட்டு, ஜோலார்பேட்டை போலீசில் தஞ்சம் அடைந்தனர். இதன் எடுத்து போலீசார் 2 பேரின் பெற்றோரையும் நேரில் அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். இதனால் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • வீட்டிலிருந்து கடைக்கு செல்வதாக கூறிச் சென்றவர் பின்பு வீடு திரும்பவில்லை.
    • பெற்றோருடன் செல்ல மறுத்து தனது காதல் கணவருடன் செல்வதாக தெரிவித்தார்.

    ஏரியூர்,

    தருமபுரி மாவட்டம், ஏரியூர் அருகே உள்ள சிடுவம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரன். இவரது மகள் காவியா (வயது19). இவர் ஏரியூர் தனியார் கலைக்கல்லூரியில் பி.ஏ விலங்கியல் இரண்டா மாண்டு படித்து வருகிறார்.

    இவர் கடந்த ஞாயிற்று க்கிழமை வீட்டிலிருந்து கடைக்கு செல்வதாக கூறிச் சென்றவர் பின்பு வீடு திரும்பவில்லை.

    இதையடுத்து அவரது தந்தை சந்திரன் ஏரியூர் போலீசில் புகார் கொடுத்திருந்தார். கல்லூரி மாணவி மாயமானது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து காணாமல் போன காவி யாவைத் தேடி வந்தனர்.

    இந்நிலையில் கல்லூரி மாணவி காவியா, அதே கல்லூரியில் பி.ஏ தமிழ் இரண்டாமாண்டு படித்து வரும் ஏரியூர் அருகே உள்ள காணிக்காடு கிராமத்தைச் சேர்ந்த சத்யராஜ் என்பவரின் மகனான கண்ணன் (23) என்பவரை காதலித்து வந்ததாகவும், அவரைத் திருமணம் செய்து கொள்ள காவியாவின் பெற்றோர் சம்மதிக்க வில்லை என்பதால், இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டதாகக் கூறி நேற்று ஏரியூர் போலீசில் தஞ்சமடைந்தனர்.

    காவியா தனது பெற்றோருடன் செல்ல மறுத்து தனது காதல் கணவருடன் செல்வதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து ஏரியூர் போலீசார் காவியாவை அவரது கணவர் கண்ண னுடன் அனுப்பி வைத்தனர்.

    ஏரியூர் தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவனும் மாணவியும், காதல் திருமணம் செய்து கொண்டு, ஏரியூர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த சம்பவம் இந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்
    • பெற்றோருக்கு போலீசார் அறிவுரை வழங்கினர்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அடுத்த ஏலாரப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சென்றாயன். இவ ரது மகன் விக்ரம் (வயது 22), அந்தப்பகுதியில் உள்ள ஊது பத்தி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

    இவரும், மல்லபள்ளி பகுதியைச் சேர்ந்த கோபால் என்பவரது மகள் சினேகாவும் (20) கடந்த 4 வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களுடைய காதலுக்கு சினேகா வீட்டில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் சினேகா மற்றும் விக்ரம் ஆகிய இருவரும் நேற்று காலை வீட்டை விட்டு வெளியேறி நாட்டறம்பள்ளி அருகே உள்ள அக்ராகரம் பகுதியில் சாமுண்டீஸ்வரி கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவரும் நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு சென்று பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். சப்- இன்ஸ்பெக்டர் சுபாஷினி மற்றும் போலீசார் இருவரின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் பெண் வீட்டார் வரவில்லை. அதைத்தொடர்ந்து விக்ரம் பெற்றோருக்கு அறிவுரை வழங்கி அனுப்பி வைத் தனர்.

    • 2 வருடமாக காதலித்து வந்துள்ளனர்.
    • இருவரும் கடந்த 22-ந் தேதி பெங்களுருவில் உள்ள ஒரு கோவிலில் நண்பர்கள் உதவியுடன் திருமணம் செய்து கொண்டனர்.

    தருமபுரி, 

    தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே சொரக்காப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் கோவிந்தசாமி. இவர் பெங்களுருவில் ஒரு தனியார் மருத்துவமனையில் ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும், அதே மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்த ஐஸ்வர்யாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது.

    இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் கடந்த 2 வருடமாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.

    இதனையடுத்து இவர்கள் இருவரும் கடந்த 22-ந் தேதி பெங்களுருவில் உள்ள ஒரு கோவிலில் நண்பர்கள் உதவியுடன் திருமணம் செய்து கொண்டு கோவிந்தசாமியின் சொந்த ஊரான சொரக்காப்பட்டி கிராமத்தில் வசித்து வந்துள்ளனர்.

    இந்நிலையில் ஐஸ்வர்யாவின் பெற்றோர்கள் பெங்களுரு காவல் நிலையத்தில் தனது மகளை கோவிந்தசாமி கடத்தி சென்றுவிட்டதாக புகார் அளித்துள்ளனர். இதையறிந்த ஐஸ்வர்யா மற்றும் கோவிந்தசாமி இருவரும் நேற்று மாலை தருமபுரி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்து புகார் மனு அளித்துள்ளனர்.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×