என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் ஒரே நாளில் 2 காதல் ஜோடி தஞ்சம்
- பேய்குளம் பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜ் மற்றும் தேர்க்கன்குளம் பகுதியை சேர்ந்த சேர்மலட்சுமி என்ற இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர்.
- போலீசார் இரு தரப்பினரின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
சாத்தான்குளம்:
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பேய்குளம் பகுதியை சேர்ந்த முத்துமாரி என்ற பெண்ணும், கருங்கடல் பகுதியை சேர்ந்த சாத்தராக் என்ற வாலிபரும் காதலித்து வந்துள்ளனர்.
இருவரும் கடந்த 8-ம் தேதி மாயமாகினர். இது தொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சாத்தான்குளம் போலீசார் புகாரை பதிவு செய்து இருவரையும் தேடி வந்த நிலையில் நேற்று மாலை சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் சாத்தராக் மற்றும் முத்துமாரி தம்பதியினர் வந்தனர். அவர்கள் தங்கள் இருவருக்கும் பதிவு திருமணம் நடைபெற்றதாகவும், தற்போது காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் போலீசாரிடம் கூறினர்.
இதன் அடிப்படையில் இருவரின் குடும்பத்தினரையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி திருமணம் செய்த இருவரும் மேஜர் என்பதால் அவர்கள் விருப்பத்தின் பேரில் இருவரையும் அனுப்பி வைத்தனர்.
பேய்குளம் பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜ் மற்றும் தேர்க்கன்குளம் பகுதியை சேர்ந்த சேர்மலட்சுமி என்ற இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் 2 பேரும் கடந்த 8-ம் தேதி தங்களது வீட்டை விட்டு வெளியே சென்று உள்ளனர். அது குறித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் தேடி வந்தனர்.
இந்த நிலையில் இந்த இருவரும் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். உடனே போலீசார் இரு தரப்பினரின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இருவரும் மேஜர் என்பதால் சாத்தான்குளம் போலீசார் அவர்கள் இருவருக்கும் அறிவுரை கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்