என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஏரியூர் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
- வீட்டிலிருந்து கடைக்கு செல்வதாக கூறிச் சென்றவர் பின்பு வீடு திரும்பவில்லை.
- பெற்றோருடன் செல்ல மறுத்து தனது காதல் கணவருடன் செல்வதாக தெரிவித்தார்.
ஏரியூர்,
தருமபுரி மாவட்டம், ஏரியூர் அருகே உள்ள சிடுவம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரன். இவரது மகள் காவியா (வயது19). இவர் ஏரியூர் தனியார் கலைக்கல்லூரியில் பி.ஏ விலங்கியல் இரண்டா மாண்டு படித்து வருகிறார்.
இவர் கடந்த ஞாயிற்று க்கிழமை வீட்டிலிருந்து கடைக்கு செல்வதாக கூறிச் சென்றவர் பின்பு வீடு திரும்பவில்லை.
இதையடுத்து அவரது தந்தை சந்திரன் ஏரியூர் போலீசில் புகார் கொடுத்திருந்தார். கல்லூரி மாணவி மாயமானது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து காணாமல் போன காவி யாவைத் தேடி வந்தனர்.
இந்நிலையில் கல்லூரி மாணவி காவியா, அதே கல்லூரியில் பி.ஏ தமிழ் இரண்டாமாண்டு படித்து வரும் ஏரியூர் அருகே உள்ள காணிக்காடு கிராமத்தைச் சேர்ந்த சத்யராஜ் என்பவரின் மகனான கண்ணன் (23) என்பவரை காதலித்து வந்ததாகவும், அவரைத் திருமணம் செய்து கொள்ள காவியாவின் பெற்றோர் சம்மதிக்க வில்லை என்பதால், இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டதாகக் கூறி நேற்று ஏரியூர் போலீசில் தஞ்சமடைந்தனர்.
காவியா தனது பெற்றோருடன் செல்ல மறுத்து தனது காதல் கணவருடன் செல்வதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து ஏரியூர் போலீசார் காவியாவை அவரது கணவர் கண்ண னுடன் அனுப்பி வைத்தனர்.
ஏரியூர் தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவனும் மாணவியும், காதல் திருமணம் செய்து கொண்டு, ஏரியூர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த சம்பவம் இந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்