search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அன்னூர் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
    X

    அன்னூர் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

    • 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்வது என முடிவு செய்தனர்.
    • காரமடை அருகே உள்ள தோளம்பாளையத்தில் உள்ள கோவிலில் வைத்து இந்து முறைப்படி திருமணம் செய்தனர்.

    கோவை,

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள வடுகபாளைத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 27). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கும் திருப்பூர் மங்கலம் அருகே உள்ள பள்ளப்பாளையத்தை சேர்ந்த சத்யா (22) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் தீவிரமாக காதலித்து வந்தனர்.

    இந்த காதல் விவகாரம் இளம்பெண்ணின் வீட்டிற்கு தெரிய வரவே அவரது பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர்கள் தங்களது மகளுக்கு திருமணம் செய்து வைப்பதுஎன முடிவு செய்து மணமகனை தேடி வந்தனர்.

    இது குறித்து இளம்பெண் தனது காதலனிடம் தெரிவித்தார். 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்வது என முடிவு செய்தனர். அதன்படி 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் காரமடை அருகே உள்ள தோளம்பாளையத்தில் உள்ள கோவிலில் வைத்து இந்து முறைப்படி திருமணம் செய்தனர்.

    திருமணம் செய்து கொண்ட 2 பேரும் பெற்றோர் பிரித்து விடுவார்கள் என்ற பயத்தில் பாதுகாப்பு கேட்டு அன்னூர் போலீசில் தஞ்சம் அடைந்தனர். 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×