search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "LOVE COUPLE REFUGE"

    • வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்
    • 6 வருடங்களாக காதலித்து வந்தனர்

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த மானாமதுரை கிராமத்தில் வசித்து வரும் ஆறுமுகம் என்பவரின் மகன் அரிகிருஷ்ணன்(28).எம்.காம் படித்துவிட்டு தற்போது தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.

    இவரும் காஞ்சிபுரம் மாவட்டம், வேளியூர் கிராமத்தில் வசித்து வரும் மணிகண்டன் மகள் சாந்தி(23) என்பவரும் கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியது.இந்நிலையில் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டனர்.

    வெவ்வேறு சமூகத்தை சார்ந்தவர்கள் என்பதால் தங்கள் உயிருக்கு பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்தில் நேற்று நெமிலி போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் புகுந்தனர். தொடர்ந்து நெமிலி போலீசார் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    • 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்
    • போலீசார் கணவனுடன் அனுப்பி வைத்தனர்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அடுத்த வெள்ளநாயக்கனேரி பகுதியைச் சேர்ந்தவர் கிருபதாஸ். இவரது மகள் கீர்த்தனா (வயது 19). இவருக்கும் நாட்டறம்பள்ளி மகாத்மா காந்தி தெருவைச் சேர்ந்தவர் மகி என்பவரின் மகன் வெற்றிவேல் (வயது 22) என்பவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

    இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 14-ந் தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி பச்சூர் அருகேசாமுண்டீஸ்வரி கோவிலில் திருமணம் செய்து கொண்டு கோவைக்கு சென்றுவிட்டனர்.

    இந்த நிலையில் கீர்த்தனாவுடைய தந்தை கிருபதாஸ் தன் னுடைய மகளை காணவில்லை என நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதுகுறித்து நாட் டறம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் தன்னை தேடுவதை அறிந்த கீர்த்தனா நேற்று நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் காதல் கணவனுடன் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தார்.

    பின்னர் போலீசார் பெற்றோர்களை போலீஸ் நிலையத் துக்கு வரவழைத்து அறிவுரை வழங்கினர். அப்போது இருவரும் மேஜர் என்பதால் காதல் திருமணம் செய்து கொண்டனர். எனகூறி காதல் கணவனுடன் கீர்த்தனாவை அனுப்பி வைத்தனர்.

    • ஆலங்காயத்தில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்
    • பெற்றோரையும் நேரில் அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.

    ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி கிராமத்தை சேர்ந்தவர் கல்யாணராமன். இவரது மகள் ஆர்த்தி (வயது 19). ஆர்த்தியும், திருப்பத்தூர் அடுத்த கொரட்டி தண்டூர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (25) என்பவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர்.

    பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி ஆலங்காயத்தில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து காதல்ஜோடி விக்னேஷ் மற்றும் ஆர்த்தி பாதுகாப்பு கேட்டு, ஜோலார்பேட்டை போலீசில் தஞ்சம் அடைந்தனர். இதன் எடுத்து போலீசார் 2 பேரின் பெற்றோரையும் நேரில் அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். இதனால் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்
    • பெற்றோருக்கு போலீசார் அறிவுரை வழங்கினர்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அடுத்த ஏலாரப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சென்றாயன். இவ ரது மகன் விக்ரம் (வயது 22), அந்தப்பகுதியில் உள்ள ஊது பத்தி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

    இவரும், மல்லபள்ளி பகுதியைச் சேர்ந்த கோபால் என்பவரது மகள் சினேகாவும் (20) கடந்த 4 வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களுடைய காதலுக்கு சினேகா வீட்டில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் சினேகா மற்றும் விக்ரம் ஆகிய இருவரும் நேற்று காலை வீட்டை விட்டு வெளியேறி நாட்டறம்பள்ளி அருகே உள்ள அக்ராகரம் பகுதியில் சாமுண்டீஸ்வரி கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவரும் நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு சென்று பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். சப்- இன்ஸ்பெக்டர் சுபாஷினி மற்றும் போலீசார் இருவரின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் பெண் வீட்டார் வரவில்லை. அதைத்தொடர்ந்து விக்ரம் பெற்றோருக்கு அறிவுரை வழங்கி அனுப்பி வைத் தனர்.

    • பாதுகாப்பு கேட்டு மனு அளித்தனர்
    • கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    அரக்கோணம் அடுத்த தணிகை போளூர் பகுதியைச் சேர்ந்தவர் சாருமதி (வயது 20). அரக்கோணம் அடுத்த சித்தேரி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் (21) இவர்கள் இருவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்தனர்.

    சாருமதியின் பெற்றோருக்கு இது தெரிய வந்தது. அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வேறு ஒருவருடன் திருமணம் செய்ய முடிவு செய்தனர். கடந்த 20-ந்தேதி வீட்டில் இருந்து சாருமதி வெளியேறினார்.

    திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் உள்ள கோவிலில் காதல் ஜோடியினர் திருமணம் செய்து கொண்டனர்.

    அதை தொடர்ந்து சாருமதி ராணிப்பேட்டை எஸ்.பி. ஆபீசில் பாதுகாப்பு கேட்டு புகார் மனு அளித்தார். 

    • ஜஜினாவும், சக்திவேலும் திருமணம் செய்து கொண்டு கொடுமுடி போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.
    • இதனையடுத்து போலீசார் இரு குடும்பத்தையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி பிரபுவுடன் ஜஜினாவை அனுப்பி வைத்தனர்.

    கொடுமுடி:

    கொடுமுடி அருகே உள்ள காசிபாளையத்தை சேர்ந்தவர் இஸ்மாயில். இவரது மகள் ஜஜினா (23). இவர் அதே பகுதியை சேர்ந்த மலைச்சாமி என்ப வர் மகன் பிரபு என்கிற சக்திவேல் என்பவரை கடந்த 4 வருடமாக காதலித்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் ஜஜினாவும், சக்திவேலும் திருமணம் செய்து கொண்டு கொடுமுடி போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

    இதனையடுத்து போலீசார் இரு குடும்பத்தையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி பிரபுவுடன் ஜஜினாவை அனுப்பி வைத்தனர்.

    • உடையார்பாளையம் தெற்கு காலனித் தெருவைச் சேர்ந்த நடராஜன் என்பவரது மகன் இளந்தமிழன் (25). ஆட்டோ டிரைவர்.
    • இவர் தஞ்சாவூர் மாவட்டம் கொடியாத்தம் கெளத்தூர் பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரியை (20) கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்தார்.

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உடையார்பாளையம் தெற்கு காலனித் தெருவைச் சேர்ந்த நடராஜன் என்பவரது மகன் இளந்தமிழன் (25). ஆட்டோ டிரைவர்.

    இவர் தஞ்சாவூர் மாவட்டம் கொடியாத்தம் கெளத்தூர் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகள் மகேஸ்வரியை (20) கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்த நிலையில், பெண்ணின் பெற்றோர்களிடம் பெண் கேட்டதாகவும், அவர்கள் பெண் கொடுக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து காதல் ஜோடி உடையார்பாளையம் தெற்கு தெரு மாரியம்மன் கோயிலில் வைத்து திருமணம் செய்துள்ளனர்.

    பின்னர் புதுமணத் தம்பதிகள் இருவரும் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி புதுமணத் தம்பதிகளிடம் விசாரணை செய்து இரு தரப்பு பெற்றோர்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

    தகவலறிந்த பெண்ணின் பெற்றோர்கள் மகேஸ்வரியை அழைத்துள்ளனர். அவர் வர மறுத்து இளந்தமிழனோடுதான் செல்வேன் என்று கூறியுள்ளார். இதனால் பெண்ணின் பெற்றோர்கள் திரும்பி சென்று விட்டனர். இதையடுத்து இளந்தமிழனின் பெற்றோர்களை அழைத்து அவர்களுக்கு அறிவுரைகள் கூறி காதல் ஜோடியான புதுமண தம்பதிகளை அவர்களோடு அனுப்பி வைத்தனர்.

    ×