என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
காதல் ஜோடி தஞ்சம்
- கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்
- பெற்றோருக்கு போலீசார் அறிவுரை வழங்கினர்
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அடுத்த ஏலாரப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சென்றாயன். இவ ரது மகன் விக்ரம் (வயது 22), அந்தப்பகுதியில் உள்ள ஊது பத்தி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இவரும், மல்லபள்ளி பகுதியைச் சேர்ந்த கோபால் என்பவரது மகள் சினேகாவும் (20) கடந்த 4 வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களுடைய காதலுக்கு சினேகா வீட்டில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் சினேகா மற்றும் விக்ரம் ஆகிய இருவரும் நேற்று காலை வீட்டை விட்டு வெளியேறி நாட்டறம்பள்ளி அருகே உள்ள அக்ராகரம் பகுதியில் சாமுண்டீஸ்வரி கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவரும் நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு சென்று பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். சப்- இன்ஸ்பெக்டர் சுபாஷினி மற்றும் போலீசார் இருவரின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் பெண் வீட்டார் வரவில்லை. அதைத்தொடர்ந்து விக்ரம் பெற்றோருக்கு அறிவுரை வழங்கி அனுப்பி வைத் தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்