என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "killing"
நாடு முழுவதும் பசுக்கள் கடத்தல், குழந்தைகள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கூறி, சமூக வலைத்தளங்கள் வாயிலாக வதந்திகளை பரப்பி, வன்முறையில் ஈடுபடுவதும், அப்பாவி மக்கள் தாக்கப்படுவதும், அடித்துக் கொல்லப்படுவதும் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக பசுக்காவலர்கள் என்ற பெயரில், பசுவை கடத்துகிறார்கள், பசுவை இறைச்சிக்காக அடித்துக்கொல்கிறார்கள் என்று கூறி அப்பாவி மக்களை அடித்துக்கொல்லும் சம்பவங்கள், வட மாநிலங்களில் அதிகளவில் நடந்து வருகின்றன.
இது தொடர்பான ஒரு வழக்கை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு கடந்த 17-ந்தேதி விசாரித்தது. அப்போது நீதிபதிகள், “பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் யாரும் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொள்வதை மத்திய, மாநில அரசுகள் அனுமதிக்கக் கூடாது. இதை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கவேண்டும். இதுபோன்ற குற்றங்களை தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உத்தரவிட்டனர்.
இதையடுத்து மத்திய அரசு அதிரடியில் இறங்கி உள்ளது.
அப்பாவி மக்கள் அடித்துக்கொல்லப்படுவதை தடுப்பதற்கு, ஒவ்வொரு மாவட்டத்திலும் போலீஸ் சூப்பிரண்டு அந்தஸ்து அதிகாரியை சிறப்பு அதிகாரியாக நியமிக்க வேண்டும்; இது தொடர்பான உளவுத் தகவல்களை சேகரிக்கவும், சமூக வலைத்தளங்களை கண்காணிக்கவும் சிறப்பு பணி குழுக்களை அமைக்க வேண்டும்; இதன் மூலம் அப்பாவி மக்கள் அடித்துக்கொல்லப் படுவதை தடுக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
இது தொடர்பான கடிதத்தை மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பி வைத்து உள்ளது.
மேலும், இதன் பேரில் நடவடிக்கை எடுத்து, அதை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தெரிவிக்க வேண்டும் என்று கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அதில், அப்பாவி மக்கள் அடித்துக்கொல்லப்படுவதை தடுக்க சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது.
அப்பாவி மக்கள் அடித்துக்கொல்லப்படும் சம்பவங்களை தடுத்து நிறுத்துவது குறித்து சட்டம் ஒன்றை இயற்றலாமா என்று பரிசீலிக்க மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் மத்திய மந்திரிகள் குழு அமைக்கப்பட்டு உள்ள நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே இந்த விவகாரம் நாடாளுமன்ற மக்களவையில் நேற்று எதிரொலித்தது. இந்தப் பிரச்சினையை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எழுப்பினார். அப்போது அவர், அப்பாவி மக்கள் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவங்கள் குறித்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஒருவரது தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அதற்கு மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பதில் அளித்தார். அப்போது அவர், “பல்வேறு மாநிலங்களிலும் அப்பாவி மக்கள் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவங்களை மத்திய அரசு தீவிரமாக எடுத்துக்கொண்டு உள்ளது. தேவைப்பட்டால் இதற்காக புதிய சட்டம் இயற்ற அரசு தயாராக இருக்கிறது” என்று கூறினார்.
கோவை வடவள்ளி வ.உ.சி.நகரை சேர்ந்தவர் ஜெகதீஷ். இவரது மகன் கோகுல்நாத் (வயது 23). இவர் ஒரு பிஸ்கட் கம்பெனியின் நீலகிரி மாவட்ட வினியோகஸ்தராக உள்ளார். இவரது நண்பர் கோவை மருதுபுரத்தை சேர்ந்த குமாரசாமி என்பவரது மகன் வசந்தகுமார் (31). நேற்று ரம்ஜான் பண்டிகை விடுமுறையை கழிக்க குன்னூருக்கு கோகுல்நாத், வசந்தகுமார், மற்றொரு நண்பர் ஆகிய 3 பேரும் வந்தனர். நண்பர்கள் 3 பேரும் குன்னூர் அருகே அணியாடா பகுதியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினர்.
இவர்களது பக்கத்து அறையில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 7 பேர் கொண்ட குடும்பத்தினர் தங்கியிருந்தனர். நேற்று முன்தினம்இரவு கோகுல்நாத், வசந்தகுமார் மற்றும் நண்பரும் மது அருந்தி விட்டு சினிமா பாடலை சத்தமாக வைத்திருந்தாக தெரிகிறது. மேலும் பக்கத்து அறையில் இருந்த ஆந்திர மாநில குடும்பத்தை சேர்ந்த ரவிகாந்த் (45) என்பவரின் மகளை கிண்டல் செய்ததாகவும் கூறப்படுகிறது. இவர்களது செயலை ரவிகாந்த் மற்றும் அவரது உறவினர் கிஷோர் ஆகியோர் தட்டி கேட்டனர். இதனால் அவர்களுக்குள் வாய்த்தகறாறு ஏற்பட்டது. தகராறு முற்றவே கோகுல்நாத், வசந்தகுமார் இருவரும் ரவிகாந்தை அடித்து தள்ளி விட்டனர்.
இதில் ரவிகாந்த் கீழேவிழுந்து மயங்கினார். உடனடியாக அவரது குடும்பத்தினரும், தங்கும் விடுதி ஊழியர்களும் ரவிகாந்தை குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக ரவிகாந்த் இறந்தார். இது குறித்து வெலிங்டன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், சப்–இன்ஸ்பெக்டர் கவுசல்யா ஆகியோர் விரைந்து சென்று ரவிகாந்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது தொடர்பாக கோகுல்நாத், வசந்தகுமார் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்களை பந்தலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, கோகுல்நாத்தையும் வசந்த குமாரையும் 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். சுற்றுலா வந்த இடத்தில் அசம்பாவித சம்பவம் நடந்து விட்டதே என்று, ரவிகாந்தின் குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கியது பார்க்க பரிதாபமாக இருந்தது.
நாசரேத்:
நாசரேத் அருகே பாட்டக்கரை கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 40) ஓட்டல் தொழிலாளி. இவரது மனைவி சிவகனி. இவர் அங்கன்வாடி சமையலர். இவர்களுக்கு சத்யகோமதி (12), மீனாட்சி கீர்த்தனா (10) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். கச்சனாவிளையில் உள்ள பள்ளியில் சத்யகோமதி 7-ம் வகுப்பும், மீனாட்சி கீர்த்தனா 5-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். இவர்கள் 2 பேரும் அங்குள்ள விடுதியில் தங்கியிருந்து படித்து வருகிறார்கள்.
இந்நிலையில் முத்துக்குமார் நேற்று முன்தினம் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தார். அப்போது மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. வீட்டில் அவருடைய 14 வயது மகன் ஹரி பிரசாத் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தான்.
நள்ளிரவில் மதுபோதையில் கட்டிலுக்கு முத்துக்குமார் தீ வைத்ததாகவும், பின்னர் போதையில் அந்த பகுதியிலேயே தூங்கியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து கட்டிலில் படுத்து இருந்த ஹரி பிரசாத் அப்படியே உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.
இந்நிலையில் வெளியூர் சென்றிருந்த சிவகனி நேற்று காலையில் வீட்டுக்கு வந்தார். அங்கு கட்டிலுடன் தனது மகன் எரிந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி தகவல் அறிந்த நாசரேத் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடல் கருகி கிடந்த ஹரி பிரசாத் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக நாசரேத் போலீசார் முத்துக்குமாரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அதன் விபரம் வருமாறு:-
ஹரி பிரசாத் சிறுவயதில் இருந்தே மூளை வளர்ச்சி குறைபாடு உடைய வாய் பேச முடியாது, காது கேட்காது. இதையடுத்து பல ஆண்டுகளாக அவன் கட்டிலில் படுத்தபடுக்கையாக உள்ளான். இதனால் அவன் படும் வேதனைகளை பார்க்க எனக்கு பரிதாபமாக இருந்தது. பல இடங்களில் மருத்துவம் பார்த்தும் குணமாகவில்லை. தொடர்ந்து மருத்துவம் பார்க்க என்னிடம் பணவசதி இல்லை.
இந்நிலையில் எனக்கும் எனது மனைவியின் அண்ணன் சாமுவேல் பட்டுராஜ் என்பவருக்கும் இடையே தோட்டம் வாங்கியது தொடர்பாக முன்விரோதம் உள்ளது. இது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்படும். இதேபோல் நேற்று முன்தினமும் எனக்கும், அவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் விரக்தியடைந்த நான் ஹரி பிரசாத்தை கொலை செய்துவிட்டு பலியை சாமுவேல் பட்டுராஜ் மீது போட்டு அவரை சிக்க வைக்க முடிவு செய்தேன்.
இதை தொடர்ந்து எனது மகன் படுத்திருந்த கட்டிலுக்கு தீ வைத்தேன். வாய் பேச முடியாததால் அவனால் சத்தம்போடமுடிய வில்லை. இதையடுத்து தீயில் கருகி அவன் இறந்தான். உடனடியாக நான் அங்கிருந்து தப்பியோடிவிட்டேன். ஆனால் இடையன்விளை ரெயில்வே கேட் அருகே நின்றபோது போலீசார் என்னை கைது செய்துவிட்டனர்.
இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
தந்தையே மனவளர்ச்சி குன்றிய மகனை எரித்துக் கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சீனாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள லியோனிங் மாகாணத்தில் அரசுக்கு சொந்தமான இரும்புத்தாது வெட்டி எடுக்கும் சுரங்கம் இயங்கி வருகிறது.
பென்க்ஸி நகராட்சிக்குட்பட்ட இந்த சுரங்கத்தில் இன்று நிகழ்ந்த வெடி விபத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இடிபாடுகளில் சிக்கியுள்ள சுமார் 25 பேரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
போதிய பாதுகாப்பு அம்சங்களை கடைபிடிக்காததால் சீனாவில் உள்ள பல்வேறு சுரங்கங்களில் அடிக்கடி விபத்துகள் நடப்பதும் உயிர்கள் பலியாவதும் தொடர்கதை ஆகிவிட்டது.
கடந்த ஆண்டு மே மாதம் ஹுனான் மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் விஷவாயு கசிந்த விபத்தில் 18 தொழிலாளர்கள் உயிரிழந்தது நினைவிருக்கலாம்.
இன்றைய விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாலும், இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களின் நிலை என்ன? என்பது சரியாக தெரியாததாலும் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
காஷ்மீரில் சர்வதேச எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதி அமலில் இருக்கும் போது போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்துவதை வாடிக்கையாக கொண்டு உள்ளனர். கடந்த ஒரு வார காலமாக பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதல்கள் தீவிரமடைந்து வருகிறது.
இந்நிலையில், காஷ்மீர் மாநிலம், பிம்பர் மாவட்டத்தில் கடந்த 21-ம் தேதி அத்துமீறி பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் 7 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
இதுகுறித்து பாகிஸ்தான் துணை தூதரான சயித் ஹைதர் ஷாவுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் இன்று அனுப்பியுள்ள சம்மனில், குழந்தைகள் மற்றும் அப்பாவி பொதுமக்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்துவது மனித உரிமைகள் மற்றும் ராணுவ நடவடிக்கைகளுக்கு எதிரானது.
ஆனால், சிறிய ரக ஆயுதங்களை கொண்டு வேண்டும் என்றே குறிவைத்து காஷ்மீரில் உள்ள அப்பாவி பொதுமக்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இது மிகவும் மோசமான மற்றும் கண்டிக்கதக்க செயலாகும். சர்வதேச எல்லையில் உள்ள எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் தொடர்ந்து நடைபெறும் இந்த அத்துமீறிய தாக்குதல்கள் கவலையளிப்பதாக உள்ளது என தெரிவித்துள்ளது.
எனவே, அத்துமீறிய தாக்குதலில் 7 மாத குழந்தை உயிரிழந்தது தொடர்பாக பாகிஸ்தான் துணை தூதரான சயித் ஹைதர் ஷா நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது. #JammuKashmir #Pakistan #India
இஸ்ரேல், பாலஸ்தீன் இடையே நீண்ட நெடுங்காலமாக மோதல்கள் நடந்து வருகின்றன. ஜெருசலேமை இஸ்ரேல் தனது தலைநகராக கருதி வந்தாலும், அதை உலக நாடுகள் அங்கீகரிக்கவில்லை. பாலஸ்தீன், கிழக்கு ஜெருசலேமை தனது எதிர்கால தலைநகர் என கருதி வந்தது.
கிறிஸ்தவர்கள், யூதர்கள், இஸ்லாமியர்கள் என 3 மதத்தினருக்கும் புனித நகரமாக திகழக்கூடிய ஜெருசலேம் நகரை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்து கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டார். அத்துடன் அங்கு அமெரிக்க தூதரகம் அமைக்கப்படும் எனவும் கூறினார். இது உலக அளவில் கண்டனங்களுக்கு வழிவகுத்தது.
இந்த நிலையில், திட்டமிட்டபடி நேற்று முன்தினம் ஜெருசலேமில் அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்டது. இந்த விழாவில், அறிவித்தபடி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பங்கேற்கவில்லை என்றாலும், அவரது மகள் இவான்கா டிரம்ப், இவான்காவின் கணவர் ஜாரெட் குஷ்னர் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதற்கிடையே இஸ்ரேல் உருவாக்கப்பட்டதின் 70-வது ஆண்டு நினைவு நாளையொட்டி, பாலஸ்தீனர்கள் காசா எல்லைப் பகுதியில் பெருமளவில் திரண்டு வந்து போராட்டங்களை நடத்தினர். அவர்கள், டயர்களை சாலைகளில் கொளுத்திப்போட்டனர்.
அவர்களுக்கும், இஸ்ரேல் படைகளுக்கும் இடையே மோதல்கள் நடந்தன. இஸ்ரேல் படையினர் மீது பாலஸ்தீனர்கள் கல்வீச்சு நடத்தினர்.
போராட்டக்காரர்களை ஒடுக்கும் விதத்தில் இஸ்ரேல் படையினர் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 59 பாலஸ்தீனர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். மேலும் ஆளில்லா விமானங்கள் மூலம் இஸ்ரேல் கண்ணீர்ப்புகை குண்டுகளையும் வீசியது.
2014-ம் ஆண்டு இரு தரப்புக்கும் இடையே நடந்த போருக்குப் பின்னர் இந்த மோதல்தான் மிகப்பெரிய மோதலாக கருதப்படுகிறது.
இந்த மோதலில் சுமார் 2 ஆயிரத்து 700 பாலஸ்தீனர்கள் படுகாயம் அடைந்தனர்.
இதன் காரணமாக காசா பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
பாலஸ்தீனர்கள், இஸ்ரேல் படைகளால் ஈவு இரக்கமின்றி கொன்று குவிக்கப்பட்டது இனப்படுகொலையாக பார்க்கப்படுகிறது. ஆனால், தற்காப்புக்காகத்தான் இஸ்ரேல் படைகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ கூறினார்.
காசா கிழக்கு எல்லையில் 13 இடங்களில் பாலஸ்தீனர்கள் வன்முறை போராட்டங்களை கட்டவிழ்த்துவிட்டதாக இஸ்ரேல் குற்றம் சாட்டுகிறது.
பாலஸ்தீன் அதிபர் மகமது அப்பாஸ் கருத்து தெரிவிக்கையில், “நம் மக்கள் மீதான இனப்படுகொலை தொடர்கிறது” என வேதனையுடன் கூறினார்.
இஸ்ரேல் நடவடிக்கையை அதன் நட்பு நாடான அமெரிக்கா நியாயப்படுத்தியது. “இந்த துயர மரணங்களுக்கு பாலஸ்தீன ஹமாஸ் இயக்கம் தான் பொறுப்பு, அவர்கள் வேண்டுமென்றே இந்த பதிலடி தருகிற நிலையை உருவாக்கினர்” என்று வாஷிங்டன் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ராஜ் ஷா குற்றம் சாட்டினார்.
ஆனால், இஸ்ரேலின் நடவடிக்கைக்கு இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, துருக்கி, லெபனான் உள்ளிட்ட பல நாடுகள் கண்டனம் தெரிவித்து உள்ளன. #Gaza #USEmbassyJerusalem
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்