search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவகாரம்"

    • போலீஸ் நிலையத்தில் 2-வது நாளாக மாஜிஸ்திரேட்டு ஆய்வு
    • முதலுதவி சிகிச்சை அளித்த பூலுவப்பட்டி சுகாதார நிலையத்திலும் விசாரணை

    வடவள்ளி,

    திருச்செந்தூரில் குழந்தையை கடத்தியதாக சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த பாண்டியன் (வயது 45) மற்றும் அவரது மனைவி திலகவதி (40) ஆகியோரை ஆலாந்துறை போலீசார் கைது செய்தனர்.

    ஆலாந்துறை போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரித்த போது, கழிவறைக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற திலகவதி அங்கு மயக்கம் அடைந்து விழுந்து உயிரிழந்தார்.

    போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட பெண் கைதி உயிரிழந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நீதிமன்ற விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

    இதன்ஒருபகுதியாக கோவை மாஜிஸ்திரேட்டு நீதிபதி சந்தோஷ்குமார் நேற்று அரசு மருத்துவமனை மற்றும் போலீஸ் நிலையத்திற்கு நேரடியாக சென்று திலகவதி மரணம் தொடர்பாக விசாரணை நடத்தினார். பிரேத பரிசோதனை அறிக்கையையும் வாங்கி ஆய்வுசெய்து பார்த்தார்.

    இன்று 2-வது நாளாக கோவை மாஜிஸ்திரேட்டு நீதிபதி சந்தோஷ்குமார் ஆலாந்துறை போலீஸ் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டார். அப்போது இறந்த திலகவதி அழைத்து வரப்பட்டபோது பணியில் இருந்த போலீசாரிடம் விசாரித்தார்.

    அவர் அழைத்து வரப்பட்ட நேரம், விசாரணையின் போது அவர் எப்படி இருந்தார். ஏதாவது மாற்றங்கள் காணப்பட்டா? அவரிடம் என்னென்ன உடமைகள் இருந்தன என்பது குறித்தும் விசாரித்தார்.

    ஆலாந்துறை காவல் நிலையத்தில் திலகவதி மயங்கி விழுந்த நிலையில் அவருக்கு பூலுவப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    அங்கு கொண்டு வரப்படும்போது திலகவதி சுயநினைவுடன் இருந்தாரா அவருக்கு எத்தகைய சிகிச்சைகள் வழங்கப்பட்டன என்பது குறித்தும் கேட்ட றிந்து விசாரணை மேற்கொ ண்டனர்.

    • பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பெண்ணை தேடி வந்தனர்.
    • பின்தொடர்ந்த சுமார் பத்துக்கும் மேற்பட்டோர் அந்த வாலிபர் மற்றும் அவரது நண்பர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.

    பல்லடம்:

    திருப்பூர் கல்லூரி சாலையைச் சேர்ந்த 23 வயது வாலிபரும், கோவில் வழி பகுதியைச் சேர்ந்த 22 வயது பெண்ணும் சமூக வலைத்தளங்கள் மூலம் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்தப் பெண்ணை வீட்டில் இருந்து திடீரென காணவில்லை என கூறப்படுகிறது.

    இதையடுத்து அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பெண்ணை தேடி வந்தனர். இந்த நிலையில் அவர்கள் இருவரும் பல்லடம் அருகே அருள்புரத்தில் இருப்பதாக தகவல் கிடைத்தது. இது குறித்து பல்லடம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இளம்பெண் வசிக்கும் பகுதி நல்லூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்டது என்பதால் அவர்கள் இருவரையும் நல்லூர் காவல் நிலையத்திற்கு போலீசார் பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர். அருள்புரம் அருகே அவர்கள் சென்று கொண்டிருந்தபோது அவர்களைப் பின்தொடர்ந்த சுமார் பத்துக்கும் மேற்பட்டோர் அந்த வாலிபர் மற்றும் அவரது நண்பர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதில் காயமடைந்த அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட பல்லடம் அருகே உள்ள கள்ளிமேட்டைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

    மேலும் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட சுமார் பத்துக்கும் மேற்பட்டவர்களை போலீசார் தேடுகின்றனர்.

    • சமய மாநாடு தொடர்பாக பேச்சுவார்த்தை தொடர்கிறது
    • அமைச்சர் சேகர்பாபு பேட்டி

    நாகர்கோவில்:

    தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, இன்று குமரி மாவட்டம் வந்தார். அவர் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், வேளி மலை குமார கோவில் முருகன் ஆலயங்களுக்குச் சென்று ஆய்வு செய்தார்.

    பின்னர் அமைச்சர் சேகர்பாபு நாகர்கோவிலில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் ஆக்கிர மிப்பில் இருந்த இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான சொத்துக்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இது வரை ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த மீட்பு வேட்டை தொடரும்.

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் விழா நிகழ்ச்சி 5-ந் தேதி தான் நடக்கிறது. அதற்கு இன்னும் 15 நாட்கள் இருக்கிறது. தற்போது அங்கு எழுந்துள்ள பிரச்சினை குறித்து, சம்பந்தப்பட்ட சங்கங்களுடன் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பேசி வருகின்றனர். இந்த விவகாரம் சுமூகமாக முடியும் என்ற நம்பிக்கை துறை அமைச்சர் என்ற முறையில் எனக்கு புலப்படுகிறது. அரசை பொருத்தவரை பிரச்சினையை பெரிதாக்க விரும்பாது. அனைத்து மக்களும் சாதி,சமுதாய வேறுபாடின்றி விழாவில் பங்கேற்க வேண்டும்.

    தக்கலை வேளி மலை குமார கோவில் முருகன் கோவிலில் புணரமைப்பு பணிகள் செய்வதற்காக ரூ.1 கோடியே 8 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதனை இன்று பார்வை யிட்டு விரைந்து முடிக்க உத்தரவிட்டு உள்ளேன்.

    பணிகள் அனைத்தும் முடிந்ததும் வருகிற ஏப்ரல் மாதம் 24-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை திருவிழா நடைபெறும்.

    வேளிமலை குமார கோவிலில் அதிக அளவு திருமணங்கள் நடைபெற்று வருகின்றன. இங்கு திருமணம் நடத்துவோர் பயன்படுத்தும் சமையல் கூடங்கள், தங்கும் அறை கள் போன்றவை சிதிலமடை ந்துள்ளன.

    அவற்றை புணர மைப்பதா? அல்லது புதிதாக திருமண மண்டபம் கட்டுவதா ? என்பது குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்கள் அறிக்கை தந்த வுடன், முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று புதிதாக திருமண மண்டபம் கட்டலாமா? என பரிசீலித்து முடிவு எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • குளச்சல் போலீசார் தீவிர விசாரணை
    • மர பட்டறையில் இருந்து ஒரு பாட்டிலில் ‘தின்னர்’ எடுத்துச் செல்வது சி.சி.டி.வி காமிராவில் பதிவாகி உள்ளது.

    கன்னியாகுமரி:

    இரணியல் வடக்கு சரல் காலனியை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 37), மர வேலை செய்யும் பட்டறையில் தொழிலாளி யாக வேலை பார்த்து வந்தார்.

    இவர் நேற்று மதியம் பட்டறையில் இருந்து வழக்கம்போல வீட்டுக்கு சாப்பிட சென்று உள்ளார். ஆனால் அதன் பிறகு அவர் வேலைக்கு வர வில்லை.

    இந்தநிலையில் குருந்தன் கோட்டைஅடுத்த ஆலன் விளையில் ஆலய நிர்வா கத்திற்கு சொந்தமான தென்னந்தோப்பில் அசோக்குமார் எரிந்த நிலையில் பிணமாக கிடந்து உள்ளார்.

    குளச்சல் போலீஸ் துணை சூப்பிரண்டு தங்கராமன் தலைமையில் இரணியல் போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர், மர பட்டறையில் இருந்து ஒரு பாட்டிலில் 'தின்னர்' எடுத்துச் செல்வது சி.சி.டி.வி காமிராவில் பதிவாகி உள்ளது. எனவே அவர் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதினர்.

    இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை யில் ஈடுபட்டனர். திருமணமாகாத அசோக்கு மாருக்கு ஒரு பெண்ணுடன் கள்ளக்காதல் ஏற்பட்டதாகவும் அதனை அவரது தாயார் கண்டித்த தாகவும் கூறப்படுகிறது.

    எனவே கள்ளக்காதல் விவகாரத்தில் அவர் தனக்குத் தானே தீ வைத்து தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை அடித்து கொலை செய்யப்ப ட்டு எரிக்கப்பட்டு இருக்க லாமா? என போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    உடல் எரிந்த நிலையில் வாலிபர் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மகளுக்கு காதலனே விஷம் கொடுத்துள்ளதாக குற்றச்சாட்டு
    • நித்திரவிளை மாணவி சாவில் தாயார் பரபரப்பு புகார்

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே உள்ள வாவறை பகுதியைச் சேர்ந்தவர் சின்னப்பர். இவரது 3-வது மகள் அபிதா (வயது 19). களியக்காவிளை பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த இவர், கடந்த 1-ந் தேதி வயிற்று வலியால் அவதிப்பட்டார்.

    இதனைத் தொடர்ந்து அவரை பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கேரளாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவர் எப்படி இறந்தார்? என்பதில் மர்மம் நிலவியது.

    இதற்கிடையில் அபிதா காதல் விவகாரம் காரணமாக விஷம் அருந்தி இருக்கலாமா? என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாக நித்திரவிளை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    அதில், நித்திரவிளை பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபருடன் அபிதாவுக்கு பழக்கம் இருந்ததும், அந்த வாலிபருடன் பல இடங்களுக்கு அவர் சென்று வந்திருப்பதும் தெரிய வந்தது. தற்போது பெங்களூருவில் படித்து வரும் அந்த வாலிபர், அபிதாவுடன் பேசுவதை கடந்த சில மாதங்களாக தவிர்த்துள்ளார்.

    இதுபற்றி அபிதா போலீசில் புகார் அளித்துள்ளார். தன்னுடன் பழகி விட்டு திருமணத்திற்கு மறுப்பதாக வாலிபர் மீது அவர் புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.

    அதன் அடிப்படையில் இரு தரப்பினரையும் அழைத்து போலீசார் பேசி உள்ளனர். அப்போது அபிதாவை திருமணம் செய்வதாக வாலிபர் உறுதி அளித்துள்ளார். அதன்படி வருகிற 13-ந் தேதி அவர்களுக்கு திருமணம் நடப்பதாக இருந்துள்ளது. இந்த நிலையில் தான் அபிதா மர்மமாக இறந்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் அபிதாவின் தாயார் தங்கபாய், போலீசில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில் தனது மகள் சாவுக்கு அவளது காதலன் தான் காரணம் என தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு எனது மகளை அவர் அழைத்துச் சென்றார். அவரை சந்தித்து விட்டு திரும்பியதில் இருந்து தான் அபிதாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

    எனவே அவர் தான், அபிதாவுக்கு விஷம் கலந்த எதையோ கொடுத்துள்ளார் என்றும் புகாரில் அவர் கூறி உள்ளார். இதனால் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர். அபிதாவுக்கு விஷம் கொடுக்கப்பட்டதா? அல்லது உடல் நலக் குறைவால் இறந்தாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குமரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாகவே இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவது பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. தக்கலை பள்ளி மாணவன் அஸ்வின் பள்ளி வளாகத்தில் சீருடை அணிந்து வந்தவர் கொடுத்த குளிர்பானத்தை குடித்ததில் உடல்நலக் குறைவு ஏற்பட்டு இறந்தான்.

    இதில் இன்னும் குளிர்பானம் கொடுத்தது யார்? என்பது தெரிய வில்லை. இதேபாணியில் குமரி மாவட்டம் கல்லூரியில் படித்து வந்த கேரள மாணவர் ஷாரோன்ராஜ், குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்யப்பட்டதாக கூறப்படு கிறது. இது தொடர்பாக அவரது காதலி கிரீஷ்மா கைது செய்யப்பட்டுள்ளார்.

    இந்த சூழலில் நித்திரவிளை மாணவி அபிதாவும், காதலனால் விஷம் கொடுத்ததில் இறந்துள்ளார் என அவரது தாயார் புகார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • காதலி-பெற்றோரிடம் போலீசார் விசாரணை
    • வழக்கு மாவட்ட குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றம்

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தவர் ஷரோன் ராஜ் (வயது 23). இவரது சொந்த ஊர் தமிழக-கேரள எல்லையில் உள்ள பாறசாலை முரியங் கரை ஆகும்.

    அந்த பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை ஷரோன் ராஜ் காதலித்துள்ளார். கடந்த 14-ந்தேதி அந்த பெண்ணின் வீட்டிற்கு தனது நண்பருடன் சென்றுள்ளார். வீட்டிற்குள் அவர் மட்டும் சென்று திரும்பினார். சிறிது நேரத்தில் வயிறு வலிப்பதாக கூறிய அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரி யில் சேர்த்தனர்.

    திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த ஷரோன் ராஜ் கடந்த 25-ந்தேதி பரிதாபமாக இறந்தார். அவரது கிட்னி உள்பட உடல் உறுப்புகள் செயல் இழந்திருந்ததால் பாற சாலை போலீசாருக்கு டாக்டர்கள் தகவல் கொடுத்தனர்.

    இதற்கிடையில் தனது மகன் சாவில் மர்மம் உள்ளது, அவன் காதலித்த பெண் கொடுத்த குளிர்பா னத்தை குடித்த பிறகே ஷரோன் ராஜுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவரது தந்தை ஜெயராஜன் போலீசில் புகார் கொடுத்தார்.

    இந்த புகார் தொடர்பாக பாறசாலைபோலீசார் உரிய விசாரணை நடத்தப்பட வில்லை என்றும் அவர் கூறினார். இதற்கிடையில் இந்த வழக்கு மாவட்ட குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது.

    திருவனந்தபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு தலைைமயில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். அவர்கள் ஷரோன் ராஜின் நண்பரை விசாரித்தபோது, பெண்ணின் வீட்டில் குளிர் பானம் குடித்ததாக ஷரோன் ராஜ் தெரிவித்ததாக கூறினார். இதன் அடிப்படையில் அந்த பெண் மற்றும் அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர்.

    இதற்காக அவர்களை விசாரணைக்கு ஆஜராகும்படி அறிவுறுத்தி உள்ளனர். இன்று மாலை அவர்களிடம் விசாரணை நடத்தப்படக் கூடும் என தெரிகிறது.

    • பிரசவத்திற்காக சேர்க்கப்பட்ட இளம் பெண் இறந்த விவகாரத்தில் மருத்துவக்குழு விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    • பூங்கொடி என்பவர் மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    மதுரை

    தேனி கண்டமனூரைச் சேர்ந்த பூங்கொடி என்பவர் மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    எனது மகள் கனிமொழியை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரசவ சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு குழந்தை பிறந்தது. பின்னர் ஜூன் 15ஆம் தேதி தையல் பிரிக்கப்பட்டு, தாயும் சேயும் நலமாக இருந்தனர்.

    மறுநாள் பயிற்சி மருத்துவர் எனது மகளுக்கு ஊசி ஒன்றை போட்டார். அதைத்தொடர்ந்து எனது மகளுக்கு கடுமையான வலி ஏற்பட்ட நிலையில், 21-ந் தேதி எனது மகள் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். எனது மகளின் மரணத்திற்கான காரணத்தை தெரிவிக்காமல் உடலை பெற்றுக் கொள்ளுமாறு மிரட்டினர். காவல்துறையினரும் வற்புறுத்தினர்.

    இவ்வாறு மிரட்டியதால் எனது மகளின் உடலை சத்திரப்பட்டி கிராம மயானத்தில் அடக்கம் செய்தோம். பயிற்சி மருத்துவர் தவறான ஊசி செலுத்தியதே எனது மகளின் இறப்பிற்கு காரணம். ஆகவே எனது மகளின் உடலை 2 மூத்த தடய அறிவியல் துறையின் பேராசிரியர்கள் முன்னி லையில் உடற்கூராய்வு செய்யவும், மருத்துவ குழு அமைத்து இறப்பிற்கான காரணத்தை கண்டறிய வேண்டும் என்றும் மகளின் இறப்பிற்கு கார ணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி சுகுமார குருப் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது உயிரிழந்த பெண் கனிமொழியின் மருத்துவ அறிக்கையை தேனி மருத்துவகல்லூரி முதல்வர் சார்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யபட்டது.

    இதனைத் தொடர்ந்து நீதிபதி தனது உத்தரவில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் தலைமையில் மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவம், துறைத்தலைவர், மயக்கவியல் துறை தலைவர் மற்றும் இருதயவியல் துறை தலைவர்கள் அடங்கிய மருத்துவர் குழுவை, சுகாதாரத்துறை செயலாளர் அமைக்க வேண்டும் அமைக்கப்பட்ட மருத்துவர்களின் உயர்மட்ட குழு பெண் இறப்பு குறித்து ஆய்வு செய்து அதன் அறி க்கையை ஒரு மாதத்தில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

    • மாணவன் சிகிச்சை பலனின்றி இறந்த விவகாரத்தில் 3 பேர் கொண்ட மருத்துவக்குழுவினர் காரைக்கால் மருத்துவமனையில் விசாரணை செய்தனர்.
    • சக மாணவியின் தாய் சகாயராணி விக்டோரி யாவை போலீசார் கைது செய்து, சிறையில் அடை த்தனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் அருகே கோட்டுச்சேரி சர்வைட் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்த மாணவன் பாலம ணிகன்டன், சக மாணவியுடன் கல்வி மற்றும் இதர கலையில் ஏற்பட்ட போட்டி காரணமாக, சக மாணவியின் தாயார், பாலமணிகண்டனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்தார். மாணவனின் தாய் கொடுத்த புகாரையடுத்து, சக மாணவியின் தாய் சகாயராணி விக்டோரி யாவை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். மாணவன் பாலமணிகண்டன், அரசு மருத்து வமனையில் சிகி ச்சையில் இருக்கும் போது, போலீசாரும், மருத்து வர்களும் அலட்சியமாக செயல்பட்டதால்தான், மாணவன் உயிரிழந்தான் என, போலீசார் மற்றும் மருத்து வர்கள் மீது துறைரீதியிலான் நடவ டிக்கை எடுத்து தண்டிக்கப்படவேன்டும் என, காரைக்காலின் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர்.

    மாணவனின் பெற்றோ ரும் அரசு மருத்துவமனை மற்றும் போலீசார் மீது குற்றஞ்சாட்டியுள்ளனர். அதன்பேரில், புதுச்சேரி அரசு சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு உத்தரவின் பேரில், புதுச்சேரி ராஜீ வ்காந்தி பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மருத்துவ மனையின் தலைமை மருத்துவர் டாக்டர் முரளி தலைமையில், மருத்து வர்கள் ரமேஷ், பாலச்சந்தர் உள்ளிட்ட3 பேர் கொண்ட குழுவினர், காரைக்காலுக்கு வந்தனர். இக்குழுவினர், காரைக்கால் அரசு மருத்து வமனை கண்காணிப்பாளர், டாக்டர், செவிலியர் மற்றும் ஊழியர்களிடம் துருவி த்துருவி விசாரணையில் ஈடுபட்டனர்.

    • 3 வாலிபர்கள்-3 மாணவிகள் சிக்கினர்
    • போலீசார் விசாரணை தீவிரம்

    நாகர்கோவில்:

    மேலை நாட்டு கலாசாரத்தில் மூழ்கி வரும் இளம்பெண்கள், இளைஞர்கள் சமீபகாலமாக எல்லை மீறி வருகின்றனர். இது கலாசார சீரழிவாக மாறி நிற்பது தான் வேதனையான ஒன்று. இப்படி ஒரு கலாசார சீரழிவு தான் குமரி மாவட்டத்தில் நடந்து தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    குளச்சலை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி தனது பிறந்த நாளை சக தோழர்களுடன் கொண்டா டிய போது, அங்கு வந்த பள்ளி தோழன் பிறந்த நாள் கொண்டாடிய மாணவியை தாக்கி உள்ளார்.

    இது தொடர்பாக வந்த புகாரை போலீசார் விசாரித்த போது, கிணறு வெட்ட பூதம் பிறந்த கதையாக ஒருவருக்கு ஒருத்தி என்ற கலாசாரத்தை மறந்து இளம்பெண்களும், இளைஞர்களும் மதுபான விருந்து, உல்லாசம் என ஒரு வீட்டில் அடிக்கடி கூடி கும்மாளமிட்டது தெரிய வந்தது. இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஒரு மாணவியின் கண்ணீர் ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    ஆடியோவில் பேசிய மாணவி, 2 தோழிகளின் அழைப்பால் விருந்து ஒன்றுக்குச் சென்றேன். ஆனால் அங்கு சில இளைஞர்களும் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். இருப்பினும் விருந்தில் பங்கேற்றேன்.

    அது மது விருந்து மட்டும் தான் என்று நினைத்தேன். ஆனால் நேரம் செல்லச் செல்ல உல்லாச விருந்தாக மாறியது. இதில் நானும் என்னை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. இந்த சம்பவத்திற்கு பின்னர் நான் தோழிகளை சந்திப்பதை தவிர்த்தேன். ஆனால் அவர்கள் அடிக்கடி பார்ட்டியில் சந்தித்துள்ளனர்.

    இது தொடர்பாக செல்போனில், கான்செப்ட்... சரக்கு பார்ட்டி...ஜாயிண்ட் என குறுந்தகவல்அனுப்பினர். என்னையும் பார்ட்டியில் கலந்து கொள்ளும் படி வற்புறுத்தினர். தற்போது என்னை அதில் சிக்க வைத்து விட்டு அவர்கள் தப்பிக்கப் பார்க்கின்றனர் என கண்ணீருடன் பேசி இருந்தார்.

    இந்த சம்பவங்களால் அதிர்ச்சி அடைந்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தவின் பேரில் தனிப்படை போலீசாரும் தீவிர விசாரணையில் இறங்கினர். முதலில் பிறந்த நாள் விருந்து நடந்ததாக கூறப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்று பார்த்தனர்.

    அங்கு அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் மது பாட்டில்கள், ஆணுறைகள், கிழிந்த உடைகள் உள்ளிட்ட பல விரும்பத்தகாத பொருட்கள் கிடந்துள்ளன. இதனைத் தொடர்ந்து நாகர்கோவிலைச் சேர்ந்த ஒரு வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசவே போலீசார் தங்கள் விசாரணை முறையை மாற்றினர்.

    அப்போது காதல் என்ற பெயரில் தோழிகளை விருந்துக்கு அழைக்கும் வாலிபர்கள், பின்னர் தங்கள் இஷ்டத்திற்கு அவர்களை மயக்கி உல்லாசத்திற்கு பயன்படுத்தி உள்ளனர்.

    ஒரு கட்டத்தில் இந்த வலையில் விழுந்த மாணவி கள், இளம்பெண்கள் அதன்பிறகு வேறு வழியின்றி விபரீதம் உணராமல் விருந்து நிகழ்ச்சியில் தொடர்ந்து பங்கேற்று இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் படுக்கை விருந்தில் பங்கேற்ற 3 வாலிபர்கள் மற்றும் 3 இளம்பெண்கள் பற்றிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் அவர்கள் போலீசாரின் விசாரணை வளையத்திற்குள் சிக்கி உள்ளனர்.

    பெண்களின் நிலை கருதி போலீசார் தொடர்ந்து ரகசிய விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். விருந்துக்கு தெரியாமல் சென்ற இளம்பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து வைத்து வாலிபர்கள் மிரட்டி இருக்கலாம். அதனால் பயந்து போன பெண்கள், அடிக்கடி விருந்துக்குச் சென்று இருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசா ருக்கு உள்ளது. அதன் அடிப்ப டையிலும் போலீசார் தங்கள் விசாரணையை நடத்தி வருகின்றனர்.

    கான்செப்ட்... சரக்கு பார்ட்டி...ஜாயிண்ட் விவகாரம் தற்போது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கலாசாரம் பெரும் நகரங்களில் நடப்பதாக அரசல் புரசலாக பேசப்பட்டு வந்த நிலையில் கடை ேகாடி மாவட்டமான கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்து இருப்பது பலருக்கும் அதிர்ச்சியாக உள்ளது. குறிப்பாக மாணவ-மாணவிகளின் பெற்றோர் வயிற்றில் நெருப்பை கட்டி இருப்பது போன்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    ×