search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The issue"

    • போலீஸ் நிலையத்தில் 2-வது நாளாக மாஜிஸ்திரேட்டு ஆய்வு
    • முதலுதவி சிகிச்சை அளித்த பூலுவப்பட்டி சுகாதார நிலையத்திலும் விசாரணை

    வடவள்ளி,

    திருச்செந்தூரில் குழந்தையை கடத்தியதாக சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த பாண்டியன் (வயது 45) மற்றும் அவரது மனைவி திலகவதி (40) ஆகியோரை ஆலாந்துறை போலீசார் கைது செய்தனர்.

    ஆலாந்துறை போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரித்த போது, கழிவறைக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற திலகவதி அங்கு மயக்கம் அடைந்து விழுந்து உயிரிழந்தார்.

    போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட பெண் கைதி உயிரிழந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நீதிமன்ற விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

    இதன்ஒருபகுதியாக கோவை மாஜிஸ்திரேட்டு நீதிபதி சந்தோஷ்குமார் நேற்று அரசு மருத்துவமனை மற்றும் போலீஸ் நிலையத்திற்கு நேரடியாக சென்று திலகவதி மரணம் தொடர்பாக விசாரணை நடத்தினார். பிரேத பரிசோதனை அறிக்கையையும் வாங்கி ஆய்வுசெய்து பார்த்தார்.

    இன்று 2-வது நாளாக கோவை மாஜிஸ்திரேட்டு நீதிபதி சந்தோஷ்குமார் ஆலாந்துறை போலீஸ் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டார். அப்போது இறந்த திலகவதி அழைத்து வரப்பட்டபோது பணியில் இருந்த போலீசாரிடம் விசாரித்தார்.

    அவர் அழைத்து வரப்பட்ட நேரம், விசாரணையின் போது அவர் எப்படி இருந்தார். ஏதாவது மாற்றங்கள் காணப்பட்டா? அவரிடம் என்னென்ன உடமைகள் இருந்தன என்பது குறித்தும் விசாரித்தார்.

    ஆலாந்துறை காவல் நிலையத்தில் திலகவதி மயங்கி விழுந்த நிலையில் அவருக்கு பூலுவப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    அங்கு கொண்டு வரப்படும்போது திலகவதி சுயநினைவுடன் இருந்தாரா அவருக்கு எத்தகைய சிகிச்சைகள் வழங்கப்பட்டன என்பது குறித்தும் கேட்ட றிந்து விசாரணை மேற்கொ ண்டனர்.

    ×