search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இரணியல் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் தொழிலாளி தற்கொலை செய்தாரா?
    X

    கோப்பு படம் 

    இரணியல் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் தொழிலாளி தற்கொலை செய்தாரா?

    • குளச்சல் போலீசார் தீவிர விசாரணை
    • மர பட்டறையில் இருந்து ஒரு பாட்டிலில் ‘தின்னர்’ எடுத்துச் செல்வது சி.சி.டி.வி காமிராவில் பதிவாகி உள்ளது.

    கன்னியாகுமரி:

    இரணியல் வடக்கு சரல் காலனியை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 37), மர வேலை செய்யும் பட்டறையில் தொழிலாளி யாக வேலை பார்த்து வந்தார்.

    இவர் நேற்று மதியம் பட்டறையில் இருந்து வழக்கம்போல வீட்டுக்கு சாப்பிட சென்று உள்ளார். ஆனால் அதன் பிறகு அவர் வேலைக்கு வர வில்லை.

    இந்தநிலையில் குருந்தன் கோட்டைஅடுத்த ஆலன் விளையில் ஆலய நிர்வா கத்திற்கு சொந்தமான தென்னந்தோப்பில் அசோக்குமார் எரிந்த நிலையில் பிணமாக கிடந்து உள்ளார்.

    குளச்சல் போலீஸ் துணை சூப்பிரண்டு தங்கராமன் தலைமையில் இரணியல் போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர், மர பட்டறையில் இருந்து ஒரு பாட்டிலில் 'தின்னர்' எடுத்துச் செல்வது சி.சி.டி.வி காமிராவில் பதிவாகி உள்ளது. எனவே அவர் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதினர்.

    இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை யில் ஈடுபட்டனர். திருமணமாகாத அசோக்கு மாருக்கு ஒரு பெண்ணுடன் கள்ளக்காதல் ஏற்பட்டதாகவும் அதனை அவரது தாயார் கண்டித்த தாகவும் கூறப்படுகிறது.

    எனவே கள்ளக்காதல் விவகாரத்தில் அவர் தனக்குத் தானே தீ வைத்து தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை அடித்து கொலை செய்யப்ப ட்டு எரிக்கப்பட்டு இருக்க லாமா? என போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    உடல் எரிந்த நிலையில் வாலிபர் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×