search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kidnapping"

    • கிருஷ்ண மூர்த்தியின் காதல் மனைவி தொட்டியம் போலீசில் புகார் செய்தார்.
    • முன்னதாக மனைவியை தனது பெற்றோர் வீட்டில் ஒப்படைத்து விட்டு நீதிமன்றத்திற்கு வந்தார்.

    தொட்டியம்:

    கரூர் மாவட்டம் தான் தோன்றி மலை கருப்பம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 25) கோவையில் உள்ள ஒரு தனியார் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் கரூர் வீரராக்கியம் பகுதியைச் சேர்ந்த கோபிகா (வயது 19) என்பவரை கடந்த 11ந் தேதி காதலித்து திருமணம் செய்தார். கிருஷ்ண மூர்த்திக்கு அந்தப் பெண் தங்கை உறவு முறை என்பதால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் இருவரையும் எப்படியாவது பிரித்து விட வேண்டும் என்று கோபிகாவின் உறவினர்கள் கங்கணம் கட்டினர்.

    பின்னர் உள்ளூர் போலீசார் உதவியுடன் கோபிகாவை பிரித்தனர்.

    இருப்பினும் அவர் காதல் கணவருடன் வாழ்வதில் உறுதியாக இருந்தார். இதையடுத்து சில தினங்களில் பெற்றோரின் பிடியிலிருந்து தப்பி கிருஷ்ணமூர்த்தியுடன் சேர்ந்து கொண்டார்.

    பின்னர் அவர் காதல் மனைவியை கோவைக்கு அழைத்து சென்று குடும்பம் நடத்த தொடங்கினார். இந்நிலையில் ஏற்கனவே நடந்த ஒரு அடிதடி வழக்கு தொடர்பாக திருச்சி மாவட்டம் தொட்டியம் நீதி மன்றத்திற்கு கிருஷ்ண மூர்த்தி ஆஜராக வந்தார்.

    முன்னதாக மனைவியை தனது பெற்றோர் வீட்டில் ஒப்படைத்து விட்டு நீதிமன்றத்திற்கு வந்தார். இதனை மோப்பம் பிடித்துக் கொண்ட கோபிகாவின் உறவினர்கள் மீண்டும் அவர்களை எப்படியாவது பிரித்து விட வேண்டும் என திட்டமிட்டு நீதிமன்றத்தில் இருந்து வீடு திரும்பிய கிருஷ்ண மூர்த்தியை காரில் கடத்தி சென்றனர்.

    இதுகுறித்து கிருஷ்ண மூர்த்தியின் காதல் மனைவி தொட்டியம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி கரூர் மாவட்டம் ஆர். புதுக்கோட்டையைச் சேர்ந்த ஸ்ரீநாத் (24), அதே ஊரைச் சேர்ந்த கார்த்திக் (25), கரூர் கோயம்பள்ளி பகுதியை சேர்ந்த சரவணன் (29), அதே ஊரைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (23) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

    இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறும்போது, கோபிகாவை கடத்திச் செல்லும் முடிவில் கடத்தல் புள்ளிகள் வந்தனர். ஆனால் கிருஷ்ணமூர்த்தி அவரை தனது பெற்றோர் வீட்டில் ஒப்படைத்து விட்டு வந்ததால் வேறு வழியில்லாமல் கிருஷ்ண மூர்த்தியை கடத்தியுள்ளனர்.

    கைதான நான்கு பேரும் கோபிகாவின் நெருங்கிய உறவினர்கள் என்றனர்.

    தங்கை உறவுமுறை கொண்ட இளம் பெண்ணை காதல் திருமணம் செய்த விவகாரத்தில் புது மாப்பிள்ளை கடத்தப்பட்ட சம்பவம் தொட்டியம் மற்றும் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • உமா மகேஸ்வரியின் தாய் தனலட்சுமியுடன் பழகிய மாரிமுத்து அதன் பிறகே உமா மகேஸ்வரியுடன் காதல் கொண்டதாக கூறப்படுகிறது.
    • மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    திருச்சி:

    புதுக்கோட்டை தெற்கு சந்தைபேட்டையை சேர்ந்தவர் மாரிமுத்து. தூய்மை பணியாளரான இவர் கடந்த 2019-ம் ஆண்டு இறந்தார். இதை தொடர்ந்து அவரது இளைய மகள் உமா மகேஸ்வரிக்கு கருணை அடிப்படையில் மயிலாடுதுறை நகராட்சி அலுவகத்தில் இளநிலை உதவியாளர் பணி வழங்கப்பட்டது.

    இதையடுத்து உமா மகேஸ்வரி தனது தாய் தனலட்சுமியுடன் மயிலாடுதுறை பண்டார தெருவுக்கு குடிபெயர்ந்தார். இந்நிலையில் புதுக்கோட்டை கறம்பக்குடி பல்லவராயன்புரத்தை சேர்ந்த மாரி முத்துவுடன் உமாமகேஸ்வரிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. முதலில் உமா மகேஸ்வரியின் தாய் தனலட்சுமியுடன் பழகிய மாரிமுத்து அதன் பிறகே உமா மகேஸ்வரியுடன் காதல் கொண்டதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து இருவரும் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 4-ந் தேதி திருமணம் செய்து கொண்டு தனியாக வசித்து வந்தனர்.

    திருமணத்துக்கு பிறகு மாரிமுத்து உமா மகேஸ்வரியை துன்புறுத்தியுள்ளார். வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்த மாரிமுத்து, மனைவியை கண்காணிப்பதையே வேலையாக கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் உமா மகேஸ்வரி வேலை செய்யும் இடத்துக்கே நேரில் சென்று அவரை பற்றி தவறாக பேசுவதையும் மாரிமுத்து வழக்கமாக வைத்திருந்தார்.

    இதனால் மனம் வேதனையடைந்த உமாமகேஸ்வரி தனது தாய் தனலட்சுமியை போனில் தொடர்பு கொண்டு கணவர் மாரிமுத்துவின் தொல்லைகள் குறித்து கூறி கதறி அழுதார்.

    இதன் காரணமாக உமா மகேஸ்வரியின் உறவினர்கள் மாரிமுத்துவின் வீட்டுக்கு சென்று உமா மகேஸ்வரியை பிரித்து அழைத்து வந்துவிட்டனர். இதன்பின்னர் உமா மகேஸ்வரி தாயுடன் வசித்து வந்தார். இந்நிலையில் உமா மகேஸ்வரி மயிலாடுதுறையில் தனது தாயுடன் கடந்த மாதம் 20-ந் தேதி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் சிலருடன் காரில் வந்த கணவர் மாரிமுத்து, மனைவி உமாமகேஸ்வரியை வலுக்கட்டாயமாக காரில் தூக்கிப்போட்டு க்கொண்டு கடத்தி சென்றுவிட்டார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த தாய் தனலட்சுமி மயிலாடுதுறை போலீசில் புகார் செய்தார். அதில் தனது மகளின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் உடனே கண்டுபிடித்து தருமாறும் கூறி இருந்தார். போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் உமா மகேஸ்வரியை கண்டு பிடிக்க முடியவில்லை.

    இந்நிலையில் உமா மகேஸ்வரி மயிலாடுதுறை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புதிய புகார் ஒன்றை அளித்தார். அதில் தனது மகள் உமா மகேஸ்வரி கடத்தப்பட்டு ஒரு மாதமாகியும் போலீசார் இன்னும் கண்டுபிடிக்க வில்லை. எனவே இது பற்றி தீவிர விசாரணை நடத்தி மகளை கண்டுபிடித்து தர வேண்டும் என்று கூறியுள்ளார். அதே நேரத்தில் கணவர் மாரிமுத்து மகளை கொலை செய்திருக்கலாம் என்று சந்தேதிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மாரிமுத்து செல்போனில் பேசி அனுப்பிய மிரட்டல் ஆடியோவையும் தனலட்சுமி போலீஸ் சூப்பிரண்டிடம் அளித்துள்ளார். அதில் 'உன்னை உயிரோடு விடமாட்டேன். எனக்கு துரோகம் செய்த உன் உயிர் ஊஞ்சலாடி க்கொண்டிருக்கிறது' என்று மிரட்டல் விடுத்து பேசி உள்ளார். இது போலீசுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    உமா மகேஸ்வரி கடத்தப்பட்டு ஒரு மாதமாகியும் அவர் எங்கிருக்கிறார் என்பது தெரியாததால் அவரது நிலை என்ன என்பது மர்மமாகவே உள்ளது. அவரை கணவர் மாரிமுத்து கொலை செய்ருதிக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். மாரிமுத்து இருக்கும் இடம் தெரியவில்லை. இதனால் போலீசார் அவரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கணவர் மாரிமுத்து சிக்கினால் மட்டுமே உமா மகேஸ்வரியின் நிலை என்ன என்பது தெரிய வரும் என்பதால் அவரை கண்டுபிடிக்கும் பணியில் தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

    மாரிமுத்துவின் செல்போன் சிக்னலை வைத்து, அவரை கண்டுபிடிக்கும் பணியில் நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு போலீசார் விரைந்துள்ளனர்.

    • தந்தை வாங்கிய ரூ.50 ஆயிரத்திற்கு சிறுமி கடத்தப்பட்டார்
    • நிதிநிறுவன ஊழியர் கைது செய்யபட்டார்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் இயங்கி வரும் பிரபல நிதி நிறுவனத்தில் மருதூரை சேர்ந்த கூலித்தொழிலாளி வனத்து ராஜா (வயது 32) என்பவர் மாதாந்திர தவணையில் ரூ.50 ஆயிரம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அவர் தவணைத்தொகையை செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த நிதி நிறுவனத்தில் ஊழியராக பணிபுரியும் பெரிய சூரியூரை சேர்ந்த தங்கம் மகன் விக்னேஷ் (27) என்பவர் பணம் வசூலிப்பதற்காக மருதூரில் உள்ள வனத்து ராஜா வீட்டுக்கு சென்று உள்ளார்.

    அப்போது வனத்து ராஜா வேலைக்கு சென்றுள்ளதாக அவரது மகள் ஜனனி (11) கூறியுள்ளார். இதையடுத்து அந்த சிறுமியை மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு விக்னேஷ் தனது நிதி நிறுவனத்துக்கு சென்று விட்டார். இந்தநிலையில் வீட்டுக்கு வந்த வனத்து ராஜா, தனது மகளை காணாமல் தேடிய போது நிதிநிறுவன ஊழியர் அவரை அழைத்து சென்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கீரனூர் போலீசாரிடம் தனது மகளை நிதிநிறுவன ஊழியர் கடத்தி சென்றதாக புகார் கொடுத்தார்.

    இதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மரியதாஸ் தலைமையிலான போலீசார் சிறுமியை கடத்தி வைத்திருந்த நிதி நிறுவனத்திற்கு சென்று விசாரணை நடத்தி அங்கிருந்து சிறுமியை மீட்டு அழைத்து வந்தனர். இதையடுத்து, சிறுமியை கடத்தி சென்ற விக்னேஷை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடன் தொகையை செலுத்தாததால் தொழிலாளியின் மகளை நிதிநிறுவன ஊழியர் கடத்தி சென்ற சம்பவம் கீரனூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.
    • இந்த சம்பவத்தை யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி விட்டு தப்பியோடி விட்டனர்.

    புதுச்சேரி:

    திருபுவனை அருகே சன்னியாசி குப்பம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவகொழுந்து (வயது 29). இவர் திருபுவனையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

    கடந்த 25-ந் தேதி புதுவையில் உள்ள உறவினர் திருமண விழாவை முடித்துக் கொண்டு இரவு 10 மணி அளவில் சிவகொழுந்து வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தார். திருவாண்டார் கோவில் பகுதியில் வந்த போது அதே பகுதியைச் சேர்ந்த பகவான் (30), ஆகாஷ் (25), கவியரசன் (21) ஆகிய 3 பேரும் சிவகொழுந்துவின் பைக்கை வழிமறித்தனர்.

    பின்னர் அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி சிவகொழுந்து அணிந்திருந்த வெள்ளி குருமாத், செல்போன் மற்றும் சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த 2 ஆயிரம் ரொக்க பணத்தை பறித்தனர். மேலும் இந்த சம்பவத்தை யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி விட்டு தப்பியோடி விட்டனர்.

    இதையடுத்து சிவக்கொழுந்து இதுகுறித்து திருபுவனை போலீசில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் குற்றவியல் போலீசார் வழக்கு பதிவு செய்து பகவான், ஆகாஷ் ஆகிய 2பேரையும் கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர். தொடர்ந்து தலைமறைவான கவியரசனை போலீசார் தேடி வருகிறார்கள். 

    • பண்ருட்டியில் சாராயம் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
    • மதகடிப்பட்டியில் இருந்து 48 சாராய பாக்கெட்டுகளை வாங்கி வந்ததாக கூறினார்.

    கடலூர்:

    பண்ருட்டி போலீஸ் டி.எஸ்.பி.சபியுல்லா உத்தரவின் பேரில்தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் நேற்று தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டுஇருந்தனர். அப்போது பண்ருட்டி ரெயில் நிலையத்தில் சந்தேகத்துக்கிடமாககட்டைப்சாபையுடன் அமர்ந்திருந்தவரை பிடித்து விசாரித்தனர்.அவர் திருச்சிஅரியமங்கலம் வேலாயுதம் தெருவை சேர்ந்த மணிவண்ணன்(46) என தெரிய வந்தது. இவர் பாண்டிச்சேரி மதகடிப்பட்டியில் இருந்து 48 சாராய பாக்கெட்டுகளை வாங்கி வந்ததாக கூறினார். அவரை பிடித்து பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனைதொடர்ந்து அவரை கைது செய்துஅவரிடமிருந்து சாராய பாக்பகெட்டுகளை பறிமுதல் செய்து அவரைபண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • பல்கலைக்கழக வளாத்திற்குள் ஒரு மர்ம கார் வந்தது. அதில் வந்தவர்கள் 2 மாணவிகளை கடத்த முயன்றனர்.
    • மாணவ-மாணவிகள் அடையாள அட்டையை காட்டிய பிறகு தான் உள்ளே செல்ல அனுமதிக்கபடுவார்கள் என அறுவுறுத்தப்பட்டு இருச்கிறது.

    புது டெல்லி:

    டெல்லியில் ஜவகர்லால் நேருபல்கலைக்கழகம் உள்ளது. இங்கு பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.

    நேற்று இரவு பல்கலைக்கழக வளாத்திற்குள் ஒரு மர்ம கார் வந்தது. அதில் வந்தவர்கள் 2 மாணவிகளை கடத்த முயன்றனர். ஒரு மாணவிக்கு அந்த கும்பல் பாலியல் தொந்தரவு கொடுத்தாகவும் கூறப்படுகிறது. இதனால் பயந்து போன மாணவிகள் சத்தம் போட்டனர். உடனே மர்ம கும்பல் தப்பி சென்று விட்டது. இது பற்றி போலீசில் புகார் செய்யப்பட்டது.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்கலைக்கழக வளாகத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் அபிஷேக் என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை வெளி வாகனங்கள் பல்கலைக்கழக வளாகத்தில் நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது. மாணவ-மாணவிகள் அடையாள அட்டையை காட்டிய பிறகு தான் உள்ளே செல்ல அனுமதிக்கபடுவார்கள் என அறுவுறுத்தப்பட்டு இருக்கிறது.

    • கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளையும் போலீசார் கைப்பற்றினார்.
    • தப்பி ஓடிய குற்றவாளியை நாகூர் போலீசார் தேடி வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனை மற்றும் கடத்தலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை காவல்துறை செய்து வருகின்றனர்.

    அதன் ஒரு பகுதியாக வாஞ்சூர் பகுதியில் அமைக்கப்பட்ட சோதனை சாவடியில் தனிப்படை போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது வாஞ்சூர் சோதனை சாவடி வழியே புதுச்சேரி மாநிலம், காரைக்காலிருந்து வந்த மோட்டார் சைக்கிளை மறித்து சோதனை செய்தனர்.

    சோதனையில் மோட்டார் சைக்கிளில் 180 மில்லி அளவுள்ள 197 கோட்டர் மது பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனையடுத்து மதுகடத்தலில் ஈடுபட்ட வெளிப்பாளையம் தாமரைக் குளம் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் கைது செய்யப்பட்டார்.

    மேலும், அவரிடமிருந்து 197 மதுபாட்டில்களும் மற்றும் கடத்தலுக்கு பயன்ப டுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளைய போலீசார் கைப்பற்றினார்.

    இதேபோல் நாகூர் புறவழி சாலையில் நடைபெற்ற சோதனையில் மோட்டார் சைக்கிளை மறித்த போது மோட்டார் சைக்கிளை விட்டு விட்டு மர்மநபர் தப்பி ஓடி விட்டார்.

    இதனையடுத்து மோட்டார் சைக்கிளில் இருந்த 100 புதுச்சேரி சாராய பாட்டில்களையும் கைப்பற்றப்பட்டன.

    இது குறித்து வழக்கு பதிவு செய்த நாகூர் போலீசார் தப்பி ஓடிய குற்றவாளியை தேடி வருகின்றனர்.

    • புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு மது பாட்டில்கள் கடத்திய சகோதரிகள் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கி வந்த அரசு பஸ்சை மறித்து சோதனை செய்தனர்.

    கடலூர்:

    புதுச்சேரியில் இருந்து மது பாட்டில்கள் கடத்தி வந்த சகோதரிகளை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரியில் இருந்து மது பாட்டில்கள் மற்றும் சாராயம் கடத்தப்படுகிறதா? என்பது குறித்து கடலூர் மஞ்சக்குப்பம் ஆல்பேட்டை சோதனை சாவடியில் தினம் தோறும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி இன்று அதிகாலை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா தலைமையிலான போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கி வந்த அரசு பஸ்சை மறித்து சோதனை செய்தனர். அப்போது பஸ்சில் 2 பெண்கள் வைத்திருந்த பைகளை சோதனை செய்தபோது, அதில் மதுபாட்டில்கள் மற்றும் சாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் இருவரும் திருவண்ணாமலை மாவட்டம் சமத்துவபுரத்தை சேர்ந்த ரமேஷ் மனைவி அமுதா (வயது 50), முருகன் மனைவி பூமாதேவி (45) என்பதும், சகோதரிகள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அமுதா, பூமாதேவி ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள 108 மது பாட்டில்கள் மற்றும் 30 சாராய பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • தூங்கிய குழந்தைகள் சித்ரா, சந்தோஷ் மாயமாகி இருப்பதை கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
    • இம்ரான் கடத்தப்பட்ட 2 குழந்தைகளுடன் திருக்கழுக்குன்றத்தில் இருப்பது தெரியவந்தது.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு, ராட்டின கிணறு பகுதியில் உள்ள மேம்பாலத்தின் கீழ் தெருவோ ரத்தில் வசித்து வருபவர் குமார். இவரது மனைவி அமுதா. இவர்களது 3 வயது மகள் சித்ரா, 1½ வயது மகன் சந்தோஷ். கணவன்-மனைவி இருவரும் சாலையோரத்தில் தங்கி வாழ்க்கை நடத்தி வந்தனர்.

    நேற்று இரவு அவர்கள் வழக்கம்போல் மேம்பாலத்தின் கீழ் தூங்கினர். நள்ளிரவு எழுந்து பார்த்தபோது அருகில் தூங்கிய குழந்தைகள் சித்ரா, சந்தோஷ் மாயமாகி இருப்பதை கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். அருகில் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து செங்கல்பட்டு நகர போலீஸ் நிலையத்தில் நள்ளிரவு 1.30 மணியளவில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது அதே பகுதியில் தெருவோரத்தில் தங்கி இருக்கும் இம்ரான் என்ற மீரான் என்பவரும் மாயமாகி இருந்தார். அவர் குழந்தைகளை கடத்தி சென்று இருப்பது தெரியவந்தது.

    இது குறித்து மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் இம்ரான் கடத்தப்பட்ட 2 குழந்தைகளுடன் திருக்கழுக்குன்றத்தில் இருப்பது தெரியவந்தது. இதைத் தாொடர்ந்து போலீசார் விரைந்து சென்று குழந்தைகள் 2 பேரையும் பத்திரமாக மீட்டனர். மேலும் இம்ரானை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குழந்தை கடத்தப்பட்டதாக புகார் வந்த 3 மணிநேரத்தில் போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்து குழந்தைகளை மீட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இதில் சிறப்பாக செயல்பட்ட போலீசாரை அதிகாரிகள் பாராட்டி உள்ளனர்.

    • சிறுவனின் தாய் சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார்.
    • ஒண்டிப்புதூர் பஸ் நிலையம் வழியாக சென்ற லோடு வேனில் சிறுவன் ஏறிச்சென்றது தெரியவந்தது.

    கோவை:

    சென்னை அயப்பாக்கம் ராஜம்மாள் நகரை சேர்ந்தவர் மகாலட்சுமி. இவரது மகன் யுவன் கதிரவன் (வயது 13). இவர் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார்.

    கோடை விடுமுறையொட்டி பள்ளி விடுமுறை என்பதால் மகாலட்சுமி தனது மகன் மற்றும் குடும்பத்தாருடன் கோவை மசக்காளிபாளையம் சின்னசாமி லே-அவுட் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்தார்.

    நேற்று காலை 8.30 மணியளவில் வீட்டில் உள்ள யாரிடமும் சொல்லாமல் யுவன் கதிரவன் வெளியே சென்றார். அதன்பின்னர் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.

    தொடர்ந்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அக்கம்பக்கத்தில் அவரை தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து சிறுவனின் தாய் சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுவன் குறித்து விசாரணை நடத்தினர்.

    போலீசார் அந்தப் பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    அப்போது ஒண்டிப்புதூர் பஸ் நிலையம் வழியாக சென்ற லோடு வேனில் சிறுவன் ஏறிச்சென்றது தெரியவந்தது.

    அந்த லோடு வேனின் பதிவு எண்ணை கொண்டு வேனை ஓட்டி சென்றது யார்? அவருடன் சிறுவன் ஏன் சென்றான் என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கினர்.

    விசாரணையில், அந்த வேன் வேடப்பட்டியில் உள்ள சவுண்ட் சர்வீஸ் நிறுவனத்துக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.

    தொடர்ந்து நடத்திய விசாரணையில் அந்த லோடு வேனை யாரோ மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது. திருட்டு லோடு வேனில் சிறுவன் சென்றால் அவனை மர்ம நபர்கள் யாராவது கடத்திச் சென்று இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    சிறுவனை கண்டுபிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவையில் மாணவி ஒருவர் திடீரென மாயமானார். அப்போது சமூக வலைதளங்களில் இந்த தகவல் பரவி மாநிலம் முழுவதும் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அந்த மாணவியை போலீசார் மீட்டனர். இந்நிலையில் சென்னையில் இருந்து கோவை வந்த சிறுவன் மாயமாகி இருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    • வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • அழகர் இருப்பிடம் செல்லும் நிகழ்ச்சியுடன் முடிவடைந்தது.

    மதுரை

    மதுரையில் பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா கடந்த 23-ந்தேதி தொடங்கி நேற்று அழகர் இருப்பிடம் செல்லும் நிகழ்ச்சியுடன் முடிவடைந்தது. இந்த ஆண்டு சித்திரை திருவிழாவில் சமூக விரோதிகள் வழிப்பறி, நகை பறிப்பு, பணம் பறித்தல், பொது சொத்துக்களை சேதப்படுத்துதல் போன்ற செயல்களில் தைரியமாக ஈடுபட்டனர். இதனால் பொதுமக்கள் பயமின்றி சித்திரை திருவிழாவுக்கு செல்ல முடியவில்லை.

    இந்தநிலையில் திருவிழா வின்போது வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். மதுரை முடக்கத்தான் தேவேந்திரன் நகரை சேர்ந்தவர் சின்னான் (வயது53). இவர் சம்பவத் தன்று கள்ளழகரை தரிசிப்பதற்காக வெளியே சென்றார். ராஜாஜி பூங்கா அருகே நடந்து சென்றபோது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் கத்தியை காட்டி மிரட்டி ரூ. 1000 பறித்துச் சென்றது.

    இது தொடர்பாக தல்லா குளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், பணம் பறிப்பில் ஈடுபட்டது பி.பி.குளம், முல்லை நகர், செல்வம் மகன் சுபாஷ் (வயது 21), ஆத்திகுளம், அங்கயற்கண்ணி காலனி, ராமராஜ் மகன் சுந்தரேஸ் வரன் ( 22), மீனாம்பாள்புரம், பாரதிதாசன் தெரு, முருகன் மகன் சந்தோஷ் (19) மற்றும் முல்லை நகர், எல்.ஐ.சி காலனியை சேர்ந்த 16 வயது சிறுவன் என தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல் சித்திரை திருவிழாவுக்கு வந்த திருப்பரங்குன்றத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவரிடம் கத்தி முனையில் செல்போன் பறித்ததாக சோலையழகு புரத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவரை விளக்குத்தூண் போலீசார் கைது செய்தனர்.

    • வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து ரஞ்சித் குமார் என்பவரை கைது செய்தனர்.

    மதுரை

    ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகரை சேர்ந்தவர் பாண்டியராஜன். இவரது மகன் செந்தூர்பாண்டி (வயது23). இவர் மீனாம்பிகை நகரில் நடந்து சென்றார். அப்போது 3 பேர் கும்பல் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து செந்தூர்பாண்டி ஜெய்ஹிந்த்புரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட மீனாம்பிகை நகர் 7-வது தெருவை சேர்ந்த மணிகண்டன் (24), மீனாம்பிகை நகர் 9-வது தெரு திருப்பதி (24), முருகபாண்டி (23) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    திருச்சி வசந்த நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (50). இவர் கே.புதூர் பாரதியார் ரோடு, வண்டி பாதை சந்திப்பில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரை ஒருவர் வழிமறித்து பணத்தை பறித்து சென்றார். இது தொடர்பாக சுப்பிரமணியன், கே.புதூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சுப்பிரமணியனிடம் பணம் பறித்த கே.புதூர் காந்திபுரம் தந்தை பெரியார் நகரை சேர்ந்த ரஞ்சித் குமார் (31) என்பவரை கைது செய்தனர்.

    ×