search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "karunanidhi health"

    காவேரி மருத்துவமனைக்கு வந்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தார். #KarunanidhiHealth #KeralaCM #PinarayiVijayan
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை திடீரென மோசமடைந்ததையடுத்து கடந்த 27-ம் தேதி நள்ளிரவு சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை நன்றாக தேறி வருவதாகவும், வயது முதிர்வு, உடல்நிலை காரணமாக அவர் மேலும் சில நாட்கள் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.



    மருத்துவமனையில் கருணாநிதி அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து தினமும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பிரபலங்கள் என நேரில் வந்து நலம் விசாரித்த வண்ணம் உள்ளனர். தொண்டர்களும் கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிந்துகொள்வதற்காக காவேரி மருத்துவமனை வளாகத்தில் காத்துக்கிடக்கின்றனர்.

    இந்நிலையில், கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று சென்னை வந்தார். காவேரி மருத்துவமனைக்கு சென்ற அவர், கருணாநிதியின் உடல்நலம் குறித்து மு.க.ஸ்டாலினிடம் விசாரித்தார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பினராயி விஜயன், பிறவி போராளியான கருணாநிதியின் உடல்நிலை மிகவும் முன்னேற்றம் அடைந்திருப்பதாக கூறினார்.

    ‘கருணாநிதியின் உடல்நிலை குறித்து ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆகியோரிடம் நலம் விசாரித்தேன். கருணாநிதி உடல்நிலை வேகமாக முன்னேறி வருவதாக தெரிவித்தனர். அவர் விரைவில் பூரண குணமடைய வேண்டுகிறேன்’ என்றும் பினராயி விஜயன் கூறினார். #KarunanidhiHealth #KeralaCM #PinarayiVijayan
    திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது உடல்நலம் குறித்து நடிகர் விஜய் ஆண்டனி நேரில் சென்று விசாரித்தார். #Karunanidhi #VijayAntony
    திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்திருப்பதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். 

    கருணாநிதி இன்னும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்த நிலையில், கருணாநிதியின் உடல்நலம் பற்றி விசாரிக்க திரையுலகப் பிரபலங்கள் பலரும் மருத்துவமனைக்கு நேரில் சென்று வருகின்றனர். 



    ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், கவுண்டமணி, விவேக், சூரி உள்ளிட்ட பலரும் மருத்துவமனைக்கு நேரில் சென்று கருணாநிதியின் உடல்நலம் குறித்து ஸ்டாலினிடம் கேட்டறிந்தனர். 

    இந்த நிலையில், நடிகர் விஜய் ஆண்டனி நேற்று ஆழ்வார்பேட்டை மருத்துவமனைக்கு நேரில் சென்று கருணாநிதி உடல்நலம் குறித்து ஸ்டாலினிடம் விசாரித்தார். அப்போது நடிகர் உதயநிதி ஸ்டாலினும் உடனிருந்தார். #Karunanidhi #VijayAntony

    கருணாநிதிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட செய்தியை கேட்டு மன வருத்தத்தில் இருந்த தி.மு.க. பிரமுகர்கள் 2 பேர் மாரடைப்பால் உயிரிழந்தனர்.
    கோவை:

    கோவை அன்னூரை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 63). அன்னூர் பேரூராட்சி 3-வது வார்டு தி.மு.க. பிரதிநிதி. தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்த செய்திகளை டி.வி.யில் பார்த்த இவர் வேதனை அடைந்தார். கருணாநிதி உடல் நலம் பெற வேண்டும் என குடும்பத்தினரிடம் கூறிக் கொண்டிருந்தார். இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

    மற்றொரு சம்பவம்...

    காரமடை அருகே தாயனூரை சேர்ந்தவர் பொன்னுசாமி(75). தாயனூர் கிளை தி.மு.க. அவை தலைவராக இருந்தார். கருணாநிதிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதில் இருந்து மனமுடைந்து காணப்பட்ட இவர் நேற்று மாரடைப்பால் இறந்தார்.

    கருணாநிதிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட வருத்தத்தில் தி.மு.க.வை சேர்ந்த பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த அம்சகுமார் (65), திருப்பூர் பாப்பான் குளத்தை சேர்ந்த சபரிநாதன்(54), ஊட்டியை சேர்ந்த ராஜேந்திரன்(55) ஆகியோர் மாரடைப்பால் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலை குறித்து நடிகர் விஜய் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார். #Karunanidhi #Vijay
    திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கடந்த 27-ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

    தொடக்கத்தில் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்ட நிலையில், மருத்துவர்களின் தொடர் சிகிச்சைக்கு பிறகு கருணாநிதியின் உடல்நிலை நன்றாக தேறி வருகிறது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். மருத்துவ சிகிச்சைகளுக்கு அவர் முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும், வயது முதிர்வு, உடல்நிலை காரணமாக அவர் மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

    இந்த நிலையில், சர்கார் படப்பிடிப்பில் பிசியாக இருந்த நடிகர் விஜய், காவிரி மருத்துவமனைக்கு நேரில் சென்று கருணாநிதியின் உடல்நலம் குறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் நடிகர் உதயநிதி ஸ்டாலினிடம் விசாரித்தார்.

    முன்னதாக நடிகர் ரஜினிகாந்த், சூரி உள்ளிட்டோர் நேற்று காவேரி மருத்துவமனைக்கு நேரில் சென்று கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. #Karunanidhi #KauveryHospital #Vijay
    திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த் அவரது உடல்நிலை குறித்து இன்று மருத்துவமனைக்கு வந்து விசாரித்தார். #Karunanidhi #KarunanidhiHealth #RajiniKanth
    சென்னை:

    தமிழக முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.கருணாநிதி வயோதிகம் சார்ந்த உடல்நலக்குறைவு காரணமாக வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார். கடந்த 27-ம் தேதி நள்ளிரவில் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

    கருணாநிதிக்கு நான்காவது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனைக்கு வருகை தந்து ஸ்டாலின் உள்ளிட்ட குடும்பத்தினரிடம் கருணாநிதியின் உடல்நலம் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் ஆகியவை குறித்து கேட்டறிந்தார். 

    வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருந்த அவர் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு, சென்னை வந்த அவர் விமான நிலையத்தில் இருந்து நேரடியாக மருத்துவமனைக்கு வந்திருந்தார்.

    சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் கூறுகையில், “இந்திய அரசியலில் முக்கிய தலைவர் கருணாநிதி. அவரது உடல்நிலை குறித்து ஸ்டாலின்,அழகிரி, கனிமொழி ஆகியோரிடம் விசாரித்து ஆறுதல் கூறினேன். அவர் விரைவில் குணமாக எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்” என கூறினார்.

    முன்னதாக இன்று மாலை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருணாநிதியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
    திமுக தலைவர் கருணாநிதி நன்றாக தேறி வருகிறார் என்றும் மேலும் சில நாட்கள் மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது எனவும் காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. #KarunanidhiHealth #Karunanidhi #DMK #KauveryHospital
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதி சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கடந்த 27-ம் தேதி நள்ளிரவு அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவரது உடல்நிலை குறித்த 5 ஆவது அறிக்கையை காவேரி மருத்துவனை இன்று வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

    திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை நன்றாக தேறி வருகிறது. மருத்துவ சிகிச்சைகளுக்கு அவர் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறார். வயது முதிர்வு, உடல்நிலை காரணமாக அவர் மேலும் சில நாட்கள் தங்கி சிகிச்சை பெற வேண்டும். 29-ம் தேதியில் ஏற்பட்ட பின்னடைவுக்கு பின்னர் தற்போது உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளது.



    அவரது உடல்நிலை படிப்படியாக இயல்புநிலைக்கு திரும்பிக்கொண்டுள்ளது. மருத்துவ உபகரணங்கள் உதவியுடன் முக்கிய உறுப்புகள் சிறப்பாக இயங்கி வருகின்றன. அவரது கல்லீரல் செயல்பாடு, ரத்த ஓட்டம் சீராக்கப்பட வேண்டியதுள்ளது.

    என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார். #KarunanidhiHealth #Karunanidhi #RahulGandhi #DMK
    சென்னை:

    தமிழக முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.கருணாநிதி வயோதிகம் சார்ந்த உடல்நலக்குறைவு காரணமாக வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார். பின்னர் அவரது உடல்நிலை மோசமடைந்ததைடுத்து ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

    கருணாநிதிக்கு நான்காவது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவரை சந்தித்து உடல்நலம் விசாரிக்க இன்று வருகை தந்தார்.  ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களிடம் கருணாநிதியின் உடல்நலம் குறித்தும் அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் அவர் கேட்டறிந்தார். 

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, “கருணாநிதி தைரியமானவர் நலமாக இருக்கிறார். அவர் நலமாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என கூறினார்.
    கருணாநிதிக்கு உடல் நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதை அறிந்து மனமுடைந்த விசைத்தறி தொழிலாளி இன்று திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், நடராஜாநகர் பகுதியை சேர்ந்தவர் சேகர்மணி (வயது 75). விசைத்தறி தொழிலாளி. இவர் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் ஆதரவாளர் ஆவார்.

    மேலும் இவர் உதயசூரியன் நாடகமன்றத்தின் தலைவராக இருந்து வந்தார். கருணாநிதி உடல் நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதை அறிந்து சேகர்மணி மனமுடைந்தார். மேலும் அவரது உடல்நிலை குறித்து தொடர்ந்து பல்வேறு தகவல்கள் பரவியது.

    இந்த நிலையில் கவலையுடன் இருந்த சேகர்மணிக்கு இன்று அதிகாலையில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதில் அவர் பரிதாபமாக இறந்தார். இதையறிந்த தி.மு.க.வினர் அவரது வீட்டிற்கு சென்று உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.

    காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று சென்னை வந்து, காவேரி மருத்துவமனையில் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க உள்ளார். #Karunanidhi #DMKLeader #DMK #RahulGandhi #Congress
    சென்னை:

    தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.கருணாநிதி (வயது 94) வயோதிகம் சார்ந்த உடல்நலக்குறைவு காரணமாக வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார். பின்னர் அவரது உடல்நிலை மோசமடைந்ததைடுத்து ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.



    பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் என ஏராளமானோர் மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தவண்ணம் உள்ளனர்.

    கருணாநிதிக்கு நான்காவது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று மாலை காவேரி மருத்துவமனைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காவேரி மருத்துவமனையில் கருணாநிதி சிகிச்சை பெறும் வார்டுக்கு சென்று ராகுல் காந்தி பார்க்க உள்ளதாகவும், பின்னர் அவரது உடல்நலம் மற்றும் சிகிச்சை தொடர்பாக குடும்ப உறுப்பினர்களிடம் ராகுல்காந்தி கேட்டறிவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. #Karunanidhi #DMKLeader #DMK #RahulGandhi #Congress
    கருணாநிதி உடல்நலம் குறித்து கேட்டறிய மருத்துவமனை வந்த இலங்கை அமைச்சர் மற்றும் எம்.பி, இலங்கை அதிபரின் வாழ்த்து கடிதத்தையும் ஸ்டாலினிடம் வழங்கினர். #Karunanidhi #KarunanidhiHealth #MaithripalaSirisena
    சென்னை:

    காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து உடல்நலம் விசாரிக்க பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் வருகை தந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், இன்று இலங்கை எம்.பி. ஆறுமுகன் தொண்டமான் மற்றும் அமைச்சர் செந்தில் தொண்டமான் ஆகியோர் காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்தனர்.

    கருணாநிதியின் உடல்நலம் குறித்து ஸ்டாலினிடம் அவர்கள் கேட்டறிந்தனர். அப்போது, இலங்கை மைத்திரிபால சிறிசேனா எழுதிய வாழ்த்து கடிதத்தையும் அவர்கள் ஸ்டாலினிடம் கொடுத்தனர். “உலகத் தமிழர்களின் தலைவரான கருணாநிதி விரைவில் நலம் பெற வேண்டி இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்” என அவர்கள் இருவரும் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
    தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் இன்று காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து மு.க.ஸ்டாலினிடம் நலம் விசாரித்தார். #Karunanidhi #KauveryHospital #KarunanidhiHealth #Karunanidhisharadpawar
    சென்னை:

    உடல்நலக் குறைவால் சென்ன ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதியை பார்த்து நலம் விசாரிக்க கடந்த 5 நாட்களாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், திரையுலகப் பிரமுகர்களும் வந்தவண்ணம் உள்ளனர்.

    இந்நிலையில், இன்று காலை பிரபல ஆன்மிகவாதி ஜக்கி வாசுதேவ், நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, சரத்குமார் ஆகியோர் இன்று காலை வந்து நலம் விசாரித்து சென்றனர்.

    மாலை 5 மணியளவில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து மு.க.ஸ்டாலினிடம்  நலம் விசாரித்தார். கருணாநிதிக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றி அவர் கேட்டறிந்தார். #Karunanidhi #Karunanidhisharadpawar
    கருணாநிதி நன்றாக இருப்பதாகவும், தொண்டர்கள் தைரியமாக இருக்க வேண்டும் என்றும் கனிமொழி எம்.பி. கேட்டுக்கொண்டார். #KarunanidhiHealth #KauveryHospital #Kanimozhi
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதி (வயது 94), வயோதிகம் சார்ந்த உடல் உபாதைகள் காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி கோபாலபுரம் வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார். வீட்டிலேயே அவருக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த 27-ம் தேதி நள்ளிரவில் அவரது உடல்நிலை மோசமடைந்ததையடுத்து காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

    இதற்கிடையே கருணாநிதியின் உடல்நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் எதிர்மறை தகவல்கள் பரவத் தொடங்கியதால் காவேரி மருத்துவமனை அருகில் ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். நேற்று இரவு கருணாநிதியின் உடல்நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டதால் தொண்டர்களிடையே அதிர்ச்சியும் குழப்பமும் ஏற்பட்டது. கொந்தளிப்பில் இருந்த தொண்டர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினார். லேசான தடியடியும் நடத்தப்பட்டது.



    இந்த நிலையில், ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனை வளாகத்தில் பேட்டி அளித்த ஆ.ராசா ‘கருணாநிதியின் உடல் நிலை தொடர்ந்து சீராக உள்ளது. நலமாக இருக்கிறார். கருணாநிதிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது’ என்றார்.

    இதேபோல் திமுக தலைவர் கருணாநிதி நன்றாக இருப்பதாக  கனிமொழி எம்.பி.யும் கூறியுள்ளார். தொண்டர்கள் தைரியமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

    கருணாநிதியின் உடல்நிலையில் தற்காலிக பின்னடைவு ஏற்பட்டு தற்போது உடல்நிலை சீராகி வருவதாகவும், தொண்டர்கள் அனைவரும் அமைதிகாக்க வேண்டும் எனறும் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். #KarunanidhiHealth #KauveryHospital #Kanimozhi

    ×