search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "loom worker death"

    பல்லடத்தில் மனைவி குடிக்க பணம் தராததால் விசைத்தறி தொழிலாளி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    பல்லடம்:

    பல்லடம் செம்மிபாளையத்தை சேர்ந்தவர் சந்திரன் (வயது 49). விசைத்தறி தொழிலாளி. இவரது மனைவி பாப்பாள். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் கணவரை விட்டு பிரிந்து பாப்பாள் குழந்தைகளுடன் சூலூரில் உள்ள ராசிபாளையத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் சந்திரன் அதே பகுதியை சேர்ந்த ஜோதிமணி என்பவருடன் குடும்பம் நடத்தி வந்தார். சந்திரனுக்கு குடிப்பழக்கம் இருந்தது. குடிக்க பணம் கேட்டு ஜோதிமணியை அடிக்கடி தொந்தரவு செய்தார். நேற்றும் காலை குடித்து விட்டு வந்த சந்திரன் ஜோதிமணியிடம் மீண்டும் குடிக்க பணம் கேட்டார். பணம் ஏதுவும் இல்லை என்று கூறிய ஜோதிமணி கடைக்கு சென்று விட்டார். கடைக்கு சென்று சிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்து பார்த்தபோது சந்திரன் சாணிப்பவுடர் குடித்து வாயில் மஞ்சள் நிற நுரை தள்ளியபடி மயங்கி கிடந்தார். 

    அதிர்ச்சியடைந்த ஜோதிமணி மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பலத்த காயம் அடைந்த விசைத்தறி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, ராஜாகவுண்டம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் தேவசகாயம் (வயது 65). விசைத்தறி தொழிலாளி. இவர் நேற்று இரவு சொந்த வேலை காரணமாக மொபட்டில் திருச்செங்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். கிரியேறிபட்டி அருகே சென்றபோது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் தேவசகாயம் ஓட்டிச் சென்ற மொபட் மீது வேகமாக மோதியது. 

    இதில் அவர் தலையில் படுகாயம் அடைந்தார். பொதுமக்கள் அவரை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தேவசகாயம் பரிதாபமாக இறந்தார். 

    இது குறித்து திருச்செங்கோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    கருணாநிதிக்கு உடல் நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதை அறிந்து மனமுடைந்த விசைத்தறி தொழிலாளி இன்று திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், நடராஜாநகர் பகுதியை சேர்ந்தவர் சேகர்மணி (வயது 75). விசைத்தறி தொழிலாளி. இவர் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் ஆதரவாளர் ஆவார்.

    மேலும் இவர் உதயசூரியன் நாடகமன்றத்தின் தலைவராக இருந்து வந்தார். கருணாநிதி உடல் நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதை அறிந்து சேகர்மணி மனமுடைந்தார். மேலும் அவரது உடல்நிலை குறித்து தொடர்ந்து பல்வேறு தகவல்கள் பரவியது.

    இந்த நிலையில் கவலையுடன் இருந்த சேகர்மணிக்கு இன்று அதிகாலையில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதில் அவர் பரிதாபமாக இறந்தார். இதையறிந்த தி.மு.க.வினர் அவரது வீட்டிற்கு சென்று உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.

    ×