search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "karunanidhi health"

    திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மிக மோசமாக உள்ளதாக வெளியான அறிக்கையால், கவலை அடைந்த தொண்டர்கள் கோபாலபுரத்தில் குவிந்து வருகின்றனர். #KarunanidhiHealth #Karunanidhi #DMK
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மிக மோசமான நிலையில் இருப்பதாக காவேரி மருத்துவமனை சமீபத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளது. கருணாநிதி நலமுடன் வீடு திரும்புவார் என காத்திருந்த தொண்டர்கள் இந்த அறிக்கையால் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

    காவேரி மருத்துவமனைக்கு வெளியே பலர் கதறி அழுந்த நிலையில், எழுந்து வா தலைவா என கண்ணீர் மல்க நம்பிக்கையுடன் கூறி வருகின்றனர். மருத்துவ அறிக்கை வெளியானதை அடுத்து, பலர் கோபாலபுரம் இல்லத்தின் முன் குவிந்து வருகின்றனர். இதனால், அங்கும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 
    திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக காவேரி மருத்துவமனை புதிய மருத்துவ அறிக்கை வெளியிட்டுள்ளது. #KarunanidhiHealth #Karunanidhi #DMK
    சென்னை:

    காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதிக்கு கடந்த 11 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவரது உடல்நிலை நேற்று மாலை முதல் கவலைக்கிடமாக உள்ளது. நேற்று மாலை வெளியான மருத்துவ அறிக்கையில், கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு இருப்பதாக கூறப்பட்டிருந்தது.

    இன்று காலை முதல் தொடர்ந்து பதற்றமான சூழல் நீடித்து வரும் நிலையில், பிற்பகலில் ஸ்டாலின், அழகிரி, கனிமொழி உள்ளிட்ட கருணாநிதி குடும்பத்தினர் மற்றும் திமுக நிர்வாகிகள் முதல்வர் எடப்பாடியை சந்தித்து பேசினர்.

    தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த போலீஸ் டிஜிபி ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார். அனைத்து காவல் ஆணையர்கள், துணை ஆணையர்கள், காவல்துறை துணை தலைவர்கள், மண்டல ஐஜிக்கள், எஸ்.பிக்கள் அனைவருக்கும் டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

    இந்நிலையில், கருணாநிதியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக காவேரி மருத்துவமனை புதிய அறிக்கை வெளியிட்டுள்ளது. சில மணி நேரங்களாக கருணாநிதியின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    கருணாநிதியின் உடல்நிலை மோசமான நிலையில் இருக்கும் நிலையில், தமிழகம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். #KarunanidhiHealth #Karunanidhi #DMK
    சென்னை:

    காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதிக்கு கடந்த 11 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவரது உடல்நிலை நேற்று மாலை முதல் கவலைக்கிடமாக உள்ளது. நேற்று மாலை வெளியான மருத்துவ அறிக்கையில், கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு இருப்பதாக கூறப்பட்டிருந்தது.

    இன்று காலை முதல் தொடர்ந்து பதற்றமான சூழல் நீடித்து வரும் நிலையில், பிற்பகலில் ஸ்டாலின், அழகிரி, கனிமொழி உள்ளிட்ட கருணாநிதி குடும்பத்தினர் மற்றும் திமுக நிர்வாகிகள் முதல்வர் எடப்பாடியை சந்தித்து பேசினர்.

    இதற்கிடையே, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் ஆயுதப்படை காவலர்கள் அணிவகுக்கப்பட்டுள்ளனர். 

    மேலும், தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த போலீஸ் டிஜிபி ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார். அனைத்து காவல் ஆணையர்கள், துணை ஆணையர்கள், காவல்துறை துணை தலைவர்கள், மண்டல ஐஜிக்கள், எஸ்.பிக்கள் அனைவருக்கும் டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

    கூடுதல் போலிசார்களை வரவழைத்து பாதுகாப்பை மேற்கொள்ள வேண்டும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மோசமடைந்துள்ள நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் மு.க.ஸ்டாலின் மற்றும் மு.க.அழகிரி மற்றும் குடும்பத்தினர் சந்தித்து பேசினர். #KarunanidhiHealth #MKStalin #StalilnMeetsCM
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதி வயது மூப்பு சார்ந்த உடல்நல பிரச்சினைகள் காரணமாக தீவிர அரசியலில் இருந்து விலகி ஓய்வெடுத்து வந்தார். வீட்டிலேயே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவ்வப்போது ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அவருக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது.



    கடந்த மாதம்  28-ந்தேதி கருணாநிதிக்கு சிறுநீரக பாதையில் தொற்று ஏற்பட்டதுடன், மூச்சுவிடவும் திணறினார். இதனால் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை காரணமாக அவரது உடல்நிலை முதலில் தேறியது. நேற்று மீண்டும் உடல்நிலை கவலைக்கிடமானது. உயிரைக் காப்பாற்ற டாக்டர்கள் கடுமையாக போராடி வருகின்றனர்.

    இந்நிலையில், திமுக செயல்  தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பிற்பகல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வரின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பின்போது, மு.க. அழகிரி, கனிமொழி, டி.ஆர்.பாலு, முரசொலி செல்வம், முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    கருணாநிதி கவலைக்கிடமாக இருக்கும் நிலையில் அவரது குடும்பத்தினர் முதலமைச்சரை திடீரென சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  #KarunanidhiHealth #MKStalin #StalilnMeetsCM
    தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதால், அவரது உயிரைக் காப்பாற்ற டாக்டர்கள் போராடி வருகின்றனர். #DMKLeader #Karunanidhi #KauveryHospital #KarunanidhiHealth
    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு கடந்த 2016-ம் ஆண்டு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் கழுத்தில் துளையிடப்பட்டு ‘‘டிரக்யாஸ்டமி’’ எனும் கருவி பொருத்தப்பட்டது.

    கடந்த சுமார் 20 மாதங்களாக அவர் அந்த செயற்கை கருவி மூலம் சுவாசித்து வருகிறார்.

    கடந்த மாதம் 18-ந்தேதி கருணாநிதிக்கு ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் டிரக்யாஸ்டமி குழாய் கருவியை மாற்றி விட்டு புதிய குழாய் பொருத்தப்பட்டது. அன்றே அவர் வீடு திரும்பினார். சுமார் ஒரு வாரம் இயல்பு நிலையில் இருந்த கருணாநிதிக்கு ஜூலை 26-ந்தேதி திடீரென காய்ச்சல் ஏற்பட்டது.

    அதுவரை நன்றாக இருந்த கருணாநிதி வயது முதிர்வு காரணமாக முதன் முதலாக உடல் நலிவை சந்தித்தார். காவேரி ஆஸ்பத்திரி டாக்டர்கள் குழு வீட்டுக்கு சென்று 2 நாட்கள் சிகிச்சை அளித்தனர். ஆனால் கருணாநிதி உடல் நலத்தில் ஏற்பட்ட பின்னடைவை தடுக்க இயலவில்லை.

    28-ந்தேதி கருணாநிதிக்கு சிறுநீரக பாதையில் தொற்று ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அன்றிரவு அவர் மூச்சுவிட திணறியதால் காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது ரத்த அழுத்த குறைவு சீராக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து வழங்கப்பட்ட தீவிர சிகிச்சை காரணமாக கருணாநிதி உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. சக்கர நாற்காலியில் 30 நிமிடம் உட்கார வைக்கும் அளவுக்கு முன்னேற்றம் இருந்தது. இதனால் 3 நாட்களில் கருணாநிதி வீடு திரும்புவார் என்று கூறப்பட்டது.

    இந்த நிலையில் நான்கு நாட்களுக்கு முன்பு கடும் நோய் தொற்றால் கருணாநிதி கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக அவருக்கு மஞ்சள் காமாலை தாக்கியது. இதற்கிடையே பிளட்டேட்ஸ் எனப்படும் ரத்த தட்டணுக்களும் குறைந்தது. நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவி செய்வதே இந்த ரத்த தட்டணுக்கள்தான்.

    கல்லீரல் பாதிப்பு, சிறுநீர் பாதை தொற்று, மஞ்சள் காமாலை, ரத்த தட்டணுக்கள் குறைவு காரணமாக ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் கருணாநிதியின் முக்கிய உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டன. இந்த நிலையில் நேற்று காலை கருணாநிதியின் நாடித்துடிப்பிலும் தொய்வு ஏற்பட்டது. இதனால் கருணாநிதி உடல்நிலை நேற்று மதியம் கவலைக்கிடமாக மாறியது.

    கருணாநிதி உடல் நிலை மோசமானதால் அவரது குடும்பத்தினர் ஒருவர் பின் ஒருவராக காவேரி ஆஸ்பத்திரிக்கு வந்தனர். மதியம் 1.45 மணிக்கு தயாளு அம்மாள் வந்தார். கருணாநிதியைப் பார்த்து அவர் கண்ணீர் வடித்தார். நேற்று பிற்பகல் தி.மு.க. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், முக்கிய நிர்வாகிகளும் ஆஸ்பத்திரிக்கு வந்தனர்.

    இதனால் காவேரி ஆஸ்பத்திரி வளாகம் நேற்று மாலை மிகுந்த பரபரப்பாக காணப்பட்டது. ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டு வந்து கண்ணீர் மல்க ‘‘தலைவா எழுந்து வா’’ என்று கோ‌ஷமிட்டனர். இதனால் ஆழ்வார்பேட்டை பகுதியில் போக்குவரத்து மாற்றி விடப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

    இந்த நிலையில் காவேரி மருத்துவமனை சார்பில் நேற்று மாலை 6.30 மணிக்கு ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், ‘‘கருணாநிதியின் வயது முதிர்வு காரணமாக அவர் உடல் உறுப்புகளின் செயல்பாட்டை சமாளிப்பது சவாலாக உள்ளது. எனவே மருத்துவ சிகிச்சைகளை அவர் உடல் உறுப்புகள் ஏற்றுக்கொள்கிறதா என்பது 24 மணி நேரத்துக்குப் பிறகே தெரியும்’’ என்று கூறப்பட்டு இருந்தது.

    இந்த மருத்துவ அறிக்கை காரணமாக தி.மு.க.வினர் கடும் வேதனை அடைந்துள்ளனர். மக்கள் மத்தியிலும் நேற்று மாலை முதல் பரபரப்பான மனநிலை காணப்படுகிறது. அனைவரது பார்வையும் காவேரி மருத்துவமனையை நோக்கியே திரும்பியுள்ளது.


    நேற்றிரவு கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் தங்கள் வீடுகளுக்கு சென்று விட்டு, இன்று காலை மீண்டும் மருத்துவமனைக்கு புறப்பட்டு வந்தனர். இன்று கருணாநிதிக்கு 11-வது நாளாக டாக்டர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்தது. ஆனால் முக்கிய உடல் உறுப்புகள் பாதிப்பு காரணமாக கருணாநிதி உடலில் செலுத்தப்படும் மருந்துகள் கை கொடுக்கவில்லை.

    மருந்துகள் அனைத்தும் ரத்த தட்டணுக்கள் அளவு குறைவு காரணமாக மெதுவாகவே பலன் அளிக்கின்றன. இதன் காரணமாக கருணாநிதி உடல் நிலை இன்றும் தொடர்ந்து கவலைக்கிடமாகவே உள்ளது. அவரது உடல் நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்த டாக்டர்கள் குழு கடுமையாக போராடி வருகிறது.

    கல்லீரல் பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிப்பதில் உலக அளவில் புகழ் பெற்ற டாக்டர் முகம்மது ரேலே வழங்கியுள்ள ஆலோசனையின் பேரில் கருணாநிதிக்கு டாக்டர்கள் குழு சிகிச்சை அளித்து வருகிறது. அந்த சிகிச்சையை கருணாநிதி உடல் ஏற்றக்கொண்டதா என்பது இன்று பிற்பகலில் தான் தெரியும். அதற்கு ஏற்ப கருணாநிதிக்கு அளிக்க வேண்டிய அடுத்தக்கட்ட சிகிச்சை பற்றி முடிவு செய்ய டாக்டர்கள் திட்டமிட்டுள்ளனர்.

    எனவே கருணாநிதி உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா என்பது இன்று மாலை காவேரி மருத்துவமனை வெளியிட உள்ள 7-வது அறிக்கை மூலம் தெரியவரும். அதை தி.மு.க. மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் அனைவரும் பதட்டமான மனநிலையுடன் எதிர்பார்த்தபடி உள்ளனர்.

    தொண்டர்கள் அனைவரும், கருணாநிதி இந்த சவாலிலும் வென்று உடல் நலம் தேறிவிடுவார் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள்.

    அந்த நம்பிக்கையின் வெளிப்பாடாகத் தான் காவேரி ஆஸ்பத்திரி முன்பு ‘‘எழுந்து வா தலைவா’’ என்ற கோ‌ஷம் இரவு-பகலாக விண்ணதிர கேட்டுக்கொண்டே இருக்கிறது. #DMKLeader #Karunanidhi #KauveryHospital #KarunanidhiHealth
    கருணாநிதி உடல்நிலை குறித்து ‘காவேரி’ மருத்துவமனையில் இருந்து தெரிவிக்கப்படும் தகவலுக்காக தொண்டர்கள் தூக்கத்தை தொலைத்தும் தொடர்ந்து காத்திருக்கிறார்கள். #Karunanidhihealth #Karunanidhi #DMK #KauveryHospital
    விதியே இது என்ன சோதனை....?

    ஓய்வறியாத சூரியனை ஒற்றை அறைக்குள் முடக்கினாய். வயது மூப்புதான். ஆனாலும் எங்களை விட்டு அவர் பிரிவதை மனம் ஒப்பவில்லையே!

    எத்தனையோ அதிசயங்களை நிகழ்த்திய கருணாநிதியின் உடல் நிலையிலும் அதிசயிக்கத்தக்க மாறுதல்கள் ஏற்பட்டன.

    மீண்டு வருகிறார் கலைஞர் என்ற சேதி கேட்டு தொண்டர்கள் மனதில் நம்பிக்கை பிறந்தது. விழி திறந்தார் என்றதும் தொண்டர்கள் விழிகளில் ஆனந்தக் கண்ணீர்!

    வருவார் நம் தலைவர். மீண்டும் அவரது காந்தக் குரலை கேட்கும் காலம் வரும் என்று உடன்பிறப்புகள் நம்பிக்கையுடன் வீடு திரும்பினார்கள்.

    தேறி வருகிறார் என்ற நம்பிக்கையுடன் இருந்தவர்களுக்கு ‘கருணாநிதி கவலைக்கிடம்’ என்று வந்த தகவல் இடியாய் தாக்கியது.



    மீண்டும் காவேரி நோக்கி ஓடி வந்தார்கள். ஆயிரக்கணக்கில் ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், இளம்பெண்கள், குழந்தைகள் திரண்டு விட்டனர்.

    இருண்டுபோன நேரம் அவர்களுக்கு தெரியவில்லை. ‘அரசியலில் எவ்வளவோ ‘கெடு’ விதித்த கலைஞரின் உடலுக்கு மருத்துவர்கள் ‘கெடு’ என்றதும் தொண்டர்கள் மனம் நொறுங்கி போனார்கள்.

    விடிய விடிய ஆஸ்பத்திரி வாசல். போக்குவரத்து மாற்றப்பட்டதால் சாலைகளில் அமர்ந்தும், படுத்தும் நேரத்தை போக்கி கொண்டிருக்கிறார்கள்.

    தூக்கத்தை தொலைத்த கண்கள். பசியால் உடல் சோர்ந்தாலும் இடைவிடாமல் ‘வா.... வா.... தலைவா....’ என்று உரக்க குரல் எழுப்பி வருகிறார்கள்.

    வயது மூப்பு தவிர்க்க முடியாததுதான். ஆனால் எங்கள் ஆசைக்காக எங்கள் தலைவரை இன்னும் கொஞ்ச நாள் எங்களிடம் விட்டு வை என்று தொண்டர்கள் ஏங்குகிறார்கள்.

    குடும்பத்தோடு வந்தவர்கள்... வீட்டில் கணவரையும் குழந்தைகளையும் விட்டு விட்டு பதறியடித்துக் கொண்டு வந்த பெண்கள்.... மனைவி, குழந்தைகளை வீட்டில் இருக்க சொல்லி விட்டு வந்த ஆண்கள், வேலைகளை விட்டு விட்டு ஓடோடி வந்த இளைஞர்கள், இளம்பெண்கள்.....



    காவேரி வாசலில் திரண்டிருக்கும் கூட்டம் வடிக்கும் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கலைஞர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர். ஆனால் கடவுள் நம்பிக்கை கொண்ட ஒவ்வொருவரும் கடவுளிடம் பிரார்த்தனை செய்வது இதுதான்!

    ஆண்டவனே உன்பாதங்களை நான் கண்ணீரில் நீராட்டினேன். இந்த ஓருயிரை நீ வாழ வைக்க உன்னிடம் கையேந்தினேன்.. மன்னன் உயிர் போகாமல் இறைவா நீ ஆணையிடு!

    இன்று மாலைதான் எதுவும் சொல்ல முடியும் என்று மருத்துவமனை கூறி விட்டது.

    ‘கலைஞர் எப்படி இருக்கிறார்?’ என்று ஒருவார்த்தை சொல்ல மாட்டார்களா? சென்று வருவோர், போவோரை ஓடி ஓடி சென்று கேட்கிறார்கள்.

    கோவையைச் சேர்ந்த பெண் என்ஜினீயர் ஜெனிபர். போரூரில் தங்கி இருந்து வேலை பார்க்கிறார். கலைஞர் உடல்நிலை மோசமானதை அறிந்ததும் அவரது தந்தை சென்னை விரைந்துள்ளார். தந்தையும், மகளுமாக இன்று அதிகாலையில் ஆஸ்பத்திரிக்கு வந்து விட்டனர். ஜெனிபர் கூறியதாவது:-

    கலைஞர் எனக்கு தாத்தா மாதிரி. அவரால்தான் நான் படித்து இந்த நிலைக்கு வந்து இருக்கிறேன். அவர் உடல்நிலை கவலைக்கிடம் என்றதும் தாங்க முடியவில்லை.

    அவர் எப்படி இருக்கிறார் என்று யாரும் எதுவும் சொல்ல மாட்டேங்கிறாங்க. ரொம்ப சங்கடமாக இருக் கிறது. அவரது நிலையை அறியாமல் இங்கிருந்து போக மனமில்லை.

    அனிதா (கொளத்தூர்): நேற்று மாலையில் கேள்விப்பட்டதும் அவசர அவசரமாக வந்து விட்டேன். மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.

    டாக்டர்கள் 24 மணி நேரம் கெடு சொல்லி இருக்கிறார்கள். கடவுளை நம்பி இருக்கிறோம். அவர் மீண்டு வருவார் என்று நம்பிக்கை உள்ளது.

    வரலெட்சுமி (கொளத்தூர்):- எனக்கு உடம்புக்கு சரியில்லை. வீட்டில் டி.வி. பார்த்து கொண்டிருந்தேன். கலைஞர் கவலைக்கிடம் என்றதும் புறப்பட்டு வந்தேன்.

    பத்து நாளாக ஆஸ்பத்திரியில் இருக்கிறார். அவருக்கு வயசு மூப்பு மற்றும் மஞ்சள் காமாலை ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். தலைவருக்கு அப்படி எதுவும் வராது. அவர் ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வந்து கை அசைக்கும் வரை இங்கிருந்து போக மாட்டேன்.

    கோமளவள்ளி (திருவொற்றியூர்):- கருணாநிதிக்கு உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டாலும் அவர் மீண்டு வருவார் என்ற நம்பிக்கை உள்ளது. அவருக்கு வில்பவர் அதிகம். ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசும் போது, “100 வயது வரை உயிரோடு இருப்பேன். அதற்கு முன்பு எனது உயிர் போனாலும் தமிழுக்காக உயிர் போகும்” என்றார். அவர் போராட்டக்குணம் கொண்டவர். மரண போராட்டத்தில் இருந்து மீண்டு வருவார்.

    அம்மு (ஆயிரம்விளக்கு):- என் குடும்பமே தி.மு.க. குடும்பம். கருணாநிதி உடல்நிலை பற்றி கேள்விபட்டதும் எங்களால் சாப்பிட முடியவில்லை. அவர் உடல்நலத்துடன் இருந்தாலே போதும். அவருக்கு நேற்று மீண்டும் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது என்று கேள்விபட்டதும் தூக்கம் வரவில்லை. குழந்தைகளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பாமல் இன்று அதிகாலையிலே வந்து விட்டோம்.

    ரூபன் (சேலம்):- நேற்று கருணாநிதி உடல்நிலை குறித்து கேள்விபட்டதும் ரெயில் ஏறி சென்னை வந்து விட்டேன். கருணாநிதி மக்களுக்காக நிறைய திட்டங்கள் கொண்டு வந்துள்ளார். பெண்களுக்கு சொத்து உரிமை கிடைக்கும்படி செய்தவர். அவரால் நிறைய பேரின் சமூக அந்தஸ்து உயர்ந்துள்ளது. அவரை எப்படியாவது பார்க்கவே வந்தேன். அவர் நலமுடன் வருவார் என்ற நம்பிக்கை உள்ளது.

    கல்லை பெரியசாமி (பெரம்பலூர்):- கருணாநிதி உடல்நிலை குறித்து அறிந்ததும் தூங்க முடியவில்லை. தமிழக மக்களுக்காக வாழ்ந்தவர் கலைஞர். அவருக்காக எனது உயிரைக் கூட தியாகம் செய்ய தயாராக இருக்கிறேன். அவரிடம் எந்த மனு கொடுத்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுப்பார். அனைத்து ஜாதியினரையும் அரவணைத்து செல்லக் கூடியவர். அவர் எப்போது அறிவாலயம் வருவார், உடன்பிறப்பே என்று எப்போது அழைப்பார் என்று காத்து கொண்டிருக்கிறேன். #Karunanidhihealth #Karunanidhi #DMK #KauveryHospital

    கருணாநிதிக்கு உடல் நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதும் மிகுந்த மனவேதனையில் சாப்பிடாமல் இருந்த திமுக தொண்டர் முனியசாமி உயிரிழந்தார்.
    காரியாபட்டி:

    விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள உழக்குடியைச் சேர்ந்தவர் முனியசாமி (வயது 82), விவசாயி. இவர் கடந்த 1968-ம் ஆண்டு முதல் தி.மு.க. உறுப்பினராக உள்ளார்.

    தி.மு.க.வில் பிரதிநிதி, கிளைச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புக்களை வகித்துள்ளார். தி.மு.க. தலைவர் கருணாநிதி மீது அதிக பாசம் கொண்டவர். கருணாநிதிக்கு உடல் நலம் சரியில்லை என கேள்விப்பட்டதும் முனியசாமி அதிர்ச்சியடைந்தார்.

    கருணாநிதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதும் முனியசாமி மிகுந்த மனவேதனை அடைந்தார். இந்த சோகத்தில் அவர் சாப்பிட மறுத்து விட்டார். இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட முனியசாமி பரிதாபமாக இறந்தார். அவருக்கு ஒரு மகன் உள்ளார். மனைவி ஏற்கனவே இறந்து விட்டார்.

    தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மனவேதனையில் இருந்த தொண்டர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
    குஜிலியம்பாறை:

    திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள காச்சக்காரன்பட்டியை சேர்ந்தவர் பிச்சைமுத்து (வயது 50). தி.மு.க. தொண்டரான இவர், பாளையத்தில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார்.

    தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் மனவேதனை அடைந்தார். கருணாநிதியின் உடல்நிலையை அறிந்து கொள்ள, கடந்த 1-ந்தேதி சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு அவர் சென்று வந்தார்.

    மருத்துவமனைக்கு சென்று திரும்பிய நாளில் இருந்து மிகுந்த மனவேதனையுடனும், சோகத்துடனும் காணப்பட்டார். அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக குஜிலியம்பாறையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பிச்சைமுத்து பரிதாபமாக இறந்தார்.
    காவேரி மருத்துவமனைக்கு இன்று வருகை தந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், கருணாநிதியின் உடல்நலம் குறித்து ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் கேட்டறிந்தார். #KarunanidhiHealth #Karunanidhi #DMK #PresidentKovind
    சென்னை:

    தமிழக முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.கருணாநிதி வயோதிகம் சார்ந்த உடல்நலக்குறைவு காரணமாக வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார். பின்னர் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கடந்த மாதம் 27-ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

    மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் அவர் உடல்நிலை தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மத்திய மந்திரிகள் சுரேஷ் பிரபு, நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கேரள, ஆந்திர முதல்வர்கள், முன்னாள் பிரதமர் தேவே கவுடா உள்ளிட்ட தலைவர்கள், தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நடிகர்கள் அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனைக்கு வருகை தந்து விசாரித்தனர்.

    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, கவர்னர் பன்வாரிலால் புரோகித் மற்றும் ராகுல் காந்தி காந்தி ஆகியோர் மட்டும் கருணாநிதியை நேரில் பார்த்தனர். மற்ற தலைவர்கள் ஸ்டாலின் மற்றும் கனிமொழியை சந்தித்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்துள்ளனர்.

    இந்நிலையில், ஆந்திராவில் நேற்று நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு கேரளாவுக்கு செல்ல திட்டமிட்டிருந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரிக்க சென்னை வருகை தந்தார். விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அமைச்சர்கள் வரவேற்றனர்.

    அங்கிருந்து, கார் மூலம் காவேரி மருத்துவமனைக்கு வந்தடைந்த அவரை ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட திமுகவினர் வரவேற்றனர். அங்கு, கருணாநிதியை சந்தித்த அவர், கருணாநிதிக்கு அளித்து வரும் சிகிச்சைகள் பற்றி ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் கேட்டறிந்தார். 

    பின்னர், மருத்துவமனையில் இருந்து புறப்பட்ட அவர் காரிலிருந்து இறங்கி மக்களை நோக்கி கைகளை காட்டினார். பின்னர் காரில் விமான நிலையம் சென்ற அவர், அங்கிருந்து கேரளாவுக்கு விமானம் மூலம் புறப்பட்டார்.

    இது தொடர்பாக ட்விட்டர் கணக்கில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளதாவது:-


    மத்திய மந்திரி சுரேஷ் பிரபு உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் இன்று காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தனர். #KarunanidhiHealth #KauveryHospital #SureshPrabhu
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதி (வயது 94) உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஐசியு வார்டில் தீவிர மருத்துவ கண்காணிப்பில் உள்ள அவரது உடல்நிலை குறித்து பல்வேறு தலைவர்கள், பிரபலங்கள் நேரில் வந்து விசாரித்துவருகின்றனர்.



    அவ்வகையில், மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு, பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் ஷா நவாஸ் உசேன் ஆகியோர் இன்று மருத்துவமனைக்கு வந்து நலம் விசாரித்தனர். கருணாநிதியின் உடல்நிலை மற்றும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மு.க.ஸ்டாலினிடம் விசாரித்தனர். அவர்களுடன் தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் நலம் விசாரித்தார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்திய மந்திரி சுரேஷ் பிரபு, திமுக தலைவர் கருணாநிதி பூரண குணமடைய வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும், மக்களுக்காக பல போராட்டங்களை முன்னெடுத்தவர் என்றும், தமிழகம் மட்டுமின்றி இந்திய அளவில் மூத்த அரசியல்வாதி என்றும் கருணாநிதியை பாராட்டினார்.

    இதற்கிடையே கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும், இன்னும் இரண்டு அல்லது மூன்று தினங்களில் அவர் வீடு திரும்ப வாய்ப்பு உள்ளதாகவும் துரைமுருகன் தெரிவித்துள்ளார். #KarunanidhiHealth #KauveryHospital #SureshPrabhu

    காவேரி மருத்துவமனைக்கு இன்று வந்த கமல்ஹாசன், கருணாநிதியின் உடல்நலம் குறித்து ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் கேட்டறிந்தார். #KarunanidhiHealth #Karunanidhi #KamalHaasan
    சென்னை:

    தமிழக முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.கருணாநிதி வயோதிகம் சார்ந்த உடல்நலக்குறைவு காரணமாக வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார். பின்னர் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கடந்த மாதம் 27-ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

    மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் அவர் உடல்நிலை தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மருத்துவமனைக்கு வந்து கருணாநிதி உடல்நிலை குறித்து ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் கேட்டறிந்தார்.

    கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்றும் கோபாலபுரம் இல்லத்துக்கு வந்து கமல்ஹாசன் உடல்நிலை விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாதாக முன்னாள் பிரதமர் தேவே கவுடாவும் மருத்துவமனைக்கு வந்து கருணாநிதி உடல்நிலை தொடர்பாக ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் விசாரித்தார். 
    காவேரி மருத்துவமனைக்கு இன்று வருகை தந்த முன்னாள் பிரதமர் தேவே கவுடா, கருணாநிதியின் உடல்நலம் குறித்து ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் கேட்டறிந்தார். #KarunanidhiHealth #Karunanidhi
    சென்னை:

    தமிழக முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.கருணாநிதி வயோதிகம் சார்ந்த உடல்நலக்குறைவு காரணமாக வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார். பின்னர் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கடந்த மாதம் 27-ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

    மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் அவர் உடல்நிலை தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், முன்னாள் பிரதமர் தேவே கவுடா காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்து கருணாநிதியின் உடல்நிலை தொடர்பாக ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் கேட்டறிந்தார். 

    இதனை அடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கருணாநிதி நூறாண்டுகள் வரை நலமுடன் வாழ்வார்” என கூறினார்.
    ×